Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாளவாடி கர்நாடகாவுக்கே சொந்தம்” – புது பூதத்தைக் கிளப்பும் வாட்டாள் நாகராஜ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
தாளவாடி கர்நாடகாவுக்கே சொந்தம்” – புது பூதத்தைக் கிளப்பும் வாட்டாள் நாகராஜ்

 
 
 
ஈரோடு மாவட்டம், தாளவாடியை கர்நாடகாவுடன் இணக்க வேண்டும் என்று தமிழக எல்லையில் கன்னட சலுவளிக் கட்சியின் மாநிலத் தலைவர் வாட்டாள் நாகராஜ் போராட்டம் நடத்தினார். அககட்சியின் மாநிலத் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட அக்கட்சியின் தொண்டர்கள் கர்நாடக - தமிழக எல்லையான புளிஞ்சூர் சோதனைச் சாவடிக்கு புதன்கிழமை வந்தனர். அவர்கள் சத்தி - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
 
 
இதுகுறித்து அக்கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, " தமிழகத்தில் கன்னட மொழி பேசுவோர் 15 லட்சம் பேர் உள்ளனர். கர்நாடக எல்லையான சாம்ராஜ் நகரை ஒட்டியுள்ள தமிழக எல்லையிலும், தாளவாடியிலும் பல ஆண்டுகளாக கன்னட ஆரம்பப் பள்ளிகள் செயல்பட்டு வந்தன. ஆனால், அந்தப் பள்ளிகளை தமிழக அரசு மூடிவிட்டது. இதனால் அங்கு பணியாற்றிய கன்னட மொழி ஆசிரியர்கள் வேலை இழந்துள்ளனர். தற்போது, மாணவர்கள் கன்னடத்துடன் தமிழையும் ஒரு பாடமாக எடுத்து படிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, கன்னடப் பள்ளியில் தமிழை நீக்கவேண்டும். தாளவாடியை கர்நாடகத்துடன் இணைக்க வேண்டும். மேலும், கன்னட மொழி பேசும் மக்களுக்கு தமிழக அரசின் சலுகைகள் முழுமையாக வழங்கப்படவேண்டும். கன்னடர்களுக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்காவிட்டால் கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வழிக் கல்விப் பள்ளிகளை மூடக்கோரி மாநில அளவிலான போராட்டம் நடத்தப்படும் என்றார். இந்த கோரிக்கைகளுடன் தமிழக எல்லையில் நுழைய முயன்ற வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட அக்கட்சியினரை கர்நாடக காவல் துறையினர் கைது செய்தனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karnataka-politician-stopped-at-check-post-219406.html
  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடகம் என்றால் பழமைவாதிகள் என்று அறிந்திருக்கிறேன். நாகரீகமற்ற நடை, உடை, பாவனையில் இருப்போரை என்ன கர்நாடகமாய் இருக்கிறாய் என்று சொல்வதுண்டு. அந்தவகையில் கர்நாடகர்களைப் பொறுத்தவரையில் மன்னராட்சி காலத்தில் உள்ளதுபோல் ஆட்சிசெய்யும் அரசனுக்கு அன்றி அரசிக்கு, ஆளப்படும் நிலம் சொந்தமாகும். தற்பொழுது தமிழ்நாட்டை ஆழ்பவர் கர்நாடகி. ஆகவே தமிழ்நாடே கர்நாடகாவிற்குச் சொந்தமாகிறது. அவர்கள் போராட்டம் நியாயமானதே. :D  :lol:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

.... கர்நாடகர்களைப் பொறுத்தவரையில் மன்னராட்சி காலத்தில் உள்ளதுபோல் ஆட்சிசெய்யும் அரசனுக்கு அன்றி அரசிக்கு, ஆளப்படும் நிலம் சொந்தமாகும். தற்பொழுது தமிழ்நாட்டை ஆழ்பவர் கர்நாடகி. ஆகவே தமிழ்நாடே கர்நாடகாவிற்குச் சொந்தமாகிறது. அவர்கள் போராட்டம் நியாயமானதே. :D  :lol:  :icon_mrgreen:

 

vil-ddispute.gif ஆட்சேபிக்கிறேன்! :wub:

 

 

நடப்பது, பெரிய குளத்தாரின் 'மெளன' நல்லாட்சி(?) :)

 

  • கருத்துக்கள உறவுகள்

vil-ddispute.gif ஆட்சேபிக்கிறேன்! :wub:

 

 

நடப்பது, பெரிய குளத்தாரின் 'மெளன' நல்லாட்சி(?) :)

 

 

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே கண்ணா.........  :(

  • கருத்துக்கள உறவுகள்

தாளவாடி கர்நாடகாவுக்கே சொந்தம்” – புது பூதத்தைக் கிளப்பும் வாட்டாள் நாகராஜ்

 

 

இப்படியே

ஒவ்வொரு கிராமமாக பின் வாங்கத்தொடங்கினால்

தமிழகத்துக்கு

இன்னொரு முள்ளிவாய்க்கால் நிச்சயம்............ :(  :(  :( 

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்று தமிழர் தாயகமான கோலார் தங்க வயலும்,(KGF) குடகு மலையும் தமிழருக்கே சொந்தம் என்ற போராட்டத்தை மறுபடியும் ஆரம்பிக்க வேண்டியதுதான். :)

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்று தமிழர் தாயகமான கோலார் தங்க வயலும்,(KGF) குடகு மலையும் தமிழருக்கே சொந்தம் என்ற போராட்டத்தை மறுபடியும் ஆரம்பிக்க வேண்டியதுதான். :)

 

குடகு மலையா ??? அடப் பாவிகளா, அது இன்னும் எங்களது ஊரென்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறேன். கரகாட்டக்காரனில் ராமராஜனும், கனகாவும் பாடிய "குடகுமலைக் காட்டில் வரும் பாட்டுக் கேட்குதா, என் பைங்கிளி ?" இன்னும் நினைவில் பதிந்திருக்க அதுக்குள்ளாற வித்துப் போட்டிங்களா??? :o

 

நல்லா இருப்பீங்க ! :D

  • கருத்துக்கள உறவுகள்

குடகு மலையா ??? அடப் பாவிகளா, அது இன்னும் எங்களது ஊரென்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

 

குடகு மலையில் தான் காவிரி ஆறு உற்பத்தியாகிறது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது குடகு மலைப் பகுதியில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தார்கள் அன்றைய சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது...

 

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மாநிலத்தின் நில தொடர்ச்சி பேண வேண்டும் என்பதற்காக, மலபாரும், குடகும்(கூர்க்) முறையே கேரளாவிற்கும், கர்நாடகத்திற்கும் தாரை வார்க்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம், தமிழர்களின் போராட்டம் காரணமாக அப்பகுதி தமிழ் நாட்டுடன் இணைந்தது.

 

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன்,

 

உங்களைப் பார்க்கும்போது நான் பெருமையும் அதேவேளை சற்றுப் பொறாமையும் படுவதுண்டு. ஏனென்று கேட்கிறீர்களா? இன்றுவரை தமிழகம் தமிழர்கள் எல்லோரும் தலை நிமிர்ந்து வாழக்கூடிய இடமாகவும், எந்த இனத்தினது ஆக்கிரமிப்பு இல்லாமலும், எங்கும் தமிழ் மணம் கமிழும் தேசமகாவும் இருப்பதால்த்தான். எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் நாம் உவ்விடமிருந்து இங்கு வந்திருந்தபோதும், இன்றுவரை நீங்களும் நாங்களும் பேசும் எமது தாய்மொழி ஒரு சிறு வேறுபாடோ, அல்லது இலக்கணப் பிழையோ இல்லாமல் அப்படியே பேசப்படுவதுகண்டு பலமுறை புழகாங்கிதப்பட்டிருக்கிறேன். மதுரை, சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, திச்சிராப்பள்ளி என்று தமிழ் மணம் கமழும் ஊர்பெயர்களைச் சொல்லி இது எங்களின் மூத்த பூமி என்று இன்றும் பெருமைப்படுகிறேன். எங்களைப்போல் அல்லாமல் தமிழகத்து உறவுகள் கொடுத்துவைத்தவர்கள் என்று நான் நினைக்கிறேன்.

 

நாங்களி எங்களுக்குள்ளும், எதிரியாலும் அழிக்கப்பட்டு உடைந்து ஒடுங்கிப்போய் முழுநேர அந்நிய ஆக்கிரமிப்பிற்குள் வாழ்கிறோம். இனி ஈழத்தில் தமிழ் தழைத்தோங்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லாமல் போய்விட்டது.

 

நீங்களாவது தமிழை தமிழகத்தில் உயிர்ப்புடன் வைத்திருங்கள். ஏனென்றால் எங்களுக்கு எதுவுமே இல்லையென்கிறபோது ஆறுதலாக நாங்கள் ஏங்கிப் பார்க்கும் இடம் தமிழகமன்றி வேறொன்றாக இருக்கமுடியாது !

 

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன்,

 

உங்களைப் பார்க்கும்போது நான் பெருமையும் அதேவேளை சற்றுப் பொறாமையும் படுவதுண்டு. ஏனென்று கேட்கிறீர்களா? இன்றுவரை தமிழகம் தமிழர்கள் எல்லோரும் தலை நிமிர்ந்து வாழக்கூடிய இடமாகவும், எந்த இனத்தினது ஆக்கிரமிப்பு இல்லாமலும், எங்கும் தமிழ் மணம் கமிழும் தேசமகாவும் இருப்பதால்த்தான். எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் நாம் உவ்விடமிருந்து இங்கு வந்திருந்தபோதும், இன்றுவரை நீங்களும் நாங்களும் பேசும் எமது தாய்மொழி ஒரு சிறு வேறுபாடோ, அல்லது இலக்கணப் பிழையோ இல்லாமல் அப்படியே பேசப்படுவதுகண்டு பலமுறை புழகாங்கிதப்பட்டிருக்கிறேன். மதுரை, சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, திச்சிராப்பள்ளி என்று தமிழ் மணம் கமழும் ஊர்பெயர்களைச் சொல்லி இது எங்களின் மூத்த பூமி என்று இன்றும் பெருமைப்படுகிறேன். எங்களைப்போல் அல்லாமல் தமிழகத்து உறவுகள் கொடுத்துவைத்தவர்கள் என்று நான் நினைக்கிறேன்.

 

நாங்களி எங்களுக்குள்ளும், எதிரியாலும் அழிக்கப்பட்டு உடைந்து ஒடுங்கிப்போய் முழுநேர அந்நிய ஆக்கிரமிப்பிற்குள் வாழ்கிறோம். இனி ஈழத்தில் தமிழ் தழைத்தோங்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லாமல் போய்விட்டது.

 

நீங்களாவது தமிழை தமிழகத்தில் உயிர்ப்புடன் வைத்திருங்கள். ஏனென்றால் எங்களுக்கு எதுவுமே இல்லையென்கிறபோது ஆறுதலாக நாங்கள் ஏங்கிப் பார்க்கும் இடம் தமிழகமன்றி வேறொன்றாக இருக்கமுடியாது !

 

நன்றி ரகுநாதன்.

தமிழ் மொழி பயன்பாட்டைப் பொறுத்தவரை நான் ஈழத்தமிழர்களை பார்த்தே பெருமையாக, பொறாமையாக நினைப்பதுண்டு..எவ்வளவு சரளமாக சாதாரண மனிதர்களும் தமிழை கலப்பில்லாமல் பேசுகிறார்களென வியப்பதுண்டு.

 

நாங்கள் பேசுவது 'பண்ணு' தமிழ். நீங்கள் பேசுவதோ பைந்தமிழ்!

 

எங்களால் கலப்படப்பட்டு களை இழந்த தமிழை, நீங்களாவது நெஞ்சில் இறுத்தி இன்னமும் தூய தமிழை உயிர்ப்போடு வைத்திருக்கிறீர்களே என பெருமைப்படுங்கள்..

 

தற்பொழுது அரசியல் கிரகணங்களால் இருள் சூழப்பட்டுள்ள ஈழ நிலம், மீண்டும் தழைக்குமென நம்புங்கள்..சந்ததிகளை ஓர்மத்தோடு வளருங்கள்.

காலம் நிச்சயம் ஒரு நாள் சாதகமாக மாறும். :)

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரகுநாதன்.

தமிழ் மொழி பயன்பாட்டைப் பொறுத்தவரை நான் ஈழத்தமிழர்களை பார்த்தே பெருமையாக, பொறாமையாக நினைப்பதுண்டு..எவ்வளவு சரளமாக சாதாரண மனிதர்களும் தமிழை கலப்பில்லாமல் பேசுகிறார்களென வியப்பதுண்டு.

 

நாங்கள் பேசுவது 'பண்ணு' தமிழ். நீங்கள் பேசுவதோ பைந்தமிழ்!

 

எங்களால் கலப்படப்பட்டு களை இழந்த தமிழை, நீங்களாவது நெஞ்சில் இறுத்தி இன்னமும் தூய தமிழை உயிர்ப்போடு வைத்திருக்கிறீர்களே என பெருமைப்படுங்கள்..

 

தற்பொழுது அரசியல் கிரகணங்களால் இருள் சூழப்பட்டுள்ள ஈழ நிலம், மீண்டும் தழைக்குமென நம்புங்கள்..சந்ததிகளை ஓர்மத்தோடு வளருங்கள்.

காலம் நிச்சயம் ஒரு நாள் சாதகமாக மாறும். :)

 

 

நன்றி  ஐயா

ஒரு ஆலமர நிழலில் நின்று

கிளைகளுக்கு மகுடம் சூட்ட உங்களால் மட்டுமே முடியும்.

நாம் இடைக்கிடை

ஆலமரத்தையே பதம் பார்த்தாலும் கூட.... :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.