Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

முடியவில்லை

நினைப்பதை

தடுப்பதும்

தடுப்பதை

நினைப்பதும்

[கிகிகிகிகிகி]

  • Replies 1.9k
  • Views 182.1k
  • Created
  • Last Reply

அட..பின்னிட்டியள்... :lol:

நினைப்பது

நான்..

நினைக்காதது

அவள்..

நீங்கி சென்ற

நினைவுகள்

மட்டும்..

மனதில்.. :)

அப்ப நான் வரட்டா!!

மனதில் நினைத்து

மலரால் பூசிக்கின்றேன்

கைகள் கூப்பி தொழுவேன்

நேரில் உனை காணும் போது

ஏனெனில் நீதான்

என் இதயத்தில்

உறையும் கடவுள்

கடவுள் என்றும்

கற்சிலை..

என்று நான்

நினைத்ததுண்டு..

இன்று தானறிந்தேன்

கல்லா இருப்பதும்..

கடினமென.. :)

அப்ப நான் வரட்டா!!

கடினமென நினைக்காமல்

கடித்தேன் கல்லை

முடியாமல் தவித்த

படித்த முட்டாள் நான்

முட்டாள் நான் என

முட்டிடும் நிலவே

நிலவிலும்

பெண்மை உள்ளது

என..

அறிந்தேன்..

நிலவு

என்னை

சுட்டெறித்த

போது.. :)

அப்ப நான் வரட்டா!!

நிலவு

என்னை

சுட்டெறித்த

போதுதான்

உணர்ந்தேன்

நிலவிலும்

சுடும் தன்மை

உண்டு என

அப்போதே

நிலவை ஏறிட்டு

பார்த்தேன்

நிலவு சொன்னது

என்னை முறாய்க்காதே

எனக்கு ஒளிதந்த

சூரியனை முறாய்த்துபார்

அவனே என்னையும் சூடாக்கி

என்னைப் பார்த்த

உன்னையும் சுட்டெறித்தான்

அன்பே

அன்பே

என்றாள்

ஆருயிர்

என்றாள்..

நானும்

அவளின்

வார்த்தையில்..

சொக்கி

விட..

இன்று

அவள்

சிரிக்கிறாள்..

இன்னொருவருடன்... :)

அப்ப நான் வரட்டா!!

:lol::lol::lol::)

இன்னொருவருடன்

இன்பத்தோடு செல்பவளா

உன் காதலி

அச்சோ அச்சோ

அவளை நினைத்து

புலம்பாதே

அவள் உனை ஏமாத்திய

அன்றைய காதலி

இன்று இன்னொருவன் மனைவி

நாளை........ :)

Edited by வெண்ணிலா

நாளை

விடியும்..

விடியலுடன்

அவள்

விழி வதனம்

விழிக்கும்..

அந்த விழியில் தெரிவது

யார் முகம்..

என்பது

தெரியாம

தவிர்கிறது..

என்

விழி.. :)

அப்ப நான் வரட்டா!!

என் விழி

உனைத் தேடி

தவிப்பதை நீ

தெரியாமல்

மறைகிறாயே

என் மொழி

உனைப் பாட

துடிப்பது

புரியாமல்

தண்டிக்கிறாயே

அதற்காக நான்

விழி இருந்தும்

குருடியானேன்

மொழி இருந்தும்

மெளனியானேன்

இப்போ உனக்கு

சந்தோசமா சொல்

சொல் சொல்

என்கிறாள்..

சொல்லை

தேடுகிறேன்..

சொல்ல..

ஆனால்

என்ன..

சொல்ல

என்பது..

எனக்கு

தெரியவில்லை

அன்று..

இன்று

சொல்லை

சொல்ல

தேடினேன்..

அவளை

காணவில்லை..

என் வாழ்வில்

அவளும்

ஒரு

சொல்லே.. :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சொல்லே போதுமடி!!

வாழும் என் உயிர் உந்தன்மடி!

விழிகள் பார்த்து இதயம்

சேர்த்து இணைந்தோம் அன்பே

வாழும் காலம் வரையில்

உனக்காய் வாழ்வேன்!! உறவே!

சொர்க்கம் மண்ணில் உன்னால்

வந்தது எந்தன் பெண்ணே!

இமையாய் இருப்பேன் உனக்காய்

பிறந்தேன்!! வா என் கண்ணே!

  • 3 weeks later...

வா என் கண்ணே

வாடி இருப்பது ஆகாது!

கூடிப் பேசி மகிழப்

பல கதையிருக்கு

ஓடிப் போய் ஒழியாதே

என் கண்ணே...

மாடி வீட்டழகே

தலை அண்ணாந்து

பார்த்து

உன்னழகைப் பருகுகையில்

நிலா என்னவென்று

எனைக் கேட்குதே...!

சூடிக் கொள்

இந்தா புது மலர்...

நீ ஆடி அசைந்து

வருகையில்

உன்னழகெல்லாம்

கை நீட்டி

எனை அழைக்குதே!

உன் மடி மீது

தலைவைத்து

நான் உறங்க

விடிகின்ற இரவை

'சீ விடியாதே' என்று

நீ சிணுங்க

மறுபடியும் வாடும்

இந்த மலர்

இரவோடு இரவாக

மலரவே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலரவே உன் முகம் கண்டேன் அதில் தாமரையாய் உன் விழிகள்

மலரவே உன்குமிழ் இதழ்கள் அன்ரலர்ந்த விழிகளில் அன்பும்

மலரவே உயிரே உன்னால் பாதம் பட்ட அகலிகையாய் நான்

மலரவே மனிதனாய் ஆனேன் இன்று என் மனபாரம் போனதே

  • கருத்துக்கள உறவுகள்

போனதே .....என் வெண்ணிலா

மீண்டும் வருமா? வாழ வருமா?

நீயும் நானும் சேர்ந்து தான்

புது உலகம் காணலாம் ...நீ வா

நீ வா .....என்று தொடங்கவும்

நீ வா நிலா

நீ 'வானிலா'?

எங்கிருந்தாலும்

நீ வா நிலா...

ஏனிப்படி

ஏணிப்படியாய்

நிற்பவர் தமை

எட்டி உதைக்கிறாய்?

நானிப்படி

எழுதுவன் என்று

நீ நினையாமல்

இருந்ததும்

தப்படி...!

பல படியேறி

பரமனைத் தொழுதென்ன?

அவன் சொன்னபடி

வாழாமல்...

இப்படிப் பல

சொல்லிப் புலம்புவன்

நான்...

மேற்படி கவிதையில்

முடித்தது போல்

அழகிய வார்த்தையில்

உன் கவி முடிந்தால்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தால் மலைகணுக்கால் அளவு

மலைப்பவனுக்கு கணுக்கால் மலை அளவு

முடிந்தால் முயச்சி செய்வதல்ல முயற்சி செய்

தோல்வியும் வேதமாகும்

முடிந்தால் மரணத்தை வெல்

அதைவிட புகழுடன் மரணி வாழ்வாய் நீ

முடிந்தால் உன் மனதை வெல் அது தான்

மரணத்தை வெல்லும் மந்திரம்

மந்திரம் சொல்லின...

கண்கள்..இவர்தாமோ

இந்திரன் தேசத்துப்

பெண்கள்....

தந்திரம் செய்திடும்

புன்னகை..கொல்லுமோ

சுந்தரம் மேவிய

கன்னிகை...

வந்தனம் சொன்னவள்

யாரவள்...வளைந்தாடிடும்

சிந்தனை தின்றிடும்

தூரிகை...

சொந்தமாய் சொத்துகள்

கொண்டவள்..என்னைச்

சந்திரனோ எனச்

சொன்னவள்!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொன்னவள் வார்த்தைக்காய் தவம் இருக்கும் இவன்

சொன்னவள் மனதில் சிலையாய் இருக்கிறாள் அவளுக்காய்

சொன்னவள் யாரோ வார்த்தையை நம்பிய மாரிசன் மானாய்

சொன்னவள் நம்பியது அவன் தப்பா அவள் தப்பா

தப்பா தப்பு

செய்து

தப்புத் தப்பாய்

சிந்தனை செய்து

தப்புக்குள் தப்பில்லா

சரியைத் தேடி

அழைகின்றேம்

ஆணும் பெண்ணும்

தப்பில்லா வாழ்விற்காய்

மனிதன் தேடி..

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனை தேடி அலைகிறேன்

இருந்தால் சொல்கிறேன்

இறைவன் கேட்கிறான்

மனிதன் இருக்கிறானா ?

கள்ளமில்லா பிஞ்சு உள்ளம்

குள்ளனரிக்கூடம் நடுவே

திக்கி திணறினாள்

மனிதம் வாழுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதம் வாழுமா மனிதன் விலங்காய் மாறும் போது

மனிதம் வாழுமா என்று எங்கே தேடுவாய் மானிடா

மனிதம் வாழும் இடம் எங்கே உயிர் கொடுத்தோமோ அங்கே

மனிதம் வாழுமிடம் பெற்றவள் மடி எனும் கோவில்தான்

  • கருத்துக்கள உறவுகள்

கோவில் தான் ஆலயம் ,அது தான் உன் இதயம்

உள்ளம் எனும் ஆலயத்தில் தெய்வம் வேண்டும்

என் அன்பே வா நீ இல்லாத் மாளிகையை

பார் மகளே பார் ,உன் நினைவில் வாழ்கிறேன்

புலம் பெயர் தேசம் சென்றாலும்

புதுமைகள் பலவும் கண்டாலும்

தாய் நிலம் என்றும் வர வேண்டும்

தாய் அன்பை எனக்கு தர வேண்டும்

தர வேண்டும்

நீ

உன் பூ முகம்

என் கையில்...

தாள் மீது

கை கொண்டு

கன கவிதை

எழுதியது போதும்

உன்னிதழ் மீது

என்னிதழ் கொண்டு

எழுத வேண்டும்

சில கவிதை!

குங்குமம் உன் முகத்தில்

அள்ளி பூசியது போல்

நாணமென்ன பெண்ணே

நம்மிருவர் நெஞ்சும்

சங்கமம் ஆக

நேரம் பார்ப்பதுமென்ன?

போது மடி

உன் பொய் விளையாட்டு!

கோது மடி

என் விரல்கள்

உன் கூந்தல் தனை

நீ அருகில் வந்தால்!

ஓது மடி

என் நா

பல காதல் பா...

சம்மதமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.