Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த செய்தி (ஆக்கம்) குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இறங்கி ஏறுவது நம் தலைவிதிப்பயனே!
[ செவ்வாய்க்கிழமை, 23 செப்ரெம்பர் 2014, 10:04.23 AM GMT ]
trailway001.jpg
24 ஆண்டுகளுக்குப் பின்னர் யாழ்தேவி நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்ந்துள்ளது.

யாழ்தேவியின் பரீட்சார்த்தமான வருகையென்பது, புகையிரதப்பாதை அமைப்பின் சரி பிழைகள் பற்றிய மதிப்பீட்டிற்கானது எனக் கருதும் அதேவேளை, புகையிரதக் கடவைகள் அவற்றின் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பன தொடர்பிலும் ஆராய்வதாக இருக்கும்.

புகையிரத வண்டி யாழ்ப்பாணத்திற்கு வருவதென்பது எவ்வளவு முக்கியமான விடயமோ அதைவிட ஆயிரம் மடங்கு முக்கியத்துவம் வாய்ந்தது பொதுமக்களின் பாதுகாப்பு என்ற உண்மையை உரியவர்கள் உணர்ந்தாக வேண்டும்.

எனினும் பாதுகாப்பான கடவைகள் அமைக்கப்படவில்லை என்ற குறைகள் இன்னமும் ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருக்கின்றன என்பதையும் இங்கு சொல்லித்தான் ஆக வேண்டும்.

ஆர்ப்பாட்டம் செய்து புகையிரதக் கடவைகளை பாதுகாப்பானவையாக ஆக்குதல் என்ற நிலைமை அவ்வளவு நல்லதல்ல.

புகையிரதக் கடவைகள் எப்போதும் எச்சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பானவையாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

இவை ஒருபுறம் இருக்க, யாழ்ப்பாணத்தில் புகையிரதப் பாதை அமைக்கப்பட்ட பின்னர் மீண்டும் இறங்கி ஏறும் நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது.

1996ம் ஆண்டிற்கு பின்னர் யாழ்.குடாநாட்டில் சந்திக்குச் சந்தி இராணுவக் காவலரண்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் சோதிக்கப்பட்டனர்.

இதன்போது மக்கள் இறங்கி நடந்து செல்வது கட்டாயமாயிற்று. இந்த நடைமுறை நீண்ட காலம் நீடித்ததெனலாம்.

எனினும் கடந்த ஒரு சில வருடங்களாக படையினரால் காவலரண்கள் குறைக்கப்பட, இறங்கி ஏறும் நிலைமை இல்லாமல் போனது. இது பொதுமக்களுக்கு மிகப் பெரிய நிம்மதியை கொடுத்ததெனலாம்.

ஆனால், இப்போது வட மாகாணத்தில் அமைக்கப்பட்ட புகையிரதப் பாதை காரணமாக, இறங்கி ஏறும் நடைமுறை மீளவும் அமுலுக்கு வந்துள்ளது.

அதிலும் குறிப்பாக துவிச்சக்கர வண்டியில் செல்வோர் புகையிரதக் கடவைகளில் இறங்கி ஏறுவது தவிர்க்க முடியாததாகும்.

இதில் வேதனை என்னவெனில் இராணுவச் சோதனைச் சாவடியில் வயோதிபர்கள் துவிச்சக்கர வண்டிகளில் ஓடிச் செல்வதற்கு படையினர் அனுமதி கொடுத்திருந்தனர்.

ஆனால் புகையிரதப் பாதைகளோ துவிச்சக்கர வண்டிகளில் செல்லும் முதியவர்களை கட்டாயமாக இறங்கிச் செல்ல வைத்துள்ளது.

என்ன செய்வது! ஒரு காலத்தில் வீதி வழியால் செல்லும் போது அரசடிப் பிள்ளையார்; ஆலடி வைரவர்; வில்வமரத்தடி அம்மன் என வீற்றிருக்கும் தெய்வங்களை வாகனங்களில் செல்வோர் அதனை நிறுத்தி இறங்கி வழிபட்டுச் செல்லும் மரபு இருந்தது.

அந்த மரபு கைவிடப்பட்ட பின்னர் இராணுவச் சோதனைச் சாவடிக்காக இறங்கி நடந்தோம்.

இப்போது புகையிரதப் பாதைக்காக இறங்கி ஏறவுள்ளோம். தெய்வங்களை மனதிருத்துவதற்காக வீதிகள் தோறும் அமைக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களில் இறங்கி ஏறும் நடைமுறையை இளம் சந்ததியிடம் கையளிக்க தவறிய நம் முதியவர்களுக்குத் தண்டனை கொடுப்பதுபோல புகையிரதப் பாதைகள் இவர்களை இறங்கி ஏறப் பணித்துள்ளன.

இந்தத் துன்பம் இனிமேல் எடுபடப் போவதில்லை என்பது உறதி. ஆக, இறங்கி ஏறுவது நம் தலைவிதிப் பயன் என்று கூறுவதைத் தவிர நமக்கு வேறு வழி தெரியவில்லை. :huh:  :blink:  :unsure: 

 


மேலே குறிப்பிட்ட செய்தி வேறு ஒரு இணையத்தில் இருந்து வெட்டி ஒட்டியதுதான்...

எழுதியவர் என்ன சொல்ல வாரார்...எனக்கு குழப்பமா இருக்கு ..அது தான் உங்களிடம் விட்டு விட்டேன்.. :D

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புகையிரதம் வரும் போது யாரும் நிற்காதீா்கள்....

சாமிக்கு பயந்தோம்
ஆமிக்கு பயந்தோம்...
அட இந்த இரும்புப் பெட்டிக்குமா?
இளையோா் பரவாயில்லை இந்த கிழடுகள் ஏன் நிற்கோணம் தண்டாவளத்திலை தலைவைச்சு போய் சேருங்கோ என்று அழுகிறாா்.

 

என்ன செய்யலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ 'யாழ்தேவியைப்' பற்றி ஒரு செய்தி போடவேணும் எண்டு 'வலிந்து' எழுதின செய்தியைப்போல உள்ளது!

 

ஆமிக்காரன் இறக்கேக்கை இறங்கிறதுக்கும்... புகையிரதக் கடவையில இறங்கிறதுக்கும் ஏதும் சம்பந்தமிருக்கிறதா எனக்குத் தெரியவில்லை!

 

நாங்கள் ஒரு நாளும், புகையிரதக் கடவையில, சைக்கிளிலிருந்து இறங்கின ' ஞாபகம்' இல்லை!

 

அப்பிடியே 'பாருக்கு' இரண்டு பக்கமும் காலை 'ஊண்டிக்கொண்டு' புகையிரதத்தில் போற ஆக்களைப் பாக்கிறதே ஒரு சந்தோசம்!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் சனநடமாட்டம் குறைந்த பகுதிகளிலேயே.... இது வரை, 50 உயிரிழப்புக்களாவது ஏற்பட்டிக்கும், இனி.... பாதுகாப்பில்லாத கடவைகளில் எத்தனை விபத்தோ?

 

-----

நாங்கள் ஒரு நாளும், புகையிரதக் கடவையில, சைக்கிளிலிருந்து இறங்கின ' ஞாபகம்' இல்லை!

 

அப்பிடியே 'பாருக்கு' இரண்டு பக்கமும் காலை 'ஊண்டிக்கொண்டு' புகையிரதத்தில் போற ஆக்களைப் பாக்கிறதே ஒரு சந்தோசம்!

 

அட.. அந்தச் சந்தோசத்தை புங்கையும், அனுபவித்துள்ளாரா... :D

  • கருத்துக்கள உறவுகள்

24 வருடங்களுக்கு முன் முதியவர்கள் இறங்கிச் செல்லவில்லையா? கோச்சி அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிச் சென்றதா?

அதை விட கோச்சி வரும் கவனம் என்ற அறிவிப்புப்பலகை உள்ளது. மற்றும் தண்டவாளங்களில் நடமாடுதல் தண்டனைக்குரிய குற்றம் என்பது இலங்கயில் பொதுவான ஒரு சட்டம். நாங்கள் இலங்கைச் சட்டத்தை மதிக்கமாட்டமாக்கும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.