Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி

ல்லை நகர் ஆறுமுக நாவலர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்படுத்திப்போன சமய மறுமலர்ச்சி, மிசனரிமாரின் பாடசாலைகளைவிடவும் சிறப்பான ஆங்கில பாடசாலைகளை யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் ஸ்தாபிக்கும் ஒரு இயக்கத்தை குடாநாட்டில் உருவாக்கி விட்டது. இவற்றில் முதன்மையானவர்களில் ஒருவர் கனகரத்தினம் முதலியார். இவர் சுழிபுரம் இந்து ஆங்கில பாடசாலையினை 1876ம் ஆண்டினில் ஸ்தாபித்தார். பாடசாலையில் 1880 எனப்பொறிக்கப்பட்ட ஒரு மணி இன்னமும் இருக்கின்றது. இந்த சுழிபுரம் இந்து ஆங்கிலப் பாடசாலையே இன்று விக்ரோறியாக் கல்லூரியாய் வளர்ந்து நிமிர்ந்து நிற்கின்றது.

 

1892ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரச உதவிபெறும் ஆங்கிலப் பாடசாலையாக இது பதிவுசெய்யப் பெற்றது. இலங்கையில் முதலாவது அரச உதவிபெறும் ஆங்கிலப் பாடசாலையென்ற பெயரை இது பெற்றுத்தந்தது.

 

 

பாடசாலை பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டுவந்ததது. ஒரு விளையாட்டு மைதானம் பாடசாலைக்கென பெறப்பட்டு, துடுப்பாட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு விக்ரோறியாக் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் இடையிலான முதலாவது துடுப்பாட்டப்போட்டி விக்ரோறியாக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது குறிப்பிடத் தக்கது.

பாடசாலை சஞ்சிகை ஒன்றை 1898 இல் வெளியிட்ட ஒரு முன்னணி பாடசாலையும் இதுவே. 1905 இல் இடம்பெற்ற கல்லூரி பரிசளிப்பு விழாவிற்கு அப்போது இலங்கையின் ஆளுனராயிருந்து சேர் ஹென்றி பிளக்கும் அவரது துணைவியாரும் பிரதம விருந்தினர்களாய் வந்திருந்து பெருமை சேர்த்தார்கள், அன்றே புதிதாய் அமைக்கப்பட்ட றிட்ஜ்வே மண்டபம் சேர் ஹென்றி பிளக்கினால் திறந்து வைக்கப்பட்டது.

victoria-college-first-principal.jpg

கல்லூரியின் முதலாவது அதிபர்

 

ஐரிஸ் நாட்டவரான வில்லோக்பை சிமோல் பாடசாலையின் முதலாவது அதிபராவார். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் மானிப்பாய் இந்துக் கல்லூரி அதிபர்களுடன் இணைந்து மூன்று பாடசாலைகளுக்கும் பொதுவான பரீட்சையினை கல்லூரியில் அறிமுகப்படுத்தினார். 1938இல் HSC வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராயிருந்த அமிர்தலிங்கம் என்பார் 1945 இல் முதன்முதல் கல்லூரியின் கலைப்பிரிவிலிருந்து பல்கலைக்கழகம் சென்றவர்.

 

01.08.1946இல் 13 ஆசிரியர்களுடனும் 371 மாணவர்களுடனும் இயங்கிய பாடசாலையினை அரசாங்கம் கையேற்றுக் கொண்டது. 1948இல் கல்லூரியின் ஆரம்பப்பிரிவும் 1951இல் வகுப்பறைகளுக்கான புதிய கட்டடமும், நான்கு ஆய்வுகூடங்களும் அமைக்கப்பட்டன. 1955இல் கிரேக் (Gurugae) மண்டபம் அமைக்கப்பட்டு, பாடசாலை மைதானமும் விஸ்தரிக்கப்பட்டது. மைதானத்தின் ஒரு பக்கத்திற்கு சுற்றுமதிலும் அமைக்கப்பட்டது. 1962இல் பாலச்சந்திரன் எனும் மாணவர் பெரதெனிய பொறியில் பீடத்திற்கு தெரிவானார். இதே காலத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமானின் சிலை பிரதான மண்டபத்தில் அமைக்கப்பட்டது.

 

1981 இல் இரண்டு மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கும், ஒருவர் பொறியியல் பீடத்திற்கும், ஒருவர் விஞ்ஞானபீடத்திற்குமாய் பல்கலைக்கழகம் தெரிவானார்கள். 1982 இல் பதினொரு மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவானார்கள்.

 

thejaffna.com

  • கருத்துக்கள உறவுகள்

சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி

.....

 

1981 இல் இரண்டு மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கும், ஒருவர் பொறியியல் பீடத்திற்கும், ஒருவர் விஞ்ஞானபீடத்திற்குமாய் பல்கலைக்கழகம் தெரிவானார்கள். 1982 இல் பதினொரு மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவானார்கள்.

 

thejaffna.com

இங்கே ஒரு அன்பர், கதை ஒளிக் கவிஞர் இருக்கிறாரே, அவரையும் சேர்த்துக்கொள்ளுங்கோ! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஒரு அன்பர், கதை ஒளிக் கவிஞர் இருக்கிறாரே, அவரையும் சேர்த்துக்கொள்ளுங்கோ! :)

 

அவர் இந்தக் கல்லூரியின் பழைய மாணவரானால் இன்னும் பல தகவல்களை அவரே வழங்குவார் என நினைக்கின்றேன் :D

 

என்னையோ சொல்லுறீங்கள்... 

நான் நாட்டிலை இல்லாத நேரமாய்ப் பார்த்து போட்டிருக்கிறார் வாத்தியார்..  :o

வந்தீட்டன்!!

 

பழைய மாணவன்தான்.

8ஆம் வகுப்புவரை படித்தேன்.

 

அப்போது 7ஆம் வகுப்பில் புலமைப் பரிசில் பரீட்சை என்று ஒரு பரீட்சை நடாத்துவார்கள்...

அதன் காரணமாக கொழும்பு றோயல் கிடைக்க, அங்கை போய் ரோட்டளந்ததுதான் மிச்சம்!  :D

  • கருத்துக்கள உறவுகள்

அட நம்மூர் பாடசாலை. பல திறமையுள்ள மாணவர்களை ஊக்குவித்த பாடசாலை. 

 

ஆசிரியர்களும் மாணவர்களும் ஒர் குடும்பம்போல் இங்கு. பல ஆசிரியர்கள் இங்கு சொந்தக்கார ர்களாகவோ அல்லது தெரிந்தவர்காளாகவோதான் இருப்பார்கள்.

 

குழப்படி செய்தால் அடுத்த நிமிடம் வீட்டில் பூவரசம்தாடியுடன் வாசலில் நிற்பார்கள் பெற்றோர்கள்.

 

நான் இங்கு படிக்கவில்லை, ஆனா பல ஆசிரியர்கள் என் சொந்தக்கார்கள்.

 

இந்திரன் மாஸ்டரை தெரியாதவர்கள் இருக்கமுடியாது.அவரின் உயரமும், கம்பீரமான நடையும், பார்ப்போரை கவர்ந்திழுக்கும் சக்தி. அவர் கதைத்தால் நாள் முழுக்க கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவர் வீட்டில்தான் பலர் செய்திகள் கேட்க கூடுவார்கள், இன்னும் பலரைப்பற்றி எழுதலாம் நேரம் கிடைக்கும் போது

  • கருத்துக்கள உறவுகள்

என்னையோ சொல்லுறீங்கள்... 

....

 

இல்லை, பிறேமனில் வசிக்கும் ஒரு 'பெரியவரை' சொன்னோம்!  அது நீங்கள் இல்லையா? :(:o:lol:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.