Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

காலை வணக்கம்...✍️👋

 

இந்த வாரம் 23ம் திகதிக்கு பின்னர் கொரோனா தொற்றுக் காலத்திலிந்து  வழங்கப்பட்டு வந்த தனி நபர் மற்றும் வர்த்தக நிலையங்களுகான உதவித் தொகைகள் நிறுத்தப் பட இருக்கின்றன.

 

பிறேகிங் நியூஸ்..தேசியம் ஊடாக..

 

Edited by யாயினி

  • Replies 3.9k
  • Views 331.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
245842317_653299932305949_24958462383557
 
தாலி கட்டிய அன்றிரவோ
இல்லை
மனதால் இணைந்த அந்த நிமிடங்களிலோ
அப்படி ஒரு ஆத்மார்த்தமான அரவணைப்பு
ஆடை கலைப்பு என
சுகமாக அரங்கேறும்
பல நிகழ்வுகள்
உனக்கு எப்படியோ தெரியவில்லை
எனக்கு மிகுந்த வலி இருப்பினும்
சுகமாக அனுபவித்தேன்
அன்றிலிருந்து
நிகழும் நிகழ்வுகளை அடுக்குகின்றேன் பார்
அதிகாலை எழுந்து
குளித்து சமைத்து
முத்தத்தோடு உனக்கு
உணவை கொடுத்து அனுப்பிய பின்பு
துணி துவைத்து
வீடு சுத்தம் செய்து
ஆடைகள் சமன் செய்து
அழகாக மடித்து வைத்து
உன் அம்மாவுக்கு இல்லை நம் அம்மாவுக்கு
பணிவிடை செய்து
மகனையும் மகளையும் பாடசாலை
அனுப்பி வைத்து
மறுபடியும் சமைத்து
நமது பிள்ளைகளை
பாசத்தோடும் கண்டிப்போடும் கண்காணித்து
ஓடிக்கொண்டே இருக்கிறேன் நான்
இன்னும் ஒன்று
சொல்கிறேன் கேள்
முதல் முறை கூடலின் போது
ஒரு வலி உணர்ந்தேனே
அதை விடவும் ரணம் என்றார்கள்
மகப்பேறு
பயந்து நடுங்கி நகர்ந்து கொண்டிருந்தேன்
பெருமையோடு நம் பிள்ளையை
வயிற்றில் சுமந்து
பெறுமாதம் வந்தவுடன் சொன்னார்கள்
குழந்தை வலம் மாறியதால்
வயிற்றை வெட்டி தான் எடுக்க வேண்டும்
என்று
இப்பொழுது
சொல்கிறேன் கேளுங்கள்
ஆடை சற்று விலகியவுடன்
எட்டி எட்டி பார்ப்பீர்களே
மறைவான பகுதி தெரிகிறதா என்று
முழுதாக உரித்து சுவையாக சுவைத்து
சூட்டைத் தணிப்பீர்களே
அப்போதெல்லாம் காம விருந்தாக
தெரிந்தவளை இப்போது பாருங்கள்
நன்றாக பாருங்கள்
விழிகளை விழித்துப் பாருங்கள்
நீங்கள் அடைய துடிக்கும்
மறைவான பகுதிக்கு மேல்
சதையை வெட்டி தைத்துள்ளார்களே
இதை நன்றாக பாருங்கள்
என்னை வெட்டியேனும்
என் குழந்தையை பத்திரமாக
வெளியில் எடுங்கள் என்று
ஒரு பெண் சொல்கிறாளே
உங்களை வெட்ட நீங்கள் சம்மதிப்பீர்களா?
இச்சை கொண்டு
நோக்கும் ஆண்கள்
இதை நன்றாக பார்த்து
பிறிதொரு பெண்ணை நோக்குங்கள்
கண்டிப்பாக காமம் கலக்காது
உங்கள் கண்களில்
தாய்மையின் மகத்துவம்
மட்டுமே தென்படும்
என்பேன் நான்!!
கூடலின் வலி
மகப்பேறின் வலி
வயிற்றை வெட்டித்
தைத்ததன் வலி
இவையெல்லாம்
மறந்து போகும்
இந்த மழலையின் முகம் பார்க்கையில்
ஒவ்வொரு பெண்ணும்
ஒவ்வொரு அதிசயம் !!!!!!!!
கண்கண்ட தெய்வம். 🙏🙏
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20/10/2021

 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
[*தாய் மகனுக்கு
எழுதிய டைரி குறிப்பு*
************************
தலைக்கு மேல் /*
நான் தூக்கி கொஞ்சிய /*
என் தங்க மகன்/*
என் தலைக்கு மேல் /*
வளர்ந்து நிற்கிறான் /*
ஒரு பயம் எனக்கு /*
எப்போதாவது ஒருநாள் /*
என் விசயத்தில் தலையிடாதே /*
என்று சொல்லிவிடுவானோ என்று /*
மகனே மறந்தும்/*
அப்படி சொல்லிவிடாதே /*
மரணித்து போய்விடுவேன் /*
சின்ன வயதில்/*
நீ அடிக்கடி கேள்விகேட்ப்பாய் /*
நான் சலிக்காமல் பதில் சொல்வேன் /*
என் வயதான காலத்தில்/*
நானும் உன்னிடம் குழந்தை போல்/*
வினா எழுப்பக்கூடும் /*
கத்தாதே வாயை மூடு /*
என்று சொல்லிவிடாதே /*
வலி தாங்க முடியாத பாவி நான் /*
வீடெல்லாம் நீ இறைத்து வைத்த /*
சோற்றுப் பருக்கையை /*
என் விரல்களால் கூட்டி அள்ளுவேன்
என் முதிர் வயதில் /*
என் வாய்க்கொண்டு செல்லும்/*
உணவு தட்டி தரையில் விழக்கூடும் /*
தவறியும் என்னை திட்டாதே /*
தாங்க முடியாது என்னால் /*
என் சிறுநீர் பை /*
பலம் இழந்திருக்கக்கூடும் /*
சில இடங்களில் /*
சிறுநீர் சிந்தியிருக்க கூடும் /*
இச்.......சீ என்று முகம் சுழிக்காதே /*
என் முந்தானையில் /*
உன் சிறுநீர் வாசம் /*
இன்னும் மறையவேயில்லை/*
மயானம் நடந்து போக/*
திராணி இருக்கும்போதே/*
நான் இறந்துவிடவேண்டும் /*
மறந்தும் முதியோர் இல்லத்தில் /*
என்னை மூழ்கடித்துவிடாதே /*
ஒரு வருடம் /*
உனக்கு ரத்ததானம் செய்தவள் நான்
என் ரத்தத்தை/*
பாலாக்கி பருக செய்தவள் நான்/*
பரதேசியாய்
என்னை பரிதவிக்க விட்டுவிடாதே /*
நான் இறப்பதற்குள் /*
ஒரு முறையாவது /*
உன் மடியில் என்னை உறங்க வை /*
என் உயிர் பிரியும் நேரம் /*
நீ என் பக்கத்தில் இரு /*
கரம் கூப்பி கேட்கிறேன் /
***_இதை நான் எழுதுவது ஏன் தெரியுமா ?
இதை படித்து என் எண்ணம் அறிவாய் /
என்னை அறிவாய்/
என்னை நேசிப்பாய் /
என்ற நம்பிக்கையில் அல்ல*
ஒவ்வொரு தாயின்/*
உணர்வும் இதுதான்_ /***
என்பதை நீ உணர வேண்டும் /*
பெண்மையை நீ மதிக்க வேண்டும்/*
இதை படித்து நீ அழுவாய் /*
என்று எனக்குத் தெரியும் /*
அழாதே பெண்மையை மதி /*
அதுபோதும் நன்றி மகனே/*
❤️🌹❤️
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Winter is coming, Ontario —global news.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Canada has a big-time nursing shortage. So why can’t these two fully certified nurses get the OK to practise?

By Nicholas Keung Immigration Reporter
Tue., Oct. 26, 2021

A former intensive-care nurse in the Philippines, Katrina Deauna has watched from the sidelines as Ontario — and all of Canada — struggles with chronic nursing shortages laid bare by the pandemic.

While the foreign caregiver enjoys looking after the 18-month-old baby girl and six-year-old son of her Canadian employer, she says, she would rather use her front-line nursing skills and experience to help those fighting for their lives against COVID-19.

The Star News.
  • கருத்துக்கள உறவுகள்
"தர்மம் தலைக்ககும்"
இரக்க குண பெண்மணி ஒருத்தி
தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்...
அவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு, ஏதோ முனகிக் கொண்டே போவான். இது அன்றாட வழக்கமாயிற்று!.
ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று,
கிழவன் என்ன முனகுகிறான் என்று
செவிமடுத்து கேட்டாள்.
அவன் முனகியது, இதுதான்: "நீ செஞ்ச பாவம் ஒங்கிட்டேயே இருக்கும்; நீ செஞ்ச புண்ணியம் ஒன்னிடமே திரும்பும்."
தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான்.
'தினமும் இட்லி வைக்கிறேன்;
எடுத்துட்டு போறான்;
"நீ மவராசி நல்லா இருக்கணும் " ன்னு
கையெடுத்துக் கும்பிட்டு கை,
கால்ல விழல்லைனாலும்,
"இட்லி நல்லா இருக்கு "ன்னு பாராட்டல்லனாலும்;
" ரொம்ப நன்றி தாயே" ன்னு சொல்லக் கூடவாத் தோணல ;
ஏதோ,... "செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்; செஞ்ச புண்ணியம் ஒனக்கே திரும்பும்" ன்னு தினம் தினம் உளறிட்டுப் போறானே' என்று எண்ணி எண்ணி புலம்பினாள் அவள்.
'இவன் என்ன பித்தனா, இல்ல, சித்தனா, பரதேசி பய' என்று திட்டினாள்.
'நன்றி கெட்ட கூனனை' நினைத்து
மன உளைச்சலுக்கு ஆளானாள்!
நாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி, கொலை வெறியாக மாறியது!ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என மதில் மேல் வைக்கப் போனாள்.
மனம் ஏனோ கலங்கியது; கை நடுங்கியது. 'அவன்
அப்படி இருந்தாலும், சே... நாம் ஏன் இப்படியாகணும்'னு
அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு வேறு நல்ல இட்லியை மதில்
மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள்.
வழக்கம் போல் கூனக் கிழவன் வந்தான்;
இட்லியை எடுத்துக் கொண்டு,
வழக்கம்போல,
"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும் ;
நீ செஞ்ச புண்ணியம் ஓன்னிடமே திரும்பும்! "
என்று சொல்லிக் கொண்டே சென்றான்!
அவனை அப்படியே அறையலாம் போலிருந்தது, அந்த பெண்மணிக்கு!.
அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தாள்;
வாசலில் வாலிபன் ஒருவன் கசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான்.
வேலையோடுதான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டு சென்ற அவளது ஒரே மகன்தான் அவன்!.
"அம்மா, வீட்டுக்கு திரும்பி வரும் போது
என் பர்ஸ் காணாம போச்சு; கையில காசு இல்ல;தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல;மணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன்;நல்ல வெய்யில்; அகோரப் பசி வேறு;மயங்கி விழுந்துட்டேன்;
கண் முழிச்சு பாத்தப்போ...
யாரோ ஒரு கூனமுதுகு கிழவன் என்னை தூக்கி உட்கார வச்சு
ரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னான்.
இட்லி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உசுரே வந்தது!இதைக் கேட்டதும், பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்!
'விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்... அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே, ஆண்டவா!' என்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது; கண்கள் பனித்தன..
"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் "
...கூனன் முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது!
எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை...
புரியும் வேளையில் வாழ யாரும் இருப்பதும் இல்லை....
"செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும்"
"ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்"
"வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே"
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, யாயினி said:

Winter is coming, Ontario —global news.

இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் எதுக்கு உலகத்தையே சாட்சிக்கு கூப்புடுறீங்கள்......நீங்கள் எவ்வளவு நல்லவர் நீங்கள் சொன்னால் நம்பாமலா போகப்போறம்.......!   😂

 Best Nayanthara GIFs | Gfycat

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, யாயினி said:

Canada has a big-time nursing shortage. So why can’t these two fully certified nurses get the OK to practise?

நேஸ்சுக்கு தட்டுபாடு என்றால் இலங்கையில் இருந்து நேஸ்மார்களை எடுத்து மேலதிக பயிற்சி கொடுக்கலாமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் எதுக்கு உலகத்தையே சாட்சிக்கு கூப்புடுறீங்கள்......நீங்கள் எவ்வளவு நல்லவர் நீங்கள் சொன்னால் நம்பாமலா போகப்போறம்.......!   😂

 Best Nayanthara GIFs | Gfycat

 

7 hours ago, விளங்க நினைப்பவன் said:

நேஸ்சுக்கு தட்டுபாடு என்றால் இலங்கையில் இருந்து நேஸ்மார்களை எடுத்து மேலதிக பயிற்சி கொடுக்கலாமே

அடிக்கடி இந்த பக்கத்தையும் புரட்டி பார்ப்பதற்கு மிகவும் நன்றி.👋✍️ யாரும் கவனிக்காது விட்டால் மூடு விழாத் தான் கொண்டாட வேண்டும் ✍️ 👋🙆

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, யாயினி said:

அடிக்கடி இந்த பக்கத்தையும் புரட்டி பார்ப்பதற்கு மிகவும் நன்றி.

ரவுண்ட் வரும் போது புரட்டி பார்ப்பதற்கு நல்ல பக்கங்கள் வைத்திருக்கும் உங்களுக்கு நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, விளங்க நினைப்பவன் said:

நேஸ்சுக்கு தட்டுபாடு என்றால் இலங்கையில் இருந்து நேஸ்மார்களை எடுத்து மேலதிக பயிற்சி கொடுக்கலாமே

இலங்கையிலும் தாதியர் பற்றாக்குறை இருக்கே!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இலங்கையிலும் தாதியர் பற்றாக்குறை இருக்கே!

இலங்கையிலும் தாதியர் பற்றாக்குறையா? தாதியர் வேலை இருக்கிறது ஆனால் செய்ய விரும்பவில்லை :rolleyes:  நான் அங்கே இருக்கிற தாதிகள் வெளிநாடு வந்து பயனடைவதுடன் புதிதாக பலருக்கு அங்கே தாதிகள் ஆவதற்கு வேலை வாய்ப்பு கிடைக்குமே என்று நினைத்தேன்.
இலங்கையில் இருப்பவர்கள் எல்லாம் வெளிநாடு செல்ல போகிறார்கள்  என்று யாழ்களத்தில் தெரிவித்தார்கள். வெளிநாடு வந்து என்ன செய்வதாக இருக்கிறார்கள் 🤔

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையிலும் தாதியர் பற்றாக்குறையா? தாதியர் வேலை இருக்கிறது ஆனால் செய்ய விரும்பவில்லை :rolleyes:  நான் அங்கே இருக்கிற தாதிகள் வெளிநாடு வந்து பயனடைவதுடன் புதிதாக பலருக்கு அங்கே தாதிகள் ஆவதற்கு வேலை வாய்ப்பு கிடைக்குமே என்று நினைத்தேன்.
இலங்கையில் இருப்பவர்கள் எல்லாம் வெளிநாடு செல்ல போகிறார்கள்  என்று யாழ்களத்தில் தெரிவித்தார்கள். வெளிநாடு வந்து என்ன செய்வதாக இருக்கிறார்கள் 🤔

தாதியராக பணியாற்ற தகுதி உடைய பல தமிழ் பெண் பிள்ளைகளின் குடும்பத்தினர் விரும்பாததால் அப்பணியில் சேர பின்னடிக்கின்றனர். சிங்கள மொழி பேசும் பல பெண் தாதிகள் வடபகுதியில் பணியாற்றுகின்றனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அன்புத்தம்பி said:

240210984_1207552856389709_7315189792424

வலிந்து (கேட்டு) ஒன்றை பெறுவதை விட‌ ஒதுங்கி விடுதல் நன்று.,,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

More yellow onions sold in multiple provinces recalled due to possible Salmonella

The Canadian Press
Published Thursday, October 28, 2021 5:16AM EDT
onions,

The Canadian Food Inspection Agency says a recall has been expanded for Goodfood brand onions due to possible salmonella contamination. (Photo: CFI

 

The Canadian Food Inspection Agency says a recall has been expanded for Goodfood brand onions due to possible salmonella contamination.

Goodfood Market Corp. is recalling 908-gram bags of yellow onions, with the codes 3680626 and 3682656, distributed in Prince Edward Island, Nova Scotia, New Brunswick, Quebec, Ontario, and possibly other provinces and territories.

 

It was prompted by a similar recall and investigation in the U.S. involving red, white, and yellow raw onions from Prosource Produce LLC of Hailey, Idaho.

There have been no illnesses associated with the product in Canada, although there have been reports of people getting sick in the U.S. after consuming the onions.

Customers are being told to either throw out the product or return it to the store where it was purchased.

Symptoms of the bacterial disease can include fever, headache, vomiting, nausea, abdominal cramps, diarrhea, and in rare cases severe arthritis.

This report by The Canadian Press was first published Oct. 27, 2021.

Cp24.

  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சள் வெங்காயம் என்றால் எலுமிச்சை போன்று நிறத்தில்  இருக்கும் என்று ஆராய்ந்தால் அது தான் வெளிநாடுகளில் கிடைக்கின்ற  சாதாரண வெங்காயம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

World Stroke Day (October 29, 2001), 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.