Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரி.என்.ஏ.யின் தடுமாற்றங்கள் - மைத்திரியின் நூறுநாள் வேலைத்திட்டங்கள்: - கலந்துரையாடல் சேனன் - சோதிலிங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரி.என்.ஏ.யின் தடுமாற்றங்கள் - மைத்திரியின் நூறுநாள் வேலைத்திட்டங்கள்: - கலந்துரையாடல் சேனன் - சோதிலிங்கம் photo.png 

[sunday 2015-03-15 19:00]
tna-and-mythree-150315-200-seithy-news.j

ரி.என்.ஏ.யின் தடுமாற்றங்கள் - மைத்திரியின் நூறுநாள் வேலைத்திட்டங்கள்.. என்ற தொனிப்பொருளில் ஊடகவியலாளாகள் திரு - சேனன் மற்றும் திரு - சோதிலிங்கம் ஆகியோர் ஜரோப்பிய தொலைக்காட்சியில் நடாதிய விமாசனம் மற்றும் கலந்துரையாடலின் ஒளிப்பதிவின் காட்சிகள் கீழே தரப்படகிறது..

 

 

 

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=128349&category=TamilNews&language=tamil


 

போராட்டம் மூலமே தமிழ் மக்கள் தங்களது  உரிமைகளை வென்றெடுக்க முடியுமானால்  ஆயிரக்கணக்கான போராட்டங்களை – மக்களைத் திரட்டிச் செய்யப்பட்ட போராட்டங்களால் இதுவரை சாதித்தது என்ன?

மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்த வேண்டும் என்று இலண்டனில் இருந்து கொண்டு சொல்லுகிற சோதிலிங்கத்துக்கு என்ன அருகதை இருக்கிறது?

சுமந்திரன் நியமன நா.உ என்பதால் அவருக்கு தமிழ்மக்களது உரிமை பற்றி பேச அருகதை இல்லை என்றால் இவருக்கு மட்டும் அந்த உரிமை எங்கிருந்து வருகிறது?

சிறிசேனாவுக்கு நிபந்தனையற்ற அல்ல நிபந்தனையோடு கூடிய ஆதரவைத்தான்  வழங்கினோம்.

அகிம்சைப் போராட்டம் தோற்ற பின் ஆயுதப் பேராட்டம் தோற்றபின் இன்று சம்பந்தர் இராஜதந்திரப் போரைக் கையில் எடுத்துள்ளார். அதற்கு எமது மக்கள் மட்டுமல்ல உலக நாடுகளும் ஆதரவு நல்கி வருகின்றன.

2010 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ததேகூ க்கு கிடைத்த ஆதரவு 43.85% (65,119 வாக்குகள்).

2012 இல் மூவின மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் ததேகூ க்கு கிடைத்த ஆதரவு 30.50% (193,827 வாக்குகள்)

2013 வட மாகாண சபைத் தேர்தலில் ததேகூ கிடைத்த ஆதரவு 78.48(353,595 வாக்குகள்).

 

2010 சனாதிபதி தேர்தலில் வட மாகாணத்தில் ததேகூ ஆதரித்த சரத் பொன்சேகா பெற்ற வாக்குகள் 113,877 (63.84% )

2015 சனாதிபதி தேர்தலில் வட மாகாணத்தில் ததேகூ ஆதரித்த சிறிசேனா பெற்ற வாக்குகள் 394,991 (75.82% )

ஒவ்வொரு தேர்தலிலும் ததேகூ இன் வாக்குப் பலம் அதிகரித்து வந்துள்ளது.

வேறு வழியில்லாமல் மக்கள் த்தேகூ க்கு போடுகிறார்கள் என்ற வாதம் எடுபடாது. காரணம் ஒரு நாடு இரண்டு தேசங்கள் கேட்கும் கஜேந்திரகுமார் அவர்களின் கட்சி புலம்பெயர்ந்த சிலரது பகீரத பிரயத்தனத்துக்கு பின்னரும் கட்டுக் காசை இழந்தது. இந்தக் கட்சி யாழ்ப்பாணக் குடாநாடு கடந்து அரசியல் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்கு 13 ஏ திருத்த சட்ட திருத்தத்துக்கு அப்பால் அரசியல் தீர்வு காண வேண்டும் என உறுதிபடக் கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரம்  கொடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

இவையெல்லாம் சம்பந்தரின் இராசதந்திரப் போராட்டத்துக்கு கிடைத்த சிறு வெற்றி.

இபிடிபி நடத்தியது சரணாகதி அரசியல். நாம் செய்வது இணக்க அரசியல். இரண்டுக்கும் வேற்றுமை உண்டு.

இணக்க அரசியல் நடத்திய டக்லஸ் தேவானந்தாவால்  வலிகாமம் வடக்கில் ஒரு அங்குல நிலத்தைத்தானும் மீட்க முடியவில்லை.

இப்போது அரசு 1,000  ஏக்கர் நிலத்தை முதல் கட்டமாக மக்களுக்கு கொடுக்க முன்வந்துள்ளது.

கொழும்பில் இருக்கும் சுமந்திரனுக்கு அரசியல் பேச தகுதியில்லை என்று சோதிலிங்கம் சொல்வாராக இருந்தால் இலண்டனில்

வாழும் அவருக்கு அந்தத் தகுதி அடியோடு இல்லை.  

தீர்மானத்தை கொளுத்தினவர்கள் தீர்மானத்தின் அடிப்படையில் வர இருந்த அறிக்கை ஒரு முறை ஒத்திப் போட்டதற்காக வானத்துக்கும் பூமிக்கும்

துள்ளிக் குதிப்பது  ஏன் என்று சுமந்திரனது கேள்வி அப்புக்காத்து கேட்கும் கேள்வியல்ல அது ஒரு யதார்த்தமான யோக்கியமான அரசியல் கேள்வி.

செத்த வீட்டுக்கு வராதவன்  எந்த முகத்தோடு அந்திரட்டிக்கு வருவான்?

இவர்களுக்கு சுமந்திரன்தான் துணிந்து பதில் இறுக்கிறார்.

அவர் மீது இவர்கள் சேறு பூசுவதற்கு இதுதான் காரணம்.

அவரை  நேர்காணல் கண்டவர் யார்? பார்க்க பரிதாபமாக இருந்தது! அரசியலில் பெரிய அப்பாவியாக இருக்கிறார்!

 

ததேகூ இல்லை. சம்பந்தர் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியையும் அளந்தே எடுத்து வைக்கிறார்.

 

சம்பந்தர் 53 ஆண்டு கால அரசியல்வாதி.  நல்ல வருவாய் வந்து கொண்டிருந்த தனது சட்டத்தரணி தொழிலை விட்டுவிட்டுத்தான் 1977 இல் அரசியலில் நுழைந்தவர்.

அதற்குக் காரணமாக இருந்தவர்  மறைந்த அ. அமிர்தலிங்கம் அவர்கள்.

எனவே அவர் பஞ்சத்து ஆண்டியல்ல.

 

சோதிலிங்கம் சொன்னதற்கு  அவரை நேர்காணல் கண்டவர் கோயில் மாடுமாதிரி தலையை ஆட்டிக் கொண்டே இருந்தார். பார்க்கப் பரிதாபமாக இருந்த்து.

 

தடுமாற்றம் ததேகூ அல்ல.  ரிரிஎன் தொலைக்காட்சிக்குத்தான்.  இதனை எத்தனை கோயில்களில் சத்தியம் செய்யக் கேட்டாலும் நான்  அணியமாக இருக்கிறேன்!

 

நக்கீரன்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்பிராயம் இருக்கும் அது சகஜம் தானே? 

 

கூட்டமைப்பை விட்டு விட்டால் பேசுவதுக்கு ஒன்றும் இல்லாமல் கூட இருக்கலாம். 

 

 

எனக்கு ஒரு சந்தேகம், சுமந்திரன் தேசிய பட்டியலில் வந்தவர் இருந்தாலும் அவருடைய நியமனம் சட்டரீதியானது தான். கூட்டமைப்புக்கு கிடைத்த வாக்கு விகிதாசாரத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட தேசியபட்டியல் ஆசனத்திலேயே இவருக்கும் நியமனம் வழங்கப்பட்டது. 

 

இது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும், சந்திரிக்கா கதிர்காமரை வைத்து எவ்வளவோ செய்தா அதெல்லாம் பின்கதவால் என்று சொல்ல முடியுமா? 

 

அரசியல் கட்சிகளை விமர்சிக்கும் உரிமை மக்களுக்கும் ஊடகங்களுக்கும் உண்டு அனால் தங்களின் தாளத்துக்கும் அந்த அரசியல் கட்சிகள் ஆடவேண்டும் நினைப்பது தவறு. 

 

 

 

 

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்பிராயம் இருக்கும் அது சகஜம் தானே? 

 

கூட்டமைப்பை விட்டு விட்டால் பேசுவதுக்கு ஒன்றும் இல்லாமல் கூட இருக்கலாம். 

 

 

எனக்கு ஒரு சந்தேகம், சுமந்திரன் தேசிய பட்டியலில் வந்தவர் இருந்தாலும் அவருடைய நியமனம் சட்டரீதியானது தான். கூட்டமைப்புக்கு கிடைத்த வாக்கு விகிதாசாரத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட தேசியபட்டியல் ஆசனத்திலேயே இவருக்கும் நியமனம் வழங்கப்பட்டது. 

 

இது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும், சந்திரிக்கா கதிர்காமரை வைத்து எவ்வளவோ செய்தா அதெல்லாம் பின்கதவால் என்று சொல்ல முடியுமா? 

 

அரசியல் கட்சிகளை விமர்சிக்கும் உரிமை மக்களுக்கும் ஊடகங்களுக்கும் உண்டு அனால் தங்களின் தாளத்துக்கும் அந்த அரசியல் கட்சிகள் ஆடவேண்டும் நினைப்பது தவறு. 

 

அடுத்த தேர்தலில்  சுமந்திரன் மக்கள் முன் தோன்றி வாக்குக்கெட்டு வென்று காட்டணும்

அதன் பின் எல்லாம் சபமாக முடியும்

நேற்றும் நாடு கடந்த அரசின் புத்தக வெளியீட்டுக்கு  போக கிடைத்தது  அங்கும் பேராசிரியர் ராமு மணிவண்ணன்  அவர்கள்  திராவிட  அரசியல் வஞ்சகம்  செய்தது  என்றும் புதிய  அரசியல்  களமும் தலைமையும்  தமிழகத்துக்கு  தேவை  என்றும்......

 

மற்றும் கூட்டமைப்பு  ஒரு  மண்  குதிரை  என்றும் நம்பி  கரைவதாக  பேசிக்கொண்டு  இருந்தார்  ...பின்னர்  தமிழரிடம்  தன்மான  அரசியல்  இருப்பதாகவும்  நெகிழ்ச்சி  அரசியல்  இல்லை  எனவும்  அவை  சிங்களத்திடம்  தராளமா  இருப்பதாகவும்  தேவைக்கு  ஏற்றால்  போல்  வளைத்து  கொள்ளும்  சிங்களத்தின்  சாணக்கியம் இருப்பது   போல  தமிழ்  தலைவர்கள் இல்லை என்று  விமர்சித்தார் .....

 

எல்லாம்  கேட்டுட்டு  இருந்த நான்  கேள்வி  நேரத்தில் அவரிடம்  கேள்வி  எழுப்பினேன் ..

 

ஒன்று .........எந்த கட்சி தமிழ்நாட்டில்  ஆட்சி  அமைத்தாலும் இந்திய  இறையாண்மை மிஞ்சி  அவர்களால்  என்ன  செய்திட  முடியும் .

 

இரண்டு ......நீங்கள்  கூறும்  இந்த தன்மான  அரசியல்  விட்டு  நெகிழ்ச்சி  அரசியல் கூட்டமைப்பு  செய்தால்  அதை  துரோக அரசியலா பார்ப்பதும் மண்குதிரை  என்பது  முரண் அல்லவா ....

 

 

 

இந்த  இரண்டு  கேள்விக்கும்  அவர் மாற்றம்  வரும் கால சுழற்ச்சியில்  என்றார் அப்பொழுது  இந்தியா மாறி  ஆகும் தமிழகம்  உங்களுடன்  இணைந்து பயணிக்கும் என்றார் ......

 

ஆக எடுத்து  முழங்க மட்டும்  தெரியுது எங்களிடம்  தீர்வுக்கான  எந்த  ஒரு  பொறிமுறையும்  இல்லை ஆளையாள்  போட்டு  விமர்சிப்பது  துரோகி  பட்டம்  கொடுப்பதிலும்  தான்  குறியா  உள்ளோம் .

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலில்  சுமந்திரன் மக்கள் முன் தோன்றி வாக்குக்கெட்டு வென்று காட்டணும்

அதன் பின் எல்லாம் சபமாக முடியும்

 

விசுகு, விகிதாசார தேர்தலில்.... பட்டியலில், முன்னுக்கு உள்ளவரே.... வென்றவராவார்.

  • கருத்துக்கள உறவுகள்

புலி இருந்த போது ராம் ராஜுடன் சேர்ந்து தமிழர் போராட்டம் அழிய தன்னாலான அத்தனை விசம பிரச்சாரத்தையும் TBCயில் செய்தவர்தனே இந்த சோத்ஜிலிங்கம்?

இந்த ஓநாய்க்கு ஏன் ஆடுகள் மீது திடீர் கரிசனை.

நேற்றும் நாடு கடந்த அரசின் புத்தக வெளியீட்டுக்கு  போக கிடைத்தது  அங்கும் பேராசிரியர் ராமு மணிவண்ணன்  அவர்கள்  திராவிட  அரசியல் வஞ்சகம்  செய்தது  என்றும் புதிய  அரசியல்  களமும் தலைமையும்  தமிழகத்துக்கு  தேவை  என்றும்......

 

மற்றும் கூட்டமைப்பு  ஒரு  மண்  குதிரை  என்றும் நம்பி  கரைவதாக  பேசிக்கொண்டு  இருந்தார்  ...பின்னர்  தமிழரிடம்  தன்மான  அரசியல்  இருப்பதாகவும்  நெகிழ்ச்சி  அரசியல்  இல்லை  எனவும்  அவை  சிங்களத்திடம்  தராளமா  இருப்பதாகவும்  தேவைக்கு  ஏற்றால்  போல்  வளைத்து  கொள்ளும்  சிங்களத்தின்  சாணக்கியம் இருப்பது   போல  தமிழ்  தலைவர்கள் இல்லை என்று  விமர்சித்தார் .....

 

எல்லாம்  கேட்டுட்டு  இருந்த நான்  கேள்வி  நேரத்தில் அவரிடம்  கேள்வி  எழுப்பினேன் ..

 

ஒன்று .........எந்த கட்சி தமிழ்நாட்டில்  ஆட்சி  அமைத்தாலும் இந்திய  இறையாண்மை மிஞ்சி  அவர்களால்  என்ன  செய்திட  முடியும் .

 

இரண்டு ......நீங்கள்  கூறும்  இந்த தன்மான  அரசியல்  விட்டு  நெகிழ்ச்சி  அரசியல் கூட்டமைப்பு  செய்தால்  அதை  துரோக அரசியலா பார்ப்பதும் மண்குதிரை  என்பது  முரண் அல்லவா ....

 

 

 

இந்த  இரண்டு  கேள்விக்கும்  அவர் மாற்றம்  வரும் கால சுழற்ச்சியில்  என்றார் அப்பொழுது  இந்தியா மாறி  ஆகும் தமிழகம்  உங்களுடன்  இணைந்து பயணிக்கும் என்றார் ......

 

ஆக எடுத்து  முழங்க மட்டும்  தெரியுது எங்களிடம்  தீர்வுக்கான  எந்த  ஒரு  பொறிமுறையும்  இல்லை ஆளையாள்  போட்டு  விமர்சிப்பது  துரோகி  பட்டம்  கொடுப்பதிலும்  தான்  குறியா  உள்ளோம் .

  :lol:  :D  :lol: இப்பிடி நிறைய வித்துவான்கள் இருக்கினம்... மைக்கும் மேடையும் கிடைத்தால் போதும் நல்லா வாசிப்பார்கள். 

விசுகு, விகிதாசார தேர்தலில்.... பட்டியலில், முன்னுக்கு உள்ளவரே.... வென்றவராவார்.

 

தேசியபட்டியல் வந்தாலென்ன தேர்ந்தேடுத்தாலென்ன... கட்சி ஒன்றுக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் கிடைக்கும் நியமன உறுப்பினரும் மக்கள் பிரதிநிதியே. நேரடியாக தேர்ந்தடுக்காவிட்டாலும் அது கட்சியின் தேர்வு. 

 

சிறி, விகிதார தேர்தல் மாத்திரம் இல்லை எந்த தேர்தலிலும் முன்னுக்கு உள்ளவரே தேர்ந்தெடுக்கபடுவார்.

பின்னுக்கு வாரர்களை எனக்கு தெரிந்து எந்த தேர்தல் முறைகளிலும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.  :D

  • கருத்துக்கள உறவுகள்

தேசியபட்டியல் வந்தாலென்ன தேர்ந்தேடுத்தாலென்ன... கட்சி ஒன்றுக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் கிடைக்கும் நியமன உறுப்பினரும் மக்கள் பிரதிநிதியே. நேரடியாக தேர்ந்தடுக்காவிட்டாலும் அது கட்சியின் தேர்வு. 

 

சிறி, விகிதார தேர்தல் மாத்திரம் இல்லை எந்த தேர்தலிலும் முன்னுக்கு உள்ளவரே தேர்ந்தெடுக்கபடுவார்.

பின்னுக்கு வாரர்களை எனக்கு தெரிந்து எந்த தேர்தல் முறைகளிலும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.  :D

 

இதென்ன கரைச்சலாய்... கிடக்கு, சூறாவளி. :D 

விகிதாசார தேர்தலில்.... உதாரணத்துக்கு அனந்தி சசிதரனின் பெயரை கடைசியாய் போட்டு,

அல்லக்கை, கல்லுளி மங்கன்... சுமந்திரன் பெயரை முதலில் போட்டால்....

அந்தக் கட்சியில் போட்டியிட்ட அனந்தியின் மக்கள் வாக்குகளை வைத்து 10 வாக்கு எடுத்த சுமந்திரன், பாராளுமன்றத்துக்குள் நுழைந்து..... விடுவார். அதை வைத்து... சுமந்திரனுக்கு, மக்கள் வாக்குப் போட்டு பாராளுமன்றம் போய்... நாத்தல் வேலை பார்க்க, நாம் அனுமதிக்க முடியுமா? :icon_idea:

இதென்ன கரைச்சலாய்... கிடக்கு, சூறாவளி. :D 

விகிதாசார தேர்தலில்.... உதாரணத்துக்கு அனந்தி சசிதரனின் பெயரை கடைசியாய் போட்டு,

அல்லக்கை, கல்லுளி மங்கன்... சுமந்திரன் பெயரை முதலில் போட்டால்....

அந்தக் கட்சியில் போட்டியிட்ட அனந்தியின் மக்கள் வாக்குகளை வைத்து 10 வாக்கு எடுத்த சுமந்திரன், பாராளுமன்றத்துக்குள் நுழைந்து..... விடுவார். அதை வைத்து... சுமந்திரனுக்கு, மக்கள் வாக்குப் போட்டு பாராளுமன்றம் போய்... நாத்தல் வேலை பார்க்க, நாம் அனுமதிக்க முடியுமா? :icon_idea:

 

சிறி, எனக்கு சரியா புரியலை.

 

முன்னுக்கு பின்னுக்கு இருந்தாலும், தேர்தலில் வெல்வதாக இருந்தால் அதிமான வாக்குகளை பெறவே வேண்டும். 

இலங்கையின் தற்போதைய தேர்தல் முறையில் சிருகட்சிகளுகும் சந்தர்ப்பம் கிடைக்குமே தவிர யாருடை தொழிலும் யாரம் பயணம் செய்ய முடியாது.

 

அனந்தியும் சுமந்திரனும் ஒரே தொகுதியில் கேட்பதுக்கான சந்தர்ப்பங்கள் குறைவு ஆகவே இருவரும் வெல்லலாம் அலது ஒருவர் வெல்லாம் அனாலும் ஒருவருடைய வெற்றி இன்னுருத்தரின் தோல்விக்கு நிச்சயம் காரணமாக இராது.

தமிழ்சிறி நீ்ங்கள் கூறுவது விகிதாசார தேர்தல் முறை அறிமுகபடுத்த போது இருந்த நிலை. இலங்கையில் விகிதாசார தேர்தல் அறிமுகபடுத்த பட்ட போது கட்சிக்களுக்கு மட்டும் தான் வாக்களிக்கலாம். கட்சியில் பட்டியலில்  முன்னே இருப்பவர் தெரிவு செய்யபடும் நிலை இருந்தது. அதன் பின்னர் தேர்தல் சட்டத்தில்  திருத்தம் செய்யபட்டு கட்சிக்கு வாக்களிப்பதுடன் தாம் விரும்பிய வேட்பாளரை தேர்வு செய்யும் முறை அமுலுக்கு வந்தது. அதன் பின்னர் அதிக வாக்குகள் பெறும் வேட்பாளரே தெரிவு செய்யபடுவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.