Jump to content

காதலால் மட்டும் ..!


Recommended Posts

பேருந்து தரிப்பிடம் மெலிய குளிர் இரண்டு ஜோடிகள் அவள் இருக்கையில் இருதபடி வெறித்து பார்க்கிறாள் வேறு திசையில் ,அவன் நின்றுகொண்டு மறுதிசையில் ஒரு சிகரெட்டை பற்றி ஆழமா இழுத்து புகையை குளிரின் புகாருடன் சேர்த்து வெளியேறுகிறான் ..

 

சட்டென்று திரும்பியவன் அவளை நோக்க அவளே கண்டுக்காதவளா மறுக்க எழுந்து, தன பையில் இருந்து உருவி ஒரு சிகரெட்டை பற்றிக்கொண்டு பேருந்தை எதிர்பார்க்கிறாள் ..

 

வந்து நிக்கிறது பேருந்து அவள் கையில் இருந்த சிகரெட்டை காலில் போட்டு மிதித்து விட்டு ஏறுவதுக்கு தயாராக ,அவனோ அங்கயே நிக்கிறான் திரும்பி பார்த்தவள் தானும் நின்றுவிடுகிறாள் ..

 

திரும்பி வந்து அவளின் காதோரம் எதோ சொன்னவன் அவளின் கைகளை இறுக்கி பிடித்து, மறுகையால் இடையை வளைந்தபடி கொஞ்சலா அவளிடம் பேசும்போது அவளே கண்டுக்காமல் விலக நினைக்கிறாள் ..

 

இரண்டு முறை அவனை அவன் கைகளை தட்டி விட்டு போக எத்தனிக்கிறாள் ,என்ன நினைத்தானோ கோவமா விலக்கி விட்டு எதிர்திசையில் திரும்பி வேகமா ஒரு சிகரெட்டை எடுத்து தீயை மூட்டி தன் கோவத்தை தணிக்க நினைத்திருப்பான் போலும் ...

 

ஒரு நாலடி நடந்து போனவள் வேகமா திரும்பி வந்து அவனின் பின்னாடி கைகளை கோர்த்து தன்னுடன் சேர்த்து இறுக்கி கொண்டாள் ஓ ,அவர்கள் காதலர்கள் போலும் பின்னர் இருவரும் பேச முனைகையில் வார்த்தைகள் இல்லை என்று இல்லை ஏனெனில் அவனின் உதட்டை அவள் கடித்தபடி இருந்தால் எப்படி பேசுவான் அவன் ..

 

காதலுக்கும் காதலர்களுக்கும் மட்டுமே தெரிந்த வித்தை என்பேன் சின்ன சின்ன செல்லக்கோவம் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D தொடரட்டும்  உங்கள்  ஆக்கங் கள்.  உங்கள்  முயற்சிகளுக்கு   பாராட்டுக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு வீட்டில சரியான வரட்சி போல. வீதி வழிய நின்று என்னத்தை எல்லாம் விடுப்புப் பார்க்கிறார்..???! :lol::D

Link to comment
Share on other sites

நன்றி நிலாமதி அக்கா ......

 

அண்ணே  நெடுக்கர்  இப்படி  விடுப்பு  பார்ப்பதை  எல்லாம் தொடர்த்து  எழுத திட்டம் இருக்கு  எப்படி  வசதி   :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் கிளு கிளுப்பான விடுப்புக்களை படக் படக் என்று எழுதி தள்ளுங்கோ நாங்கள் வாசிக்க இருக்கிறோம்.... :D

Link to comment
Share on other sites

ஆதீனத்தின் சீடர்களுக்கு ஓலையொன்று அனுப்பியுள்ளேன். சேதாரங்கள் அறியத்தரப்படமாட்டாது அஞ்சரன். :lol:

Link to comment
Share on other sites

நன்றி வருகைக்கு அனைவருக்கும் நாளை ஒரு கதை போடுவம்  :D

Link to comment
Share on other sites

முன்னிருக்கையில் இருந்தபடி  அடிக்கடி கண்ணாடி வழியா எட்டி எட்டி பார்த்தபடி இருந்தான் நான் என் தொலைபேசியை  தொல்லை கொடுத்தபடி அவனையும் கடைக்கண்ணால் பார்க்கிறேன் ,எல்லாம் ஒரு பயம் ரயிலில்  ஏறினா வெள்ளை எல்லாம் புத்தகம்  வாசிக்க  தொடங்கிடும்  ஆனால்  நாங்க மட்டும்  அப்பவும் போனை  நொண்டி  கொண்டு இருப்பம்  என்பதே வேறு .அதை விட  இந்த  முன்னாடி  இருந்தவன் அங்க  இங்க  வெருண்டு  பார்க்க  மனக்கு  கொஞ்ச  நடுக்கம்  என்ன  எல்லாம்  தீவிரவாதிகள்  பிரச்சினைதான்  அங்க  இருந்து  ஓடி  வந்து  இங்கின  புட்டுட்டு  போயிடுவம்  என்னும்  ஒரு மென்மையான  பயம் பாருங்கோ ...

 

 

சரி அப்படியே ஒரு ஐந்து  தரிப்பிடம்  பார்த்தவன் ஆறாவது தரிப்பிடம்  வர லேசா சிரிச்சான் யன்னலால்  பார்த்து  அப்பாடா என்ன  சிரிக்கிறான் வருத்தம்  கூடி  போயிட்டு  போல  என்று நமக்க  நினைக்க  வேகமா ஓடிவந்து  ஒரு  பெண்ணு ஹாய்டா  என்று கட்டி அனைத்து கொண்டாள்  ,அப்பா நமக்கு  இப்பத்தான் நிம்மதி கருமம் காதலிக்கு  காத்து இருந்திருக்கு  என்னையை  கொஞ்ச  நேரம் கலக்கடிச்சு  போட்டான் பயல் ,ஓகே இருவரும் பரஸ்பரம்  நலவிசாரிப்பு கைகளை  இறுக்கி பற்றியபடி முத்த பரிமாற்றம்  என்று அக்கம் பக்கம் நிக்கிறவன் வெட்கப்படும் அளவு ,விடுங்க காதல் அப்படித்தானே பின்னர் ஒரு ஆறு தரிப்பிடம்  கண்டது ஏழாவது  தரிப்பிடத்தில்  அவள் இறங்க இருவரும் கைகளும் பற்றி இதழ் முத்தம் இட்டு அவள் இறங்க மனம் இன்றி அவன் கரங்களை தழுவியபடி அவள் கரம் கதவுகள் மூடும்வரை லேசான  சோகப்பார்வை கண்களில் இழையோட இறங்கி நடக்கிறாள் ...

 

அவளை கண்ட சந்தோஷத்தில்  முத்தத்தின் இனிமைகளில்  இருந்து அவன் இன்னும் விடுபடாமல் உதட்டோர புன்னைகயுடன் தன் கைபேசியில் பாடலை தட்டி விட்டு காதுகளில் கொழுவி மெல்ல தலையசைத்து அவன் வானில் மிதக்கிறான் போலும் ,அப்பாடா இனி  நிம்மதியா இருக்கலாம் என்னும் பெரும் மூச்சுடன் நான் நேரத்தை பார்க்கிறேன் வேலையிடம் நெருங்குது .

 

ரயில் பயண கவனிப்பு .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.