Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறந்து ஒரு வாரமாகியும் அகற்றப்படாத கழுதை; நடவடிக்கை எடுக்காத மன்னார் நகர சபை

Featured Replies

DSC08874%200041.jpg

 

மன்னார் சாவற்கட்டு பகுதியில் புனித அந்தோனியார் கோவிலுக்கு முன்பாக உயிரிழந்து கிடக்கும் கழுதையை பல நாட்கள் ஆகியும் மன்னார் நகர சபை அதை அப்புறப்படுத்தவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். சாவற்கட்டு அந்தோனியார் கோவிலுக்கு முன்பாக கடந்த 15ஆம் திகதி இறந்த நிலையில் காணப்பட்ட கழுதையை இதுவரை அப்புறப்படுத்துவதற்கு மன்னார் நகர சபை நடவடிக்கை எடுக்காமையால் குறித்த கழுதை சிதிலமடைந்து துர்நாற்றம் வீசிவருகிறது. மிருகங்கள், பறவைகள் என இறந்து கிடக்கும் கழுதையின் உடற்பாகங்களை இழுத்து ஆங்காங்கே போட்டுள்ளதுடன் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இந்தச் சுகாதாரச் சீர்கேடு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ளதோடு மக்கள் அப்பகுதியில் நடமாடுவதற்கும் தடையாக உள்ளது. மன்னாரில் இவ்வாறு பல சம்பவங்கள் இடம்பெற்றிருந்த போதிலும் குறித்த நேரத்தில் நகரசபை இறந்த மிருகங்களை அப்புறப்படுதுவதை தவிர்த்து வருவது மக்களை விசனசமடைய வைத்துள்ளது. பொது இடங்களில் இவ்வாறு இறந்து கிடக்கும் மிருகங்களை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காதது ஏன் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இனிவரும் காலங்களில் இவ்வாறான மிருகங்கள் இறந்தால் அது சிதைவடைந்து சுகாதாரத்திற்கு கேடுவிளைவிக்காத வகையில் நகரசபை உரியநேரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். குறிப்பாக '2025ஆம் ஆண்டில் மன்னார் நகர் அபிவிருத்தி' என்ற தலைப்பில் கீழ் புலம்பெயர் அமைப்புகளின் உதவியுடன் கழுதையின் மூலம் உச்ச பயனடைய பல திட்டங்களைமன்னார் நகரசபை முன்னெடுத்துவரும் நிலையில் ஏன் இவ்வாறு கழுதைகள் இறக்கும் போது மட்டும் நகரசபை அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
 
DSC08874%200042.jpg
 
 
  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே இழுத்துக்கொண்டுபோய் நகரசபை வாசலில போடுங்கோ,பிரச்சனை முடிஞ்சுது.

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் போட்ட எடுத்து செய்தி எழுதிய கழுதை நாலு காவோலையைப் போட்டு எரித்திருக்கலாம்.

இதைப் போட்ட எடுத்து செய்தி எழுதிய கழுதை நாலு காவோலையைப் போட்டு எரித்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே இழுத்துக்கொண்டுபோய் நகரசபை வாசலில போடுங்கோ,பிரச்சனை முடிஞ்சுது.

 

 

இது தான் தமிழன்

நமக்கு போனது

அவனுக்கும் போகணும்... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே இழுத்துக்கொண்டுபோய் நகரசபை வாசலில போடுங்கோ,பிரச்சனை முடிஞ்சுது.

நகர சபை வாரத்துக்கு முந்திக் கழுதையள் சாகேல்லையா? :o  

  • கருத்துக்கள உறவுகள்

நகர சபை வாரத்துக்கு முந்திக் கழுதையள் சாகேல்லையா? :o

முந்தி கழுதையல் எல்லாம் ஒண்டாத்தான் நிண்டவ,இப்பதான் பிரிஞ்சு நிக்கினம்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைப் போட்ட எடுத்து செய்தி எழுதிய கழுதை நாலு காவோலையைப் போட்டு எரித்திருக்கலாம்.

இதைப் போட்ட எடுத்து செய்தி எழுதிய கழுதை நாலு காவோலையைப் போட்டு எரித்திருக்கலாம்.

 

நல்லாய்ச்சொன்னியள் புலவர்  :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாய்ச்சொன்னியள் புலவர்  :)

 

 

எதை.?

இரண்டு தரம் சொன்னதையா? :lol:  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதை.?

இரண்டு தரம் சொன்னதையா? :lol:  :D

 

பேசாமல் காவோலையை போட்டு எரிச்சிருக்கலாம்  :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் காவோலையை போட்டு எரிச்சிருக்கலாம்  :D  :D  :D

 

 

யாரை?

புலவரையா??? :lol:  :D  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை.....

 

DSC08874%200041.jpg

 

இதைப் போட்டு எரிச்சிருக்காமெண்டுறன்.. :D  :D  :D 

Spoiler
காவோலை காவோலை

 

DSCN1749a.jpg

  • கருத்துக்கள உறவுகள்

  I  போனை தொட்ட கையால காவோலையை தொடலாமோ  :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா விசுகு இந்தக் கொலைவெறி?????வேலை செய்யும் இடத்தில் இருந்து மோபைல் போனில் பதிவைச் செய்தேன்.சில நேரங்களில் சிக்னல் வேலை செய்யாது .அதுதான் 2 தரம் பதிவாகிவிட்டது.இதுக்குப் போய்!!!!!!!

நாடென்ன செய்தது எனக்கு என்பதற்கு முதல் நான் என்ன செய்தேன் அதற்கு என்று கேள்  -கென்னடி .

 

காந்தி ஒரு முறை ரெயினில் பயணம் செய்யும்போது பயணி ஒருவர் காறி ரெயினிற்கு உள்ளேயே துப்பினார் .காந்தி அதை தன் கையால் எடுத்து வெளியில் வீசினார் .மீண்டும் அவர் அதை செய்ய காந்தி மீண்டும் கையால் அதை எடுத்து வீச வெறுத்து போனவர் வெளியில் துப்ப ஆரம்பித்தார் .

 

இவற்றை வாசித்துவிட்டுத்தான் மற்றவனுக்கு ஒன்றை செய்ய சொல்லி செய்ய முதல் நாமே முதலில் அதை செய்யவேண்டும் என்று நானே போராட போனேன் .

ஆனால் நகரசபைக்கு இழுத்து கொண்டு போய் விட்டுவிட்டு நியாயம் கதைப்பவர்கள் தான் அதிகம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.