Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றென் பெருவாழ்வு.

Featured Replies

பறவைகளின்றி வானம் இறந்து கிடக்க,

இலைகள் கழற்றிய கிளைகள்

காற்றோடு குலவுகின்றன,

 

மதில்களில் பூனைகள் இல்லை.

வாசல்களில் யாதொன்றினதும் அரவங்களும் இல்லை.

அறைகளில் ஒளிரும் மின்குமிழ்கள்

கண்ணாடி யன்னல்களில் ஒளியத்தொடங்குகின்றன.

 

குளிர் புணர்ந்து அந்தி கவிழ்ந்துவிட்டது.

இனியிருள் சூழ்ந்து

அமைதி வளர்ந்துவிடும்.

மூச்சுக் காற்றில் வெப்பம் தெறிக்க,

உள்ளங்கைகளில் குளிர் குத்தும்.

 

இரண்டுபட்டுக் கிடக்கிறது தேகம்.

மனதும்,

 

கிடுகுவேலிப் புலுனிக்குருவி  நான்

இந்தப்பனிக் குளிக்கும்

மரங்களில் எனக்கேது மறைவு.

 

செயின் நதியும்

ஈபிள் கோபுரமும்

மோனோலிசாவின் முகமும்

உலகின் அழகான ராஜபாட்டையும்

டயானாவின் கார் மோதிய தூணும்

கடிகாரத்தின் இலக்கங்களாகிடச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்.

 

தொடரூந்துகளிலும்

இரவுநேர ஊர்திகளிலும்

அவதியோடு கழிந்ததுபோக

மிச்சமிருக்கும் உறக்கத்தோடு

கம்பளியொன்றுக்குள் புதைந்துவிடுதலும்,

 

வலிந்து திணித்த புன்னகையோடு

முகமறியாதவனுக்குப்  பதில் வணக்கமும்

நண்பனுக்கு வாழ்த்தும்,

தொலைபேசி அழைப்புக்குச் சிரிப்பும்

இந்தப் பெருவாழ்வின் பக்கங்கள்.

 

வாழ்வைக் கடையும்

காலக்கயிறாகி விலகாது கிடக்கும்

ஏழாவது அறிவே

இன்றெனக்குக்

எனக்குக் கிடைத்த சாபமோ.

 

வல்லைவெளியின் கண்டல் மரங்களிலும்

வல்வைக்கடலின் முருகைகற்களிலும்

நீண்ட வயல்வெளிகளின் வரப்புகளிலும்

அடிபெருத்த ஆலமர நிழலிலும்

இன்னும் ஒளிந்திருக்கலாமென் வாழ்வு.

 

திரும்பிப் பார்க்கிறேன்.

பனிபடந்த வீதியில் உருகிக்கொண்டிருக்கிறது

என் சுவடுகள்.

 

 
  • கருத்துக்கள உறவுகள்

வரவரக் கவியின் செருக்குக் கூடிக்கொண்டே செல்கிறது மேற்கெழுதாசன்

  • தொடங்கியவர்

"செருக்குக் கூடிக்கொண்டே செல்கிறது "

:icon_idea:  அம்மா, 

 

செருக்கு எல்லாம் ஊரில இருந்து வெளிக்கிடைக்கையே செத்துப் போச்சு.... இங்கை வந்ததில கொஞ்ச நஞ்சமிருந்த மிச்சமெல்லாமும் போச்சு ... நம்புங்க.... :D

Edited by நெற்கொழு தாசன்

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதியது உங்கள் செருக்குப் பற்றியதல்ல கவிதையின் செருக்கு பற்றி :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இழப்புக்களையும் இருப்புக்களையும் இயல்புநிலை மாறாமல் எடுத்து வந்த கவிகரிகள் மிகவும் நேர்த்தியாகக் கோர்க்கப்பட்டிருக்கிறது. சுமே சொன்னதுபோல் கவிதையின் வரிகளில் கவிச்செருக்கு மிஞ்சிக் கிடக்கிறது பாராட்டுக்கள் நெற்கொழுதாசன்.

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் நெற்கொழுதாசன்

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் ராசா

 

ஐந்து வருடத்தில் திரும்பி வருவேன் என்ற உறுதியுடன் தான் பிரான்சுக்குள் வந்தேன

காலங்கள் ஓடி

வயதுகளும்

வாழ்வும் ஓடி

குட்டி

குட்டியின்  குட்டி வரும் நிலை வந்தபோதும்...

அதே மனநிலை

எதையோ  தேடியபடி.. ..

உடல்  இங்கிருக்க

மனம் திரும்பி  சென்றதுபோல....

 

தொடருங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

23864101501202221100727.jpg

 

கவிதைக்கு நன்றி
வீட்டுக்கு வீடு வாசற்படி
இந்த ஆலமரத்தின் திரண்ட  அடிகள் பல கதைகள் சொல்லலாம் :):D

 

கவிதை பிடித்து இருக்கின்றது. ஆயினும் அதன் பொருள் மீது எனக்கு பிரியம் இல்லை.

 

புதிய இடம் ஒன்றுக்கு வந்த பின்னும் அதனுடன் ஒட்டிக் கொள்ள மனசின்றி இன்னும் மிச்சமிருக்கும் ஊரின் ஞாபகங்களுக்குள் மட்டும் ஊறிக் கிடந்தால் வாழ்வு முன்னோக்கி நகராது. வாழ வந்த இடத்திலும் ஒரு நல்ல வாழ்வியல் இருக்கும், நல்ல மனிதர்கள் இருப்பர்,  அழகுற ரசிக்க இயற்கை இருக்கும் என்பது என் எண்ணம்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை பிடித்து இருக்கின்றது. ஆயினும் அதன் பொருள் மீது எனக்கு பிரியம் இல்லை.

 

புதிய இடம் ஒன்றுக்கு வந்த பின்னும் அதனுடன் ஒட்டிக் கொள்ள மனசின்றி இன்னும் மிச்சமிருக்கும் ஊரின் ஞாபகங்களுக்குள் மட்டும் ஊறிக் கிடந்தால் வாழ்வு முன்னோக்கி நகராது. வாழ வந்த இடத்திலும் ஒரு நல்ல வாழ்வியல் இருக்கும், நல்ல மனிதர்கள் இருப்பர்,  அழகுற ரசிக்க இயற்கை இருக்கும் என்பது என் எண்ணம்.

 

நிழலி நீங்கள் சொல்வதும் சரி தான்.

ஆனாலும் எந்த ஊரில் வாழ்ந்தாலும் எங்கள் சொந்த ஊரில் வாழ்வது போன்ற மகிழ்ச்சி வந்த ஊரில் கிடைக்காது.

கனடாவில் பெய்யும் பனிமழையில் கிடைக்கும் சுகத்தைவிட

ஊரில் அதிகாலையில் வீசும் பனிக்காற்றின் சில்லென்ற அணைப்பில் கிடைக்கும் சுகம் சுகமல்லவா

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரின் உள்ளக்கிடக்கைகளும் ஆசைகளும் வெவ்வேறானவையே நிழலி 

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்திலாவது தன் ஆதங்கத்தை கொட்டி தீர்க்கிறார் தீர்க்கட்டுமே..இலை,குழை,கிடுகு என்றதும் மனம் தன்ட பாட்டுக்கே ஊருக்குத் தானே போகிறது இங்கயா நிக்கிறது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.