Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீண்டகாலத்துக்குப் பின்னர் நிரம்பியது இரணைமடுக்குளம்! – இன்று வான்கதவுகள் திறப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீண்டகாலத்துக்குப் பின்னர் நிரம்பியது இரணைமடுக்குளம்! – இன்று வான்கதவுகள் திறப்பு. photo.png

[Monday 2014-12-22 09:00]
iranamadu-200-news.jpg

தொடர்ந்து பெய்து வரும் மழையை அடுத்து கிளிநொச்சி, இரணைமடு குளத்தின் நீர்மட்டம் நேற்று 31 அடிவரை உயர்ந்துள்ளது. இந்தநிலையில் இன்று காலை குளத்தின் வான்கதவுகள் திறக்கப்படும் என கிளிநொச்சி நீர்ப்பாசன திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரலாற்றில் இல்லாத அளவு கொடும் வரட்சியை மக்கள் சந்தித்து மழைக்காக ஏங்கியிருந்தபோது பருவமழை பெய்து இரணைமடுக்குளம் நீண்ட காலத்துக்குப் வான்கதவுகள் திறக்கும் நிலை இம்முறை ஏற்பட்டுள்ளது.

  

இன்று வான்கதவுகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நேற்று அங்கு சென்று குளத்தின் நீர்பேணல் நிலைமைகள் அணைகளின் நிலைமைகளை அங்கு இரவுபகல் பணியில் இருந்து கொண்டிருக்கும் கிளிநொச்சி நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

நூற்றாண்டு பெருமைவாய்ந்த அணைகளை கொண்டுள்ள இரணைமடுக் குளத்தில் அணைகளில் சில பகுதிகளில் நீர் கசிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் அதை பொறியியலாளர்கள் சீர்செய்து அவதானித்து வருகின்றார்கள்.

 

iranaimadu-221214-seithy%20%281%29.JPG

 

iranaimadu-221214-seithy%20%282%29.JPG

 

iranaimadu-221214-seithy%20%283%29.JPG

 

iranaimadu-221214-seithy%20%284%29.JPG

http://www.seithy.com/breifNews.php?newsID=123139&category=TamilNews&language=tamil

இரணைமடுக்குளம் நிரம்பியதால் வான்கதவுகள் திறப்பு 

 

6926_content_1.jpg

 

 

6926_content_5.jpg

 

 

6926_content_5.jpg

 

 

6926_content_8.jpg

 

 

6926_content_11.jpg

 

 

6926_content_10.jpg

 

பெய்துவரும் கடும்மழை காரணமாக இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் நாளுக்குநாள் உயர்ந்துவந்த நிலையில் திங்கட்கிழமை  காலை 31அடி 4 அங்குலத்தை எட்டியது.
 
இதையடுத்து அணைக்கட்டுகளின் பாதுகாப்புக்கருதி, குளத்தின் 11 வான்கதவுகளும் காலை 8.30 மணியளவில் பகுதியளவில் திறக்கப்பட்டுள்ளன. நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளினால் இரணைமடு கனகாம்பிகை ஆலயத்தில் விசேட ப+ஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் சம்பிரதாய ப+ர்வமாக வான்கதவுகளைத் திறந்து வைத்தார்கள்.
 
இதையடுத்து இரணைமடுக்குளத்தில் இருந்து பேரிரைச்சலோடு நீர் வெளியேறிவருகிறது. இந்த அரிய காட்சியைக் காண்பதற்காகக் கொட்டும் மழையிலும் ஏராளமானோர் அங்கு கூடி நின்றதைக் காணமுடிந்தது.
 
இரணைமடுக்குளத்தில் இருந்து அதிவேகமாக நீர் வெளியேறும்போது அனர்த்தங்கள் நிகழலாம் என்பதைக் கருத்தில் கொண்டே, வான்கதவுகள் பகுதியளவில் திறக்கப்பட்டுள்ளன. இதனால், குளத்தில் இருந்து வெளியேறும் நீரின் அளவு குளத்துக்கு வந்துசேரும் நீரின் அளவைவிடக் குறைவாகக் காணப்படுகிறது.
 
நண்பகல் நிலவரப்படி குளத்தில் இருந்து வெளியேறும் நீரின் கனவளவு செக்கனுக்கு 2,265.29 கன அடிகளாக இருக்க, குளத்துக்கான நீர்வரத்து செக்கனுக்கு 5920.29 கன அடிகளாக உள்ளது. இதனால்,காலையில் நீர் திறந்துவிடப்பட்டபோது இருந்த குளத்தின் நீர்மட்டத்தை விட நீர்மட்டம் மேலும் உயர்ந்து, தற்போது 32 அடி உயரத்தைகத் தாண்டியுள்ளது. 
 
மேலும் கடும் மழை பொழிந்து நீர்வரத்து அதிகரிக்குமாயின் வான்கதவுகள் முழமையாகத் திறக்கப்படவேண்டிய நிலை உருவாகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. வான்கதவுகள் முழுமையாகத் திறக்கப்பட நேர்ந்தால், நீர்ப்போக்குப் பாதையில் குடியிருப்புகளை அமைத்துள்ளவர்கள் தற்காலிகமாக இடம் பெயரவேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இத்தகையவர்கள் தங்குவதற்காக அருகில் உள்ள பாடசாலைகளில்; ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்
அப்பிடியே ஒரு குழாய் அடித்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விட ஏலாதா ?? 
கங்கா காவேரி இந்த ஜென்மத்திற்கு வராது.
  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல யாழ்ப்பாணத்துக்கு தண்ணி கேட்டாக்களுக்கு குடுங்கப்பா,பிறகு கோடை காலத்தில வந்து நிண்டு சண்டை பிடிப்பாங்க

  • கருத்துக்கள உறவுகள்

 

இரணைமடுக்குளம் நிரம்பியதால் வான்கதவுகள் திறப்பு

 

 

6926_content_5.jpg

 

 

6926_content_5.jpg

......

 

இதையடுத்து இரணைமடுக்குளத்தில் இருந்து பேரிரைச்சலோடு நீர் வெளியேறிவருகிறது. இந்த அரிய காட்சியைக் காண்பதற்காகக் கொட்டும் மழையிலும் ஏராளமானோர் அங்கு கூடி நின்றதைக் காணமுடிந்தது.

....

 

 

 

பார்ப்பதற்கும், செய்தியை கேட்பதற்கும் மனதிற்கு குளிர்ச்சியாக இருக்கிறது.. :) 

வருண பகவானிற்கு நன்றி.

 

  • கருத்துக்கள உறவுகள்

2003 சென்றிருந்தபோது தண்ணீர் இல்லாத அணைக்கட்டின் கீழே சென்று படம் எடுத்தது. இப்ப பார்க்கப் பயமாக் கிடக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.