Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெண்ணெயும் இறைச்சியும் ஆரோக்கியத்துக்கு நல்லதே!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரர் சொல்வதே வேதம் என்ற எண்ணம் நமக்கு - அதிலும் வெள்ளைக்காரர்கள் கொடுத்த ஆங்கிலவழிக் கல்வி படித்த நமக்கு வெண்ணெய் என்றாலே ரத்தக்குழாயில் மாரடைப்பை ஏற்படுத்தும் நஞ்சுருண்டையாகவே காட்சி தருகிறது. “அப்படியெல்லாம் இல்லை, வெண்ணெய் நல்லது” என்று அமெரிக்காவின் டைம் பத்திரிகை இப்போது அட்டைப்படக் கட்டுரையாகவே வரைந்து தள்ளிவிட்டது.

 

 

“உடலில் எடை கூடவும் தொப்பை வளரவும் வெண்ணெய்தான் காரணம் என்று இதுநாள்வரை ஆராய்ந்து கூறியதெல்லாம் தவறு, சர்க்கரையும் பதப்படுத்தப்பட்ட பெட்டியில் அடைக்கப்பட்ட ஆயத்த (ரெடிமேட்) உணவுகளும்தான் உடல் பருமனுக்குக் காரணம்” என்று விஞ்ஞானிகள் இப்போது அறிவிக்கின்றனர்.

 

 

'கிளினிகல் நியூட்ரிஷன்' என்ற அமெரிக்கப் பத்திரிகை, அறிவியல்பூர்வமான பல ஆய்வுகளை நடத்திய பிறகு இந்த முடிவுக்கு வந்ததாகவும், வெண்ணெயினால் மாரடைப்பு வருவதில்லை என்றும் உரத்து அறிவித்திருக்கிறது.

 

 

'பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னல்' என்ற பத்திரிகையோ, பாலிலிருந்து கிடைக்கும் பாலாடைக்கட்டி, வெண்ணெய், நெய் போன்ற பொருள்களைச் சாப்பிடுவதற்கும் மாரடைப்புக்கும் சம்பந்தமே இல்லை என்று முழங்கியிருக்கிறது.

 

 

பீதியில் ஆழ்த்தினர்

வெண்ணெய், நெய் சாப்பிட்டால் உடல் பருக்கும், ரத்தத்தில் கொழுப்பு சேரும், அந்தக் கொழுப்பு சிறு துகள்களாகி ரத்தக்குழாயில் பயணிக்கும், இதயத்துக்குச் செல்லும் குழாய்களில் அது போய் அடைத்துக்கொள்ளும், அப்போது மாரடைப்பு ஏற்படும் என்று விரிவாகச் சொல்லி அனைவரையுமே பல்லாண்டுகளாக பீதியில் ஆழ்த்திவிட்டனர்.

இயற்கையில் கிடைத்த இந்த வெண்ணெயை இப்படி வில்லனாக்கிய அதே சமயம், சிகரெட்டுகளுக்கும் மதுபானங்களுக்கும் கோடிக்கணக்கில் பணம் செலவிட்டு “உபயோகியுங்கள், உற்சாகமாக இருங்கள்” என்று வழிகாட்டினார்கள் மேற்கத்திய தொழிலதிபர்கள். சிகரெட்டும் மதுபானமும் உடல் நலத்துக்கு எந்த அளவுக்குக் கேடு செய்யும் என்பதை விளக்க வேண்டிய தேவையே இல்லை. புற்றுநோய் வராமலிருக்க புகையிலைப் பொருள்களின் பக்கமே போகாதீர்கள் என்று இப்போது உலக அளவில் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

 

 

புல்தரை வளர்த்து, அதில் கால்நடைகளை மேயவிட்டு, பால், வெண்ணெய், நெய் போன்றவற்றைக் கலப்பிடமில்லாமல் தயாரித்து உலகின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அயர்லாந்தில், “வெண்ணெய் சாப்பிடுகிறீர்களா, அப்படியானால் இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்” என்று நிபுணர் ஒருவர் இரக்கமில்லாமல் எச்சரித்தார். இதுவும் மக்களுடைய மனங்களில் ஆழப்பதிந்தது.

 

 

மாவும் சர்க்கரையுமே எமன்

1970-களின் இறுதியில் தொடங்கி சமீபகாலம்வரை வெண்ணெய்க்கு எதிராக இப்படிப்பட்ட பிரச்சாரங்களே ஓங்கியிருந்தன. கார்போஹைடிரேட் என்று அழைக்கப்படும் மாவுச்சத்தும், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளும்தான் உடல் பெருக்கக் காரணம் என்று சமீப காலங்களாகத்தான் அடுத்தடுத்து உறுதி செய்துள்ளனர்.

 

 

பால்பொருள்களும், செந்நிற இறைச்சியும்தான் உடலுக்குக் கேடு செய்யும் உணவுகள் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பிரச்சாரமே செய்தனர். அது, உணவு, சுகாதாரம் குறித்து மக்களுடைய மனங்களில் கவலை பரவியிருந்த காலம். எனவே பிரச்சாரம் எடுபட்டது. அறையில் நிலவும் சாதாரண வெப்பத்தில் உருகாத வெண்ணெய், பன்றிக்கொழுப்பு போன்றவற்றால் ஆபத்து என்றும் சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற திரவங்களால் ஆபத்து இல்லை என்றும் கூறப்பட்டது.

 

விலக்கியதால் மாரடைப்பு

 

 

 

இப்படிப் பிரச்சாரம் செய்து வெண்ணெய் சாப்பிடுவதை அறவே விலக்கிவிட்டதால்தான் மாரடைப்பு பலருக்கு ஏற்பட்டிருக்கிறது என்று லண்டனைச் சேர்ந்த இதயவியல் நிபுணர் அசீம் மல்ஹோத்ரா குறிப்பிட்டிருக்கிறார். வெண்ணெய் போன்றவைதான் இதயத்தைக் காப்பவை என்றும் அவர் குறிப்பிடுகி றார். வெண்ணெய், பாலாடைக்கட்டி போன்றவற்றில் வைட்டமின் 'டி' இருக்கிறது. இது இல்லாவிட்டால்தான் மாரடைப்பு ஏற்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

கால்சியம், பாஸ்பரஸ் போன்றவையும் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுபவை.

மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி போன்ற செந்நிற இறைச்சி வகைகளில் இரும்புச்சத்தும் சி.எல்.ஏ. என்று சுருக்கமாக அழைக்கப்படும் காஞ்சுகேடட் லினோலெய்க் அமிலமும் அதிகம் இருக்கின்றன. இவ்விரண்டும் பொதுவான நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துபவை. புற்றுநோய் வராமல் தடுக்கும் குணங்கள் உள்ளவை என்று இப்போது அறியப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளால்தான் மாரடைப்பும் சர்க்கரை வியாதியும் ஏற்படுகின்றனவே தவிர இயற்கையான செந்நிற இறைச்சியால் அல்ல என்று இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. குறைந்தளவு கொழுப்பு உள்ளவை என்று விளம்பரப்படுத்தப்படும் உணவுப் பண்டங்களையே இப்போது வாங்கி உண்கின்றனர், அவற்றில் அதிக சர்க்கரை இருக்கிறது என்று எச்சரிக்கிறார் மல்ஹோத்ரா. 

 

http://tamil.thehindu.com/world/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%87/article6147230.ece?homepage=true

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதுக்குத்தான் உந்த டாக்குத்தர்மாரின்ரை ஒருசில கதையளை நான் காதிலை விழுத்துறதேயில்லை...baby.gif

  • கருத்துக்கள உறவுகள்

சக்கரை வியாதிக்கு சக்கரை போட்டால்த்தான் என்ஜினே  இயங்குது...! ஆரிட்டச் சொல்லி அழ...! :huh:  :)

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணெயும்,இறைச்சியும் சாப்பிடாதே என்று சொன்னதும் வெள்ளைக்காரன் தான்.இப்ப சாப்பிடு அது நல்லது என்று சொல்வதும் அவன் தான்.அப்போது அவன் சொன்னதையும் கேட்டுக் கேள்வி இல்லாமல் கடைப்பிடித்தோம். இப்பவும் அதையே செய்கிறோம்:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இது ஏதோ அரை வேக்காட்டு மொழிபெயர்ப்பு மாதிரித் தெரியுது. எனக்குத் தெரிஞ்ச வரையில் வெண்ணையில், பாலில், தேங்காய் பொருட்களில் நிரம்பிய கொழுப்பமிலம் (saturated fatty acid) தான் அதிகம் இருக்கிறது, இது உடலில் மாரடைப்புக்குக் காரணமான முக்கிளிசரைட் (triglyceride), அடர்த்தி குறைந்த கொழுப்பு (LDL) என்பன உருவாக அதிகம் பங்களிப்புச் செய்யும். இதனால் இந்தக் கொழுப்பு வகைகள் இதய நோய்களை அதிகரிக்கும் என ஆங்கில மருத்துவமும் விஞ்ஞானமும் சொல்கின்றன. நிரம்பாத கொழுப்பமிலங்கள் (unsaturated fatty acids) ஒலிவ் எண்ணை போன்றவற்றில் இருக்கின்றன. இவை மேற் சொன்ன உடற் கொழுப்பு வகைகளை அதிகரிக்காமல் உயர் அடர்த்தி கொழுப்பு (HDL) என்னும் தீங்கற்ற கொழுப்பை அதிகரிப்பதால் இதய நோய் வாய்ப்புகள் குறைகின்றன. மீனில் இருக்கும் ஒமேகா 3 எனும் கொழுப்பும் இதே வகையில் HDL ஐக் கூட்டி இதய நோயைக் குறைக்கும் என ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. ஆனால், நிரம்பாத கொழுப்பமிலங்களை அதிக வெப்ப நிலையில் வதக்கினால் உடலுக்கு ஆபத்தான நச்சுப் பொருட்கள் (oxidative free radicals) உருவாகி புற்று நோய் போன்ற விளைவுகள் ஏற்படலாம். எதுக்கும் இந்த செய்தியை நம்பி வாய்க்கட்டை அவிட்டுக் கெதியாகக் கட்டையில போகாமல் உங்கட குடும்ப வைத்தியரிட்டையே அறிவுரை கேளுங்கோ! :D

தேங்காய்ப் பாலைக் கொதிக்கவிடாமல் சாப்பிட்டால் எந்த வருத்தமும் வராது.  கொதிக்க விடும்போதுதான் எண்ணெய்த்தன்மை வருகிறது.  ஆகவே, கறியை அடுப்பிலிருந்து இறக்கிய பின்பு தேங்காய்ப் பாலை விட்டால் கொலஸ்ரோல் வராது.  இன்று முகத்திற்குக்கூட தேங்காய் கலந்த கிறீம்களையே பயன்படுத்துகிறார்கள்.   தேங்காயில் அவ்வளவு சத்துள்ளது.  ஆனால் பச்சையாகப் பயன்படுத்த வேண்டும்.   

 

எம் உடம்பிற்குத் தேவையான அனைத்துச் சத்தும் தேங்காய் மற்றும் வாழைப்பழத்தில் இருக்கின்றன என அறிந்தேன்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.