Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரிபால துரோகி, சந்திரிகா சூழ்ச்சிக்காரி! - பாராளுமன்றத்தில் அஸ்வர் சீற்றம்.

Featured Replies

முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பாரிய துரோகம் இழைத்து விட்டதாக, அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் நேற்று வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று வரையில் அமைச்சராக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன, குடும்ப அரசியல் பற்றி எவ்வாறு குற்றம் சுமத்த முடியும்? சிறிமாவோ பண்டாரநாயக்க நாட்டை சிறந்த முறையில் ஆட்சி செய்தார். எனினும் அவரது மகள் சந்திரிகா, மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து சூழ்ச்சி செய்கின்றார்.

மக்களுக்கு நலன்களை ஏற்படுத்திய மதத் தலைவர்கள் அரசியல் தலைவர்களுக்கு எதுவும் நடக்காது. மைத்திரிபாலவின் நடவடிக்கை பாரியளவிலான துரோகமாகும்.சர்வதேச சூழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதனை ஜனாதிபதி அம்பலப்படுத்தினார். கடந்த சில தினங்களில் பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த விடயங்கள் பற்றி நாட்டுக்கு தெரியப்படுத்துவோம். பாரிய கற்பாறையை அசைத்தாலும், மெதமுலனவில் வீற்றிருக்கும் ஜனாதிபதியை அசைக்க முடியாது என அஸ்வர் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=121232&category=TamilNews&language=tamil

Edited by துளசி

இப்ப மகிந்தவை புகழ்ந்த வாய் விரைவில் மைத்திரியை புகழும். மகிந்தவை இகழும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைவாழ் இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஒரு இழுக்கு.. இந்த அழுக்கு.. :(:lol:

  • கருத்துக்கள உறவுகள்

-----

பாரிய கற்பாறையை அசைத்தாலும், மெதமுலனவில் வீற்றிருக்கும் ஜனாதிபதியை அசைக்க முடியாது என அஸ்வர் தெரிவித்துள்ளார்.

 

"மெதமுலன" என்றால்.... என்ன?smiley-signs002.gif

யாராவது, சிங்களம் தெரிந்தவர்கள் smiley-signs028.gif மீ...

1798525_398946040256390_3855093486564062

  • கருத்துக்கள உறவுகள்

எம்மில் ஒன்றாக இருந்த துரோகி கருணாவை பிரித்து எக்காளமிட்ட சிங்களத்திற்கு இப்ப புரியும்....

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணை,

மெதமுலான என்பது அம்பாந்தோட்டையில் மகிந்தவின் ஊர்.

சிறி அண்ணை,

மெதமுலான என்பது அம்பாந்தோட்டையில் மகிந்தவின் ஊர்.

அப்ப தனது ஊரில் மீண்டும் மகிந்த செற்றிலாவார் என்பதை தான் அஸ்வர் கூறியுள்ளாரோ!
  • கருத்துக்கள உறவுகள்

புலிக்குரல் பிரபா-கருணாவில் பாவித்த அதே உத்தியைதான் ரணில் இப்போதும் பாவிக்கிறார்.

என்ன அப்போ சந்திரிகாவும் ரணிலும் எதிர் முகாமில் இருந்து ஒன்றாக வேலை செய்தார்கள், இப்போ ஒரே முகாமில் இருந்து ஒன்றாக வேலை செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரிபால சிறிசேனா ஐனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றாலும் பதவி ரணிலுக்குத் தான் வரப் போகின்றது பிரதமராக ரணிலே வரவிருப்பதாக விளக்கம் கொடுக்கப்படுகின்றது. ஆனால் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. எதுவோ எல்லாம் மைத்திரிபாலாவின் கையில் தான் உள்ளது.

புலிக்குரல் பிரபா-கருணாவில் பாவித்த அதே உத்தியைதான் ரணில் இப்போதும் பாவிக்கிறார்.

என்ன அப்போ சந்திரிகாவும் ரணிலும் எதிர் முகாமில் இருந்து ஒன்றாக வேலை செய்தார்கள், இப்போ ஒரே முகாமில் இருந்து ஒன்றாக வேலை செய்கிறார்கள்.

கருணாவிற்கு முன்பே பல ஆண்டுகளாக தமிழரை பிரித்த உத்திதான் இது.மீண்டும் மீண்டும் இந்த ஒரே உத்தியை பிரயோகித்தாலும் அது வேலை செய்யும்..இந்த விடயத்தில் படித்தவன்,பாமரன்,அறப்படித்தவன் என்ற எந்த வித்தியாசமின்றி காலில் விழ தமிழன் தயார் என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் உண்டு. எதிர்காலத்திலும் இது தொடரும் என்பதில் ஐயமில்லை.
  • கருத்துக்கள உறவுகள்

வெளித்தோற்றத்துக்கு தோல்விகளின் நாயகனாக, கேலிக்குரிய தலைவராக தெரியும் ரணில் உண்மையில் கீசிஞ்சருக்கு நிகரான ஒரு குள்ள நரி.

ஒரு புலியையும் (பிரபா), ஒரு சிங்கத்தையும் ( மகிந்த), 10 வருட காலத்துக்குள் அடித்துச் சாப்பிட காய்நகர்த்தும் நரி.

ரணில் மட்டும் பிரபாவின் ஒரு ஆலோசகராய் இருந்து, பிரபா அவர் சொல்ப்படி நடந்து இருந்தால் - இப்போ தனிநாடே கிடைத்திருக்கும்.

நிச்சயமாக் துல்பென்ஸ் அறப்படித்தவன், ஆயுதம் எடுத்தவன், ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறை அவதரித்தவர் - எல்லா தமிழரும் இந்த உத்திக்கு பலியாகினர் என்பது கசப்பான உண்மையே.

பலியாகினர் என்பது மட்டுமல்ல இன்னமும். பலியாக உள்ளனர் என்பதே கசப்பான உண்மை. தமிழரில் இந்த விடயத்தை கூற பெரிய அறிவு தீர்க்கதரிசனம் தேவையில்லை என்பதால் பயமின்றிஅடித்து கூறலாம். என்னை பொறுத்தவரை கொத்தடிமையாய் வாழ தயாராக இருக்கும் தமிழர் பிரச்சனையை ஒதுக்கி வைத்து விட்டு சிங்கள மக்களாவது ஓரளவு ஜனநாயக காற்றை சுவாசிக்க ஆட்சி மாற்றம் அவசியம்.

Edited by tulpen

தேர்தல் முடிந்து யார் வெற்றி பெற்றாலும் வென்றவர் பதவிக்கு வந்து தோற்றவரை ஒரு பிடி பித்தபின்னர் தான் சம்பந்தரின்ர வேட்டில கைவைப்பினம். அதுவரை பார்த்து கேட்டு இரசிப்பதை தவிர எங்களுக்கு எறேதையும் யாரும் விட்டுவைக்கவில்லை. 

மகிந்த அண்ட் கோ சர்வாதிகாரம் தலை தூக்கநாட்டிற்கு நல்ல ஆட்சி வேண்டும் என்றுதான் மைத்திரிபால பிரிந்தார் .இவரை மகிந்தாவிற்கு எதிராக போட்டியிட வைக்க மாஸ்டர் பிளான் போட்டவர் யாரென்று தெரியவில்லை .

 

முன்றாவது முறையாக ராஜபக்ஸ ஜனாதிபதியாக போட்டியிடமுன்வந்தது  பலரை  வெறுப்பேற்றிவிட்டது   .

 

இனி கொஞ்ச நாட்களுக்கு எங்கட ஆய்வாளர்களின்  நட்டுவக்காலி தாக்கல் தாங்கேலாது .

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணை,

மெதமுலான என்பது அம்பாந்தோட்டையில் மகிந்தவின் ஊர்.

 

நன்றி, கோசான்.

மகிந்தர் அலரி மாளிகையில் வீற்றிருப்பதை, நாசுக்காக... "மெதமுலான" என்று, 

"பிளாக் மெயில்" பண்ணியுள்ளார்... இந்த அஸ்வர் என்ற முஸ்லீம்.

இந்த விடயத்தில், அவங்கள்.... பயங்கர கில்லாடிகள்.

மகிந்த அண்ட் கோ சர்வாதிகாரம் தலை தூக்கநாட்டிற்கு நல்ல ஆட்சி வேண்டும் என்றுதான் மைத்திரிபால பிரிந்தார் .இவரை மகிந்தாவிற்கு எதிராக போட்டியிட வைக்க மாஸ்டர் பிளான் போட்டவர் யாரென்று தெரியவில்லை .

 

முன்றாவது முறையாக ராஜபக்ஸ ஜனாதிபதியாக போட்டியிடமுன்வந்தது  பலரை  வெறுப்பேற்றிவிட்டது   .

 

இனி கொஞ்ச நாட்களுக்கு எங்கட ஆய்வாளர்களின்  நட்டுவக்காலி தாக்கல் தாங்கேலாது .

 

"தாழுற, கப்பல் தான்.... எங்கள், கப்பல்" :o 

 

இந்தச் சந்தர்ப்பத்தை... பயன் படுத்தி,look.gif

சம்பந்தர், டக்கென்று.... மகிந்தவுடன், கூட்டுச்  சேர வேணும்.MG_11.giflachen%20(11).gif

Edited by தமிழ் சிறி

சிறி அண்ணை,

மெதமுலான என்பது அம்பாந்தோட்டையில் மகிந்தவின் ஊர்.

 

மகிந்தவின் சொந்த ஊர் வீரவெல... எப்பவிருந்து மெதமுலான? 

  • கருத்துக்கள உறவுகள்

சூறா,

அம்பாந்தோட்டையில, விரவில இருக்குற, மெதமுலான. யாழ்ப்பாணத்தில், வல்வெட்டித்துறையில் இருக்கிற ஊறணி என்பது போல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.