Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனுக்கு வெண்ணிறச் சால்வை ரவிசங்கர் பரிசாகக் கொடுத்தார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனுக்கு வெண்ணிறச் சால்வை குரு ரவிசங்கர் பரிசாகக் கொடுத்தார்

புதுடில்லி, செப். 29

"வாழும்கலை' நிறுவுநர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கடந்த வாரம் கிளி நொச்சிக்கு விஜயம் செய்திருந்த சமயம் வெண்ணிறச் சால்வை ஒன் றைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக் குப் பரிசாகக் கொடுத்தார்.

குரு ரவிசங்கரின் பேச்சாளர் ஒருவர் இத்தகவலை "ஐ.ஏ.என்.எஸ்.' செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை உட்பட உலகெங்கும் ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ளும் சுவாமி குரு ரவிசங்கர் தாம் விஜயம் செய்யும் இடங்களில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வெண்ணிறச் சால்வைகளைத் தமது ஆசீர்வாதத் தின் ஆடையாளமாக வழங்குவது வழக்கம் என்று தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் கிளிநொச்சி சென்றி ருந்த சமயம் அங்கு வைத்து விடுதலைப் புலி களின் தலைவருக்கு வெண்ணிறச் சால்வை ஒன்றை ரவிசங்கர் பரிசாகக் கொடுத்தார் என்று குருவின் பேச்சாளர் ஒருவர் பெங்களூரில் உள்ள "வாழும் கலை' நிறுவகத்தின் தலை மையகத்தில் வைத்து தெரிவித்தார்.

சமாதானத்தின் அடையாளமாகவும் குறிப் பிடத்தக்க வெண்மை நிறச்சால்வையை குரு ரவிசங்கர் பிரபாகரனிடம் நேரடியாக வழங் கினாரா அல்லது அவரது பிரதிநிதிகள் எவ ரிடமாவது கொடுத்தாரா என்பதை குரு ரவி சங்கரின் பேச்சாளர் தெரிவிக்கவில்லை.

""இதுபற்றி மேலதிகமாக எதனையும் கூற முடியாது. இது மிகவும் உள்ளார்ந்த ஒரு விடயம்'' என்று அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

குரு ரவிசங்கர் கொழும்பில் இருந்து கிளிநொச்சி செல்வதற்கு இலங்கை அரசு ஹெலிகொப்டர் வசதியை வழங்கி இருந் தது. கிளிநொச்சியில் பெரும்பாலும் அவர் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைச் சந் தித்திருக்கக்கூடும் என்று நம்பப்படுவதாக ஐ.ஏ.என்.எஸ். செய்தி தெரிவிக்கின்றது.

இதேவேளை

குரு ரவிசங்கருடன் வாழும் கலை நிறு வனத்தின் இலங்கை இணைப்பாளர் சத் ஜோயதாவும் கிளிநொச்சிக்குச் சென்றிருந் தார்.

""சமாதான முயற்சிகளில் இந்தியா ஒரு பெரும் பங்கை வகிக்க முடியும் என்பதை குரு ரவிசங்கர் பிரஸ்தாபித்தார். அந்த யோசனையை அவர்கள் (விடுதலைப் புலிகள்) ஆதரித்தார்கள்'' என்று சத்ஜோயதா கூறி னார்.

""இது ஓர் ஆரம்பம்தான். நாங்கள் பல விடயங்கள் குறித்துக் கருத்துக்களைப் பரி மாறினோம். முழு விடயங்களையும் விவா தித்தோம். யோசனைகளைப் பரிமாறி னோம். தாங்கள் நிபந்தனைகள் எதுவும் இன்றி சமாதானப் பேச்சுக்கு வரவிரும்பு கின்றனர் என்று விடுதலைப் புலிகள் எங் களிடம் தெரிவித்தனர்'' என்றும் சத்ஜோ யதா கூறினார் என்று "ஐ.ஏ.என்.எஸ்' செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

-உதயன்

கவனம்.......கமாஸ் தலைவரையும் கொல்ல அவர் காரில் ஏதோ இரசாயனம் பூசி ,செய்மதி வழித்துணையுடன் ஏவுகணை வீசி கொன்றார்கள்.நாங்களும் வலு கவனமாக இருக்கவேண்டும்.

செச்னிய தலைவர் செய்மதி தொலை பேசியில் பேசும் பொழுது அதை தேடி வந்து ரஸ்சிய விமானபடை ஏவுகணை தாக்குதல் நடத்தி கொன்றது.

உக்ரெயின் ஜனாதிபதி வேட்பாளர் ஒரு வித நஞ்சூட்டலிருந்து உயிர் தப்பியவர் ஆனால் முகங்கத்தின் வடிவமே மாறிவிட்டது இரசாயனத்தால்.

அதை விட மறைந்த பலஸ்தீன தலைவர் யாசீர் அரபாத் பற்றியும் சில வதந்திகள் உலாவியது.

இஸ்ரோல் வேறு பலஸ்தீனத்தவர்கள் மீது பலவகைப்பட்ட திருவிளையாடல்கள் செய்திருக்கிறது.

உந்தாப் பாரும் சொல்லுறன் எண்டு என்னிலை கோவிக்கவேண்டாம். இந்தச் சால்வை கோவணத்துண்டு அது இது எல்லாம் தூக்கிக் குப்பையிலை போட்டு எரிக்கவேணும் சரியே.

நீங்களும் சரியாத்தான் சொன்னீங்க. உலகத்திலை இப்ப ஆட்களைத் தேடிப்பிடிக்கிறது பெரிய வேலையில்லை. மேலையிருந்து வேவு பாக்கிறத்துக்கும் முக்கிய நபர்களின்றை அசைவுகளை நோட்டமிடவுமெண்டு செய்மதியோடை சேத்து வேறை தொழில்நுட்பமெல்லாம் வந்திட்டுது கண்டியளோ. வெளியார் குடுக்கிற பரிசுப்பொருளோடை சரியான கவனமாயிருக்கவேணும்.

எந்தப் பிரியோசனமுமில்லாமலே தனிக் கெலி குடுத்து சாமியாரை சிறிலங்கா அரசாங்கம் வன்னிக்கு அனுப்பினவை. பொடியளின்ரை தேவைக்கு குடுக்கவேண்டிய கெலியை குடுக்காமல் பேச்சுவார்த்தையே நிண்டுபோய்கிடக்குது அது தெரியேல்லையே உந்த மர மண்டையனுகளுக்கு.

சால்வைக்கை ராக்கிங் டிவைஸ் இருக்க வாய்ப்பிருக்கு. அமெரிக்கனிட்டை ஒரு வகை குண்டுவீச்சு விமானம் இருக்கு அது சத்தம் போடாமைத்தான் வரும். விமானம் ஒருத்தருக்கும் கேக்காமை அமைதியாவந்து குண்டை போட குண்டு தானாவே குறித்த இடத்தைத் தேடிக்கோண்டுபோய் இலக்கை அழிக்கும்.

இப்பிடி ஈராக்கிலையும் ஆப்கானிஸ்தானிலையும் நடந்திருக்கு கேள்விப்பட்டதைத்தான் சொல்றன்.

அது அவரவருக்கு தெரியும் கண்டியலோ நீங்கள் எல்லாம் அட்வைச் செய்யிறதை பார்த்தால் நீங்கள் எல்லாம் தலைவரின் பாதுகாப்பு துறயினர் போல இருக்கு.

:lol:

நோ கொமென்ற்ஸ் !!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது அவரவருக்கு தெரியும் கண்டியலோ நீங்கள் எல்லாம் அட்வைச் செய்யிறதை பார்த்தால் நீங்கள் எல்லாம் தலைவரின் பாதுகாப்பு துறயினர் போல இருக்கு.

:lol::lol::lol::lol::lol::lol:

:lol::lol::lol::lol::lol::lol:

:lol: இல்லை தலைவரை பார்க்கச்செல்லும் போது காது மூக்கு தலைமயிர் என்றவற்றை தோண்டுபவர்களுக்கு இது தெரியாதோ இப்ப எந்த குப்பையில இருகோ தெரியாது உந்த சால்வை :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நண்பர் ஈழவன்!

இது தலைவருக்கு அறிவுரை என்று அர்த்தமில்லை. எம் தலைவருடைய பாதுகாப்புக் குறித்து, ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ள அவதானம், அன்பு!

"Guru to teach the art of living to Tigers " என்று தலையங்கம் எழுதுகிற ஊடகத்து கோமாளிகளிற்கு. அதாவது மக்கள் தெளிவாக விளிப்புணர்வுடன் இருக்கினம் எண்டதற்கும் சனத்திடம் எந்தவித சலனமும் இல்லை உந்த பம்மாத்துகளால் எண்டதற்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரும் போராளிகளும் இதை கண்டு கொள்ளமாட்டினம் ஆனால் கொஞ்ச புல தமிழர் இருக்கினம் அவர்கள் இவருக்கு கோவில் கட்டி பஜனையும் வைப்பினம் பத்தாதுக்கு தலைவர் இவரை தான் கும்பிடினம் என்றும் டயலக் விடுவினம்

உவர் யாழ்பணத்த விட்டு 5 லட்சம் மக்கள் இடம் பெயரேக்க...அந்த சனம் மர நிழலில இருக்கேக்...வெலியலி அந்த மக்கள் இறக்கைக்க...

ஏதவாது குரல் கொடுத்தவரே....??ஃ

இப்ப என்னத்துக்கு உங்க வந்தவர்...

நான் நினைக்கிறன் ஏதேன் மிரட்டல் விட்டுட்டு போறார் போல கிடக்கு ...

ஆழ பார்த் அப்படித்தான் கிடக்கது...

உண்டு தெரியுமே...

அண்ணைக்கு தாடி காறர பிடிக்காதம்...

ஏன்...??

அவை தான் சர்வதேச கற்றவாளிகளாம்...

புரிங்சுதே...யார் எண்டு....

அண்ணை மிக கவனமாய் இருப்பார் பொட்டண்ணை என்னத்துக்கு இருக்கார்...

எண்டாலும் எங்கட சனம் வழிப்பா இருக்கிறத கண்டு மெச்ச சந்தோசம்...

பலஸ்தீன மக்கள மாதிரி கிளந்தெழுந்த விடுதலை கைய்யில...

அது..இன்னும்...வரல...

தற்போதய நிலையில கொஞ்சம் சூடு பிடிச்சிருக்கு...

அதில சந்தோசம்..வெற்றி....

வன்னி மைந்தன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.