Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லண்டனுக்குச் செல்கிறார் மைத்திரி – மகிந்தவுக்கு கிடைக்காத வரவேற்புக்கு மகாராணி ஏற்பாடு

Featured Replies

லண்டனுக்குச் செல்கிறார் மைத்திரி – மகிந்தவுக்கு கிடைக்காத வரவேற்புக்கு மகாராணி ஏற்பாடு FEB 28, 2015 | 0:36by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

Maithripala_Sirisena-300x200.jpgபிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் அழைப்பை ஏற்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் லண்டனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

வரும் மார்ச் 7ம் நாள் பிரித்தானியா செல்லும் சிறிலங்கா அதிபர், லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் நடைபெறும், கொமன்வெல்த் வார கொண்டாட்டங்களில் பங்கேற்கவுள்ளார்.

சிறிலங்கா அதிபரே கொமன்வெல்த் அமைப்பின் தலைவராக இருக்கின்றார்.

இந்தநிலையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, தனிப்பட்ட பார்வையாளராகச் சந்திக்க பிரித்தானிய மகாராணி இணக்கம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் ஒருவரை இரண்டு பத்தாண்டுகளுக்குப் பின்னர், தனிப்பட்ட பார்வையாளராக பிரித்தானிய மகாராணி சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், அவருக்கு பிரித்தானிய மகாராணி மதியபோசன விருந்து அளித்தும் கௌரவிக்கவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனையும், சிறிலங்கா அதிபர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியாவில் 4 நாட்கள் தங்கிருக்கும், மைத்திரிபால சிறிசேன அங்கு பல்வேறு தரப்பினரைச சந்திக்கவுள்ளதாக, சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/02/28/news/4013

 

  • கருத்துக்கள உறவுகள்

960b99c59a48da9edca9b74a8092fc85.jpg

 

ஈழத் தமிழர்கள் அனைவரும்... தமது தேசியக் கொடியான.... "புலிக் கொடியுடன்" சென்று....
மைத்திரி - மகாராணி.... சந்திப்பை உற்சாகப் படுத்தி,  கரகோஷம் எழுப்ப வேண்டும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் புலிக்கொடியை எடுத்து ஆட்டினால் பல முன்னாள்களுக்கு காற் சட்டை பயத்தில் இப்பவும் நனையும்.  (புலி அழிக்கப்படவேனும் என்று மே 18 க்கு முதல் பொக்ஸ் வடிவ தேள் வடிவ கட்டுரை வரைந்த ஆசிரியர் இதில் முக்கியமானவர் )வரிசையில் வந்து புலி கொடி தூக்ககூடாது என்று எங்கலுக்கு பக்கம் பக்கமாய் பாடம் எடுப்பினம் பாருங்கோ .  :D

960b99c59a48da9edca9b74a8092fc85.jpg

 

ஈழத் தமிழர்கள் அனைவரும்... தமது தேசியக் கொடியான.... "புலிக் கொடியுடன்" சென்று....

மைத்திரி - மகாராணி.... சந்திப்பை உற்சாகப் படுத்தி,  கரகோஷம் எழுப்ப வேண்டும்.

 

அப்படியே புலிகொடியோட நிக்கிற நாங்கள் தான் உண்மையான ஈழத்தமிழர் என்று மகாராணியாருக்கு விள‌ங்கப்படுத்துங்கோ. இல்லாட்டி நாட்டில மைத்திரிக்கு பெருவாரியா வாக்களிச்ச மக்கள் தான் ஈழத்தமிழர் என்று மகாராணியர் கொன்பியூஸ் ஆகிடுவா.   :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே புலிகொடியோட நிக்கிற நாங்கள் தான் உண்மையான ஈழத்தமிழர் என்று மகாராணியாருக்கு விள‌ங்கப்படுத்துங்கோ. இல்லாட்டி நாட்டில மைத்திரிக்கு பெருவாரியா வாக்களிச்ச மக்கள் தான் ஈழத்தமிழர் என்று மகாராணியர் கொன்பியூஸ் ஆகிடுவா.   :icon_mrgreen:

 

அட... மகாராணி,

இவ்வளவு.... முட்டாளா... இருப்பாங்கன்னு, நாங்க நினைக்கவேயில்லை.

ஒங்கட  ஐடியாவுக்கு, தாங்ஸ்.... தெனாலி. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மைத்திரி லண்டனுக்கு வரும்போது மகாராணியின் சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்ப்பதைவிட, வீதியோர புலிக்கொடி தமிழரின் தரிசனத்தையே அதிக ஆவலுடன் எதிர்பார்த்து வருவார்.

 

காரணம், மகாராணியின் சந்திப்பு நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளை பெற்றுத் தராது.. 7 மாகாணங்களில் மகிந்தாவுக்கு விழுந்த வாக்குகளை மைத்திரிக்கு புலிக்கொடி பெற்றுத் தரும்.

 

மைத்திரி சிறந்த அரசியல் மதியூகியாக இருந்தால், தேர்தலுக்கு முன் மீண்டும் ஒருமுறை விஜயம் செய்து புலிக்கொடியசைப்பு பெற்றுச் சென்று தேர்தலை நடத்துவார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் உள்ள மக்கள் தேர்தலில் ஓட்டுப் போட்டு மைத்திரியை தெரிவு செய்து வைத்திருக்க புலத்தில் உள்ளோர் புலிக் கொடியோடு போய் மைத்திரியை துரத்த வேண்டும். எப்படி இருக்கும்

ஊரில. உள்ள மைத்திரிக்கும் வாக்களித்த மக்களும் சந்தர்பபம் கிடைத்தால் புலிக்கொடிதான் ஏற்றுவார்கள். அது தான் ஜதார்ததம். எஜமான விசுவாசத்தில் இங்கு சில ஜென்மங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரில் உள்ள மக்கள் தேர்தலில் ஓட்டுப் போட்டு மைத்திரியை தெரிவு செய்து வைத்திருக்க புலத்தில் உள்ளோர் புலிக் கொடியோடு போய் மைத்திரியை துரத்த வேண்டும். எப்படி இருக்கும்

இதுவும் மைத்திரியை ஜெயிக்க வைப்பதற்கே.

 

சிங்களப் பகுதிகளில் மகிந்தவுக்கு, மைத்திரியை விட அதிக வாக்குகள் விழுந்தது அல்லவா? அதை மைத்திரியின் கட்சிக்கு திருப்புவது என்றால், மைத்திரி வெளிநாடுகளில் புலிக்கொடியுடன் எதிர்க்கப்பட வேண்டும்.

 

அது போதும், 7 மாகாணங்களில், மகிந்தாவின் வோட்டுக்களை மைத்திரியின் பக்கம் திருப்புவதற்கு.

 

திருப்பதியில் வைகோ காலை வாரிவிட்டார். லண்டனில் அந்த வாய்ப்பு மைத்திரிக்கு கிடைக்கும். ஜனாதிபதியின் மீடியா யூனிட்டே, புலிக்கொடி அசைப்புகளை படம் பிடித்து சிங்கள மீடியாக்களுக்கு கொடுக்கும்.

 

தேவை ஏற்பட்டால், தேர்தலுக்கு முன்பும் மைத்திரி ஒருமுறை ஐரோப்பா வந்து புலிக்கொடியசைப்புகளை பெற்றுத் திரும்புவார். அதன் பின்னரே, நாடாளுமன்ற தேர்தலை நடத்துவார்.

 

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியை ஜெயிக்க வைத்தது, இலங்கையில் உள்ள தமிழர் வாக்குகள்.

 

நாடாளுமன்ற தேர்தலில், தமிழர் வாக்குகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு விழுந்துவிடும்.  இதனால், இலங்கையில் தமிழ் வாக்குகளை விட சிங்கள வாக்குகளையே கவர வேண்டும்.

 

சிங்கள வாக்குகளை கவர மைத்திரிக்கு உதவ போகிறவர்கள், வெளிநாட்டு தமிழர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் உள்ள மக்கள் தேர்தலில் ஓட்டுப் போட்டு மைத்திரியை தெரிவு செய்து வைத்திருக்க புலத்தில் உள்ளோர் புலிக் கொடியோடு போய் மைத்திரியை துரத்த வேண்டும். எப்படி இருக்கும்

My3 தமிழர்களுக்கு செய்வதற்கு நிறைய விடயங்கள் இருக்கிறது . ஆகவே கொடியோட போய் துரத்தலாம்

 தமிழ் மக்களுக்கு அவர்களின் பூர்வீக தாயகத்தில் அவர்களுக்கு உரித்தான உரிமையை வழங்கப்போவதாக கூறினாலும் சிங்களவர்கள் மைத்திரிக்கு வாக்களிக்கமாட்டார்கள். அது மைத்திரிக்கே  தெரிந்தே கடந்த தேர்தலில் தமிழ் கட்சிகளின் ஆதரவை அவர் கேட்கவில்லை. எதிர் வரும்  பாராளுமன்ற தேர்தலிலும் தமிழ் மக்களுக்கு அவர்களுக்கு உரித்தான உரிமையை வழங்குகவதாக மறந்தும் கூறமாட்டார்.  ஏனென்றால் அப்படி கூறினால் சிங்களவரின் வாக்குகள் கிடைக்காது என்பது அவருக்கு தெரியும். அந்த அளவுக்கு தமிழ் மக்களுக்கு எதிரான துவேசம் சிங்கள மக்களுக்கு இருக்கிறது. இதுவே கள ஜதார்த்தம். இங்கு புலிக்கொடி காட்டுவதால் தான் மைத்திரிக்கு வாங்கு விழப்போகிறது என்று வாய்சவடால் விடுகிறார்கள் சில தமிழ் நாயக்காக்கள்.  அங்கு நிலத்தில் வாழும்  தமிழரின் உரிமையை வழங்குவதாக வெளிப்படையாக கூறி மைத்திரியால் சிங்கள மக்களின் வாக்குகளை திரட்டு முடியுமா?   அவ்வாறு முடியாது என்பது தான் உண்மையான பிரச்சனை. அதை மறைக்க சிங்கள பேரினவாதிகள் புலிப்பூச்சாண்டி காட்டுவது போல் இப்போது சில தமிழ நாயக்காக்களும் கூற தொடங்கி உள்ளனர்.

ஊரில. உள்ள மைத்திரிக்கும் வாக்களித்த மக்களும் சந்தர்பபம் கிடைத்தால் புலிக்கொடிதான் ஏற்றுவார்கள். அது தான் ஜதார்ததம். எஜமான விசுவாசத்தில் இங்கு சில ஜென்மங்கள்.

 

சரியா சொன்னீங்க ரிங்கோ அங்கிள். இந்த ஒட்டுக்குழுக்களுக்கு வேற வேலையே இல்லை. நாங்கள் நாட்டு நிலவரம் யதார்த்தம் எதை பற்றியும் சிந்திக்க மாட்டம். கொடி தூக்குவது ஒன்றே எமது லட்சியம். 2009ல உணர்வுபூர்வமா மக்களின் இழப்புகளை முன்வைத்து "stop the war" என்று நடந்து கொண்டிருந்த போராட்டங்களையே நாங்க புலிகொடியோட வந்து "we want tamil eelam..our leader prabhakaran" எண்டு மாத்தினாங்கள். கடைசியில வேற்று நாட்டுக்காரன் இது terrorist protest எண்டிட்டு தன்னுடைய வேலையை பார்க்க போய்டான் அது வேற விடயம். அப்பவே எதுக்கும் கலங்காத நாங்க இப்பவா மாற போறம். நாடும் நாட்டு மக்களும் எக்கேடு கெட்டு போனாலும் எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் கொடி தூக்குவம் மைத்திரியை ஹீத்த்ரோவில பின் வாசல் வழியா திரத்தி அடிப்பம் அதை வைச்சு 6 மாசம் காலத்தை ஓட்டுவம். இனத்துரோகி சம்பந்தர் சுமந்திரன் கோஷ்டியின் படங்களும் இச்சந்தர்ப்பத்தில் எரிக்கப்பட வேண்டும் என்று தலைமை பீடத்திடம் இத்தருணத்தில் நான் வேண்டுகோள் வைக்கிறேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.