Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சர் பதவிக்காக இழுபறி! - கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் இன்று இறுதி முடிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சர் பதவிக்காக இழுபறி! - கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் இன்று இறுதி முடிவு 

[sunday 2015-01-18 09:00]
Sampanthan-hakeem-200-news.jpg

கிழக்கு மாகாணத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பது சம்பந்தமான இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உயர் மட்டக்குழுவும் முஸ்லிம் காங்கிரஸின் உயர் மட்டக்குழுவும் இன்று கூடவுள்ளன. கொழும்பில் கூட்டப்படவுள்ள இரு கட்சிக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரு கட்சிகளுக்கிடையே உடன்பாடு காணப்படவில்லையாயின் கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுமென இரு கட்சிகளின் பெயர் குறிப்பிட விரும்பாத தலைவர்கள் தெரிவித்தார்கள்.

அண்மையில் ஏற்பட்ட தேசிய அரசியல் மாற்றம் காரணமாக கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சிக்கிருந்த பலம் குறைந்து எதிர்க்கட்சிகள் பலம் கொண்டிருந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐ.தே. கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி எடுக்கலாமென்ற அபிப்பிராயம் பொதுமக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

இதேவேளை கடந்த இரு நாட்களுக்கு முன் மு. காங்கிரஸ் மற்றும் த.தே. கூட்டமைப்பின் உயர் குழுவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு காணப்படவில்லையென்று தெரிவிக்கப்படுகிறது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக இன்று கொழும்பில் இரு கட்சிகளைச் சேர்ந்த உயர் மட்டக்குழுவினர் கலந்துரையாடி ஒரு இறுதித் தீர்மானத்துக்கு வரவுள்ளனர்.

முதலமைச்சர் பதவி முஸ்லிம் உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டுமென்பதில் முஸ்லிம் காங்கிரஸ் அழுங்குப் பிடியை பின்பற்றி வருவதாகவும் இதேவேளை ஜனநாயக முறையின்படி தற்போது கிழக்கில் அதிக அங்கத்தவர்களைக் கொண்ட கட்சியாக கூட்டமைப்பு காணப்படுவதால் முதலமைச்சர் பதவியை தாமே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற கருத்து இக்கட்சியின் ஆதரவாளர் மத்தியில் பரவலாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.seithy.com/breifNews.php?newsID=124846&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

"வந்தால்... சுல்தான், போனால் பக்கிரி."
கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே... இடமில்லை.
அதற்கு... மு.கா. ஒத்து வராவிட்டால்... புதிய தேர்தல்தான்.
அதில்... இன்னும் எமது பலத்தை நிரூபிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த இல்லாத நிலையில், பிள்ளையான், இனியபாரதி, அருண் தம்பிமுத்து போன்ற பித்தலாட்டக்காரர் ஆட்டம் இராது.

கூட்டமைப்பு தேர்தலில் பெருவாரித்தமிழ் வோட்டுக்களை அள்ளும். வேணுமெண்டால் யுஎன்பி யிடம் கூட்டு வைக்கலாம்.

கிழக்கில் சம்பந்தனை தவிர ஒரு கனமான தலைவர் இல்லை.

குறிப்பாக மட்டு அம்பாறையில்.

மாமனிதர் சந்திரநேருவின் மகன் சந்திரகாந்தனை அவ்விடத்து கூட்டமைப்பு வளர்த்தெடுக்க வேண்டும்.

இந்த தேர்தலில் சந்திரகாந்தன் போட்டியிடுவது அவசியம். அவரும் தீவிர தமிழ் தேசிய அரசியலை கைவிட்டு கட்சி முடிவுக்கு கட்டுப்பட்டு நடக்கோணும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய   அரசியலை கைவிடுறவை...  எதுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில்  ஒட்டி   இருக்கனும். கிழக்கி்ன்    செல்வாக்குள்ள தலைவர் சம்பந்தன்  தலைமையில் தமிழரசுக் கட்சியில்  போட்டி   இட்டு தங்கட பவரை காட்டலாமே. அப்புறம் சங்கரி போல நீலிக்கண்ணீர் வடிக்கும் நிலையை தமிழ் மக்கள் வழங்கினால்.. சம்பந்தன்    குறூப் தெருப் பிச்சை எடுக்கனும். இல்ல வெளிநாட்டுக்கு பிள்ளைகளிடம்     அல்லது இந்தியாவில் றோவிடம் சரணடையனும். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய அரசியல் வேறு, தீவிர தமிழ் தேசிய அரசியல் வேறு. முதலாவது கூட்டமைப்புச் செய்வது. ரெண்டாவது கஜன் கம்பேனி செய்வது.

உண்மையில் கஜன் கம்பேனி ஒரு யாழ்மாவட்ட கட்சி. யாழிலும் கிளியிலும் இவர்களுக்கு டீ ஆத்த வெறும் கடையாவது இருக்கு. முல்லை, வவுனியா, மன்னார், திருமலை, மட்டு அம்பாறையில் இவர்களுக்கு ஒரு போஸ்டர் ஒட்டக் கூட ஆளில்லை.

பெயர் மட்டும் தேசிய முண்ணணி என்று வைத்தால் போதாது.

குறைந்த பட்சம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு டீ கடை வைக்கும் அளவுக்காவது மக்களாத்கரவு இருக்கோணும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி.. வடக்குக் கிழக்கில்  முதல் தேர்தலை சந்தித்தது.  கட்சி ஆரம்பித்து சில மாதங்களில் அது கடந்த நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தது.

 

மக்கள் நலன் சார் நிகழ்வுகள்.. போராட்டங்களி்ல்   அது கூட்டமைப்புடன்  தோழமை பாராட்ட மறப்பதில்லை.

 

ஆனால் சம்பந்தன்.. தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன்  ஒரு போதும் கலந்து பேசுவதில்லை. மக்கள் நலன்களை தீர்மானிப்பதில்லை. தேசிய தலைவர் கூட்டமைப்பை கொண்டு நேச சக்திகளை மக்கள் நலன் நோக்கி உருவாக்க  உழைத்தார். பல கொள்கை முரணானவர்களையும்    ஒரே குடையில் கொண்டு வந்தார்.  இறுதிவரை கூட்டமைப்புக்குள் வர மாட்டம்  என்று நின்ற சித்தார்தன்.. பல தோல்விகளுக்கு பின்னர்  முள்ளிவாய்க்கால்  அவலத்தில் மக்களை வதைத்துவிட்டு... கூட்டமைப்புக்குள் வர சம்பந்தன்   அனுமதித்தார்.

 

வெளிப்படையாக.. தமிழ் தேசியம்.. சுயநிர்ணயம்... தன்னாட்சி பேசிய கட்சிகளை உறுப்பினர்களை தூக்கி வெளிய போட்டு.. தேசிய தலைவரால் நிராகரிப்பட்ட சுமந்திரனை பின்கதவால்  உள்ளவிட்டு.. தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரின் கீழ் தன் சொந்த  தர்ப்பாரை நடத்துகிறார் சம்பந்தன். இதற்கு நிச்சயம்   மக்கள்   ஒரு தீர்க்கமான முடிவை வரும் தேர்தல்களில் எழுத வாய்ப்புள்ளது. மகிந்தவை மக்கள் தோற்கடித்துள்ள நிலையில்.. எனி மக்கள்    அடுத்த மாற்றம் நோக்கி சிந்திக்க ஆரம்பிப்பார்கள். இதனை தமிழ் தேசி்ய மக்கள் முன்னணி பயன்படுத்திக் கொள்வது நல்லம். :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரநாதன், பத்மினி, கஜன், கஜேந்திரகுமார் என்று முன்னாள் யாழ் மாவட்ட எம்பிகள் சேர்ந்து, யாழ் மாவட்ட அரசியலை மையமாக வைத்து, ஒரு முரண்டு பிடிக்கும் தீவிர தமிழ் தேடிய அரசியல் அமைப்பாக அமைத்ததுதாம் ததேமமு.

இதில் பெயர் சொல்லும் அளவுக்கு கூட யாழுக்கு வெளியே இருந்து ஒருவரும் இல்லை.

இவர்கள் தமிழ் தேசிய மக்கள் முண்ணணி இல்லை, யாழ் மாவட்ட மக்கள் முண்ணணி.

மக்கள் கூட்டமைப்பை பிந்தொடரவில்லை.

கூட்டமைப்புத்தான் மக்களை அவர் ஜனநாயக அபிலாசைகளை பிந்த்ஹொடர்கிறது.

இது தொடரும் வரை யாராலும் கூட்டமைப்பை அசைக்க முடியாது.

என்று கூட்டமைப்பு மக்கள் வகுக்கும் பாதையிலிருந்து விலகுகிறதோ அன்றுதான் அவர்களின் அழிவு தொடங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தன் பாதையில் இருந்து விலகுமானால் தமிழ்மக்கள் வேறு ஒரு தலைமையைத் தேட வேண்டி வரும்.அது ததேமுன்னணியாகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தன் பாதையில் இருந்து விலகுமானால் தமிழ்மக்கள் வேறு ஒரு தலைமையைத் தேட வேண்டி வரும்.அது ததேமுன்னணியாகவும் இருக்கலாம்.

கட்டாயம்! இருக்கலாம் இல்லை அது தமிழ்த் தேசிய (கஜேந்திரன்ஸ்) முன்னணிதான்!
  • கருத்துக்கள உறவுகள்

அல்லது அது வேறு ஒரு அமைபாகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அல்லது அது வேறு ஒரு அமைபாகவும் இருக்கலாம்.

 

 

  டக்கு மாமாவோ? 

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பக்கிக்கு இனி சன்சே இல்லை எண்டே படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனை காட்டிலும் பிள்ளையான்  என்கிற சந்திரகாந்தன் கெட்டிக்காரன் போல. இந்த  இழுபறி இல்லாமலே ஒரு தவணையை முதலமைச்சர் பதவியில் கழித்திருக்கிறார். :lol::D

 

இதில.. தமிழ் தேசி்ய விடுதலை முன்னணிக்கு வகுப்பெடுக்குது ஒரு கூட்டம். அவர்கள் கிழக்கில் சம்பந்தனை எதிர்த்து நிற்கக் கூட தயங்கவில்லை..!!  அதுதான்  மக்களை பாதுகாக்கும்  ஜனநாயகம். மக்களை காட்டிக்கொடுத்து சோரம் போவதற்கு பெயர் ஜனநாயகம் கிடையா. சம்பந்தன்    இன்று முன்னெடுக்கும் இந்திய சிங்களம் சார்  அரசியல் சரணாகதி அரசியலாகும். அதனை அல்ல தமிழ் மக்கள்   கூட்டமைப்பிடம்   இருந்து எதிர்பார்ப்பது. :):icon_idea:

Edited by nedukkalapoovan

தமிழ் தேசிய   அரசியலை கைவிடுறவை...  எதுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில்  ஒட்டி   இருக்கனும். கிழக்கி்ன்    செல்வாக்குள்ள தலைவர் சம்பந்தன்  தலைமையில் தமிழரசுக் கட்சியில்  போட்டி   இட்டு தங்கட பவரை காட்டலாமே. அப்புறம் சங்கரி போல நீலிக்கண்ணீர் வடிக்கும் நிலையை தமிழ் மக்கள் வழங்கினால்.. சம்பந்தன்    குறூப் தெருப் பிச்சை எடுக்கனும். இல்ல வெளிநாட்டுக்கு பிள்ளைகளிடம்     அல்லது இந்தியாவில் றோவிடம் சரணடையனும். :lol::icon_idea:

என்ன இப்படிச் சொல்லுகிறீர்கள் வரதராஜப் பெருமாளை நன்றாகத்தான் வைத்திருகின்றார்கள்.அதே போலத்தான் பரந்தன் ராஜன்,குட்லக் நாதன் போன்றவர்கள்.............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.