Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாமியார் வீட்டில் அடைக்கலம் தேடியுள்ள கோத்தா – ‘சதித்திட்டம்’ குறித்து விபரிக்கிறார்

Featured Replies

மாமியார் வீட்டில் அடைக்கலம் தேடியுள்ள கோத்தா – ‘சதித்திட்டம்’ குறித்து விபரிக்கிறார் JAN 22, 2015 | 0:49by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள்

Mahinda-Gota-300x198.jpgஅலரி மாளிகையை எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் முற்றுகையிடவுள்ளதாக கிடைத்த புலனாய்வு அறிக்கையை அடுத்தே,அதிபர் தேர்தல் நாளன்று இரவு தாம், அலரி மாளிகைக்குச் சென்றதாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த 9ம் நாள் அதிகாலை அலரிமாளிகையில் சதிப்புரட்சிக்குத் திட்டமிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“தேர்தல் முடிவுகளையடுத்து, காலையில் அலரி மாளிகையை முற்றுகையிட எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த புலனாய்வு அறிக்கையை அடுத்தே அதிகாலையில் அலரி மாளிகைக்குச் சென்றேன்.

அத்தகைய சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டது. சட்டமா அதிபரின் ஆலோசனையும் பெறப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் தொடர்பு கொள்ளப்பட்டது. தாம் உடனடியாக அலரி மாளிகைக்கு வருவதாக அவர் கூறினார்.

அவர் அங்கு வந்ததும், சிறிலங்கா அதிபருடன் கலந்துரையாடினார், அதையடுத்து அலரி மாளிகையை விட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச வெளியேறுவதாக முடிவு செய்யப்பட்டது.

அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஏனையவர்களினது பாதுகாப்புக்கு ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றார்.

இது தான் தேர்தல் இறுதி முடிவு வெளியாவதற்கு முன்னர் நடந்தது.

நாம் சதிப்புரட்சிக்குத் திட்டமிட்டிருந்தால் எதற்காக, சட்டமா அதிபருடன் கலந்தாலோசிக்க வேண்டும்?

அவர் அரசாங்கத்துக்கு சட்ட ஆலோசனைகளை வழங்குபவர்.” என்றும் தெரிவித்துள்ளார்.

கல்கிசையில் உள்ள கோத்தாபய ராஜபக்சவின் வீட்டில் சுறாக்கள் வளர்க்கப்படுவதாகவும், அதற்காக நாளாந்தம் இரண்டு நீர்த்தாங்கிகளில் கடல் நீர் கொண்டு வரப்படுகிறது என்றும், அயலில் உள்ள நாய்கள் காணாமற்போவதாகவும், அவை சுறாக்களுக்கு இரையாக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ள கோத்தாபய ராஜபக்ச-

அந்த வீடு மீன் ஏற்றுமதியாளருக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும்.

எனக்கு கல்கிசையிலோ சிறிலங்காவில் வேறெங்குமோ வீடுகள் இல்லை.

நான் இப்போது எனது மாமியார் வீட்டில் தான் வசிக்கிறேன். அந்த நிலம் எனது மனைவிக்கு சீதனமாக வழங்கப்பட்டது.

இராணுவத்தில் இருந்த போது அந்தக் காணியில் நாம் ஒரு வீட்டைக் கட்டியிருந்தோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/01/22/news/3088

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்தாள் சரியான அப்பிராணியாய் இருக்கு வீணாய் பாவத்த தேடுறம் :unsure: போல கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவச் சூழ்ச்சித் திட்டம் குறித்த குற்றச்சாட்டு அடிப்படையற்றது – கோதபாய ராஜபக்ஸ

 

இராணுவ சூழ்ச்சித் திட்டம் குறித்த குற்றச்சாட்டு அடிப்படையற்றது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சட்ட மா அதிபர் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டு சூழ்ச்சித் திட்டம் மேற்கொள்ள எத்தனிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமைகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து பேசுவதற்காகவே இவ்வாறு சட்ட மா அதிபர் அழைக்கப்பட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமா இல்லையா என்பது குறித்தே பேசப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையை முற்றுகையிடப் போவதாக எதிர்க்கட்சியினர் பகிரங்கமாக அறிவித்ததனைத் தொடர்ந்து இவ்வாறான ஓர் பாதுகாப்பு ஏற்பாட்டை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலின் பின்னர் சட்டம் ஒழுங்கு நிலைமகளை பாதுகாக்க வேண்டிய காரணத்தினால் இவ்வாறு சட்ட மா அதிபருடன் பேசப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். இராணுவ சூழ்ச்சித் திட்டமொன்றை மேற்கொள்ள ஏன் சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியையும் அவரது ஆதரவாளர்களையும் இழிவுபடுத்தும் நோக்கில் இவ்வாறான பிரச்சாரங்கள் முன்னெடுக்க்பபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னதாகவே ஜனாதிபதி மஹிந்தவும் அவரது உத்தியோகத்தர்களும் அலரி மாளிகையை விட்டு வெளியேறிச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

  

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115798/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

மாமியார் வீட்டில் அடைக்கலம் தேடியுள்ள கோத்தா

 

அதிக நாட்கள் மாமியார் வீட்டில் தங்கினால் "வர வர மாமி கழுதை போல ஆனாள்" பழமொழி தமிழில் உண்டு.. சிங்களத்தில் என்ன ரெல் மீ




 

  • கருத்துக்கள உறவுகள்

அதிக நாட்கள் மாமியார் வீட்டில் தங்கினால் "வர வர மாமி கழுதை போல ஆனாள்" பழமொழி தமிழில் உண்டு.. சிங்களத்தில் என்ன ரெல் மீ

 

"එන්න ආන්ටි කෙනෙකුම එය කොටළුවා වගේ බවට පත් විය" :lol: 

 

நன்றி கூகிள். :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவச் சூழ்ச்சித் திட்டம் குறித்த குற்றச்சாட்டு அடிப்படையற்றது – கோதபாய ராஜபக்ஸ

 

இராணுவ சூழ்ச்சித் திட்டம் குறித்த குற்றச்சாட்டு அடிப்படையற்றது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சட்ட மா அதிபர் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டு சூழ்ச்சித் திட்டம் மேற்கொள்ள எத்தனிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமைகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து பேசுவதற்காகவே இவ்வாறு சட்ட மா அதிபர் அழைக்கப்பட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமா இல்லையா என்பது குறித்தே பேசப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையை முற்றுகையிடப் போவதாக எதிர்க்கட்சியினர் பகிரங்கமாக அறிவித்ததனைத் தொடர்ந்து இவ்வாறான ஓர் பாதுகாப்பு ஏற்பாட்டை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலின் பின்னர் சட்டம் ஒழுங்கு நிலைமகளை பாதுகாக்க வேண்டிய காரணத்தினால் இவ்வாறு சட்ட மா அதிபருடன் பேசப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். இராணுவ சூழ்ச்சித் திட்டமொன்றை மேற்கொள்ள ஏன் சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியையும் அவரது ஆதரவாளர்களையும் இழிவுபடுத்தும் நோக்கில் இவ்வாறான பிரச்சாரங்கள் முன்னெடுக்க்பபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னதாகவே ஜனாதிபதி மஹிந்தவும் அவரது உத்தியோகத்தர்களும் அலரி மாளிகையை விட்டு வெளியேறிச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

என்னப்பா

மாற்றம் என்னாச்சு.....??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா

மாற்றம் என்னாச்சு.....??

Typical நம்ம மீடியா.. நீங்கள்தான் அனுசரித்து போக வேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எண்டாலும் மாமி வீட்டிலை தங்கியிருக்க குடுத்துவைக்கோணும்.... :wub:  :wub:  :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.