Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமான டிக்கெட் எடுத்து வரலாம்... ஜாமீனில் வந்து உலக கோப்பையில் விளையாடும் வீரரை தெரியுமா?

Featured Replies

விமான டிக்கெட் எடுத்து வரலாம்... ஜாமீனில் வந்து உலக கோப்பையில் விளையாடும் வீரரை தெரியுமா?

 

டாக்கா: உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான அணியில் தேர்வு செய்யப்பட்ட வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ருபேல் ஹொசைன், நடிகை ஒருவர் கொடுத்த பலாத்கார புகாரின்பேரில் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் அந்த வழக்கில் ஜாமீன் பெற்று வந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். 19 வயதான, வங்கதேச சினிமா நடிகையான நஸ்னின் அக்தர் ஹேப்பிக்கும், அந்நாட்டின் வேகப்பந்து வீச்சாளர் ருபேல் ஹொசைனுக்கும் இடையே காதல் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், நஸ்னின், பரபரப்பு புகார் ஒன்றை காவல் நிலையத்தில் அளித்தார். அந்த புகாரில், ருபேல் தன்னை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்ததால், இருவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்ததாகவும், ஆனால் திடீரென ருபேல் திருமணம் செய்ய மறுப்பு தெரிவிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

1zceq38.jpg

பிளாக்-மெயில் இதனிடையே செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த, நஸ்னின், திருமணத்திற்கு ருபேல் சம்மதித்தால் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் ருபேல், இக்குற்றச்சாட்டை மறுத்துவந்தார். இது ஒரு பிளாக்-மெயில் என்று கூறிவந்தார்.

 

புகார் நடுவே பெயர் இதனிடையே கடந்த ஜனவரி முதல் வாரத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியம், உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான பதினைந்து வீரர்கள் பெயர் பட்டியலை அறிவித்தது. அதில் ருபேல் பெயரும் இடம் பெற்றிருந்தது.

 

சிறையில் அடைப்பு எனவே உலக கோப்பைக்கான ஆயத்த பயிற்சிகளில் ருபேல் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், அவரை கைது செய்ய கடந்த ஜனவரி 8ம்தேதி டாக்கா நகர குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த விசாரணை வரும்வரை அவர் சிறையில்தான் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது கோர்ட். இதையடுத்து ருபேல் போலீசில் சரணடைந்தார். சிறையில் அடைக்கப்பட்டார்.

 

களமிறங்கியாச்சு இந்நிலையில் ஜனவரி 11ம்தேதி கோர்ட் அவரை ஜாமீனில் வெளியே விட்டது. ஜாமீனில் வெளியே வந்த ருபேல் ஆஸ்திரேலியாவுக்கும் பயணப்பட்டு வந்தார். வங்கதேசத்துக்காக உலக கோப்பை போட்டிகளில் களமிறங்கி ஆடியும் வருகிறார் ருபேல் ஹொசைன். இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வங்கதேசத்தின் முதல் போட்டியில் 11 பேர் கொண்ட அணியில் ருபேலும் இடம்பெற்றுள்ளார். தொடக்கத்திலேயே விக்கெட்டையும் வீழ்த்தினார். மேலும் ஆப்கன் வீரர் மங்கலை அபாரமான கேட்ச் மூலம் அவுட்டும் செய்தார்.

 

நல்ல வீரர் 22 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ருபேல் 32 விக்கெட்டுகளையும், 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 69 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த சாதனைக்கு சொந்தக்காரர் ருபேல் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/bangladesh-cricketer-rubel-hossain-walks-of-jail-playing-wc-221228.html

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பி நாட்டுக்கு போகும் போது சிறையில் மீண்டும் போடுவார்களா?

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேச அணியை காலிறுதிக்கு அழைத்து சென்ற ஆனால் ருபேல் ஹொசைன் பாலியல் வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ru.jpg

இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இங்கிலாந்து வீரர்கள் இயார்ன் பெல், அடுத்து கேப்டன் மோர்கன் ஆகியோரை வீழ்த்தினார் ருபெல் ஹொசைன்.தொடர்ந்து இறுதிக்கட்டத்தில் சிக்சர் அடித்து மிரட்டிய பிராட் மற்றும் ஆண்டர்சன் ஆகியோரையும் ருபெல்தான் வீழ்த்தினார்.

வங்கதேச சினிமா நடிகையான நஸ்னின் அக்தர் ஹேப்பிக்கும், ருபேல் ஹொசைனுக்கும் இடையே காதல் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், நஸ்னின் அளித்த புகாரில்,  ருபேல் தன்னை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்ததால், இருவரும் கணவன்- மனைவி போல இணைந்து வாழ்ந்ததாகவும், ஆனால் திடீரென ருபேல் திருமணம் செய்ய மறுப்பு தெரிவிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

உலக கோப்பைக்காக தயாராகிவந்த வேளையில் ருபேல் ஹொசைன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து கடந்த ஜனவரி 11ஆம் தேதி டாக்கா நீதிமன்றம் அவரை ஜாமினில் விடுவித்தது. பின்னர் வங்கதேச அணியில் இணைந்த ருபேல் ஹொசைன்தான் இப்போது இங்கிலாந்து அணியை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

 

http://www.vikatan.com/news/article.php?module=news&aid=39525

  • கருத்துக்கள உறவுகள்

ஜாமீன் வழங்கிய நீதிபதியைக் கண்டிக்கிறோம். - இங்கிலாந்து :lol:

  • தொடங்கியவர்

திரும்பி நாட்டுக்கு போகும் போது சிறையில் மீண்டும் போடுவார்களா?

 

இனி போடமாட்டார்கள் என்றுதான் நம்புகிறேன் :D

 

10603640_1564202817198643_59456514213855


இப்படி மாட்ச் பார்ப்பதுதான் உண்மையான சந்தோசம் . :icon_mrgreen:

  • தொடங்கியவர்

4 விக்கெட் வீழ்த்தினால், ஒரு பலாத்காரம் இலவசம்? வங்கதேச பவுலருக்கு வந்த வாழ்வை பாருங்கள்!!

 

டாக்கா: உலக கோப்பையில் இங்கிலாந்தை வீழ்த்த உதவியதற்காக, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ருபேல் ஹொசைன் மீதான பாலியல் பலாத்கார வழக்கை வாபஸ் வாங்கப் போவதாக அறிவித்துள்ளார், அந்த புகாரை கொடுத்த நடிகை. உலக கோப்பை ஏ பிரிவின், முக்கியமான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை விரட்டியடித்து, காலிறுதிக்கு தகுதி பெற்றது வங்கதேசம். அந்த போட்டியில், இங்கிலாந்தின், வோக்ஸ், வங்கதேசத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கினார். அவருக்கு ஸ்டூவர்ட் பிராட் கம்பெனி கொடுத்து, வெற்றியின் அருகே இங்கிலாந்தை அழைத்துச் சென்றார்.

 

இங்கிலாந்தை சுருட்டினார் அந்த நேரத்தில்தான், 49வது ஓவரை வீச வந்தார், ருபேல் ஹொசைன். அந்த ஓவரின் முதல் பந்திலேயே ஸ்டூவர்ட் பிராடை கிளீன் பௌல்ட் ஆக்கி வெளியேற்றினார் ருபேல். கடைசி விக்கெட்டாக களமிறங்கினார் ஆன்டர்சன். ஓவரின் 2வது பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. அரங்கமெங்கும் டென்ஷன். ஓவரின் 3வது பந்தில் ஆன்டர்சனை கிளீன் பௌல்ட் ஆக்கினார் ருபேல். அவ்வளவுதான், இங்கிலாந்தின் ஆட்டம் குளோஸ்.

 

சிறப்பான பவுலிங் கடைசி இரு விக்கெட்டுகளும், ஏனோ..தானோ பந்து வீச்சில் விழவில்லை. மிகவும் லாவகமாக ஸ்விங் செய்யப்பட்ட பந்துகள் அவை. இத்தனைக்கும், அதற்கு முந்தைய ஓவரில்தான் ஸ்டூவர் பிராட் சிக்சர் பறக்கவிட்டிருந்தார். இந்நிலையில்தான், டென்ஷன் ஆகாமல், விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ருபேல் ஹொசைன்.

 

4 விக்கெட்டுகள் முன்னதாக, பெல் மற்றும், இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ஆகிய முக்கிய வீரர்களின் விக்கெட்டையும் ருபேல் வீழ்த்தி, 4 விக்கெட்டுகளை தனது சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் ருபேல் ஹொசைன், பாலியல் பலாத்கார வழக்கில் ஜாமீன் பெற்று வந்து இவ்வளவு கூலாக விளையாடினார் என்பதுதான் உண்மை.

11t4by9.jpg

நடிகை பாலியல் புகார் 19 வயதான, வங்கதேச சினிமா நடிகையான நஸ்னின் அக்தர் ஹேப்பிக்கும், ருபேல் ஹொசைனுக்கும் இடையே காதல் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், நஸ்னின், புகார் ஒன்றை காவல் நிலையத்தில் அளித்தார். அந்த புகாரில், ருபேல் தன்னை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்ததால், இருவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்ததாகவும், ஆனால் திடீரென ருபேல் திருமணம் செய்ய மறுப்பு தெரிவிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

2z70cud.jpg

சிறையில் அடைப்பு உலக கோப்பைக்கான ஆயத்த பயிற்சிகளில் ருபேல் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், அவரை கைது செய்ய கடந்த ஜனவரி 8ம்தேதி டாக்கா நகர குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த விசாரணை வரும்வரை அவர் சிறையில்தான் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது கோர்ட். இதையடுத்து ருபேல் போலீசில் சரணடைந்தார். சிறையில் அடைக்கப்பட்டார்.

 

ஜாமீனில் வெளியே வந்தவர் இந்நிலையில் ஜனவரி 11ம்தேதி கோர்ட் அவரை ஜாமீனில் வெளியே விட்டது. ஜாமீனில் வெளியே வந்த ருபேல் ஆஸ்திரேலியாவுக்கும் பயணப்பட்டு வந்தார். வங்கதேசத்துக்காக உலக கோப்பை போட்டிகளில் களமிறங்கி ஆடியும் வருகிறார். இங்கிலாந்துக்கு எதிராக 4 விக்கெட்டுகள் எடுத்த ருபேல், வங்கதேசத்தில் ஹீரோவாக கொண்டாடப்படுகிறார்.

 

நடிகை பல்டி ருபேல் மீதான கிரேஸ் காரணமாக, அவருக்கு எதிராக பாலியல் புகார் கொடுத்த நடிகையை ரசிகர்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர். ஒரு பிரபலத்தை அசிங்கப்படுத்துவதா என்று வங்கதேச மக்கள் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், வழக்கை வாபஸ் பெறப்போவதாக நஸ்னின் கூறியுள்ளார். ருபேலுக்கு எதிராக உள்ள எந்த ஆதாரத்தையும், நான் கோர்ட்டில் சமர்ப்பிக்க போவதில்லை. இந்த வழக்கை நீர்த்துப்போக செய்ய வைப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.

2rf827k.jpg

என்ன ஒரு லாஜிக் நஸ்னினின் வழக்கறிஞர், டெபுல் டேய் கூறுகையில், "நாட்டுக்காக விளையாடி வரும் ஒரு வீரருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, அவரது ஆட்டத்திறனை பாதிக்க காரணமாக இருந்துவிட கூடாது என்பதற்காக, இந்த வழக்கை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம்" என்றார். கிரிக்கெட் வீரர் ஒருவர் சிறப்பாக ஆடியதற்கும், அவர் செய்த குற்றச்செயலுக்கும் என்ன தொடர்பு என்பது நடுநிலைவாதிகளுக்கு புரியவில்லை. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மட்டுமே, பிரபலங்களுக்கு ஒரு சட்டம், சாமானியர்களுக்கு ஒரு சட்டம் என்பது போன்ற மனநிலை மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது என்று சாடுகின்றனர் சமூக நோக்கர்கள். அப்போ.. 4 விக்கெட் எடுத்தா, ஒரு பலாத்காரம் இலவசம் என்று சொல்ல வாறீங்க, அப்படித்தானே நஸ்னின் மேடம்?

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/rape-claim-against-bangladesh-world-cup-hero-rubel-dropped-222503.html

  • கருத்துக்கள உறவுகள்

ஹப்பியும் happy ஆ இருந்துபோட்டு போட்ட பொய்வழக்குதானே.. :unsure: பரவாயில்லை.. :lol::D

  • 2 months later...
  • தொடங்கியவர்

பங்களாதேஷ் பந்துவீச்சாளர் ருபெல் விடுதலை
 

 

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்­னணி வேகப்­பந்து வீச்­சா­ள­ராக வளர்ந்து வரு­பவர் ருபெல் ஹொசைன். இவர் தன்னை திரு­மணம் செய்­வ­தாக ஆசை­வார்த்தை கூறி ஏமாற்றி விட்டார் என்று நஸ்னின் அக்தார் ஹேப்பி என்ற நடிகை முறைப்பாடு அளித்­தி­ருந்தார்.

2l8jal5.jpg

இந்த வழக்கில் ருபெல் மீதான குற்­றச்­ சாட்­டுக்கு எந்­த­வி­த­மான ஆதாரமும் இல்லையென அவர் விடு­தலை செய்­யப்­பட்டார்.

 

என்னை திரு­மணம் செய்­வ­தாக பொய் வாக்­கு­றுதி கொடுத்து ஏமாற்றிவிட்டார் என்று கடந்த டிசம்பர் மாதம் ஹேப்பி குற்றம் சாட்­டி­யி­ருந்தார். இதனால் அவுஸ்­தி­ரே­லி­யாவில் நடை­பெற்ற உல­கக்கிண்ணத்தில் அவர் விளை­யா­டு­வாரா? என்ற கேள்வி எழுந்­தது. ஆனால்இ பங்களாதேஷ் அரசு அவரை அவுஸ்­தி­ரே­லியா செல்ல அனு­ம­தித்­தது. அந்த அணி காலி­றுதிப் போட்­டிக்கு தகுதி பெற ருபெல் முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/articles/2015/05/22/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.