Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனநாயகத்தை கொண்டாடி மகிழவே ராஜபக்சே, நவாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு: ஆட்சேபங்களை நிராகரித்து பாஜக விளக்கம்

Featured Replies

xnewPic_8110_jpg_1909644h.jpg.pagespeed.
நிர்மலா சீதாராமன்.| கோப்புப் படம்.

பிரதமராக பாஜக தலைவர் நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவுக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை என பாஜக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாஜக செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

மோடி பதவியேற்பு விழாவுக்கு வரும்படி இலங்கை அதிபர் ராஜபக்சே, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்துள்ளதற்கு எழும் ஆட்சேபங்களை பாஜக நிராகரிக்கிறது.

சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு விடுத்துள்ள அழைப்பு ஜனநாயகத்தின் மகிழ்ச்சிமிகு கொண்டாட்டத்தில் பங்கேற்க வைப்பதற்கானதாகும்.இந்த கண்ணோட்டத்தில்தான் இந்த அழைப்பை நாம் கருதவேண்டும். புதிய பிரதமர் பதவியேற்கும் நிகழ்ச்சியில் நல்லெண்ணத்தை உருவாக்குவதற்கான பொறுப்புமிக்க அடையாளமாகவே சார்க் நாடுகளுக்கு விடுத்த அழைப்பை நாம் பார்க்க வேண்டும்.

இந்த உவகை மிக்க நிகழ்ச்சியில் நமது பக்கத்து நாடுகள் பங்கேற்பதை வரவேற்கிறோம்.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட தலைவர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் அவர்களும் காரணத்தை புரிந்து கொள்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என்றார் நிர்மலா சீதாராமன்.

சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு விடுத்துள்ள அழைப்பு புதிய அரசு எடுத்துள்ள ஆக்கபூர்வ நடவடிக்கை என்று் பாஜகவின் மற்றொரு செய்தித்தொடர்பாளர் கேப்டன் அபிமன்யு தெரிவித்திருக்கிறார்.

அடல் பிகாரி வாஜ்பாயின் வழியில்தான் தமது பக்கத்து நாடுகளின் தலைவர்களுக்கும் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார் என்றார் பாஜக தலைவர்களில் ஒருவரான பிரகாஷ் ஜவடேகர்.-பிடிஐ

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article6038382.ece?homepage=true

 

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா நிர்மலா அம்மையாரே! உங்களை வன்புணர்வு செய்து, உங்கள் கண்முன்னே உங்கள் கணவரை வெட்டிவீசி, பிள்ளைகளையும் குத்திக் கொன்று புதைத்திருந்தால் சண்டாளர்களின் சனநாய மகிழ்ச்சியின் தார்ப்பரியம் தங்களுக்கும் புரிந்திருக்கும். பதவி ஒரு பெண்ணின் தாய்மை உள்ளத்தையும் கொன்றுவிடுமா !! :o

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள்.. ம.பி.. உ.பியில் இருந்து வந்தவர்களாம். (அங்கினையும் சிங்கத்துக்குப் பிறந்ததுகள் தான் வாழுதுகள் போல. ஆனால் சிங்கம் தான் இந்தியாவில் இல்லாமல் போச்சுது. எதுக்கும்.. ஒரு டி என் ஏ ரெஸ்ட் செய்து பார்க்கனும்.. முதலில)

 

ம.பி.. உ.பி.. மோடிக்கு வாக்குப் போட்டதால.. சிங்களக் கொடுங்கோலனைக் கூப்பிட்டு.. கிரீடம் சூடப் போறாராம்.. மோடி.

 

அண்ணன் சீமான் அன்று சொன்னது.. இன்று நிதர்சனமாக..!! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள்.. ம.பி.. உ.பியில் இருந்து வந்தவர்களாம். (அங்கினையும் சிங்கத்துக்குப் பிறந்ததுகள் தான் வாழுதுகள் போல. ஆனால் சிங்கம் தான் இந்தியாவில் இல்லாமல் போச்சுது. எதுக்கும்.. ஒரு டி என் ஏ ரெஸ்ட் செய்து பார்க்கனும்.. முதலில)

ம.பி.. உ.பி.. மோடிக்கு வாக்குப் போட்டதால.. சிங்களக் கொடுங்கோலனைக் கூப்பிட்டு.. கிரீடம் சூடப் போறாராம்.. மோடி.

அண்ணன் சீமான் அன்று சொன்னது.. இன்று நிதர்சனமாக..!! :icon_idea::)

அதைத்தான் நானும் நினைத்தேன் நெடுக்ஸ்.

"மதச்சாயம் பூசிய காங்கிரஸ்தான் பாரதீய ஜனதா என்று அப்போதே சீமான் சொல்லிவிட்டார். தமிழகம் அவர் சொன்னதுபோலவே இரண்டு தேசியக் கட்சிகளையும் விலக்கி வைத்திருப்பது ஆறுதல்.

இதை உணராமல் தமிழருவி மணியனின் பேச்சைக் கேட்டு வைகோ அவர்கள் பாரதீய ஜனதா கூட்டணியில் இணைந்துவிட்டார்..

இன்னும் சில நாட்களில் அறிக்கை வரும். 13 ஆம் திருத்தத்தை வலியுறுத்தினோம் என்று. :o:rolleyes:

அதைத்தான் நானும் நினைத்தேன் நெடுக்ஸ்.

"மதச்சாயம் பூசிய காங்கிரஸ்தான் பாரதீய ஜனதா என்று அப்போதே சீமான் சொல்லிவிட்டார். தமிழகம் அவர் சொன்னதுபோலவே இரண்டு தேசியக் கட்சிகளையும் விலக்கி வைத்திருப்பது ஆறுதல்.

இதை உணராமல் தமிழருவி மணியனின் பேச்சைக் கேட்டு வைகோ அவர்கள் பாரதீய ஜனதா கூட்டணியில் இணைந்துவிட்டார்..

இன்னும் சில நாட்களில் அறிக்கை வரும். 13 ஆம் திருத்தத்தை வலியுறுத்தினோம் என்று. :o:rolleyes:

அத்வானி தான் அந்த கொங்கிரஸ் குடும்ப கறுப்பாடு. அவரும் ஓரங்கட்டுபட்டுவிட்டார்.

வைகோ சேர்ந்ததற்கு தமிழருவி மணியன் காரணம் இல்லை. அதை இங்கு பகிர்ந்து கொள்ள முடியாது.:)

சிங்களவர்கள்.. ம.பி.. உ.பியில் இருந்து வந்தவர்களாம். (அங்கினையும் சிங்கத்துக்குப் பிறந்ததுகள் தான் வாழுதுகள் போல. ஆனால் சிங்கம் தான் இந்தியாவில் இல்லாமல் போச்சுது. எதுக்கும்.. ஒரு டி என் ஏ ரெஸ்ட் செய்து பார்க்கனும்.. முதலில)

ம.பி.. உ.பி.. மோடிக்கு வாக்குப் போட்டதால.. சிங்களக் கொடுங்கோலனைக் கூப்பிட்டு.. கிரீடம் சூடப் போறாராம்.. மோடி.

அண்ணன் சீமான் அன்று சொன்னது.. இன்று நிதர்சனமாக..!! :icon_idea::)

முனைவர் ரிச்சர்ட் தம்பையா தனது புத்தகத்தில் ஒரிசா தான் சிங்களவரின் பூர்வீகம் என்று குறிப்பிட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

அத்வானி தான் அந்த கொங்கிரஸ் குடும்ப கறுப்பாடு. அவரும் ஓரங்கட்டுபட்டுவிட்டார்.

வைகோ சேர்ந்ததற்கு தமிழருவி மணியன் காரணம் இல்லை. அதை இங்கு பகிர்ந்து கொள்ள முடியாது.:)

அவர் சேர்ந்ததுக்கு ஒரு சிறந்த பின்னணி இருக்குமானால் அதை வரவேற்க வேண்டியதுதான் விக். :D

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சேர்ந்ததுக்கு ஒரு சிறந்த பின்னணி இருக்குமானால் அதை வரவேற்க வேண்டியதுதான் விக். :D

 

 

இப்படித்தான்

நாடு கடந்த அரசு வந்தபோதும்

தாயகத்தில் தமிழ்த்தேசிய முன்னணி  வந்தபோதும்

இங்குள்ளவர்களுடன் முரண்பட்டேன்

 

காலத்தின் தேவை  அவை

அதிகாரம் ஒரே இடத்தில் இருக்காமல் பார்த்துக்கொள்ளணும்

அத்துடன் கீரைக்கடைக்கும் எதிர்க்கடை  இருக்கணும்

அவசரப்படாதீர்கள்

எம்மை நம்புங்கள்

காலம் பதில் சொல்லும் என்றார்கள்

அது இப்பொழுது புலப்படுகிறது

ஏதோ ஒரு  சக்தி இயக்குவது   தெரிகிறது

ஆனால்...........???

இப்படித்தான்

நாடு கடந்த அரசு வந்தபோதும்

தாயகத்தில் தமிழ்த்தேசிய முன்னணி வந்தபோதும்

இங்குள்ளவர்களுடன் முரண்பட்டேன்

காலத்தின் தேவை அவை

அதிகாரம் ஒரே இடத்தில் இருக்காமல் பார்த்துக்கொள்ளணும்

அத்துடன் கீரைக்கடைக்கும் எதிர்க்கடை இருக்கணும்

அவசரப்படாதீர்கள்

எம்மை நம்புங்கள்

காலம் பதில் சொல்லும் என்றார்கள்

அது இப்பொழுது புலப்படுகிறது

ஏதோ ஒரு சக்தி இயக்குவது தெரிகிறது

ஆனால்...........???

காலம் பதில் சொல்லும்.

தமிழீழம் சுதந்திரம் அடையும் என்று நம்பினாலே போதும்.

இது எல்லாம் ஒரு அரசியலுக்கு அப்பாற்பட்ட சம்பிராதய அழைப்பு .சம்பந்தர் விக்கி கூடத்தான் மகிந்தாவுடன் கை கொடுத்து தேனிர் அருந்துகின்றார்கள் .

 

யாழில வர வர எதுவுமே  தெரியாதவர்கள் எண்ணிக்கை கூடுது. :icon_mrgreen: 

 

மோடியின் அரசியல் என்னவென்று பார்க்க கொஞ்ச அவகாசம் தேவை . 

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் அரசியல்வாதிகள் கிடையாது. மக்கள் மக்களுக்குள்ள உணர்வுகளை தான் பிரதிபலிப்பார்கள். அரசியல்வாதிகள் அதனை உள்வாகிச் செயற்பட வேண்டும். இன்றேல் தூக்கி வீசப்படுவார்கள்..!

 

அந்த வகையில்.. தமிழக மக்கள் தங்கள் சகோதரர்களை படுகொலை செய்தவன் தங்கள் எல்லைக்குள் நுழைவதை எதிர்கிறார்கள். அது அவர்களின் உரிமை..! அவர்களின் உணர்வின் வெளிப்பாடு. அதனை மோடி உணர்ந்து உள்வாங்கிக் கொள்ளனும். தவறினால்.. மக்கள் தகுந்த நேரத்தில் தீர்ப்பெழுதுவார்கள்..!

 

தமிழக மக்கள்.. தமிழீழ மக்கள்.. சிங்களவனோடு கைகுலுக்கத் தயாராக இல்லை. :icon_idea:

தன் அண்டை நாடுகள் தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஒரு போதுமே சிறப்பாக இருந்ததில்லை.

 

எப்போதுமே தன்னை 'பெரிய அண்ணண்' தோரணையில் வைத்துக் கொண்டு அண்டை நாடுகளின் பிரச்சனைகளை மேலும் விரிவுபடுத்தி அதில் குளிர் காயும் சுயநல அரசியலைக் கொண்டதாகத் தான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அமைந்து வருகின்றது.

அண்டை நாடுகளின் அரசுகளை தன் கைக்குள் கொண்டு வருவதற்காக அவ் நாடுகளில் உருவான ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டங்களை முதலில் ஆதரித்தும் பின் அவற்றை இடை நடுவில் கைவிட்டு அம் மக்களை அழித்தொழிக்க முற்பட்டதும் இவ் சுயநல அரசியலின் வெளிப்பாடுகள் தான்.

 

இன்று மோடி சார்க் நாடுகளின் தலைவர்களை (தன் அண்டைய நாடுகளின் தலைவர்களை) தன் பதவியேற்பு நிகழ்வுக்கு மோடி அழைப்பது ஒரு வேளை இப் போக்கை மாற்றியமைப்பதற்கான முயற்சியாக இருக்கலாம். அல்லது இப் போக்கை மேலும் விரிவுபடுத்தி அண்டை நாடுகளில் நிலவும் அரசியல் பிரச்சனைகளை மேலும் தீவிரமாக்கி குளிர் காயவதற்காகவும் இருக்கலாம்.

 

இந்த இரண்டு காரணங்களில் எதுவென்றாலும் அது ஈழத் தமிழகர்களுக்கு நன்மையில் முடியாது. இலங்கையுடன் நல்லுறவை மேற்கொள்ள நினைத்தால் மகிந்த அரசுடன் இந்தியா மேலும் நெருங்கும். இல்லை, பிரச்சனைகளை மேலும் தீவிரமாக்க நினைத்தால் சகுனி வேலையில் இறங்கும் அப்பவும் தமிழர்களுக்கு மேலும் அழிவைத் தான் கொண்டு வரும்.

இவற்றை தெளிவாக விளங்கிக் கொண்டு அரசியல் செய்யத் தான் இன்று ஈழத் தமிழ் மக்களிடம் அரசியல் தலைமை இல்லை.

 

நிழலி சொல்வது முற்றிலும் உண்மை. அத்துடன் எமக்கு சரியான நேர்மையான வழி நடத்தும் தமிழ் தலைமைகள் தாய்மண்ணிலும், புலத்திலும் உருவாக்கப்படவேண்டிய காலத்தின் தேவை உடன் இருக்கிறது. அல்லது விரைவில் இலங்கையில் தமிழர் வாழ்வு கேள்விக்குறியாகிவிடும். நன்றாக திட்டமிட்டு ஒற்றுமையாக இலக்குடன் இன அழிப்பு தொடர்கிறது... இனியாவது எம்மக்கள் இதனை உணர்ந்து ஒற்றுமையாக செயல்படவேண்டும். உலகத்தில் தமிழர்களுக்கு எதிராக எது நடந்தாலும் உடன் எல்லோரும் சேர்ந்து செயல்படும் காலத்தை நாம் உருவாக்க வேண்டும்.. இல்லையேல் அழிவுதான்..விடுதலைக்கெண்டு புறப்பட்ட எல்லோரும் பழைய கதைகளை மறந்து தமிழரின் நன்மை கருதி ஒற்றுமையாக செயல்பட முயலவேண்டும். காலத்தின் தேவைகருதி இனி முரண்படுவதை எல்லோரும் நிறுத்தி உங்கள் சக்தியை முழுவதும் ...இன நன்மைக்கு பயன்படுத்துங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

 

தன் அண்டை நாடுகள் தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஒரு போதுமே சிறப்பாக இருந்ததில்லை.

 

எப்போதுமே தன்னை 'பெரிய அண்ணண்' தோரணையில் வைத்துக் கொண்டு அண்டை நாடுகளின் பிரச்சனைகளை மேலும் விரிவுபடுத்தி அதில் குளிர் காயும் சுயநல அரசியலைக் கொண்டதாகத் தான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அமைந்து வருகின்றது.

அண்டை நாடுகளின் அரசுகளை தன் கைக்குள் கொண்டு வருவதற்காக அவ் நாடுகளில் உருவான ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டங்களை முதலில் ஆதரித்தும் பின் அவற்றை இடை நடுவில் கைவிட்டு அம் மக்களை அழித்தொழிக்க முற்பட்டதும் இவ் சுயநல அரசியலின் வெளிப்பாடுகள் தான்.

 

இன்று மோடி சார்க் நாடுகளின் தலைவர்களை (தன் அண்டைய நாடுகளின் தலைவர்களை) தன் பதவியேற்பு நிகழ்வுக்கு மோடி அழைப்பது ஒரு வேளை இப் போக்கை மாற்றியமைப்பதற்கான முயற்சியாக இருக்கலாம். அல்லது இப் போக்கை மேலும் விரிவுபடுத்தி அண்டை நாடுகளில் நிலவும் அரசியல் பிரச்சனைகளை மேலும் தீவிரமாக்கி குளிர் காயவதற்காகவும் இருக்கலாம்.

 

இந்த இரண்டு காரணங்களில் எதுவென்றாலும் அது ஈழத் தமிழகர்களுக்கு நன்மையில் முடியாது. இலங்கையுடன் நல்லுறவை மேற்கொள்ள நினைத்தால் மகிந்த அரசுடன் இந்தியா மேலும் நெருங்கும். இல்லை, பிரச்சனைகளை மேலும் தீவிரமாக்க நினைத்தால் சகுனி வேலையில் இறங்கும் அப்பவும் தமிழர்களுக்கு மேலும் அழிவைத் தான் கொண்டு வரும்.

இவற்றை தெளிவாக விளங்கிக் கொண்டு அரசியல் செய்யத் தான் இன்று ஈழத் தமிழ் மக்களிடம் அரசியல் தலைமை இல்லை.

 

 

தலமை  வராது உருவாகாது எனத்தெரிந்தவர்கள்

இவ்வாறு  வானம் பார்த்த பூமிபோல் இருப்பதால்  மட்டும் ஏதாவது  நடந்துவிடவா போகிறது...?

செயல் என்ன?

செய்யப்போவது யார்?

எப்போது???

இதற்கு விடை..........

(சில  இந்திய  நண்பர்களுடன் பேசிய  போது

அண்ணனின் நாட்டாமை

முன்பிலும் பார்க்க  இவரது ஆட்சியில் அதிகம் துள்ளும் என்றார்கள்)

தலமை  வராது உருவாகாது எனத்தெரிந்தவர்கள்

இவ்வாறு  வானம் பார்த்த பூமிபோல் இருப்பதால்  மட்டும் ஏதாவது  நடந்துவிடவா போகிறது...?

செயல் என்ன?

செய்யப்போவது யார்?

எப்போது???

இதற்கு விடை..........

(சில  இந்திய  நண்பர்களுடன் பேசிய  போது

அண்ணனின் நாட்டாமை

முன்பிலும் பார்க்க  இவரது ஆட்சியில் அதிகம் துள்ளும் என்றார்கள்)

 

இருக்காது, முதலில் எமது விடுதலைப் போராட்டத்தை அழித்தது யார், அவர்களுக்கு என்ன லாபம், எப்படி அழித்தார்கள் என்ற கேள்விக்கு விடையைத் தேடுங்கள், அதை கண்டு பிடித்தால் மோடிஜியின் காலத்தில் தமிழ் ஈழம் அமைய வாயிப்பே அதிகம், அதே போல் 1996௨004 பி.ஜெ.பி காலம் அது புலிகளுக்கும் பொற்காலமாக அமைந்தது அதே போல் 2004இற்கு பிறகு அழிவு காலம் தொடங்கியது, மோடியின் வரலாற்றை பாத்தால் தெரியும் அவரது கடந்த காலம் ஒழுக்கமான முன்னேற்றத்தை கொண்டது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.