Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாரும் சொல்லமாட்டார்களா....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விகட கவி நான் ஏதோ யதார்த்தமா நினைத்ததை எழுதிட்டன் மற்றபடி குறை நினைக்க வேண்டாம் கவிதை நல்லதுதான் அதில் உங்கள் ஆதங்கம் தெரிகிறது ஆனால் பொதுவாக பலர் தாங்கள் செய்தால் நியாயம் அதையே மற்றவர் செய்யும்போது குற்றம் அதை தான் சொல்லவந்தேன் நீங்கள் அந்த பெண்ணை நினைத்து தண்ணியடிக்கா விட்டால் சரி :P :P

  • Replies 125
  • Views 13.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ராத்திரியில்..போர் தொடக்கும்

சாத்திரி(யார்?)

பெண்ணோ....

என் மனதை.. எடை போடும்

வேலைகளுமேனோ...?

கவலை வேண்டாம்..

காதல்..கருணை...

அன்பு..அனுதாபம்..

யாவும் பகுத்தறியும் வயதுக்கு வந்து நாளாகிறது..

மற்றும் மனைவியிருக்க..

வேறு மாதுவை எண்ணி தண்ணியடிக்கவும் தேவையில்லை..

நன்றி சாத்திரி

விகட கவி நான் ஏதோ யதார்த்தமா நினைத்ததை எழுதிட்டன் மற்றபடி குறை நினைக்க வேண்டாம் கவிதை நல்லதுதான் அதில் உங்கள் ஆதங்கம் தெரிகிறது ஆனால் பொதுவாக பலர் தாங்கள் செய்தால் நியாயம் அதையே மற்றவர் செய்யும்போது குற்றம் அதை தான் சொல்லவந்தேன் நீங்கள் அந்த பெண்ணை நினைத்து தண்ணியடிக்கா விட்டால் சரி :P :P

எனக்கு தெரிந்த வரை போத்தலை கண்டாலே ஆட்டம் காண ஆரம்பித்து விடுவார் விகடகவி.!

தண்ணி அடிப்பார் எண்டு எனக்கு நம்பிக்கை இல்லை...! :wink: :P

  • தொடங்கியவர்

அடடா...

தல..

சரியா புரிஞ்சிட்டிருக்கீங்க.....

தானாடாவிட்டாலும்..

தண்ணியாட்டும் போல..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் இப்படித்தான் எனக்கு லண்டனில்

தெரிந்த ஒரு வாலிபவயது பெடியன்

அரும்பு மீசை, குறுப்புப்பார்வை

அழகான புன்முறுவலோடு ஒரு

அமைதியான தலையசைப்பு

அக்கா தமிழா நீங்கள்

எனத்தயக்கதுடன்..ஒரு

வினாவல்..எல்லாம் ஒரு

மூன்று வருடங்கள் தான்

ஜெல் அழுத்திய தலை

இழுப்பு.. காதில் கடுக்கன்

காற்சட்டை இந்தா விழுகிறேன்

பிடி என்று..சேட்டில் இரண்டு

பட்டின் குளிருக்குள்ளும்

திறந்தபடி

வாயில் சிகரெட்

கையில் இரும்பு சங்கிலி

காய் சிஸ்டர்..கௌவ்வாயு

என்று சிவந்த விழி சிரிக்க

கேட்டான்.. அடபாவி..

என பேச்சிழந்து போய்விட்டேன் :? :? :D:)

ம் இப்படித்தான் எனக்கு லண்டனில்

தெரிந்த ஒரு வாலிபவயது பெடியன்

அரும்பு மீசை, குறுப்புப்பார்வை

அழகான புன்முறுவலோடு ஒரு

அமைதியான தலையசைப்பு

அக்கா தமிழா நீங்கள்

எனத்தயக்கதுடன்..ஒரு

வினாவல்..எல்லாம் ஒரு

மூன்று வருடங்கள் தான்

ஜெல் அழுத்திய தலை

இழுப்பு.. காதில் கடுக்கன்

காற்சட்டை இந்தா விழுகிறேன்

பிடி என்று..சேட்டில் இரண்டு

பட்டின் குளிருக்குள்ளும்

திறந்தபடி

வாயில் சிகரெட்

கையில் இரும்பு சங்கிலி

காய் சிஸ்டர்..கௌவ்வாயு

என்று சிவந்த விழி சிரிக்க

கேட்டான்.. அடபாவி..

என பேச்சிழந்து போய்விட்டேன்

:D:)ஓ... நீங்க சாத்திரிஅங்கிளைதான் பாத்திருப்பீங்க... :lol: :P :wink:

  • தொடங்கியவர்

அப்ப

இவங்களும் பிரான்சில இருக்கினமோ...

  • தொடங்கியவர்

அப்ப

இவங்களும் பிரான்சில இருக்கினமோ...

அடா..டா..என்ன..வரி..என்ன..கவி....எப்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சு படபடக்க கால்கள் நடை பின்ன

றோட்டை கடந்து அடுத்த பக்கம் போவோமா?

ஜயோ பார்த்து விட்டாங்களே.. இனி

மாறினால் அதுக்கு தனியான சந்தேகம் வந்து

என்னென்ன கேட்பாங்களோ?

முருகா.. திருப்பி போகலாமோ..

பின்தொடர்ந்தால்..

கிட்டே வந்தாய் விட்டது

கடந்தால் சரி.

தாடியை படி படி போல் வெட்டியவனின்

வெறித்த பார்வையைத் தவிர்த்தபடி

குழுக்கே தலைவன் போல் நின்றவன்

நடுவே தனிய வந்து நின்றான்

புகையை முகத்தில் ஊதி விட்டான்

காற்சட்டைக்குள் போன்னை எடுத்து

பதில் சொன்னான்..

நிற்பதா மெதுவாக நடப்பதா?

வினா நெஞ்சைக் குடைய

முதுகு தண்டில் வியர்வை

வழிந்தது..

மற்ற ஜந்து பேரும் இஞ்சி தின்ற

ஏதோ போல ஒரு மந்தகாச புன்கையுடன்

மதில் இருந்தும் சாய்ந்தும்

ஒருவன் அரைவிழி பார்வையில்

ஏழு கடல்களுக்கப்பால் தனி

உலகில்..

டியேய் எங்கே உன்;ட பிரண்ட்

எங்கை போனாலும் நான் தான்

அவளுக்கு எல்லாம் என்று சொல்லி வை..

உறுமிவிட்டு ஓய்தான்..

தலை தன்னால் ஆடியது

ஒட்டு மொத்த சக்தியையும்

திரட்டிக்கொண்டு பாடசாலை

அடைந்தாகிவிட்டது..

அப்படா.

சிறீ லங்கன் ஆமிக்கு பயந்து

அக்காவிற்கு பின்னால்

அவள் என்னைத்தள்ள

நான் அவளைத்தள்ளிக்

கொண்டு அந்த நாளில்..

பிறகு ஒட்டுப்படைகளின்

பார்வையை தவிர்து

தலை கவிண்ட வண்ணம்

சில காலம்

இன்னும் இங்கும் வந்துமா?

எங்களின் இனத்தைகண்டு

நாமே பயந்து ஒடுங்கி

சீ ..என்ன வாழ்க்கை இது :lol::lol: :x :x :evil: :evil:

அடஉண்மை நிகழ்வுகளை கொண்டு

வந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்

கோபிதாவும் நம்ம விகடகவி

போல கலக்குறாங்களே :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கியன் சார் நீங்களுந்தான் கவிதையில் கலக்குறீங்களே

இலக்கியன் சார் நீங்களுந்தான் கவிதையில் கலக்குறீங்களே

கறுப்பி கருத்து நன்று :lol:

நான் ஒருமுறை ஊரில இருக்கும் போது ஏறி விழுந்தனான் :lol:

யாரோ என்ன என்று கேட்கும் சத்தம் கேட்குது இங்கை :wink:

வேறை ஒன்றும் இல்லை பப்பா மரத்திலதான் :lol: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி கருத்து நன்று :lol:

நான் ஒருமுறை ஊரில இருக்கும் போது ஏறி விழுந்தனான் :lol:

யாரோ என்ன என்று கேட்கும் சத்தம் கேட்குது இங்கை :wink:

வேறை ஒன்றும் இல்லை பப்பா மரத்திலதான் :lol: :wink:

பப்பா மரத்துகு என்ன நடந்தது. பப்பா மரம் முறிந்துட்டுதோ

  • தொடங்கியவர்

கோபிதா..

நீங்கள் எழுதியதைப்படித்து

வெட்கமும் வேதனையும்

அடைந்தேன்...

பல இளைஞர்கள்...

மதுவுக்கும்..போதைப்பொருட்களு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சண்டியர்; தினம் சரி

யார் நடுவர்?

அவருக்கு சங்கு ஊதி விடுவார்கள்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிதர்சனமான நிகழ்வுகளை கவிதை மூலம் அழகாகக் கூறி இருக்கிறியள் கோபிதாவும் விகடகவியும் பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்

சண்டியர்; தினம் சரி

யார் நடுவர்?

அவருக்கு சங்கு ஊதி விடுவார்கள்!!

வேற யார் பொலீஸ்தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் ..பொலிஸ்தான் தமிழர் தமிழருக்குள்

பிரச்சனை என்றால் அவ்வளவாக

அலட்டிக்கொள்கிறார்கள் இல்லையே! :D

  • தொடங்கியவர்

ம் ..பொலிஸ்தான் தமிழர் தமிழருக்குள்

பிரச்சனை என்றால் அவ்வளவாக

அலட்டிக்கொள்கிறார்கள் இல்லையே! :D

அடிக்கடி வெட்டுக்குத்து

கொலைக்காக

ஓடுப்பட்டு தலையைப் பிய்த்துக்கொள்வதிலும்

ஒருநாள் மத்தியஸ்தம் பரவாயில்லையே..

  • தொடங்கியவர்

ம் ..பொலிஸ்தான் தமிழர் தமிழருக்குள்

பிரச்சனை என்றால் அவ்வளவாக

அலட்டிக்கொள்கிறார்கள் இல்லையே! :D

அடிக்கடி கொலை குத்துவெட்டு

என்று ஓடி தலையைப்பிய்த்துக் கொள்வதிலும்

ஒரு நாள் மத்தியஸ்தம் பரவாயில்லைதானே.....

அதை தான் நானும் சொல்லுகிறேன் வசதி சூழ்நிலைகேற்ப கலாச்சாரம் பண்பாடு எல்லாம் மாறிவிடும் இங்கே ஜீன்ஸ் போட்டது இலங்கைக்கு போய் அரைகாற்சட்டையோடு நிற்கிறது இதுக்கு என்ன சொல்லுகிறீர்

:?: :?: அது சரி நான் 60 வயது கிழவியை பற்றி தான் சொன்னனான் நீங்க ஏன் கோவிக்கீறிங்க :D:):lol:

:lol::lol::lol::lol::lol:

காலாச்சாரம் சூழல்க்கு ஏற்ற மாதிரி பண்பாடு ஒரு நாளும் மாறாது நீங்கள் தான் அப்படி மாற வைக்கிறியள். பட் சூழலுக்கு ஏற்ற மாதிரி உங்கள் உடை மாறுவதால் ஒரு தப்பும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ம்ம் ஒரு சிலரை அப்படி செய்கிறார்கள் தான் இல்லை என்று சொல்லவில்லை அவர்கள் அவர்களாக உணரவேண்டும். நாம் திணிக்க முடியுமோ?? மேபி அவைக்கு அந்த உடுப்பு வசதியாக இருந்து இருக்கலாம்??? 60 வயது கிழவியோ இல்லை என்னை மாதிரி 16 வயது குமரியோ என்டது இப்ப பிரச்சினை இல்லை. விளங்கிச்சோஒ?? :evil: :evil: :evil: :evil: :evil:

  • தொடங்கியவர்

புத்தருக்கே புத்திமதியா? :lol::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் இனம் மட்டுமா..

எல்லா இனத்தவரும்..

எதிர்கொள்ளும் பிரச்சினை..

கலாச்சார சீரழிவு...

யாரும் ஏதும் செய்ய முடியாது..

பட்டுத்தெளிய வேண்டும்...

  • தொடங்கியவர்

தமிழ் இனம் மட்டுமா..

எல்லா இனத்தவரும்..

எதிர்கொள்ளும் பிரச்சினை..

கலாச்சார சீரழிவு...

யாரும் ஏதும் செய்ய முடியாது..

பட்டுத்தெளிய வேண்டும்...

இருக்கலாம்..

மற்றவருடைய கலாச்சாரம் போலா நம்முடைய கலாச்சாரம்...

இதெல்லாம் பேசினா அடிக்க வாறாங்க...

எல்லாம்...சுயவழி போய்...

சுருதி கெட்டுப்போச்சு

என்ன பண்ணறது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.