Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்துடன் தொடர்பு வைத்திருந்த இளம் பெண் சுட்டுக்கொலை:

Featured Replies

யாரையும் கொல்வதுக்கு எங்களுக்கு உரிமை இல்லை ஆகவே ஆயுதங்களை போட்டுவிட்டு புத்த மத்தத்துக்கோ, இல்லை ஜைன் மதத்துக்கோ மாறி விடலாம்...

கண்ணன் கீதையில் அர்சுணனுக்கு சொன்னது எல்லாம் வெறும் ஆலோசனை மட்டும்தான், ஆகவே எங்கட இனத்தை சீரளிகிற எல்லாரையும் இனிமேல் மன்னித்து விடலாம்...

  • Replies 189
  • Views 18.1k
  • Created
  • Last Reply

அட கண்ணன் கீதையை அர்ச்சுனனுக்கு உபதேசித்தது போர்க்களத்தில் என்றல்லோ இவ்வளவு நாளும் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பதான் தெரியுது அவர் றோட்டிலை வைச்சுத்தான் உபதேசித்திருக்கிறாரென்று.

  • கருத்துக்கள உறவுகள்

அட கண்ணன் கீதையை அர்ச்சுனனுக்கு உபதேசித்தது போர்க்களத்தில் என்றல்லோ இவ்வளவு நாளும் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பதான் தெரியுது அவர் றோட்டிலை வைச்சுத்தான் உபதேசித்திருக்கிறாரென்று.[/

ஒய் வசம்பார் போர்க்களத்திற்கு போகிற றோட்டிலை வைச்சு உபதேசித்தவர் இதுகூட தெரியாமல் :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

மனையியல் பெண்ணொருத்தி பொருளியல் பிரச்சனையால் பாலியல் தொழியியலில் ஈடு பட்டதால் கலாச்சாரயியல் கெட்டுவிட்டதாக கொலையியல் கலாசாத்தின் அடிப்படையில் கொல்லப்பட்டுவிட்டார் அரின் ஆத்தாமா சாந்தியடைய பிரார்த்னையியல் செய்வோம். :evil: :evil: சே மண்டை காஞ்சு போச்சு நிறுத்தங்கப்பா :lol::lol:

  • தொடங்கியவர்

அட கண்ணன் கீதையை அர்ச்சுனனுக்கு உபதேசித்தது போர்க்களத்தில் என்றல்லோ இவ்வளவு நாளும் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பதான் தெரியுது அவர் றோட்டிலை வைச்சுத்தான் உபதேசித்திருக்கிறாரென்று.

ஆமா வசம்பு கீதைக்கும் காட்டி கொடுப்புகும் என்ன தொடர்பு :roll: :P

Vasampu wrote:

அட கண்ணன் கீதையை அர்ச்சுனனுக்கு உபதேசித்தது போர்க்களத்தில் என்றல்லோ இவ்வளவு நாளும் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பதான் தெரியுது அவர் றோட்டிலை வைச்சுத்தான் உபதேசித்திருக்கிறாரென்று.

ஒய் வசம்பார் போர்க்களத்திற்கு போகிற றோட்டிலை வைச்சு உபதேசித்தவர் இதுகூட தெரியாமல் :P :P :P

என்ன விஜய் நடிச்ச புதியகீதையிலா பார்த்தனீர். :roll: :roll:

  • தொடங்கியவர்

ஒய் வசம்பார் போர்க்களத்திற்கு போகிற றோட்டிலை வைச்சு உபதேசித்தவர் இதுகூட தெரியாமல் :P :P :P

என்ன விஜய் நடிச்ச புதியகீதையிலா பார்த்தனீர். :roll: :roll:

உதே நினைப்பில் இருன்கோ வசம்பு சார் :P :P

ஒய் வசம்பார் போர்க்களத்திற்கு போகிற றோட்டிலை வைச்சு உபதேசித்தவர் இதுகூட தெரியாமல்  :P  :P  :P

ஆயுதம் ஏந்தி சண்டைபிடிச்சு கொண்டு இருக்கேக்கை உபதேசித்தவையாம்....! (போர்க்களம் எண்டால் அதுதானே.... அப்பிடியா..??)

அது சரி போர்க்களம் ரோட்டில இருக்க கூடாதோ...??? :wink: :P

மேலுள்ள தலைப்புடனான விவாதங்களுக்கு சில கலை, இலக்கிய சாட்சியங்கள் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்ற எனது தனிப்பட்ட கருத்தில் ஒரு இணைப்பை கீழே தருகிறேன்

'கள்ளம்' நாவலும் காமம் பற்றிய சில குறிப்புக்களும்-

http://djthamilan.blogspot.com/2006/10/blo...7026846277.html

நாம் எல்லோரும் நம் வாழ்வில் கள்ளம் செய்துகொண்டே இருக்கின்றோம். பெற்றோருக்குத் தெரியாமல், துணைக்குத் தெரியாமல், குழந்தைகளுக்குத் தெரியாமல், நண்பர்களுக்குத் தெரியாமல் என நுட்பமாய் எமக்கான கள்ளங்களைச் செய்துகொண்டிருக்கின்றோம். கள்ளங்கள் பிடிபடும்போது அவமானப்பட்டும், பிறரின் பார்வைக்கு அது அகப்படாதபோது குறுகுறுப்பான மகிழ்ச்சியுடன் அதைக்கடந்தபடியும் போய்க்கொண்டிருக்கின்றோம். தஞ்சை ப்ரகாஷின் 'கள்ளம்' நாவலும் பலரது கள்ளங்களை நம்முன் நிலைக்கண்ணாடியாக -அரிதாரங்களையின்றி- முன் நிறுத்துகின்றது. எனினும் வாசிக்கும் நமக்குத்தான் அவை கள்ளங்களாய்த் தெரிகின்றனவே தவிர, இந்நாவலிலுள்ள பல பாத்திரங்களுக்கு அவை இயல்பான வாழ்க்கை நடைமுறைகளாகத் தெரிகின்றன.

தஞ்சாவூர் ஓவியங்களை பராம்பரியமாகச் செய்துகொண்டு வருகின்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ராஜூ என்கின்ற கலைஞன், எந்த மாற்றமும் இல்லாமல் புராதனத்தை அப்படியே பின்பற்றி ஓவியஞ் செய்கின்ற தந்தையோடு முரண்படுகின்றான். சுயாதீனமாய் எதுவுஞ்செய்யாது, வெட்டி ஒட்டி கண்ணாடிச்சில்லுகளால் அலங்கரித்து வெளிநாட்டில் அவற்றை நல்லவிலைக்கு விற்று பணஞ்சம்பாதிக்கும் தனது தந்தையை மிக வெறுக்கும் ராஜு குடியிலும், கஞ்சாவிலும் மிதக்கின்றான். ராஜூ தனது மகன் என்ற காரணத்திற்காகவும், தனது கெளரவம் பாதிக்கப்படக்கூடாது என்றவகையிலும் ராஜூவின் 'அடாவடிகளை' சகித்து அவனது செலவுகளுக்கு கேட்ட நேரத்துக்கு எல்லாம் காசு கொடுத்து கவனிக்கின்றார் ராஜூவின் தந்தை. ஒருநாள் சிதைந்து போய்க்கொண்டிருக்கும் தஞ்சாவூர் அரண்மணையின் சிக்கலான தெருக்களில் ஒன்றில் பாலியல் தொழிலாளியான பாபியைச் சந்திக்கின்றான் ராஜூ. ஆனால் அவளை விட அந்தப் பாலியல் தொழிலாளிக்கு கூடமாட ஒத்தாசை செய்து சமைத்துக்கொண்டிருக்கும் ஒரு மராட்டியப் பெண் மீது ராஜூவுக்கு மையல் வருகின்றது. பாபியால் -தான் தெரிந்து வைத்திருக்கின்ற பாலியல் தொழிலால் எந்த ஆணையும் அடித்து வீழ்த்த முடியும் என்ற எண்ணத்தை-ராஜூவை நுட்பமான விதத்தில் ஈர்த்து ஜூம்னா வெற்றி கொள்கின்றாள். பாபிக்கு பொறாமை தீயாய் எழுகின்றது.

ஜும்னாவுடன் சேர்ந்து சேரியில் வாழத்தொடங்கும் ராஜூ சேரி மக்களின் கடவுள்களான சுடலை மாடனையும், காடனையும், இராயனையும், சூரனையும் தஞ்சாவூர் கண்ணாடிச்சில்லுகள் தெறிக்க தெறிக்க பிரமாண்டமாய் கட்டி எழுப்புகின்றான். அவனின் ஆளுமை கண்டு சேரிப் பெண்கள் பலர் அவனில் மையல் கொள்கின்றனர். தம் விருப்பங்களை நாகரீகம் பூசி மினுக்காமல் நேரடியாக ராஜூவிடம் தெரிவிக்கவும் செய்கின்றனர். ராஜூவை அந்தச் சேரிப் பெண்கள் மட்டுமில்லை அந்தச் சேரி ஆண்களும் தலையில் வைத்துக்கொண்டாடுகின்றனர். அன்றைய நாளின் பசியை எப்படித் தீர்ப்பது என்ற கவலையைப்போல அன்றைய நாளின் காமத்தைத் தீர்ப்பது அன்றைய நாளுக்குரியது என்பதாய் சேரி மக்களுக்கு வாழ்க்கை முறை இருக்கின்றதே தவிர கடந்தகாலம்/நிகழ்காலம் குறித்த எந்தப்பிரக்ஞையும் அம்மக்களுக்கு இருப்பதில்லை. தமக்கான -ஒழுங்கு நடைமுறைப்படுத்திய சமூகம் கூறும்- கள்ளங்களைத் தெரிந்தே செய்கின்றனர். ராஜூ தன்னில் மையல் கொள்ளும் பெண்களுக்கு -உடலகளைக் கலக்கச் செய்யாமல் ஆனால் ஒருவித காமத்தைத் தக்கவைத்தபடி- தனது தஞ்சாவூர் ஓவியக் கலையைக் கற்றுக்கொடுக்கின்றான். 'கருப்பையைக் கழற்றி வைக்காதவரை உங்களுக்கு எங்களைப் போன்ற ஆண்களிலிருந்து சுதந்திரம் இல்லையடி' என்று ராஜூ கூறிக்கொண்டாலும் பல பெண்களைத் தேர்ச்சியுள்ளவர்களாய், தமது உழைப்பிலேயே வாழ்வை நகர்த்தக்கூடிய கலைஞர்களாய் வளர்த்துவிடுகின்றான். அவர்கள் தங்கள்பாட்டில் கண்ணாடிச் சில்லுகளில் படம் வெட்டி ஒட்டி தஞ்சாவூரிலும் அதற்கு அண்மையிலுள்ள ஊர்களிலும் விற்று காசு உழைக்கத் தொடங்குகின்றார்கள்.

ஜூம்னாவுடன், ராஜூ சேரியில் வசித்தாலும் மற்றப் பெண்களின் நெருக்கத்தால் ஜூம்னா விலத்திப் போகின்றாள். அவள் பூமாலை கட்டி சம்பாதித்துக்கொள்கின்றாள். ஆனால் ஜூம்னாவின் ராஜூவாக மட்டுமே ராஜூ அந்தச் சேரி மக்களால் பார்க்கப்படுகின்றான். ராஜூவை சந்திக்க முன், எத்தனையோ ஆண்களோடு படுக்கையில் சல்லாபிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட ஜூம்னாவுக்கு ஆண் உடல் வெறுத்துப் போகின்றது. அவளுக்கு ராஜுவின் உடலல்ல, தனக்காய் ஒருத்தன் இருக்கின்றான் என்ற துணையே தேவைப்படுகின்றது. ராஜூவுக்கும் காமத்தால் தன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஒரு பெண் ஜூம்னா என்பது மட்டும் தெளிவாய்த் தெரியும்.

ராஜூவின் தஞ்சாவூர்க்கலையும் நவீன ஓவியப்பரீட்சயமும் கலந்த ஓவியங்களின் புகழ் தஞ்சாவூரில் மட்டுமில்லாது, தமிழ்நாடு தாண்டி வெளியிலும் பரவுகின்றது. இறுதியில் 'உனக்கு ஒன்றுமே தெரியாது' என்று திட்டி அனுப்பிய ராஜூவின் தந்தை, மகனின் திறமை கண்டு வியந்து தனக்குப்பின் தனது ஓவிய நிறுவனத்தை நீதான் நடத்தவேண்டும் என்று சேரிக்குள் வருகின்றார். ராஜுவோ இன்னும் என்னை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையேன விசராந்தியாகச் சிரிக்கின்றான். மேலும் சேரிக்கு வரமுன்னர் தன்னில் மையல்கொண்ட நண்பனின் தங்கை தனது தந்தையிற்கு மனைவியாக இருப்பதைக் கண்டு இது வாழ்வின் விந்தையென திகைக்கின்றான்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்குள் (சாதிக்குள்) சனாதனமாய் இறுகிக்கிடந்து விரைவில் அழிந்துபோய்விடும் என்ற தஞ்சாவூர் ஓவியப்பாணியை எல்லாச் சமூகங்களிலும் பரப்பி -காலங்களுக்கேற்ப மாற்றமடைந்து- தொடர்ந்து உயிர்த்திருக்கும் என்று நம்பிக்கை கொள்கின்றான் ராஜூ. சேரிக்குள் இருந்த பறையர், தேவர், கவுண்டர் பெண்களை மட்டுமில்லை, உயர்சாதியினராக தங்களைக் காட்டிக்கொள்வதில் பெருமிதப்படும் பிராமணப்பெண்களும் சேரிக்கு வந்து கற்கப்போகின்றோம் என்கின்றபோது ராஜு மறுப்பேதுமில்லாமல் சேர்த்துக்கொள்கின்றான். ஆனால் அதேசமயம் பாடத்திட்டங்களிலுள்ள கற்பித்தல்முறைகளை நிராகரித்து நேரடியாக ஓவியம் வரைவதிலிருந்து கலையைக் கற்றுக்கொள்வதையே ராஜூ ஊக்கப்படுத்துகின்றான். எனினும் அவன் தனக்குப்பின் இந்தக்கலையைப் பரப்புவார்கள் என்று தீவிரமாய் நம்புகின்ற ஒரு பெண் தற்கொலை செய்துகொள்கின்றாள். இன்னொரு பெண் யாரோ ஒருவனுடன் சென்னைக்கு ஓடிப்போகின்றாள். இப்படியாக வீழ்ச்சிகள் ஆரம்பிக்கின்றன. எனினும் காற்றைப் போன்றவன் கலைஞன், வீழ்ச்சிகளையும் எழுச்சிகளையும் பற்றிக் கவலைப்படாது தனக்குப் பிடித்ததைச் செய்துகொண்டிருப்பான் என்கின்றமாதிரி ராஜூ எவ்வித அறிவிப்போ எதிர்காலத் திட்டமிடல்களோ இன்றி அந்தச் சேரியை விட்டு வெளியேறத்தொடங்குகின்றான். அப்படியே நாவலும் நிறைவுபெறுகின்றது.

இந்த நாவலில் ராஜூ என்ற ஒரு பாத்திரத்தைத் தவிர கவனப்படுத்திருக்கும் மிகுதி அனைத்துப் பாத்திரங்களும் பெண்களே. நாவலில் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை சேரியே முக்கிய கதைக்களனாய் இருக்கின்றது. சேரியின் மொழிநடையில் அம்மக்களின் வாழ்வுப்ப்க்கங்கள் இயல்பாய் விரித்துவைக்கப்பட்டிருக்கி

ஆயுதம் ஏந்தி சண்டைபிடிச்சு கொண்டு இருக்கேக்கை உபதேசித்தவையாம்....! (போர்க்களம் எண்டால் அதுதானே.... அப்பிடியா..??)

அது சரி போர்க்களம் ரோட்டில இருக்க கூடாதோ...??? :wink: :P

போர்க்களம் ஒரு போதும் தெருவில் இருந்ததில்லை. அதைவிட போர்க்களத்தில் மோதிக்கொள்ளும் இரு பகுதியினரும் ஆயுதபாணிகளாகவே மோதுகின்றனர். பேடிகள் போல் ஆயுதமில்லாப் பெண்ணிடம் வீரம் காட்டுவதில்லை போர்க்களத்தில்.

போர்க்களம் ஒரு போதும் தெருவில் இருந்ததில்லை. அதைவிட போர்க்களத்தில் மோதிக்கொள்ளும் இரு பகுதியினரும் ஆயுதபாணிகளாகவே மோதுகின்றனர். பேடிகள் போல் ஆயுதமில்லாப் பெண்ணிடம் வீரம் காட்டுவதில்லை போர்க்களத்தில்.

ஓ... அப்பிடித்தான் ஆயுதம் வச்சிருக்கிற மக்களாகப்பார்த்துதான் சிங்களவன் கொண்று குவிக்கிறானா...???

செய்யுறது துரோகம்... அற்ப சலுகைக்காகவும் உடற்சுகத்துக்காகவும் சிங்களவனோடை படுத்து எழும்புறவை வேற ஒண்றையும் விற்க்க மாட்டார்களாம்... அவ்வளவு ஒழுக்க நெறியாளர்கள் எண்டுறீரோ...??? இண்டைக்கு இவ்வளவு சனம் சாகிறது என்றால் அதுக்கு காரணமே சிங்களவனுக்கு உடம்பை விக்கிறதுகளும், எங்களின் உரிமைகளை விக்கிற உம்மைப்போண்ற கூட்டம்தான் காரணம்... அதைத்தான் சிங்களவன் பலதமிழர் தம்பக்கம் எண்டு கதைவிட வசதி பண்ணிக்குடுத்து இருக்கிற கூட்டத்தை எதிரியாகத்தான் பார்க்க வேண்டி இருக்கு...

அதிலை நீர் கூட விதிவிலக்கு கிடையாது...

போர்க்களம் ஒரு போதும் தெருவில் இருந்ததில்லை. அதைவிட போர்க்களத்தில் மோதிக்கொள்ளும் இரு பகுதியினரும் ஆயுதபாணிகளாகவே மோதுகின்றனர். பேடிகள் போல் ஆயுதமில்லாப் பெண்ணிடம் வீரம் காட்டுவதில்லை போர்க்களத்தில்.

ஒம் அண்ணா நேற்றும் உங்கள் வாய்வீரம் பார்த்தோம்,,

இப்படியே சனி பிடிச்ச மாத்திரி பேசி கொண்டு போனால்

தமிழருக்கு விடிவு வருதோ இல்லையே உங்களுக்கு வரலாற்றில் முக்கிய ஒரு இடம் இருக்கும் அது எப்படியானது என்று நான் சொல்லத்தேவை இல்லை தானே? :twisted:

Vasampu wrote:

போர்க்களம் ஒரு போதும் தெருவில் இருந்ததில்லை. அதைவிட போர்க்களத்தில் மோதிக்கொள்ளும் இரு பகுதியினரும் ஆயுதபாணிகளாகவே மோதுகின்றனர். பேடிகள் போல் ஆயுதமில்லாப் பெண்ணிடம் வீரம் காட்டுவதில்லை போர்க்களத்தில்.

Thala wrote:

ஓ... அப்பிடித்தான் ஆயுதம் வச்சிருக்கிற மக்களாகப்பார்த்துதான் சிங்களவன் கொண்று குவிக்கிறானா...???

செய்யுறது துரோகம்... அற்ப சலுகைக்காகவும் உடற்சுகத்துக்காகவும் சிங்களவனோடை படுத்து எழும்புறவை வேற ஒண்றையும் விற்க்க மாட்டார்களாம்... அவ்வளவு ஒழுக்க நெறியாளர்கள் எண்டுறீரோ...??? இண்டைக்கு இவ்வளவு சனம் சாகிறது என்றால் அதுக்கு காரணமே சிங்களவனுக்கு உடம்பை விக்கிறதுகளும், எங்களின் உரிமைகளை விக்கிற உம்மைப்போண்ற கூட்டம்தான் காரணம்... அதைத்தான் சிங்களவன் பலதமிழர் தம்பக்கம் எண்டு கதைவிட வசதி பண்ணிக்குடுத்து இருக்கிற கூட்டத்தை எதிரியாகத்தான் பார்க்க வேண்டி இருக்கு...

அதிலை நீர் கூட விதிவிலக்கு கிடையாது...

ஓம் ஓம் உங்களைப் போன்றவர்களுக்கு போட்டுத் தள்ளுற பெண்களெல்லாம் விபச்சாரிகள். ஏனென்றால் நீங்கள் தானே கூட நின்று கூட்டிக் கொடுத்தனீங்கள்.

ஓம் ஓம் உங்களைப் போன்றவர்களுக்கு போட்டுத் தள்ளுற பெண்களெல்லாம் விபச்சாரிகள். ஏனென்றால் நீங்கள் தானே கூட நின்று கூட்டிக் கொடுத்தனீங்கள்.

அதை இந்த செய்தியை போடமுன்னம் பொம்பிழையை போட்ட எல்லாளம் படையை கேக்க வேண்டிய கேள்வி...!

அதோடு கொலைகள் எல்லாம் உரிமை கோரப்படாமலேயே செய்யப்பட்டு கொண்டு இருக்கும் போது ஒரு பெண் கொல்லப்பட்டு உரிமை கோரப்பட்டு இருக்கிறார்... அதுவும் யாழ்மக்களிடம் மதிப்பு மிக்க ஒரு அமைப்ப்பின் பெயரில்... அப்படியானால் அது பொய் செய்தியாக இருக்க முடியாததும்..

அந்த அமைப்பின் நற்பெயரை கெடுப்பதும் உமது நோக்கமாக இருக்கிலாம்... இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் இருந்தவர்கள் யாரும் இதை எதிர்த்ததாகவோ இல்லை கேவலம் கெட்ட இராணுவ ஒட்டு குழுவைப்பொல வசைவது இல்லை என்னும் போதே தெரிய இல்லையா எது உண்மையாக இருக்கும் எண்று...! ஆனால் ஒண்று மட்டும் தெரிகிறது கேவலமான கூட்டத்தோடு சேர்ந்து இருந்தால்... கேவலமான செயல்கள் கூட புனிதமாக தெரியும் சிலரில் நீர் ஒருவர் எண்டு......!

ஆமா போட்டுத் தள்ளுகிறவர்களும் அதற்கு வக்காலத்து வாங்குபவர்களும் மகா புனிதர்கள் தானே??????

ஆமா போட்டுத் தள்ளுகிறவர்களும் அதற்கு வக்காலத்து வாங்குபவர்களும் மகா புனிதர்கள் தானே??????

அது சரி இந்தியன் ஆமியோடை சேர்ந்து புலிகளை காட்டிகுடுத்தும் மக்களை கொண்றும் குவித்தவை எல்லாம் இப்ப வெளிநாடுகளிலை புனிதர்களாய் வாழும்போது, ஊரிலை கொல்லப்படும் தாயக ஆதரவாளர்களை சிங்களவனுக்கு போட்டுகுடுக்கிற ஒண்டு செய்த்துப்போனால் கவலைதான் வரவேணும்....! ஏனெண்டா சொந்தங்களில் ஒண்டு எல்லே...! நாளை புனிதர் ஆகவேண்டியது...!

ஒரு ஊர் வாழவேண்டுமானால் துரோக கூட்டத்தில ஒண்டு சாவதில் பங்கம் இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்

sabesan wrote!

இதை எழுதுவதற்காக என்னை எத்தனை பேர் கடித்துக் குதறப் போகிறீர்களோ தெரியவில்லை.

எதிரி நாட்டிற்கு உளவு பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம். இதில் எனக்கு மாற்றுக் கருத்து ஏதும் இல்லை.

ஆனால் ஒரு பெண்ணை பாலியல் தொடர்பு வைத்திருந்ததற்காக தண்டிக்க முடியுமா?

ஒரு பெண் யாருடன் பாலியல் தொடர்பு வைத்திருக்க வேண்டும் என்பதைஇ ஒரு நாடோஇ இனமோஇ சமூகமோ தீர்மானிக்க முடியுமா?

பண்பாட்டு மீறல்கள் தண்டனைக்குரிய குற்றமா?

இது பற்றி விசேடமாக நாரதர்இ நல்லவன்இ குறுக்காலபோவான்இ நெடுக்காலபோவான் போன்றவர்களிடம் இருந்து கருத்தை எதிர்பார்க்கிறேன்.

ஜெயதேவன்இ வன்னிமைந்தன் போன்றவர்களிடம் இருந்து எவ்வகையான கருத்துக்கள் வரும் என்று எனக்கு தெரியும்.

சபேசன் உமது உள்நோக்கம் கொஞ்சம் வித்தியாசமானது. ஆனால் விவித்திரமானது.

உமது கேள்வியில் நீரே சில மாற்றங்களை செய்ய வேண்டும் பின்பு அதைபற்றி நீரே சிந்திக்க வேண்டும் பின்பு அதை எழுதவேண்டும்.

""""ஓரு பெண்""" இந்த மூடிக்குள் உலகத்தில் உள்ள எல்லா பெண்களையும் அடக்க முடியும். ஆனால்... எனது அம்மா வேறு! உமது அம்மா வேறு! அன்னை தெரேசா வேறு! அன்டர்சென் பமேலா வேறு. அது போலவே ஒரு இஸ்லாம் பெண் வேறு ஒரு இந்து பெண் வேறு. ஆகவே நீர் மேல் கூறிய பெண்ணை. 'ஒரு பெண்" என்ற சொல்லில் அடக்க முடியாது! அவளுக்கென்றொரு சமுதாயம் பண்பாடு நாகாPகம் என்பவற்றை அவள் பிறப்பால் எவ்வாறு பெண்ணானாளோ அதே போல் பிறக்கும் போதே பெற்று கொள்கிறாள். அஃதே அதை மதிக்க வேண்டியாவளாகவும் அதில் பிழையிருப்பின் திருத்த வேண்டிவளாகவும் ஆகின்றாள். 'அதை' செய்ய தவறியவள் "அதை' எந்த அளவில் அந்த சமூதாயம் மதி;த்ததோ அந்த அளவிலான தண்டனைக்குரியவளாகிறாள். இது உலக நடப்பு.

"நான் எழுதியது உமக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. உமது உள்நோக்கம் எதுவோ அது பாதி பலித்திருக்கிறது போல் எனக்கு தெரிகிறது. நீர் மகிழ்சியாக இருக்கின்றிரா??"

  • கருத்துக்கள உறவுகள்

இதை எழுதுவதற்காக என்னை எத்தனை பேர் கடித்துக் குதறப் போகிறீர்களோ தெரியவில்லை.

எதிரி நாட்டிற்கு உளவு பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம். இதில் எனக்கு மாற்றுக் கருத்து ஏதும் இல்லை.

ஆனால் ஒரு பெண்ணை பாலியல் தொடர்பு வைத்திருந்ததற்காக தண்டிக்க முடியுமா?

ஒரு பெண் யாருடன் பாலியல் தொடர்பு வைத்திருக்க வேண்டும் என்பதைஇ ஒரு நாடோஇ இனமோஇ சமூகமோ தீர்மானிக்க முடியுமா?

பண்பாட்டு மீறல்கள் தண்டனைக்குரிய குற்றமா?

இது பற்றி விசேடமாக நாரதர்இ நல்லவன்இ குறுக்காலபோவான்இ நெடுக்காலபோவான் போன்றவர்களிடம் இருந்து கருத்தை எதிர்பார்க்கிறேன்.

ஜெயதேவன்இ வன்னிமைந்தன் போன்றவர்களிடம் இருந்து எவ்வகையான கருத்துக்கள் வரும் என்று எனக்கு தெரியும்.

"ஒரு பெண்" என்பவள்......... ஒரு நாடு என்ற வரையறைக்குள் தன்னை அகப்படுத்தி கொண்டால்.......

'ஒரு இனம்' என்ற வானத்தில் தன்னை நட்சத்திரமாக்கினால்......

"ஒரு சமூகம்" என்ற படத்தில் ஒரு புள்ளியாக ஒட்டிக்கொண்டால்...

அதன்பின் எது எதில் ஒட்டியுள்ளதோ ஒட்டியதின் அசைவை ஒட்டப்படுத்திக்கொண்டேதே தீர்மானிக்க முடியும.; தீர்மானிக்க வேண்டும்!

அவ்வாறு தீர்மானித்தால்தான் அதனுடைய தன்மை கெடாது பாதுகாக்க முடியும். இது உலக நியதி!

அதை விடுத்து 'ஒரு பெண்" ஒரு பெண்ணாகவே இருப்பின் அவளை பற்றிய முடிவுகளை அவளே தீர்மானிக்க முடியும்.

அவள் யாருமே இல்லாத ஆர்டிக் கண்டத்திலோ... அன்றி வேறு கிரகத்திலோ தான்தோன்றி வாழ்ந்தால். அவளின் முடிவுகளில் யாராவது குறுக்கிடுவது குற்றமானது.

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இந்தியன் ஆமியோடை சேர்ந்து புலிகளை காட்டிகுடுத்தும் மக்களை கொண்றும் குவித்தவை எல்லாம் இப்ப வெளிநாடுகளிலை புனிதர்களாய் வாழும்போது, ஊரிலை கொல்லப்படும் தாயக ஆதரவாளர்களை சிங்களவனுக்கு போட்டுகுடுக்கிற ஒண்டு செய்த்துப்போனால் கவலைதான் வரவேணும்....! ஏனெண்டா சொந்தங்களில் ஒண்டு எல்லே...! நாளை புனிதர் ஆகவேண்டியது...!

ஒரு ஊர் வாழவேண்டுமானால் துரோக கூட்டத்தில ஒண்டு சாவதில் பங்கம் இல்லை...

ஊரில் சனத்திடம் பறிச்ச வெளிநாடு ஓடினவைக்கும், இந்தியாவில் சில பெண்களை வைத்து ஊரே நாறும் வரை கூத்தடிச்சவர்களுக்கும் தங்களின் தப்புக்காக, இப்படி ஏதும் நடக்கும் எண்ட பயத்தில், சில வேளை சேடம் இழுக்கும். இதுக்காக கவலைப்படுவதோ தல!

  • கருத்துக்கள உறவுகள்

ஓட்சிசனின் அனுமதியின்றி அதை சுவாசிப்பது மட்டுமல்லாமல்......

அதை காபன் டிஒக்சைட்டாக வேறு மாற்றும் பாவத்தை நான் பிறந்த போதிலிருந்தே செய்திருக்கிறேனேன்பது. 3ம் வகுப்பில் படித்த போது தெரியவந்தது........

ஆனாலும் நான் இன்னமும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. இந்த குற்ற உணர்வுடன் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்!

நான் தற்கொலை செய்ய வேண்டுமா??? வேண்டாமா??

தயவுசெய்து சககள உறவுகள் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!

:evil: :evil: :evil: இந்த தலைப்புக்கு உடனடியாக வெட்டு விழுத்த வேண்டுகிறேன்...............காணும் எங்களின்.......????? :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு எழுதியது!

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் எந்தவித குற்றச்சாட்டோ அல்லது கொலை உரிமை கோரலோ இல்லாமல் இது அப்படியிருக்கலாம் அல்லது இப்படியிருக்கலாமென்று உங்கள் ஊகங்களின் அடிப்படையில் கருத்தைச் சொல்வது நல்ல வேடிக்கை தான்.

இறந்தது யாரோ ஒரு பெண் என்பதற்காக தயவுசெய்து மனம் போனபடி கருத்தெழுதாதீர்கள்.

எமது பிறப்பையோ அல்லது இறப்பையோ எம்மால் தீர்மானிக்க முடியாத போது இன்னொருவரின் இறப்பைத் தீர்மானிப்பதற்கு யாருக்கு உரிமையுண்டு.

இன்று அடுத்தவருக்குத் தானே என்று கூத்தடித்துவிட்டு பின்பு அதே பாதிப்பு வேறு எவராலும் உங்கள் குடும்பத்திலும் ஏற்படும்போது தலையிலடிப்பது கண் கெட்டபின் சூரியநமஸ்காரம் தான்.

எமது பிறப்பையோ எமது இறப்பையோ யாராலும் தீர்மானிக்க முடியாது.

ஆனால் நீங்கள் சவுதிஅரேபியா சென்று அங்கே ஒரு பெண்ணை பலவந்தபடுத்தினால்.........???

உமது இறப்பை நீரே தீர்மானித்தவர்!

சவுதிஅரேபியர்கள் வெறும் அம்புதான்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பெட்டை..........களின் கண்களுக்கு, தினமும் கொல்லப்படுகின்ற அப்பாவி மக்களின் ரத்தம் கண்களுக்குத் தெரியாது. இப்போது ரவிராஜ் ஜச் சுட்டவர்களையும் தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் எழுதியது!

எதற்கும் எதிர்வாதம் செய்தியாளர்களைக் குறை பிடித்தல் என்ற நிலைகுள் நிற்காமல் அவர்கள் எல்லாளன் படை விடுத்த அறிகையைத்தான் வெளியிட்டுள்ளனர் என்ற உண்மையையாவது உணர்ந்து கொள்ளுங்கள். எனி இராணுவ உளவாளிகளையும் சுடாதீர்கள் ஐயோ மனிதாபிமானம் இறந்து கொண்டிருக்கிறது என்றும் கூறுவீர்கள். ஐயோ கதிர்காமர் பாவம் அவரைச் சுட்டது எவரென்றாலும் மனித உரிமை மீறல் என்பீர்கள்.

உங்களது பலகருக்துக்களை வாசித்திருக்கிறேன்........

ஆனாலும் இந்த கருத்து உங்களை என் மனதால் தொடவைத்திருக்கிறது!

என்ன செய்வது????? சிலர் நித்திரை இல்லை நித்திரை போல் கிடக்கிறார்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்விடயம் தொடர்பில் என் கருத்தைத் தெளிவாக ஏற்கனவே எழுதிவிட்டேன்.

மேற்கொண்டு கதைக்க எதுவுமில்லை.

(என்னிடம் கருத்துக் கேட்டு யாரோ எழுதியிருக்கிறார்களென்பதை அறியத் தந்த, இணைப்பை அனுப்பிய நண்பருக்கு நன்றி)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.