Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தலைவர் பிரபாகரனின் யானை எங்கே? - கொழும்பு ஆங்கில ஊடகம் தகவல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தலைவர் பிரபாகரனின் யானை எங்கே? - கொழும்பு ஆங்கில ஊடகம் தகவல். 
[sunday, 2014-03-09 09:49:33]
 
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பராமரித்து வந்த யானை தற்போது பின்னவெல யானைகள் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வருவதாகக் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் விலங்குகளை நேசிப்பவர். அவர் புலி, கரடி, யானை என்பனவற்றை வளர்த்து வந்தார். அவர் உயிரிழக்கும் வரை புலியைத் தன்னுடன் வைத்திருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அவர் வளர்த்து வந்த கரடிக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. அவர் வளர்த்த யானை மிகவும் அழகானது. அது தற்போது பின்னவெல யானைகள் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
 
2009 இல் போர் தீவிரம் பெற்றபோது, விடுதலைப் புலிகள் தம்மால் எடுத்துக் கொண்டு செல்லக் கூடியவற்றை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். அப்போது இந்த யானையைக் கைவிட்டுச் சென்றனர்.அதிஷ்டவசமாக அது இறுதிப்போரில் கொல்லப்படாமல் தப்பிக்கொண்டது. அந்த யானை கிளிநொச்சிக் காட்டுக்குள் தப்பி ஓடியிருந்தது. பலாலி இராணுவ முகாமில் இருந்து சென்ற கொண்டிருந்த படையினரின் கண்களில் அது தற்செயலாகப்பட்டது. அதை அவர்களை தம்முடன் கொண்டு சென்று பின்னர், தெஹிவளை மிருக காட்சிச்சாலைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்.
 
கப்பல் மூலம் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து தெஹிவளைக்கு அனுப்பப்பட்ட அந்த யானை, பின்னர் பின்னவெல சரணாலயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இளம் பெண் யானையான அதற்கு மெனிகா என்று அங்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.அதற்குத் தற்போது 22 வயதாகிறது. பிரபாகரனுடன் இருந்த போது அது எப்படி அழைக்கப்பட்டதென்று தெரியவில்லை என்றும் கொழும்பு ஆங்கில நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளது.
menica-090314-600.jpg
  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் யானையை வளர்த்ததாக எந்த ஒரு செய்தியும்... முன்பு வந்ததாக நினைவு இல்லை.
பின்னவெல யானைகள் சரணாலயத்துக்கு... விளம்பரம் கிடைப்பதற்காக, சிங்களவனின் பொய்ச் செய்தி.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே இனி பாருங்கவன், வெளிநாடிலே இருந்து ஒரு தமிழர் கூட்டம் பின்னவேல சரணாலயத்துக்கு படை எடுக்கும்.

ஒரு யானையுடன் படமெடுத்து வந்து இங்கு உள்ளவர்களுக்கு எல்லாம் காட்டும், இது தான் தலைவரின் யானையாம் என்று. :icon_idea: 

வாழ்க தமிழினம்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே இனி பாருங்கவன், வெளிநாடிலே இருந்து ஒரு தமிழர் கூட்டம் பின்னவேல சரணாலயத்துக்கு படை எடுக்கும்.

ஒரு யானையுடன் படமெடுத்து வந்து இங்கு உள்ளவர்களுக்கு எல்லாம் காட்டும், இது தான் தலைவரின் யானையாம் என்று. :icon_idea: 

வாழ்க தமிழினம்.

 

elephant-drinking-milk.jpg

 

வாற‌ சமர் ஹொலிடேக்கு, நம்ம சனத்தாலை... பின்னவெல சரணாலயத்துக்கு வசூல் கிடைக்கப் போகுது.

 

தலைவரின் யானைக்கு பால் கொடுத்தேன், பழம் கொடுத்தேன் என்று சனம் வந்து... அலப்பரை பண்ணப் போகுது முதல்வன். :D

Edited by தமிழ் சிறி

அண்ணே இனி பாருங்கவன், வெளிநாடிலே இருந்து ஒரு தமிழர் கூட்டம் பின்னவேல சரணாலயத்துக்கு படை எடுக்கும்.

ஒரு யானையுடன் படமெடுத்து வந்து இங்கு உள்ளவர்களுக்கு எல்லாம் காட்டும், இது தான் தலைவரின் யானையாம் என்று. :icon_idea: 

வாழ்க தமிழினம்.

 

அப்படி செய்வதால் என்ன லாபம் முதல்வன். அதைவிட ராஜபக்சவுடன் நின்று படமெடுத்தால் ஏதோ பிரஜோசனமாவது இருக்கும். அவரும் யானை மாதிரிதானே. தும்பிக்கை ஒன்று தான் குறை வேண்டுமென்றால் போட்டோ சொப்பில் வைத்துவிட்டால் போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை துலபன், முன்னர் தலைவரின் வீடுக்கு சென்று எடுத்து வந்து தேசியம் பேசிய சனம், இனி யானையை படம் எடுத்து வந்து பேசும்.

அவைக்கு தலைவருடன் படம் எடுக்க முடியலையே என்ற ஆதங்கத்தை போக்கும் ஒரு குரூர ஆசை.

இல்லை துலபன், முன்னர் தலைவரின் வீடுக்கு சென்று எடுத்து வந்து தேசியம் பேசிய சனம், இனி யானையை படம் எடுத்து வந்து பேசும்.

அவைக்கு தலைவருடன் படம் எடுக்க முடியலையே என்ற ஆதங்கத்தை போக்கும் ஒரு குரூர ஆசை.

 

இல்லை முதலவன் அது முன்பு.   இப்போது தலைவரின் வீழ்ச்சியின் பின்னர்   நீங்கள் கூறிய தேசியவாதிகள் ராஜபக்சவுடன் படம் எடுக்கவே ஆர்வம் காட்டுவார்கள். அவர்கள் Useless ஆக எதையும் செய்ய முன்வரமாட்டார்கள்.

Edited by tulpen

அப்படி செய்வதால் என்ன லாபம் முதல்வன். அதைவிட ராஜபக்சவுடன் நின்று படமெடுத்தால் ஏதோ பிரஜோசனமாவது இருக்கும். அவரும் யானை மாதிரிதானே. தும்பிக்கை ஒன்று தான் குறை வேண்டுமென்றால் போட்டோ சொப்பில் வைத்துவிட்டால் போச்சு.

அவரின் பேத்தை வயிறில் ஒரு சிவப்பு துண்டுக்கை எப்போதும் தொங்குமே? :)

புலிக்குட்டி என்ன ஆச்சு?

புலிக்குட்டி என்ன ஆச்சு?

அதுவும் அந்தமான், நிக்கோபார் என்று போயிருக்கும்.

உங்களுக்கு தானே நிறைய யூஸ்லெஸ் விடயங்கள் தெரியும்.

உங்களுக்கு தெரியாமல் புலிக்குட்டி ஒரிடமும் போகாது. :)

தலைவர் யானையை வளர்த்ததாக எந்த ஒரு செய்தியும்... முன்பு வந்ததாக நினைவு இல்லை.

பின்னவெல யானைகள் சரணாலயத்துக்கு... விளம்பரம் கிடைப்பதற்காக, சிங்களவனின் பொய்ச் செய்தி.

 

சரியாக பிடித்தீர்கள். ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். புலியை வைத்து மகிந்த உழைக்க தக்க வழிகளில் எல்லாம் உழைக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

பலாலியும் கிளிநொச்சியும் பக்கத்து பக்கத்து கிராமங்கள் போல செய்தியில் தெரிகிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.