Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாரிவள்..??

Featured Replies

யாரிவள்..?

வெண் நிறத்தாள்

நான் மாலையில்

வீடு வர

இதள் மலர்வாள்...

காற்றோடு சேர்ந்து

நான் சுவாசிக்கும்

மூச்சினில்

நறு மணமாய்

கலந்திடுவாள்....

என் அன்னையின்

மடியினில் சாய்கையில்

அவள் தலையினில் இருந்தபடி

புன்னகைப்பாள்....

நான் பூஜிக்கும்

தெய்வத்தின்-காலடியில்

தவமிருப்பாள்...

இன்று -என்

கல்யாண வீட்டினில்

கழுத்தினைப் பிடித்தபடி

தொங்குகின்றாள்...

ஆம் ....

இவள்-என்

வீட்டுத் தோட்டத்தில் பூத்த

மல்லிகை!!

jasmine7lo1yg7.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன ஊசி மல்லிகையா. எனக்கு குண்டு மல்லிகையைத்தான் பிடிக்கும் அதுதான் வாசம்.

உங்கள் கவியும் நல்லாத்தான் இருக்கு.

  • தொடங்கியவர்

இது என்ன ஊசி மல்லிகையா. எனக்கு குண்டு மல்லிகையைத்தான் பிடிக்கும் அதுதான் வாசம்.

உங்கள் கவியும் நல்லாத்தான் இருக்கு.

நன்றி கறுப்பி... இந்தப்படம் ஆதியிடம் இருந்து சுட்டது... ரமா அக்காவின் தலையில் இருக்கும் குண்டுமல்லிகைப்பூ படம் கொஞ்சம் சிறிதாகப் போய்விட்டது அதனால்தான் ஆதியிடம் சுட்டேன் ஆதிவாசிக்குத்தெரிய வேண்டாம் :lol:

தங்களிடமிருந்தால் தாருங்கள் இணைக்கின்றேன்.... :lol: :wink:

ஆகா கெளரி ...

எங்க போனிங்களாம்...

ரொம்ப காலமா காணம் - அதுதான்...

நடப்பு நிகழ்வோடையும் -ஏதும் எழுதுங்களேன்....

இந்த கவிதையும்- நல்லா இருக்கு! 8)

மல்லிகையை ஞாபகப்படுத்தியமைக்கு வாழ்த்துக்கள் :D இனி றோஜா மலரைக் கொடுக்ககூடது :lol:

  • தொடங்கியவர்

ஆகா கெளரி ...

எங்க போனிங்களாம்...

ரொம்ப காலமா காணம் - அதுதான்...

நடப்பு நிகழ்வோடையும் -ஏதும் எழுதுங்களேன்....

இந்த கவிதையும்- நல்லா இருக்கு! 8)

நன்றி வர்ணன் எங்கையும் போகலை இங்கதான் இருக்கன் என்ன கருத்துச் சொல்லுறதை கொஞ்சம் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறன் நடப்பு நிகழ்வுகளை எழுதி இருகிறன் நீங்கதான் பாக்கலை :lol:

  • தொடங்கியவர்

மல்லிகையை ஞாபகப்படுத்தியமைக்கு வாழ்த்துக்கள் :D இனி றோஜா மலரைக் கொடுக்ககூடது :lol:

நன்றி இலக்கியன் :P

தன் சக்களத்தி என்று

அவன் சகி நினைக்கப்போறாளே!

மூசும் அனல் காற்றில்

மூர்க்கையுறப் போறாளே!

அழுகும் மலத்தினிலே

அவள் எனை எடுத்தெறிய

தோளோடு நான் குலுங்கும்

ஆதாரம் இவன் கொடுப்பது ஏன்?

ஹாய் மாரிப்பையா!

என்னப்பா தெருவோரம் மல்லிகை மனங்குழம்பித் தவிக்குதப்பா. ஏனென்று கேட்டா இப்படி ஒப்பாரி வைக்குது

வழமை போல இதுவும் நல்ல கற்பனை பாராட்டுக்கள். இதில் சில படங்கள் இருக்கு விருப்பமானதை எடுங்க

jasminene6.jpg

jasmine7lo1.jpg

jassy33pw9.jpg

jasmine6rk1.jpg

  • தொடங்கியவர்

தன் சக்களத்தி என்று

அவன் சகி நினைக்கப்போறாளே!

மூசும் அனல் காற்றில்

மூர்க்கையுறப் போறாளே!

அழுகும் மலத்தினிலே

அவள் எனை எடுத்தெறிய

தோளோடு நான் குலுங்கும்

ஆதாரம் இவன் கொடுப்பது ஏன்?

ஹாய் மாரிப்பையா!

என்னப்பா தெருவோரம் மல்லிகை மனங்குழம்பித் தவிக்குதப்பா. ஏனென்று கேட்டா இப்படி ஒப்பாரி வைக்குது

ஹாய்....ஆதி

என் தோளோடு

அவள் சேர்ந்த மாலை

யாரும் தெருவோடு

தூக்கி எறிவதில்லை...

ஆரைத்தான் அழைப்பதென்று(கல்யாண வீட்டுக்கு)

அறியாத பேதைப் பையன்

ஆதியை அழைத்தான்...!

ஆனது பார்....

மந்தியின் கையில்

மல்லிகைப் பூ மாலை :lol:

  • தொடங்கியவர்

வழமை போல இதுவும் நல்ல கற்பனை பாராட்டுக்கள். இதில் சில படங்கள் இருக்கு விருப்பமானதை எடுங்க

jasminene6.jpg

jasmine7lo1.jpg

jassy33pw9.jpg

jasmine6rk1.jpg

நன்றி ரசிகை தாங்கள் தந்த குண்டு மல்லிகை நன்று இப்போது மாற்றிவிட்டேன் கறுப்பிக்கு நறுமணம் வீசட்டும் :lol:

பாராட்டுக்கு நன்றி :P

நல்ல கற்பனை அண்ணா வாழ்த்துகள்..

  • தொடங்கியவர்

நல்ல கற்பனை அண்ணா வாழ்த்துகள்..

நன்றி தங்கை :P

வித்தியாசமாய்ச் சிந்திக்கிறீர்கள் பாலன்,

பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்

வித்தியாசமாய்ச் சிந்திக்கிறீர்கள் பாலன்,

பாராட்டுக்கள்

நன்றி மணிவாசகன்.... :lol:

அடடா அவ்வளவும் மல்லிகையைப் பற்றியா..

நான் என்னமோ..

மல்லிகய பற்றியோன்னு நினைத்தேன்...

சிறந்த சிந்தனை

வளர்க..

வாழ்த்துகள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வித்தியாசமான கவிதை. வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

நன்றி vikadakavi, mayavi :lol:

இன்று -என்

கல்யாண வீட்டினில்

கழுத்தினைப் பிடித்தபடி

தொங்குகின்றாள்...

ஆம் ....

இவள்-என்

வீட்டுத் தோட்டத்தில் பூத்த

மல்லிகை!!

மல்லிகை. எனது மிகவும் பிடித்த மலர். அந்த மலருக்காக நீங்கள் எழுதிய கவிதை சூப்பர். உங்கள் கவிதையை என் வீட்டு மல்லிகைக்கு முன்னால் நின்று பாடினால் எப்படி இருக்கும்?

அழகான கவிதை. பாராட்டுக்கள் பாலன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.