Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தலையை வெட்ட சதி செய்ததாக 15 பேர் ஆஸ்திரேலியாவில் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலையை வெட்ட சதி செய்ததாக 15 பேர் ஆஸ்திரேலியாவில் கைது

140918034050_raids_624x351__nocredit.jpg

 

கொலைசெய்து அதை காட்சிப்படுத்த விரும்பிய ஒரு குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களை ஆஸ்திரேலிய காவல்துறையினர் கைது செய்திருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் தெரிவித்திருக்கிறார்.

 

இவர்கள் இஸ்லாமிய தீவிரவாதக்குழுக்களுக்காக பொதுமக்களின் தலையை வெட்டிக்கொல்ல முயன்றவர்கள் என்று கூறப்படுகிறது.

 

இவர்கள் தொடர்பாக அரசுக்கு கிடைத்த முன்னெச்சரிக்கை புலனாய்வுத்தகவல்களின் அடிப்படையில் இவர்களைக் கைது செய்யும்படி உத்தரவிட்டதாக அப்பாட் தெரிவித்திருக்கிறார்.

இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளுடன் சேர்ந்து ஆஸ்திரேலிய குடிமக்களும் சண்டையிடுவதாக வெளியான கவலைகளுக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவுக்கு தீவிரவாதிகளால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தலின் அளவை மத்திய தரம் என்கிற நிலையில் இருந்து அதிகபட்ச ஆபத்து நிலைக்கு உயர்த்துவதாக ஆஸ்திரேலிய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலேயே மிகப்பெரிய நடவடிக்கையாக சிட்னியிலும் பிரிஸ்பேனிலும் நடந்த தேடுதல் நடவடிக்கைகளில் 800க்கும் அதிகமான அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

 

BBC  தமிழ்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவுஸ்ரேலியாவும் பூச்சாண்டி காட்ட வெளிக்கிடுது. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலக.. இஸ்லாமிய மத பயங்கரவாதப் பிரச்சனை இப்போதைக்கு தீரப் போவதில்லை.

 

இந்தப் பயங்கரவாதிகள் எமது சில போராட்ட வடிவங்களை தவறாகப் பயன்படுத்தியதால் சில அசெளகரியங்களை எமது போராட்டமும் மேற்குலகிடமிருந்து.. சந்திக்க நேர்ந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியப் பயங்கரவாதம் தற்போது உச்சநிலையில் இருப்பதாகக் காணப்பட்டாலும் அது ஒரு முடிவை நோக்கியே போவதாகத் தெரிகின்றது.

 

ஐஎஸ் ஐஎஸ் தனது அதிகூடிய விசுவரூபத்தினை கூடியவிரைவில் எட்டிவிடும், அதன்பின்பு அங்குள்ளவர்கள் அவர்களுக்கு ஆதரவானவர்கள் மற்ரும் அவ்வியக்கத்தின் முக்கியச்தர்கள் அனைவரும் உலகளாவியரீதியில் அடையாளம் காணப்பட்டுவிடுவார்கள்.

 

இப்போது இச்லாமியப் பயங்கரவாதத்தின் எல்லாச் சாலைகளும் இவர்களை நோக்கியே திருப்பிவிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாற்றாக இனிவரும் காலங்களில் இன்னுமொரு இயக்கம் தோன்றுவதற்கு நெடும்காலமெடுக்கும்.

 

மிகப்பெரிய ஆதரவுத்தளத்தை இவர்கள் பெற்ருவிட்டார்கள் இதுவே இவர்களைக் கருவறுக்க வழிகோலிவிட்டது.

 

உலகெங்கும் வாழும் இஸ்லாமியப் பயங்கரவாதிகள் மற்ரும் அவர்களது ஆதரவாளர்கள் அனைவரும் ஐஎஸ் ஐஎஸ் சினது முகாம்களுக்குச் சென்றதனால் அழிப்பு நடவடிக்கைகள் எளிதானதாகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது இன்று நேற்று ஆரம்பித்த விடயம் அல்ல. படகு மூலம் வருபவர்களுடன் அவுஸ் அரசாங்கம் கடுமையாக நடந்து கொள்ளுவதற்கும் இந்த இரானிய, ஆப்கானியர்களே காரணம். இது பற்றி யாழ்களத்திலும் பலதடவைகள் எழுதியிருக்கிறேன். வெடிக்காத குண்டுகளை, யாருக்கும் தெரியாது, அவை வெடிக்காமல் போக செய்யப்பட்ட வேலைகளும் யாருக்கும் தெரியாது. ASIO பொஸ் டேவிட் எர்வினின் பதவிக்காலம் இந்த மாதம் முடிவையும் நிலையில் இந்த அறிவிப்பு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.