Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாள் ஒன்று வரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாள் ஒன்று வரும்

மாவீரர் தின நினைவாக எழுதப்பட்ட நாடகம்.

எழுத்து ஆக்கம்: இளங்கோ,

பின்னணி இசை கோர்ப்பு : சசி வர்ணம்

நடித்த மற்றும் குரல் வடிவம் தந்த அனைத்து கலைஞ்சருக்கும் நன்றிகள்.

(எல்லோருடைய பெயர்களும் என் கை வசம் இல்லை - அடுத்த பதிவில் இணைக்கின்றேன் மன்னிக்கவும்)

 

கதைக் களம் ஆனது புலம் பெயர் நாடு, தாயகம் இரண்டையும் உள்ளடக்கி இருக்கும். புலம் பெயர் நாட்டில் ஆரம்பித்து தாயகம் நோக்கி நகரும். இறுதியில் புலம் பெயர் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி நிறைவுறும்

 

தமிழரின் போராட்டம் குறித்த நம் இளையவர்களின் புரிந்துணர்வு, விட்டு செல்லப்பட்ட பொறுப்புகள் சம காலத்தில் தாய் மண்ணில் நடக்கின்ற அவலங்கள், முன்னால் போராளிகளின் நிலைமை, தமிழராய் நாம் அனைவரும் ஒற்றுமையாய் அணி திரள வேண்டியதான் அவசியம் குறித்து அமைந்து இருக்கும்.

இதிலே ஒரு தாயகத்து புத்தி பேதலித்த நோயாளி சித்தர் ஒருவர் திடீர் திடீர் என்று தோன்றி ஆழமான கவி வரிகளை உதிர்த்து செல்வார். (உடுக்கு ஒலியுடன் தோன்றி மறைவார்)

இதில் என் பங்கு கதை, காட்சி அமைப்பு, இசை தெரிவு, இசைக்கோர்ப்பு  

 

 

கதை களம்: புலம் பெயர் நாடு ( மாவீரர் நாள் ) (0.09 - 2.00)

  • புலம் பெயர் நாட்டில் வாழும் குடும்ப உரையாடலுடன் நாடகம் தொடங்கும். சம்பாஷனை மாவீரர் நாள் குறித்த விழிப்புணர்வு. இளைய சமூகம் நாம் போராட்டம் பற்றி தெரிந்து கொள்ள இணைய தளத்தில் தேடுதலை தொடங்க,

 

  • கதைக்களம் தாயகம் நோக்கி நகரும். (2.02 - ஓளி வடிவம்)
  • அம்பாரை குமிழமுனை மீன்பிடி தொழிலை மூலாதாரமாய் கொண்ட கிராமம்.
  • ஊர் புதினங்களுடன் சார்ந்த உரையாடல். இயக்கத்தில் இருந்து மிக நீண்ட நாளைக்குப் பிறகு வீட்டுக்கு வர இருக்கும் தம் இரு மகன் மாரை பற்றிய உரையாடல்.
  • தாய் தந்தயாரை பார்க்க வரும் போராளி மகன்மார் (அண்ணன், தம்பி) மற்றும் இன்னும் ஒரு போராளி.
  • மூத்த மகன் (சிவா) இயக்கத்தின் மிகமுக்கிய பொறுப்புக்களை வகிக்கும் ஒருவர்.
  • சாதாரண உரையாடல், அன்னையின் கரத்தில் இருந்து பாசத்தோடு உணவுக்கு பிறகு களப் பணி நோக்கிய பயணம். (இங்கே போராளி சிவா தன் தாய், தந்தை, பிறந்த மண், வீடு, மரம், செடி கொடிகளை கடைசியாகப் பார்க்கும் தருணம் ... அடுத்து ...உயிர் ஆயுதப்பயணம்)
  • எதிரிப்படை மீதான தட்கொடை தாக்குதல், போராளி சிவாவின் வீரமரணம், தம்பி கரணின் விழுப்புண், சில காலங்கள் வீட்டில் பெற்றோருடன் வசிப்பார்...(14:42)

கதை களம்: புலம் பெயர் நாடு, யுத்தத்தின் இறுதி நாட்களின் கொடிய மனித அழிவுகள் அவலங்கள் பற்றிய செய்தி ஆய்வுகள், இன அழிப்பு குறித்த ஐ.நா அறிக்கைகள் பற்றிய தெளிவு  (17:05 - 20:44 ஓளி வடிவம்)

 

      

கதைக்களம்: தாயகம் (சமகாலம் ~ நரிகள் ஓநாய்களின்  ஓலத்தோடு ஆரம்பமாகும் (20:55)

முள்ளிவாய்க்கால் அழிவுகள், துன்புறுத்தல்களுக்குப் பிறகு, கண் பார்வை முற்றாக இழந்த முன்னை நாள் போராளி கரன், தாய், தந்தை இவர்களின் இன்றைய நிலை பற்றிய சம்பாஷனை, போராளிகள் இல்லாத அந்த மண்ணின் வெறுமை வெளிப்பாடு.

 

கதைக்களம் புலம் பெயர் நாடு இளய சமுதாயம். நம் போராட்டம் பற்றிய பூரண தெளிவோடு. தம் கைகளிலே ஒப்படைக்கப்பட்டுள்ள போராட்டத்தினை பொறுப்பெற்றால். 

தமிழரின் ஒற்றுமை கேட்டு மடிபிக்சை கேட்கும் தாயார்...

நாடகம் நிறைவு ~ இந்த மண் எங்களின் சொந்த மண் பாடல். (29.40 )

 

 

 

https://www.youtube.com/watch?v=DTQfi_dB60s

 

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

No videos were found. :o

சசி வர்ணம் வணக்கம் .நீங்கள் தந்த இணைப்பை அழுத்த எனது youtube கணக்கே வருகுது , :(

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த இணைப்பில்.... ஒலி கேட்கிறது, ஓளி தெரியவில்லை.

புது முயற்சி போல், உள்ளது.

எல்லாம்... போகப், போக சரிவரும்.

சுட்டிக்காட்டியமையை... தவறாக, எண்ணாதீர்கள்.

எல்லாம்... நன்மைக்கே.... :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அண்ணா,

உண்மையில் இந்த நாடகமானது தனியே ஓலி வடிவம் மட்டுமே கொண்டது. இதை எழுதும் போது 2012 இருந்த சூழ்நிலைக்கு ஏற்ப ஐ.நா அறிக்கைகள் கொண்ட ஓளி வடிவம் மற்றும் சில போராட்டகாலத்து ஓளி வடிவங்களை மட்டுமே இணைத்து செய்தோம்.

எம் உயிர் காவல் தெய்வங்களின் இன்றைய நிலையை விளக்குவது போன்று இந்த நாடகம் எழுதப்பட்டது.

இதில் பங்கேற்ற இளம் நடிகர்கள் மிகவும் தத்துரூபமாக நடித்து பார்வையாளர்களின் கண்களில் கண்ணீரை சொரிய வைத்தார்கள்.

உங்கள் விமர்சனங்களை ஆசீர்வாதமாக ஏற்கின்றேன்.

நன்றி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

கதைக் களம் ஆனது புலம் பெயர் நாடு, தாயகம் இரண்டையும் உள்ளடக்கி இருக்கும். புலம் பெயர் நாட்டில் ஆரம்பித்து தாயகம் நோக்கி நகரும். இறுதியில் புலம் பெயர் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி நிறைவுறும்

 

தமிழரின் போராட்டம் குறித்த நம் இளையவர்களின் புரிந்துணர்வு, விட்டு செல்லப்பட்ட பொறுப்புகள் சம காலத்தில் தாய் மண்ணில் நடக்கின்ற அவலங்கள், முன்னால் போராளிகளின் நிலைமை, தமிழராய் நாம் அனைவரும் ஒற்றுமையாய் அணி திரள வேண்டியதான் அவசியம் குறித்து அமைந்து இருக்கும்.

இதிலே ஒரு தாயகத்து புத்தி பேதலித்த நோயாளி சித்தர் ஒருவர் திடீர் திடீர் என்று தோன்றி ஆழமான கவி வரிகளை உதிர்த்து செல்வார். (உடுக்கு ஒலியுடன் தோன்றி மறைவார்)

இதில் என் பங்கு கதை, காட்சி அமைப்பு, இசை தெரிவு, இசைக்கோர்ப்பு  

 

 

கதை களம்: புலம் பெயர் நாடு ( மாவீரர் நாள் ) (0.09 - 2.00)

  • புலம் பெயர் நாட்டில் வாழும் குடும்ப உரையாடலுடன் நாடகம் தொடங்கும். சம்பாஷனை மாவீரர் நாள் குறித்த விழிப்புணர்வு. இளைய சமூகம் நாம் போராட்டம் பற்றி தெரிந்து கொள்ள இணைய தளத்தில் தேடுதலை தொடங்க,

 

  • கதைக்களம் தாயகம் நோக்கி நகரும். (2.02 - ஓளி வடிவம்)
  • அம்பாரை குமிழமுனை மீன்பிடி தொழிலை மூலாதாரமாய் கொண்ட கிராமம்.
  • ஊர் புதினங்களுடன் சார்ந்த உரையாடல். இயக்கத்தில் இருந்து மிக நீண்ட நாளைக்குப் பிறகு வீட்டுக்கு வர இருக்கும் தம் இரு மகன் மாரை பற்றிய உரையாடல்.
  • தாய் தந்தயாரை பார்க்க வரும் போராளி மகன்மார் (அண்ணன், தம்பி) மற்றும் இன்னும் ஒரு போராளி.
  • மூத்த மகன் (சிவா) இயக்கத்தின் மிகமுக்கிய பொறுப்புக்களை வகிக்கும் ஒருவர்.
  • சாதாரண உரையாடல், அன்னையின் கரத்தில் இருந்து பாசத்தோடு உணவுக்கு பிறகு களப் பணி நோக்கிய பயணம். (இங்கே போராளி சிவா தன் தாய், தந்தை, பிறந்த மண், வீடு, மரம், செடி கொடிகளை கடைசியாகப் பார்க்கும் தருணம் ... அடுத்து ...உயிர் ஆயுதப்பயணம்)
  • எதிரிப்படை மீதான தட்கொடை தாக்குதல், போராளி சிவாவின் வீரமரணம், தம்பி கரணின் விழுப்புண், சில காலங்கள் வீட்டில் பெற்றோருடன் வசிப்பார்...(14:42)

கதை களம்: புலம் பெயர் நாடு, யுத்தத்தின் இறுதி நாட்களின் கொடிய மனித அழிவுகள் அவலங்கள் பற்றிய செய்தி ஆய்வுகள், இன அழிப்பு குறித்த ஐ.நா அறிக்கைகள் பற்றிய தெளிவு  (17:05 - 20:44 ஓளி வடிவம்)

 

      

கதைக்களம்: தாயகம் (சமகாலம் ~ நரிகள் ஓநாய்களின்  ஓலத்தோடு ஆரம்பமாகும் (20:55)

முள்ளிவாய்க்கால் அழிவுகள், துன்புறுத்தல்களுக்குப் பிறகு, கண் பார்வை முற்றாக இழந்த முன்னை நாள் போராளி கரன், தாய், தந்தை இவர்களின் இன்றைய நிலை பற்றிய சம்பாஷனை, போராளிகள் இல்லாத அந்த மண்ணின் வெறுமை வெளிப்பாடு.

 

கதைக்களம் புலம் பெயர் நாடு இளய சமுதாயம். நம் போராட்டம் பற்றிய பூரண தெளிவோடு. தம் கைகளிலே ஒப்படைக்கப்பட்டுள்ள போராட்டத்தினை பொறுப்பெற்றால். 

தமிழரின் ஒற்றுமை கேட்டு மடிபிக்சை கேட்கும் தாயார்...

நாடகம் நிறைவு ~ இந்த மண் எங்களின் சொந்த மண் பாடல். (29.40 )

 

 

  • கருத்துக்கள உறவுகள்

முழுமையாக கேட்டேன் பார்த்தேன்  சசி. முழுமையாக எழுதணும்.  நேரம் கிடைக்கும் போது  பதிகின்றேன்.  உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்களும்  நன்றிகளும் பாராட்டுக்களும்..........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.