Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்க பிரேரணையை தோற்கடிக்க முஸ்லிம் மக்கள் 'துஆ' பிரார்த்தனை மேற்கொள்ளவும்: அப்துல் காதர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட  ஐந்து  நாடுகளினால்  ஜெனீவாவில்  கொண்டு வரப்படவுள்ள  பிரேரணை  தோற்கடிக்கப்பட  வேண்டுமென அனைத்துப் பள்ளிவாசல்களிலும் முஸ்லிம் மக்கள் 'துஆ'  பிரார்த்தனை  மேற்கொள்ள வேண்டுமென சுற்றாடல்  துறை  பிரதியமைச்சர்  ஏ.ஆர். எம். அப்துல் காதர்  வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
 
பிரதியமைச்சர்  அப்துல்காதர்  ஜெனீவா  மாநாடு  தொடர்பாக முஸ்லிம்களுக்காக விடுத்துள்ள  அறிக்கையிலேயே  மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார். அவர் மேலும்  தெரிவித்துள்ளதாவது முஸ்லிம்கள்  அதிகாரத்திலுள்ள அரசுக்கும்  நாட்டின் தலைவருக்கும் விசுவாசமாக இருக்க  வேண்டுமென்று  புனித குர்ஆன் கூறுகிறது. எனவே நாட்டில்  இனரீதியான பிரிவுகளுக்கும் பிளவுகளுக்கும் முஸ்லிம்கள் காரணமாக  இருக்கக்கூடாது. நாமனைவரும் இலங்கையர்  என்ற பொதுவான அடிப்படையில்   நாட்டுக்கு  எதிராக  சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் மேற்கொள்ளப்படும்   சதித்திட்டங்களுக்கு  எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். 
dua.jpg
ஜெனீவாவில்  இலங்கைக்கு  எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு  முஸ்லிம்  நாடுகள்  ஆதரவளிக்கக்கூடாது. அரசாங்கத்துக்கே  ஆதரவளிக்க வேண்டும்  என சில முஸ்லிம் நாடுகளின்  தூதுவர்களிடமும்  நான் கோரிக்கை விடுத்துள்ளேன். முஸ்லிம்கள் நாட்டைப் பாதுகாப்பவர்களாக  இருக்க வேண்டுமென்றே அன்றி காட்டிக்கொடுப்பவர்களாக இருக்க கூடாது. 
 
எதிர்வரும் மேல் மற்றும் தென்மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்கள்  அரசுக்கு ஆதரவளிப்பவர்களாக
வாக்களிப்பவர்களாக இருப்பார்கள்  என்பதில்  சந்தேகமில்லை.  தற்போது  85 சதவீதமான முஸ்லிம்கள்  அரசுக்கு ஆதரவானவர்களாகவே  இருக்கிறார்கள். 
 
அரசாங்கத்துடன்  இருக்கும்  ஏனைய முஸ்லிம்  கட்சிகளும்  கூடி இருந்து குழி தோண்டக்கூடாது. முப்பது  வருட கால  யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்பு சகல துறைகளிலும் இலங்கை  அபிவிருத்தியை  நோக்கிச்  செல்வதை  மக்கள்  அறிவார்கள். பாதை உட்பட  உட்கட்டமைப்பு  வசதிகளின்  அபிவிருத்தி நாட்டு  மக்களை  மாத்திரமல்ல  வெளிநாட்டு  உல்லாச பிரயாணிகளைக்கூட  திகைக்க வைத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

விமானத்தை தேடி  சாத்திரம் :(

பிரேரணையைத்தோற்கடிக்க பிரார்த்தனை........ :(  :(

பிராத்தனையின் போது பொது பல சேன தாக்ககூடாது என்றும் துஆ பிரார்த்தனை காப்பில் செய்யவேண்டும்.

பாவம் காதர் இன்னும் இணக்க அடிவருடி அரசியல் உதவும் என்று நம்பிறார்.

மஹிந்த ஆதரவு பேரணியில் கிழக்கு முஸ்லிம்கள்

ஐ. நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக வைக்கப்படவுள்ள தீர்மானத்திற்கு எதிராகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் வெள்ளிக்கிழமையன்று கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் கலந்துகொண்ட பேரணியொன்று நடைபெற்றது.

கல்முனை பிரதேசத்திலுள்ள சில பள்ளிவாசல்களும் முஸ்லிம் சமூக அமைப்புகளும் இணைந்த ஏற்பாட்டில் கல்முனை நகரில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு பேரணியில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் கலந்து கொண்டு ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.

கடந்த சில தினங்களுக்கு ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ் மக்கள் கலந்துகொண்ட வழங்கும் பேரணியொன்று கல்முனை தமிழ் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை நண்பகல் ஜும்மா தொழுகையின் பின்னர் கல்முனை முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் முன்பாக ஒன்று கூடிய முஸ்லிம்கள் அங்கிருந்து பேரணியாக வழியாக கல்முனை தெற்கு பிரதேச செயலகததை சென்றடைந்தனர்.

ஜனாதிபதியின் உருவப்படம் , இலங்கை தேசிய கொடி மற்றும் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாதைகள் மற்றும் ஜெனிவா தீர்மானத்திற்கு எதிரான வாசக அட்டைகளையும் தமது கைகளில் ஏந்தியவாறு அவர்கள் காணப்பட்டார்கள்.

பிரதேச செயலாளர் ஐ. எம் ஹனிபாவிடம் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் மனுவொன்றை கையளித்த பின்பு, ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்தும், ஜெனிவா தீர்மானத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் கலைந்துசென்றனர்.

140314120825_kalmunai_muslim_mahinda_sup

 

கூட்டத்தின் முடிவில் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் பிரதேச செயலரிடம் கையளிக்கப்பட்டது.

 

அதேவேளை மட்டக்களப்பு நகரிள்ள காந்தி சதுக்கத்தில் முன்னாள் மாநகர முதல்வர் சிவகீர்த்தா பிரபாகரன் தலைமையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றுள்ளது.

முன்னாள் மாநகர முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட ஒரு சிலர் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் ஜெனிவா தீர்மானத்திற்கு எதிராகவும் வாசக அட்டைகளை ஏந்தியவாறும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/03/140314_muslimdemo.shtml

 

Batti-perva.jpg

 

Batti-perva01.jpg

Edited by Athavan CH

விமானத்தை தேடி  சாத்திரம் :(

பிரேரணையைத்தோற்கடிக்க பிரார்த்தனை........ :(  :(

 

நீங்கள் இப்படி எழுதியது சரியல்ல. :) அவர்கள் தேங்கையை வைத்து ராடரை உருவாய்க்கி அதன் மூலம் விமானத்தை கண்டு பிடிக்க உதவியுலார்கள். அவர்களின் தேங்காய் ராடரும் மலேசியன் ஹரிரி போட்டரும் (Malay Harry Potter) விமானம் கடலில் விழுந்து இருக்கலாம் அல்லது இன்னும் பறக்கின்றது என்று கண்டு பிடித்துள்ளது. ஜெனீவா விடயத்திலும் இப்படி ________ பாணியில் ஒரு தொழுகை செய்வீனம். நீங்கள் இடைவழியை நிரப்பி வாசிக்க.

 

 

140312%20a%20p02-a.jpg

 

http://www.ibtimes.com/mh370-malaysian-shaman-performs-ritual-help-find-missing-malaysian-airlines-flight-islamic-religious

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Batti-perva.jpg

 

Batti-perva01.jpg

 

அந்த பெண்மணி சுலோக அட்டையில் இருப்பதை இப்போதுதான் பார்க்கின்றாரா? அல்லது சரி பிழை பார்க்கின்றாரா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆ..தூ

  • கருத்துக்கள உறவுகள்

அதென்னமோ தெரியல்ல.. உவங்க... சிங்களவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கிறாங்க. தமிழன் முட்டினாலே எகிறிராங்க.. (வியாபாரத்திற்கும்.. நிலத்தை பங்கு பிரிக்கவும் தமிழன் வேணும்). அல்லா ஏதாவது தமிழங்களைப் பற்றி.. கூடாமல் போட்டுக் கொடுத்திருப்பாரோ..??! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அப்துலு,

பிலிம் நல்லா காட்டுறீங்க, நாணா.

அதுக்கு முன்னாடி, நவி பிள்ள அம்மாகிட்ட, கடதாசி கொடுத்த கக்கீமை, ஏன்யா, ஏன்? என்னு கேக்கிறது?

இத தான் சொல்லுறது: 'படிக்கிறது குர்ரான், இடிக்கிறது பள்ளி'ன்னு.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஆ..தூ

அவவும், அவவுட வைப்புச் செப்புகள் ஒரு சிலரும்.

K01%28120%29.jpg
-எஸ்.எல்.அப்;துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான், முஜஹித்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு எதிராகவும் ஜனாதிபதியையும், எமது நாட்டையும் ஆதரித்தும், கல்முனை முஸ்லிம் மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கவனயீர்ப்பு பேரணி இன்று வெள்ளிக்கிழமை (14) ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.

கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் ஆரம்பித்த இந்தப் பேரணி கல்முனை நகரில் அமைந்துள்ள பிரதேச செயலகம் வரை சென்றடைந்தது.

கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல்,  கல்முனை அன்சார் சுன்னத்துல் முகம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல், இஸ்லாமபாத் அக்பர் ஜும்ஆ பள்ளிவாசல் ஆகியன உட்பட 21 பள்ளிவாசல்கள், 3வர்த்தக, கைத்தொழில் சம்மேளனங்கள், 22 சமூக சேவை முன்னெடுப்பு அமைப்புக்கள், 18 விளையாட்டுக் கழகங்கள் மற்றும் ஏனைய பிரதேச அமைப்புக்கள் ஒன்றினைந்து இந்த கவனயீர்ப்பு பேரணியை நடத்தியது.

பேரணியின் இறுதியில் கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் பொது நிறுவனங்களின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் அவர்களினால் கல்முனை பதில் பிரதேசசெயலாளர் ஐ.எம்.ஹனீபாவிடம் மஹஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
K02%28114%29.jpg
K03%2874%29.jpg

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/103238-2014-03-14-10-23-06.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.