Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜோர்டானிய விமானி எரித்துக் கொலை

Featured Replies

150203175544_jordan_pilot_hostage_moaz_a

 

இஸ்லாமிய அரச தீவிரவாதிகளால் பிடிக்கப்பட்ட ஜோர்டானிய விமானி உயிரோடு எரித்துக் கொல்லப்படுவதைக் காட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.
 
ஒரு உலோகக் கூண்டில் வைக்கப்பட்டிருந்த முவாத் கசாஸ்பே, தீயால் விழுங்கப்படுவதை காட்டும் ஒரு வீடியோ சற்று முன் வெளியானது.
இது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.
இந்த விமானிக்கு பதிலாக தம் பிடியில் இருந்த கைதியை விடுவிக்க ஜோர்டான் தயாராக இருந்தது.
 
ஆனால் தமது விமானி உயிருடன் உள்ளார் என்பதை நிருபிக்கும் சான்றுகள் தேவை என்று ஜோர்டான் கேட்டிருந்தது.
 
இந்த விடியோ, இஸ்லாமிய அரசின் பரப்புரைத் தளம் என்று நம்பப்படும் ஒரு டுவிட்டர் தளம் வழியாக வினியோகிக்கப்பட்டுள்ளது.
 
ஜோர்டான் விமானி பயணித்த விமானம் இஸ்லாமிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் விழுந்து நொறுங்கியபின் விமானி பிடிபட்டார்.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இரு பிணைக் கைதிகளை இஸ்லாமிய அரசு அடுத்தடுத்து கொன்றுள்ள நிலையில் இந்த சம்பவம் வந்துள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்

ஜோர்டான் இரு தீவிரவாதிகளைத் தூக்கிலிட்டது - விமானி கொலைக்கு பதிலடி

 

ஜோர்டான் இரு தீவிரவாதிகளைத் தூக்கிலிட்டது - விமானி கொலைக்கு பதிலடி
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
பகிர்க
150204060424_sajida_al-rishawi_suicide_bஜோர்டானால் தூக்கிலிடப்பட்ட இஸ்லாமியத் தீவிரவாதி சஜிதா

ஜோர்டானிய விமானப் படை விமானியை இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் கொன்றதற்குப் பதிலடியாக, ஜோர்டான், தான் சிறைப்பிடித்து வைத்திருந்த இரண்டு தீவிரவாதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றிவிட்டதாக அறிவித்திருக்கிறது.

இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் நேற்று ஜோர்டானிய விமானி, முவாத் அல் கசாஸ்பெயை ஒரு கூண்டில் அடைத்து தீயிட்டுக் கொளுத்திக்கொன்றிருந்தார்கள்.

இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையில், ஜோர்டானிய அரசு சிறைப்பிடித்து வைத்திருந்த சஜிதா அல் ரிஷாவி மற்றும் அல் கயீதா போராளி ஸியாத் கர்போலி ஆகியோரைத் தூக்கிலிட்டிருக்கிறது.

இவர்களில் சஜிதா என்ற பெண், ஒரு தற்கொலை குண்டு வைக்கும் முயற்சி செய்து கைதானவர். 2005ல் நடந்த இந்த சம்பவத்தில் 60 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

ஸியாத் கர்போலி 2008ம் ஆண்டில் ஜோர்டானியப் பிரஜை ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்.

இவர்களில் சஜிதாவின் விடுதலையை இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் கோரியிருந்தனர் .

ஜோர்டானிய விமானி தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவத்தை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், ஜப்பானிய பிரதமர் ஷின்ஷொஅபெயும் கண்டனம் செய்திருக்கின்றனர்.

http://www.bbc.co.uk/tamil/global/2015/02/150204_jordanexecutions

 

  • கருத்துக்கள உறவுகள்
இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள்???
யார் இவர்கள் ?
 
இவர்களுக்கு எங்கு அரசு இருக்கிறது ?
மொழி பெயர்க்கும்போது உலகில் என்ன நடக்கிறது என்பதை மறந்துவிடுவதா ? 
 
எப்போதோ செய்திருக்க வேண்டிய வேலை.
இந்த பெண்ணை கேட்டுதான் அவர்கள் ஆடிக்கொண்டு இருந்தார்கள்.
எப்போதோ போட்டிருக்க வேண்டும். 

 

உலகத்தில் வாழ தகுதியற்ற இனம்

  • கருத்துக்கள உறவுகள்

ஜோர்டானிய அரசின் முடிவு வரவேற்கத் தக்கது. பயங்கரவாதி என உறுதிப்படுத்தி விட்டால் முடித்துவிடவேண்டும். பிறகு பணயம் அது இது என டிமாண்ட் செய்வார்கள!

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க ஜீவகாருணியம் காட்டி என்ன நடந்தது..?!

 

நல்லெண்ண அடிப்படையில் சாகரவர்த்தனா கப்பல் கப்டனை புலிகள் விடுவித்தார்கள். கடைசியில் தமிழ் மக்களை கொன்று குவித்தது அரச பயங்கரவாதம்.

 

சிரியாவின் வடக்குப் பகுதி.. முற்றிலும் தரைமட்டம். ஐ எஸ் போராளிகளை காட்டுமிராண்டி ஆக்குவது அரச பயங்கரவாதிகளோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

 

ஆயுத பலத் திமிரின் முன் மனிதாபிமானம் மண்டி இடுகிறது அவ்வளவே. அது அமெரிக்கா என்ன ஐ எஸ் என்ன எல்லாம் ஒன்றுதான். :icon_idea::rolleyes::(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க ஜீவகாருணியம் காட்டி என்ன நடந்தது..?!

 

நல்லெண்ண அடிப்படையில் சாகரவர்த்தனா கப்பல் கப்டனை புலிகள் விடுவித்தார்கள். கடைசியில் தமிழ் மக்களை கொன்று குவித்தது அரச பயங்கரவாதம்.

 

சிரியாவின் வடக்குப் பகுதி.. முற்றிலும் தரைமட்டம். ஐ எஸ் போராளிகளை காட்டுமிராண்டி ஆக்குவது அரச பயங்கரவாதிகளோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

 

ஆயுத பலத் திமிரின் முன் மனிதாபிமானம் மண்டி இடுகிறது அவ்வளவே. அது அமெரிக்கா என்ன ஐ எஸ் என்ன எல்லாம் ஒன்றுதான். :icon_idea::rolleyes::(

 

நெடுக்கர்,

 

இவ்வளவு தெரிந்த நீங்களே இப்படி எழுதுவதா??

 

ஐ.ஸிஸ் ஒரு போராளி இயக்கம் என்றே கூறமுடியாது.  மத அடிப்படை வாதத்தால் மூளைச்ச்லவை செய்யப்பட்ட தாம் செய்வது என்னெவென்று தெரியாமல் மிருகங்களைப்போல நடக்கும் ஒரு கூட்டம்.

 

சிரியா சிங்களத்திற்கு ஒத்த ஒரு அடக்குமுறை அரசென்பதை ஒத்துக்கொள்கிறேன். அந்த அரசிற்கெதிராக சுதந்திரச் சிரியா எனும் ஒன்றிணைந்த எதிர்ப்புக் குழு சண்டையிடுகிறது. அவர்களுக்கு ஐஸிஸ் மிருகங்களுக்கும் தொடர்பில்லை. இன்னும் சொல்லப்போனால் ஐஸிஸ் சுதந்திரச் சிரியா போராளிகளையும் கொல்கிறது, சிரிய ராணுவத்தையும் கொல்கிறது. அதன் இலக்கு ஒரு முற்றான இஸ்லாமிய தேசம். தற்போதைக்கந்த இஸ்லாமிய அடிப்படைவாத தேசம் சிரியாவுக்குள்ளும் - ஈராக்கிற்குள்ளும் வரயறுக்கப்பட்டாலும் கூட, தனது ராணுவ வெற்றியைப் பொறுத்து இந்தத் தேசம் இன்னும் பெருப்பிக்கப்படலாம்.

 

ஆனால் அண்மையில் துருக்கி- சிரிய எல்லையில் அமைந்திருந்த கொபேனி எனும் வீரம்செறிந்த குர்திஸ் இனமக்களின் நகரை முன்று மாதங்களுக்கும் மேலாக முற்றுகையிட்டு ஆக்கிரமிக்க ஐஸிஸ் மிருகங்கள் எடுத்த முயற்சியை குர்திஸ்கள் அமெரிக்கா தலமையிலான நேச நாட்டு விமானத் தாக்குதல்களின் உதவியுடம் முறியடித்திருப்பதுடன், ஐஸிஸ் மிருகங்களை குறைந்தது 5 கிலோமீட்டர்கள் வரை பின் தள்ளியிருக்கிறார்கள். அதேபோல ஈராக்கின் வடக்கிலும் ஐஸிஸ் பயங்கரவாதிகலின் வசமிருந்த பகுதிகள் சிலவற்றை மீளமைக்கப்பட்ட ஈராக்கிய ராணுவம் சிறிது சிறிதாகக் கைப்பற்றி வருகிறது.

 

தனது அண்மைய களத்தோல்விகளால் துவண்டு போயிருக்கும் ஐஸிஸ் குழுக்களை மீண்டும் தூக்கி நிமிர்த்தவும், வெளிநாடுகளிருக்கும்  ஐஸிஸ் அனுதாபிகளைக் கவரவுமே அண்மையில் பிடிபட்ட ஜோர்தானிய விமானியை உயிருடன் எரிதுக் கொண்டாடி அந்த வீடியோவையும் பெருமையுடன் இணையத்தில் உலவ விட்டிருக்கிறது ஐஸிஸ்.

 

ஆனால் அது எதிரபார்த்ததற்கு மாறாக ஜோர்தானிய விமானியின் எரிப்பு விவகாரம் ஐஸிஸிற்கு பேரிடியாக இறங்கியிருக்கிறது. தமது விமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கலாக தன்னிடமிருந்த இரு அல்கொய்தா பயங்கரவாதிகளை ஜோர்தானிய அரசு உடனேயே தூக்கிலிட்டதுடன், ஐஸிஸின் தலைமைச் செயலகமான சிரியாவின் ரக்கா நகர் மீது டசின்கணக்கான ஜோர்தானிய யுத்த விமானங்கள் குண்டு வீசியுள்ளதுடன், திரும்பும் வழியில் இறந்த ஜோர்தான் விமானியின் கிராமத்திற்கு மேலாகத் தாழ்வாகப் பறந்து தமது மரியாதையையும் செலுத்தியிருக்கின்றன.

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.