Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிக்குமாரையும் மௌலவிமாரையும் விரட்டியடித்த பொது பல சேனா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஜாதிக பல சேனா என்ற அமைப்பு இன்று புதன்கிழமை  கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டை அங்கு புகுந்த பொது பல சேனா அமைப்பினர் தடுத்து நிறுத்தியதோடு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்த வந்திருந்த ஒருசில பிக்குமாரையும் மௌலவிமாரையும் அங்கிருந்து விரட்டியடித்தனர். 
BBS-attack.jpg
மன்னார் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வில்பத்து பிரச்சினை உட்பட பொது பல சேனாவினர் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தெளிவு படுத்துவதற்காகவே இந்த ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடு செய்திருப்பதாக ஏற்பாட்டாளர்கள் பக்ஸ் மூலம் அறிவித்திருந்தனர். 
 
காலை 10.30மணிக்கு ஊடகவியலாளர் மாநாடு ஆரம்பிக்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய அங்கு ஊடகவியலாளர்கள் வந்திருந்தனர். ஊடகவியலாளர் மாநாடு இடம்பெறும் மண்டபத்திற்கு வருவதற்கு முன்பதாக முஸ்லிம் மௌலவிகளும் வட்டரெக்கே விஜித தேரர் தலைமையிலும் ஹோட்டலில் கீழ் தளத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
 
இதன் போதே பொது பல சேனாவின் விதாரன வெனியே நந்த தேரர் உட்பட சிலர் அவ்விடத்திற்கு வந்து பௌத்த குருமாரை பயன்படுத்தி ஊடகவியலாளர் மாநாடு நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என எதிர்ப்பை வெளியிட்டனர். 
 
இதற்கு பதிலளித்த மௌலவியொருவர் இதனை ஜாதிக பல சேனா என்ற எமது அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. எனவே நீங்கள் அழைப்பில்லாமல் இங்கு வந்திருக்கிறீர்கள் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். 
 
பின்னர் இவ்விடத்திற்கு வந்திருந்த பொலிஸ் உயரதிகாரியொருவரும் இக்கருத்தையே தெரிவித்தார். அதன் பின்னர் அங்கு பொலிஸார் பெருமளவில் வந்து சேர்ந்தனர். 
 
அதன் போது அங்கு கடும் வாக்கு பிரதிவாதங்களும் சலசலப்பும் ஏற்பட்டது. இதன் போது ஆவேசமாக பேசிய நந்த தேரர் பிக்குமார் நடத்தும் கூட்டத்தில் வேறு பிக்குமார் கலந்துகொள்வதை எவராலும் தடுக்க முடியாது என்றார். 
 
அதனை தடுக்க மௌலவிகளுக்கு அதிகாரம் இல்லை. பௌத்த மதத்தை அகௌரவப்படுத்த இடமளிக்க முடியாது வட்டாரக்கே விஜித தேரர் எங்குள்ளவர் பௌத்தத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டவர். முஸ்லிம்களுக்கு சார்பானவர் எனக் குற்றம் சாட்டினார். இதன் போது அங்கு வந்திருந்த பொலிஸ் உயரதிகாரிகள்  பணம் கொடுத்து ஊடகவியலாளர் மாநட்டை நடத்த ஹோட்டலை பதிவு செய்துள்ளனர். எனவே அதற்கு இடமளிக்கப்பட வேண்டும் என்றார். 
 
இக்கருத்தை அங்கிருந்த பிரதான மௌலவியொருவரும் தெரிவித்தார். இதனை பொது பலசேனா தேரர்களும் அவர்களோடு வந்தவர்களும் ஏற்க மறுத்தனர். இவ்வாறு ஹோட்டலுக்குள் வாக்குவாதம் சூடு பிடித்துக் கொண்டிருக்கையில்,
 
அங்கு வந்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அனைவரையும் அமைதிப்படுத்திவிட்டு பேசத் தொடங்கினார். 
 
முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்குமானால் மௌலவிகள் முஸ்லிம் அமைப்புக்கள் முஸ்லிம் அமைச்சுக்களோடு பேசித் தீர்க்க வேண்டும்.
 
அதைவிடுத்து காவியுடை தரித்தவர்களை பயன்படுத்த வேண்டாம். இந்த மாநாட்டை நடத்த வந்த வட்டரெக்கே விஜித தேரர் உண்மையான பௌத்தர் அல்ல காவியுடை போட்டுக்கொண்டு முஸ்லிம்களின் பணத்துக்கு விலை போனவர். 
 
அவ்வாறான ஒருவரை வைத்து மாநாடு நடத்துவதை இடமளிக்க முடியாது. முஸ்லிம்களுக்கு பிரச்சினை இருக்குமானால் ஜெனீவா போங்கள். உலமா சபை உள்ளது. அமைச்சர்கள் இருக்கின்றார்கள் அவர்களிடம் போங்கள் தக்வீத் ஜமாத்தே உள்ளது போங்கள். 
 
முஸ்லிம்கள் பலாத்காரமாக குடியேற்றப்படுகிறார்கள் வில்பத்து அழிக்கப்படுகிறது. ஆட்சியாளர்கள் மெளனமாக உள்ளனர். ஆனால் நாம் மௌனமாக இருக்க மாட்டோம் என ஆவேசமாக பேசியதோடு அங்கிருந்த மௌலவிமாரை வெளியேற்றினர். அதன் பின்னர் ஊடகவியலாளர் மாநாட்டில் வந்திருந்த பௌத்த குருமாரிடம் பௌத்த மதம் தொடர்பாக கேள்விகளை கேட்டு அவர்களை அங்கிருந்து வெளியேற்றினார். 
 
பின்னர் சிறிய பிக்குவொருவரிடம் பௌத்த மதம் தொடர்பாக பௌத்த மதம் தொடர்பில் பல கேள்விகள் கேட்டு பதிலளிக்காத நிலையில் முஸ்லிம்கள் காவியுடை போர்த்தப் பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதோடு அங்கிருந்த சில குருமார் இவர்களுக்கு சாரத்தை கொடுங்கள் என்றனர். 
 
அதன் பின்னர் ஊடகவியலாளர் நடத்த வந்திருந்த வட்டரெக்கே விஜித தேரர் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் மஹியங்கனைக்கு போக முடியாது என ஞானசார தேரர் தெரிவித்தார். 
பின்னர் வட்டரெக்கே விஜித தேரர் கீழ்கண்டவாறு மன்னிப்பு கேட்டார். 
 
நான் முஸ்லிம்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சிங்கள பௌத்தர்களுக்கு எதிராக செயற்பட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் மகா சங்கத்தினரிடமும் சிங்கள பௌத்த மக்களிடமும் மன்னிப்பு கோருகிறேன் என்றார். 
 
அதன் பின்னர் அத்தேரர் பொலிஸாரால் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டார். பின்னர் அங்கிருந்து பொது பல சேனாவினர் தாம் வந்த வாகனங்களில் கலைந்து சென்றனர். 
 
நிப்பொன் ஹோட்டலுக்கு வெளியே மக்கள் கூடியிருந்தார்கள். பொலிஸார் பெருமளவில் ஹோட்டல் வாசலில் காணப்பட்டனர். 
 
அந்த 1½ மணித்தியாலங்கள் நிப்பொன் ஹோட்டல் வாக்குவாதங்களால் அதிர்ந்தது. முஸ்லிம்களுக்கு தம்பிமாருக்கு பௌத்த சாசனத்தை அழிக்க இடமளிக்க மாட்டோம் எனக் கூறிக்கொண்டு பொது பல சேனாவினர் வெளியேறினர்.   
 
  • கருத்துக்கள உறவுகள்

---------

பின்னர் சிறிய பிக்குவொருவரிடம் பௌத்த மதம் தொடர்பாக பௌத்த மதம் தொடர்பில் பல கேள்விகள் கேட்டு பதிலளிக்காத நிலையில் முஸ்லிம்கள் காவியுடை போர்த்தப் பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதோடு அங்கிருந்த சில குருமார் இவர்களுக்கு சாரத்தை கொடுங்கள் என்றனர். 
 
அதன் பின்னர் ஊடகவியலாளர் நடத்த வந்திருந்த வட்டரெக்கே விஜித தேரர் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் மஹியங்கனைக்கு போக முடியாது என ஞானசார தேரர் தெரிவித்தார். 
பின்னர் வட்டரெக்கே விஜித தேரர் கீழ்கண்டவாறு மன்னிப்பு கேட்டார். 
 
நான் முஸ்லிம்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சிங்கள பௌத்தர்களுக்கு எதிராக செயற்பட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் மகா சங்கத்தினரிடமும் சிங்கள பௌத்த மக்களிடமும் மன்னிப்பு கோருகிறேன் என்றார். 
 
அதன் பின்னர் அத்தேரர் பொலிஸாரால் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டார். பின்னர் அங்கிருந்து பொது பல சேனாவினர் தாம் வந்த வாகனங்களில் கலைந்து சென்றனர். 
 
நிப்பொன் ஹோட்டலுக்கு வெளியே மக்கள் கூடியிருந்தார்கள். பொலிஸார் பெருமளவில் ஹோட்டல் வாசலில் காணப்பட்டனர். 
 
அந்த 1½ மணித்தியாலங்கள் நிப்பொன் ஹோட்டல் வாக்குவாதங்களால் அதிர்ந்தது. முஸ்லிம்களுக்கு தம்பிமாருக்கு பௌத்த சாசனத்தை அழிக்க இடமளிக்க மாட்டோம் எனக் கூறிக்கொண்டு பொது பல சேனாவினர் வெளியேறினர்.   
-----

 

நல்ல சூடாகத்தான்... விவாதம் நடந்திருக்கு.

கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒளிப்பதிவின் கடைசி நிமிடங்களில்... முஸ்லீம்,லெப்பை, மௌலவி எல்லோரும் ஓடி விட்டார்கள். :lol: 
ஜெனிவாவில் கொண்டு வந்த அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்து... ஒபாமாவின் படத்துக்கும், அமெரிக்கக் கொடிக்கும் செருப்புமாலை போட்டுக் கொண்டு சில கிழமைக்கு முன்பு ஊர்வலம் போன முஸ்லீம்களுக்கு... இது வேண்டும். :D .
இணைப்பிற்கு... நன்றி சபேசன். :)

  • கருத்துக்கள உறவுகள்
பரமசிவன் கோத்தா கழுத்துப் பாம்பு, தூசனம் சொல்லாத ஒண்டு தான் குறை...
 
அந்த ஆள் தான் எங்களுக்கு வேணும். ரிசாத் பதியுதீன் முல்லையில அட்டகாசம் செய்து, சிவில் நிருவாகங்களில், தந்திரமாக தனது சொல் கேக்கும் தமிழர்களை போட்டு, காணிகளை அடாத்தாகப் பிடுங்கி தனது ஆட்களுக்கு கொடுத்து, வில்பத்துக்குல காலை வைக்கப் போய் நாரை கெளுத்தி மீனை விழுங்கின மாதிரி, முழுசிக் கொண்டு நிக்குறார் போல கிடக்குது.
 
பொது பல சேனாவுக்கு ஒரு 'ஓ' போட வேணும்....
 
கார்னிவெல் ஐஸ்கிரீம் சொந்தக்காரர் கக்கீம், சொக் ஐஸ் குடிச்சுக் கொண்டு இருப்பார். தேர்தல் வரும் போது முஸ்லிம் எல்லோரும் ஒன்னா சேந்து ஒன்னுக்கு இருக்கோணும் ( ஒன்றாக சேர்ந்து இருக்க வேண்டும் என்பதை, முஸ்லிம் தமிழில், இவ்வாறு சொல்வார்கள்)  எண்டு தொடங்கி விடுவார். 
 
முஸ்லிம் தமிழில்: பாரு வேண்டா, ஜாதி வேலமாணம் தானே ஆமதுரு பார்த்தாரு. நம்ம ஆளுவ எது சரி செஞ்சா, போலீஸ்காரணுவ , தூக்கீருப்பானுங்க.....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னதான் அடித்தாலும் பிடித்தாலும், முஸ்லிம் மக்கள் அரசுடன் ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.  இது ஒரு கேவலம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.