Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்ன பாட்டு போட? (இசை புதிர்)

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதோ அடுத்த பாடல்.   

 

இந்த இசை வடிவங்களை பதியும் போது கூடுதலாக நான் ஓரளவு எனும் முழுமயாகவே தருகிறேன்.

இப்படியான அழகான இசையை என்னால் இடையில் வெட்டி, குதற மனம் இல்லாமல் இருக்கிறது.

இந்த காரணத்தால் உங்களுக்கு பாடல்களை கண்டுபிடிக்கும் சிரமமும் கொஞ்சம் குறைவு. 

நன்றி..

 

https://soundcloud.com/write2ravi/2014-04-10-225844

 

https://soundcloud.com/write2ravi/2014-04-10-235539/s-PQE64

  • Replies 338
  • Views 26.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பேசக்கூடாது.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேசக்கூடாது.. :D

 

ஒன்றை சரியாக கண்டு பிடித்து விட்டீர்கள், மற்றையது ?

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றை சரியாக கண்டு பிடித்து விட்டீர்கள், மற்றையது ?

மற்றைய இணைப்பு வேலை செய்யவில்லையே...?!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மற்றைய இணைப்பு வேலை செய்யவில்லையே...?!

 

https://soundcloud.com/write2ravi/2014-04-10-225844/s-EYvI3

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதோ இன்னும் ஒரு பாடல் ...  

 

ஒரு வருடத்தையும் தாண்டி ஒடிய ஒரு வெற்றி திரைப்படப் பாடல்.

 

https://soundcloud.com/write2ravi/2014-04-10-235918

 

  • கருத்துக்கள உறவுகள்

 

"யாரது..சொல்லாமல் நெஞ்சள்ளி போவது...!

தாளாத பெண்மை வாடுமே... பாடுமே....!"
 

 

இதோ இன்னும் ஒரு பாடல் ...  

 

ஒரு வருடத்தையும் தாண்டி ஒடிய ஒரு வெற்றி திரைப்படப் பாடல்.

 

https://soundcloud.com/write2ravi/2014-04-10-235918

 

பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?

பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?

நான் பாடும் ஸ்ரீராகம்..என் நாளுமே நீயல்லவா

என் கண்ணனே.. என் மன்னவா..

 

  • கருத்துக்கள உறவுகள்

சசி cmr இல் வேலை செய்பவரா?

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன்காரு பதில்களே எனதும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறு வயதில் என் மனத்தை கொள்ளை கொண்ட இன்னும் ஒரு பாடல்...

பாடல் எண் - #17

 

https://soundcloud.com/write2ravi/2014-04-11-000324

  • கருத்துக்கள உறவுகள்

பறந்தாலும்.. விடமாட்டேன்.. (குரு)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சசி cmr இல் வேலை செய்பவரா?

இல்லை அக்கா நான் ரொம்ப சாதாரண பிரஜை ..ஏதோ கொஞ்சம் இசையில் ஆர்வம் (பாடுவேன், சில இசை கருவிகள் வாசிப்பேன்)

பறந்தாலும்.. விடமாட்டேன்.. (குரு)

இசை இது உங்களுக்கே நல்லா இருக்கா? இப்படி டக்கு டக்கு எண்டு பதில் தருகுரீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இசை இது உங்களுக்கே நல்லா இருக்கா? இப்படி டக்கு டக்கு எண்டு பதில் தருகுரீர்கள்.

இதே பிழைப்பாதானே இருக்கிறம்??!! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதோ இன்றைய பாடல்...

 

https://soundcloud.com/write2ravi/2014-04-11-001725

  • கருத்துக்கள உறவுகள்

இதோ இன்றைய பாடல்...

https://soundcloud.com/write2ravi/2014-04-11-001725

நீதானே என் பொன் வசந்தம்.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பாடல் #19

https://soundcloud.com/write2ravi/2014-04-11-002345

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பாடல் #20 ...

ஒரு காலத்தில் நிறைய பேரை துள்ள வைத்த பாடல். இசை ராஜனின் வருகை.

https://soundcloud.com/write2ravi/2014-04-11-014207/s-Qs8q0

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பாடல் #20 ...

ஒரு காலத்தில் நிறைய பேரை துள்ள வைத்த பாடல். இசை ராஜனின் வருகை.

https://soundcloud.com/write2ravi/2014-04-11-014207/s-Qs8q0

இது மச்சானைப் பார்த்தீங்களா..

இதற்கு முந்திய இணைப்பு வேலை செய்யவில்லை..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வன்னியன்.

பாடல்களின் இடையில் வரும் இசை வடிவங்கள் மட்டுமே இங்கு தரப்படும்.

உங்கள்  ஞாபக திறனை  சற்றே தட்டிப் பார்த்து பாடலை கண்டு  பிடியுங்கள்.

நம்ம இசை கலைஞன் போல ...

 

இசைக்கலைஞன் எங்கடை மூளையை பாவிக்க விடுறார் இல்லை....அவர் இதுக்கையே குடிவந்துட்டார் போலை கிடக்கு...lol2.gif  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன் எங்கடை மூளையை பாவிக்க விடுறார் இல்லை....அவர் இதுக்கையே குடிவந்துட்டார் போலை கிடக்கு...lol2.gif  :D

 

இசை கலைஞன் ... இசையிலேயே ஊறி போய் விட்டார்.

இதை ஒரு சுவாராஷ்ய போட்டியாக எடுத்தாலும், இதன் இசை கேட்கும் பொழுது அதன் நுணுக்கங்களை கூர்ந்து கேளுங்கள். எப்படி எல்லாம் வித்தியாசமான இசைக்கருவிகள், ஒலிவடிவங்களை குழைத்து குழைத்து தேன் சொட்ட இசை அமைத்து இருக்கிறார் இசை ஞானி அவர்கள்.

இவர் போன்ற மேதைகளின் காலத்தில் நாம் வாழ்ந்தோம், நல்ல தமிழ் பாடல்கள் கேட்டோம் என்பதே ஒரு பாக்கியம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணனின் கருத்தை உள்வாங்கி இனி ஒரு சிறு மாறுதல் செய்யப் போகிறேன்.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு இனிய பாடலின் இசை துளி... கண்டுபிடிக்கப் போவது யாரோ?

 

https://soundcloud.com/write2ravi/2014-03-01-225313a


பாடல் இலக்கம் # 22

https://soundcloud.com/write2ravi/2014-03-01-230232a

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் சொல்லாவிட்டால் நாளை சொல்கிறேன்.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாரும் சொல்லாவிட்டால் நாளை சொல்கிறேன்.. :D

 

இசைகலைஞன் .. நீங்கள் பதிலை இணைக்கும் போது பாடலின் முழு ஒலி வடிவையும் இணைக்கும் வசதி இருக்கின்றதா? இருந்தால் இணைத்து விடுங்கள். ~ நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூப்படைந்த சப்தம்...

"இசை" என்ற தமிழ் சொல் அற்புதமானது. இசயின் பொருள், இலக்கணம், நோக்கம், பயன் எல்லாமே

அதில் சொல்லப்பட்டிருக்கிறது.

இசைக்கு அடிப்படையான ஸ்வரங்கள் ஒவ்வொன்றும் வேறுபட்டவை. அவற்றின் ஒத்திசைவில் இசை பிறக்கிறது.

இசைக்கு வேறுபட்டவை தேவை. எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தால் இசைவும் இல்லை. அதனால் பிறக்கும் இன்பமும் இல்லை.

அதனால் தான் மனிதன் முதற்கொண்டு எல்லா படைப்புக்களும் வேறுபாடுகளோடு, விதம் விதமாக, வகை வகையாக படைக்கப்பட்டிருக்கின்றன.

மனிதன் தான் சக படைப்புகளோடு ஒத்திசைகிற போது வாழ்க்கை இசையாகிவிடுகிறது.

துன்பம் என்பது ஆபசுரம். ஒத்திசைவில் எங்கோ தவறு நடந்திருக்கிறது என்று பொருள்.                                      

இசை ஸ்வரங்களுக்கு  இடையே மட்டுமல்ல, முரண்பட்ட அனைத்துக்கும் இடையே அது இசைவை ஏற்படுத்துகிறது.

ஒவ்வொரு மனிதனும் போர்க்களமாக இருக்கிறான். இசை சமாதானத்தின் வெள்ளை கொடியாக இருக்கிறது.

இசை மனிதனை மனிதனோடு இசைவிக்கிறது. சக படைப்புகளோடு இசைவிக்கிறது, இறைவனோடு இசைவிக்கிறது.

இசை என்பது பூப்படைந்த சப்தம். அது மெளனத்தை காதலிக்கிறது.

இசை வாதம் செய்யும் போது அதன் முன் எல்லா வாதங்களும் தோற்று போகின்றன.

இசை படை எடுக்கும் போது எல்லா ஆயுதங்களும் சரணடைந்து விடுகின்றன.

இசை புல்லாங்குழலில் இருந்து பிறப்பதில்லை. அது புல்லாங்குழல் வழியாக பிறக்கிறது.

மனிதனும் ஒரு புல்லாங்குழல் தான்.

இசையில் ஒரு அமானுஷ்யம் இருக்கிறது. அதில் படைப்பின் ரகசியமும் இறைவனின் மர்மமும் மறைந்து இருக்கின்றன.

இசையை அறிகிறவன் படைப்பின் இரகசியத்தை அறிகிறான். இறைவன் மர்மத்தை அறிகிறான்.

எந்த மனிதன் குரலும் ஆரோகாணாத்தில் ஏறும் உயரத்துக்கு எல்லை உண்டு.அங்கே ஆரோகணம் முடிந்து விட்டதாக அர்த்தம் இல்லை. குரலின் சக்தி முடிந்துவிட்டதாக அர்த்தம்.அதற்கும் அப்பால் எல்லையே இல்லாமல் விரிந்து கொண்டே போகிறது ஆரோகணம்.

அவரோகணமும் அப்படிதான். மனித குரலுக்கு அப்பால் அது எல்லை இல்லாமல் விரிந்து கொண்டே போகிறது.

எங்கே ஒலி நின்று போய் மெளனம் தொடங்குகிறதோ அங்கே தான் இசை பரிபூரணம் அடைகின்றது.

எல்லை அற்று விரியும் அந்த மெளனமே கேளாத இசையாகும். கேட்கும் இசையை விட இது இனிமையானது. அங்கே தான் இறைவன் கிடைக்கிறான்.

நல்ல இசை கேட்கும் போது கண்களில் நீர் அரும்புகிறது. அந்த கண்ணீர் ஆனந்த கண்ணீர் அல்ல; துயரக் கண்ணீரும் அல்ல.

அது இசை என்ற பகீரதனின் தவத்திற்கு வரமாக வானுலகத்தில் இருந்து இறங்கி வந்த கங்கை நீர்.

இசை தேவ பாஷை. அதை பேசும் போது மனிதனும் தேவனாகிறான். அதை பேசும் போது பேச முடியாததை பேசிவிடுகிறான்.

இசை ஞான நீராட்டு. அதில் மனிதனுடைய சகல அழுக்குகளும் கழுவப்பட்டு விடுகின்றன.

இசை இறைவனுடைய வேதம். அதில் எல்லா ஞானங்‌களும் வெளிப்படுத்தப்படுகின்றன.

இசை ஓர் அவதாரம். அது துஷ்டர்களை நிக்கிரகம் செய்வதில்லை. அது துஷ்டர்களையும் சிஷ்டர்களாக்குகிறது.

அன்றாட வாழ்க்கையில் காணாமல் போகும் மனிதனை இசை தான் கண்டு பிடித்து அவனுடைய வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போகிறது.

 

~ ~ ~ ~ ~ அப்துல் ரகுமான்  ~ ~ ~ ~ ~  ~

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.