Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படுகொலை செய்யப்பட்ட டிமாஷா கயனகியின் கவிதை

Featured Replies

சம்பவம் – இலங்கை, எல்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி செல்வி.டிமாஷா கயனகி, தனது கல்வி நடவடிக்கைகளுக்காக கொழும்பு செல்வதற்காக 24.05.2014 அன்று விடிகாலை 3.30 மணிக்கு, எல்பிடிய பஸ் நிலையத்துக்கு வந்தவேளை, அங்கு நின்றிருந்த இராணுவ வீரனொருவனால் அருகிலிருந்த பாழடைந்த கட்டிடமொன்றுக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். மாணவி அங்கிருந்து தப்பிக்க முற்பட்ட வேளையில் இராணுவ வீரனால் கத்தியால் பல தடவை குத்தப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். மோப்பநாயின் உதவி கொண்டு தப்பித்துச் சென்ற குற்றவாளியைக் கைது செய்துள்ள போதிலும், குற்றவாளி இராணுவத்தினன் என்பதால் ‘இராணுவ வீரனது காதலை மறுத்ததால் அவனுக்கு ஏற்பட்ட சடுதியான கோபத்தின் காரணமாகவே கொலை நிகழ்ந்துள்ளது. திட்டமிட்டுச் செய்ததல்ல’ என இராணுவத்தரப்பும், இலங்கைக் காவல்துறையும் சம்பவத்தை மூடி மறைக்கவும், குற்றவாளியைத் தப்பிக்கச் செய்யவும் முயற்சிக்கிறது.

)

கடந்த 24.05.2014 அன்று ஒரு இராணுவ வீரனால் படுகொலை செய்யப்பட்ட 21 வயதான பல்கலைக்கழக மாணவி செல்வி.டிமாஷா கயனகி மரணிக்க முன்பு இறுதியாக எழுதிய கவிதை இது.

 

dimasha.jpg

எப்போதேனுமொரு நாள் இவையெல்லாவற்றையும்
விட்டுச் செல்லவேண்டியிருக்கும்
எவரும் மகிழ்ச்சியாகச் செல்லும் பயணமல்ல அது
எனினும் அதை
துயரமின்றிச் செல்லமுடிந்தால்
எவ்வளவு நன்றாகவிருக்கும்

அந்நாளில்
நினைவில் வராதோர் அனேகர்
எனினும்
நினைவில் வரக் கூடிய சிலரில்
நீங்கள் இருப்பீர்களென்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது

நான் மரிக்கும் நாளில் வாருங்கள்
என்னைப் பார்க்கவென்றே வந்துசெல்லுங்கள்
ஒருபோதும் சிந்திராத கண்ணீரில்
ஒரு துளியை விட்டுச் செல்லுங்கள்

இரு விழிகளும் இறுக்கமாக மூடப்பட்டிருந்த போதிலும்
குளிர்ந்த சரீரத்துடனிருந்த போதிலும்
முன்பு பழகியதையெண்ணி
நெற்றியிலொரு முத்தமிடுங்கள்

ஆயிரம் கண்கள் பார்த்திருக்கும்
எனது நற்குணங்களை விமர்சிக்கும்
பதிலாக எதுவும் பேசாது
ஒரு பிடி மண்ணிட்டுச் செல்லுங்கள்

கல்லறையிலிருந்து நீங்கள்
நீங்கிச் செல்கையில்
மாபெரும் தனிமையை நான் உணரக் கூடும் – எனவே
ஒரு பூவை மட்டும் வைத்துவிட்டு
நீங்கள் செல்லுங்கள் திரும்பிப் பாராது

- செல்வி. டிமாஷா கயனகி

 


தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

 

http://inioru.com/?p=40509

  • கருத்துக்கள உறவுகள்
இத்தகைய காட்டுமிராண்டிகளும் இலங்கை இராணுவத்திற்குள் நுளைவதற்கு முதற் காரணமாக இருந்தவர் சிறிமாவோ பண்டாரநாயக்கா. கல்வித் தகமையைக் கணக்கில் எடுக்காது கண்டவர்களையும் பாதுகாப்புப் படையில் இணைத்தவர். இதுகளை எல்லாம் இராணுவ வீரர்கள் என்று குறிப்பிட்டுத் தயைசெய்து உலகின் உண்மையான இராணுவ வீரர்களைக் களங்கப்படுத்தாதீர்கள். :(     
 
  • கருத்துக்கள உறவுகள்

இறப்பை  முன்னரே தெரிந்து கவிதை வடித்தது  போலுள்ளது

குறிப்பிட்ட  நபரால் ஏற்கனவே பயமுறுத்தப்பட்டிருக்கலாம்....... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

கல்லறையிலிருந்து நீங்கள்

நீங்கிச் செல்கையில்

மாபெரும் தனிமையை நான் உணரக் கூடும்,

எனவே,

ஒரு பூவை மட்டும் வைத்துவிட்டு

திரும்பிப் பாராதுநீங்கள் செல்லுங்கள் 

 

 

வாழ்வின் முழுமைத் தத்துவங்களையும், இரகசியங்களையும் இந்த வரிகளுக்குள், ஆழப் புதைத்து விட்டுத் தானும் புதைந்து போய்விட்டாள், இந்தப் பெண் கவிஞர்!

 

உள்ளத்தை உருக்கி எடுக்கும் வரிகள் !

 

நன்றிகள், நிழலி!

  • தொடங்கியவர்

வாழ்வின் முழுமைத் தத்துவங்களையும், இரகசியங்களையும் இந்த வரிகளுக்குள், ஆழப் புதைத்து விட்டுத் தானும் புதைந்து போய்விட்டாள், இந்தப் பெண் கவிஞர்!

 

உள்ளத்தை உருக்கி எடுக்கும் வரிகள் !

 

நன்றிகள், நிழலி!

 

உண்மை புங்கை... இந்த வரிகளை பல முறை வாசித்துப் பார்த்தேன். ஒவ்வொரு முறையும் இனம்புரியாத ஒரு உணர்வும், தனிமையும் சூழ்கின்றது.

 

தன் சாவை முன்னமே உணர்ந்துள்ளார் இந்த சகோதரி.

 

ஒரு சிங்களப் பெண்ணை வல்லுறவு படுத்தியது தன் இராணுவம் தான் என்பதை அறிந்த பின் அதை மூடி மறைக்க முயலும் இலங்கை அரசு தமிழ் பெண்களின் மீதான பாலியல் வல்லுறவுகளை எந்தளவுக்கு மூடி மறைக்க முயலும் என நினைக்கும் போது இன்னும் அச்சம் மேலிடுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

 

)

கடந்த 24.05.2014 அன்று ஒரு இராணுவ வீரனால் படுகொலை செய்யப்பட்ட 21 வயதான பல்கலைக்கழக மாணவி செல்வி.டிமாஷா கயனகி மரணிக்க முன்பு இறுதியாக எழுதிய கவிதை இது.

 

dimasha.jpg

 

கல்லறையிலிருந்து நீங்கள்

நீங்கிச் செல்கையில்

மாபெரும் தனிமையை நான் உணரக் கூடும் 

வாழும் வயதில் அநியாயமாக பறிக்கப்பட்டு உயிருக்கான பெறுமதி என்ன என்பதனை மீண்டும் நிரூபித்துள்ளது இந்த இளவயதுப் பெண்ணின் மரணம்.

வருமுன் மரணத்தின் வலியகரங்களின் ரணத்தை முன்கூட்டியே உணர்ந்தாள் போல மனம் வலிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழிச்சியை சீரழிக்கேக்க.. வெடிகொழுத்திப் போட்டு வரவேற்றதற்கான பிரதிபலன்.

 

தமிழிச்சி என்றாலும்.. சீரழிந்தவளும்..சீரழித்தவனும்..மனிதன். அவனை தண்டிக்காமல்..சமூகத்தில்.. சிங்களவன்.. படைவீரன்.. என்ற பொய் முலாம் பூசி கலக்க விடும்.. முட்டாள் தனமான அரசியல் தான் இந்தச் சாவுக்குக் காரணம்.

 

அந்த அரசியலை வாக்குப் போட்டு வளர்க்கும் சிங்களவர்கள் உட்பட அனைவரும் இதற்குப் பொறுப்பாவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.