Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் அமைப்பின் புதிய தலைவர் கோபி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

5(1726).jpg

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் புலிகள் அமைப்பிற்கு இலங்கையில் உயிர்கொடுப்பதற்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படும் கஜீபன் என்றழைக்கப்படும் கோபி(31) பொலிஸார் தேடி வருவதாகவும் அவர் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இவர் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடையும் காலக்கட்டத்தில்; இராணுவத்திடம் சரணடைந்து பூந்தோட்டம் முகாமிலிருந்து தப்பித்து வேலைவாய்ப்புக்காக கட்டார் சென்றுள்ளார்.

அதன் பின்னர் ஐரோப்பியாவிற்கு சுற்றுலா மேற்கொண்டு தமிழ் புலிகள் புலம்பெயர் அமைப்பின் தலைவர் என்று கூறப்படும் பெரும்நாயகம் சிவபரன் என்றழைக்கபடும் நதியாவானை நோர்வேயில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

அவரிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு இலங்கைக்கு திரும்பிய அவர், புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவரான சண்முகலிங்கம் சிவசங்கர் என்றழைக்கப்படும் ஜயகுமார் பாலேந்திரன் (வயது 50) (பொட்டு அம்மானின் கீழ் பயிற்சிபெற்றவர்) கிளிநொச்சி தர்மபுரத்தில் விதவை பெண்ணொருவரின் வீட்டில் இருக்கும் போது பொலிஸார் கைது செய்வதற்கு சென்றிருந்த வேளையில் நூலிழையில் தப்பிவிட்டார்.

அவரை கைது செய்வதற்கு கி நிராயுதபாணியாக சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளின் வயிறு மற்றும் பாதத்தின் மீது துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டு அந்தவீட்டிலிருந்து தப்பிச்சென்றுவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோபியும் அந்த வீட்டில் இருந்ததாகவே பயங்கரவாத புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/104102-2014-03-22-10-55-09.html

சிங்களவனுக்கு ஆங்கில செய்தியில் இப்போது புலிகளின் பெயர் அடிபடவேணும். அப்போது தான் ஐ.நா வில் தமிழ்கொலைகள்,கடத்தல்கள்,வன்புணர்வுகளை மறைத்து புலி வாந்தி எடுத்து திசை திருப்பலாம்.

"

அவரை கைது செய்வதற்கு கி நிராயுதபாணியாக சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளின் வயிறு மற்றும் பாதத்தின் மீது துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டு அந்தவீட்டிலிருந்து தப்பிச்சென்றுவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்."

புலிகளின் அடுத்த தலைவரை பிடிக்க சிறி லங்கா சாவல் துறை நிராயுதபாணியா சென்றதாம்.

டெய்லி மிரர் கொமெடி பக்கத்தில் வந்த செய்தியோ?

இந்த செய்தியை யாரும் நம்பமாட்டார்கள் வேறு ஏதாவது புது முயற்ச்சி செய்து பார்க்கலாம் 

இப்பிடிதான்சமாதான காலங்கள் ஆரம்பித்தது முதல்  KP யை பற்றியும் சிறிலங்கா இந்திய ஊடகங்கள்  பெரிய பில்டப்பை செய்தது...  

 

உண்மையிலை பிரச்சினையான ஒருவர் தமிழ் மக்களுக்குள் இருந்து  தேடப்படும் ஆளாக இருந்தால் அவரை பற்றி  இப்படி எந்த செய்தியும் வர போவது இல்லை...  போர் முடிந்தால் பிறகு தலைமறைவாக  இருந்தவர்கள் இலங்கை படைகளால் தேடப்பட்டும் காட்டிக்குடுக்கப்பட்டும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்...  அவர்கள் எல்லாரும் கைது செய்யப்பட்ட பின்னரே செய்தியாக்கப்பட்டனர்...    

 

தங்களது இயலாமையை படம் போட்டு காட்டும் ஆக்கள் அல்ல இலங்கை படைகள்...  தங்கள் செய்யாதவைகளை கூட வீரதீரங்களாக அள்ளி விடும்  கூட்டம்... 

Edited by தயா

புலிகளின் புதிய தலைவர் கோபியல்ல. "சாத்தானின் குழந்தை"தான் புதிய தலைவர்.  :D  :D  :D 

Edited by seeman

  • கருத்துக்கள உறவுகள்

http://dbsjeyaraj.com/dbsj/archives/28949#more-28949

 

D.B.ஸ் ஜெயராஜ் இது குறித்து எழுதியுள்ள செய்தி பகிர்வு.

இந்த கட்டுரை வாசித்ததின் பின்னர் ஓரிரு விடயங்கள் மிகப் பெரிய கேள்வி குறிகளாக இருக்கின்றன?

  1. விசுவமடு பிரதேச வீடு ஒன்றில் இருந்து சிறு ஆயுத தொகுதி கைப்பற்றப்பட்டதும், அதனை தொடர்ந்து 27 வயது நிரம்பிய நிதர்ஷனா என்ற ஒரு தாயார் மற்றும் அவரின் குடும்பத்தோர் இலங்கை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட செய்தி. (தமிழ் ஊடகங்களிலும் வந்த செய்தியே)
  2. ஜெயக்குமாரி பாலேந்திரன் அம்மாவும் அவருடைய மகள் விபூஷீகாவும் கைது செய்யப்பட்டு தாயார் பூசா வதை முகாமிலும், விபூஷீகா கிளிநொச்சியில் உள்ள மஹாதேவ ஆசிரம சைவச் சிறுவர் இல்லத்திலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை.
  3. வன்னியிலும், இதர பிரதேசங்களிலும் தற்போது நடைபெற்று வருகின்ற திடீர் சோதனை, ரௌண்ட்-அப்ஸ் போன்ற நிகழ்வுகள்.

ஆட்டுவித்தால் யாரொருவன் ஆடாதாரே கண்ணா...

நீ நடத்தும் நாடகத்தில் நாமும் உண்டு

எம் நிழலில் கூடஅனுபவத்தின் சோகம் உண்டு   :(  :(  :( 

கதாநாயகனை வென்றால் வில்லன் கதாநாயகன். கதாநாயகன் இல்லாத நிலையில் இல்லாத கதாநாயகனை இருப்பதாக காட்டி அவனை வென்றதாக காட்ட வியூகம்.

புலிகளின் புதிய தலைவர் கோபியல்ல. "சாத்தானின் குழந்தை"தான் புதிய தலைவர்.  :D  :D  :D 

 

உங்களுக்கு எல்லாம் உள்குத்து உடம்பிலை ஊறிபோய் கிடக்குதப்பா....!!  :o  :o  :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெற்கில் சிங்களவன் அரசியல் செய்வதற்கு புலிகள் அமைப்பு வேண்டும் போல 

  • கருத்துக்கள உறவுகள்

உருவ அமைப்பு ஒரு தலைமைக்கு மிக முக்கியமானதுதான். ஒருவன் அசிங்கமாகக் கூட இருக்கலாம் ஆனால் அவனின் கண்ணும் தலையும் பேச்சுமே அவனை அங்கீகரிக்கப் போதுமானது. இவனின் கண்ணைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே. எனது கணிப்பு எப்பவுமே தப்பியதில்லை.

 

 

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சும்மா சொல்வதில்லை அலை.

 

 

ஆள் பாதி ஆடை பாதி, அகத்தின் அழகு முகத்தில் தெரியும், இரக்கப் போனாலும் சிறக்கப் போ என பல பலமொழிகள் இருக்கின்றன. இவை ஒரு மனிதரின் தோற்றக் கவர்ச்சியின் அவசியத்தை சொல்கின்றன.

 

அழகிய தோற்றம் கொண்டவரின் மீது மையல் கொண்டு கொலை செய்தவர்களும் தற்கொலை செய்தவர்களும் படை நடத்தியவர்களும் தம் நாட்டையே இழந்த அரசர்களும் சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கிறார்கள். 

 

ஆனால் சிறந்த தலைமைக்கு தோற்றக் கவர்ச்சி அவசியமானது என்ற வாதம் தவறானது. அழகான இளமையான தோற்றம் கொண்டவர்களிலும் பார்க்க வயது முதிர்ந்த ஆளுமை மிக்க தோற்றம் கொண்டவர்களே உலக தலைவர்களில் அதிகமானவர்கள்.

 

இந்தியாவின் காமராஜர், முதல் அழகிய சாரா பேலினை (இவர் அழகு இராணியாக தெரிவான ஒருவர்) தோற்கடித்த ஒபாமா வரை தோற்ற அழகில் இவர்களின் தலைமை தங்கி இருக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

காலையில்  வந்து பார்த்ததும்

கடுப்பாகி  விட்டது

 

சுமேவுக்கான  எதிர்ப்பா??

அல்லது

புதிய  தலைவரைத்தேடும்  எமது எண்ணக்கருவை

சுமே சிதைத்துவிட்டார் என்ற  ஆவேசமா??? :icon_idea:

 

எனக்கு ஆவேசம் தான் வருகிறது......... :icon_idea:

ஜெனிவா பீதியில் உலகத்தினை திசை திருப்ப(இன்னும் தனக்கு புலிகளின் பிரச்சனை இருப்பதாக காட்டி இராணுவம் தமிழர் இடங்களில் தொடர்ந்து வைத்திருக்க) சிங்கள அரசு போடும் புலி நாடகங்கள் ஒரு தொடர்கதையாக தொடரும் பார்த்து ரசியுங்கள்... தவறவிடாமல்.. எமாறுவர்கள் இருக்குமட்டும் ஏமாற்றுவனும் தொடர்வான்.. இவ்வளவு காலமும் இல்லாத கதைவசனம், தயாரிப்பு சொல்லியா கொடுக்க வேணும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.