Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரத் பொன்சேகாவிற்கு இந்தியாவில் உயர் விருது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
fonseka-award-200315-200-seithy.jpg

பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு உயர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெறும் 2015 பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் இலங்கை சார்பில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி சேனக ஹரிபிரிய டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

   

இந்த மாநாட்டில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக விருதினை இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார். இந்தியாவினால், வருடாந்தம் நடத்தப்படும் இந்த பாதுகாப்பு மாநாட்டில் உலகில் பல நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு சம்பந்தமான பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

 

பயங்கரவாதம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், பயங்கரவாதத்தை தோற்கடித்த நாடுகளின் அனுபவங்கள் என்பன இந்த மாநாட்டில் பரிமாறிக்கொள்ளப்படும். இந்திய உள்துறை அமைச்சின் ஏற்பாட்டில், நடத்தப்படும் இந்த மாநாட்டை இந்திய சர்தார் பட்டேல் பொலிஸ் பல்கலைக்கழகம், ஜோதப்பூர் பாதுகாப்பு மற்றும் இந்திய குற்றவியல் கற்கை பிரிவு ஆகியவை ஒழுங்கு செய்துள்ளன.

 

இந்த மாநாட்டில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோஹர் பரிகர், இந்திய வெளிவிவகார இணையமைச்சர் வீ.கே. சிங், அமெரிக்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ், கிரீஸ், சேர்பியா, இத்தாலி, இஸ்ரேல், நேபாளம், ரஷ்யா ஆகிய நாடுகளின் பாதுகாப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

 

பயங்கரவாதம் அடக்குவதில் இலங்கை பெற்ற அனுபவம், வெற்றியை பெற்ற விதம் குறித்து சரத் பொன்சேகா மாநாட்டில் விளக்கியுள்ளார். அத்துடன் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை படையினருக்கும் இடையிலான ஒற்றுமை, வேற்றுமைகள், புலிகளை தோற்கடிக்க இலங்கை பாதுகாப்பு தரப்பினர் கையாண்ட தந்திரோபாயங்கள், வன்னி இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்தும் சரத் பொன்சேகா தெளிவுப்படுத்தியுள்ளார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

fonseka-award-200315-seithy%20(1).jpg

 

 

fonseka-award-200315-seithy%20(2).jpg

 

http://seithy.com/breifNews.php?newsID=128691&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை... இன்றும்,  நம்பும் சனம் நம்மிடையே வாழ்கின்றது.
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை... இன்றும்,  நம்பும் சனம் நம்மிடையே வாழ்கின்றது.

 

யாழ்கள உறுப்பினர்களில் சிலரும் இன்னும் இந்தியாவை நம்புகின்றார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறுப்பினர்களில் சிலரும் இன்னும் இந்தியாவை நம்புகின்றார்கள்.  

 

அவர்கள்... பாவங்கள்.

மண்டையில்.... "நட்டு" கழண்ட ஆக்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் ஏவல் தான் சரத் பொன்சேகா. அவருக்கு இந்தியா கெளரவம் அளிப்பது வியப்பில்லை. ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரை இந்தப் போர்க்குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும். அதில் நாம் விலகாதிருந்து செயற்படுவதே அவசியம்.

 

மிலோசவிச்சை ரஷ்சியா காப்பாற்ற நினைத்தது. ஆனால்.. அமெரிக்க சார்ப்பு மேற்குலகம் தண்டிக்க நினைத்தது. காரணம் அவர் அமெரிக்கா நேட்டோவை எதிர்த்து போர் செய்ததால். எம் இனத்தை.. அழித்தவர்களை நாம் தண்டிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இந்தியா என்னவும் செய்திட்டு போகட்டும். அதற்கு எதிர்ப்பை பதிவு செய்வது அவசியம்.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா சரத்துக்கு விருது கொடுத்தது உண்மையாகவே வியப்புத்தான். ஏனென்று கேட்கிறீர்களா?

 

2009 ஆகஸ்ட்டில் தான் இறுதி தாக்குதலை நடத்த வேண்டும் என்று சரத் விரும்பியிருந்தாராம். காரணம் ராணுவத்தின் இழப்புகளை சரிசெய்துகொண்டு, முழுமையாக ஆயத்தப்படுத்திக்கொண்டு தாக்குதலைத் தொடங்கினால் இலகுவாக வென்றுவிட முடியும் என்று அவர் கூறினாராம். ஆனால் 2009 மேயில் பொதுத் தேர்தல் வருவதால் இறுதி யுத்தம் அதற்கு முன்னர் முடிக்கப்படவேண்டும் என்று சோனியாவும், காங்கிரஸ் தலமையும் விரும்பியிருந்ததாம்.

 

இதனால் சரத்துக்கும் இந்தியாவுக்கும் சிறிது மனத் தாங்கலே ஏற்பட்டு இருந்ததாம். இறுதியில் சோனியாவால் பிரத்தியேகமாக அனுப்பிவைக்கப்பட்ட சிவ் ஷங்கர் மேனன், நாராயணன், பிரணாப் முகர்ஜி கூட்டணி சரத்தை ஓரம் தள்ளிவிட்டு தமது திட்டத்தை மே 17 இற்கு முன்னர் அரங்கேற்றியது.

 

அப்படியிருக்க சரத்துக்கு இந்தியாவே விருது வழங்கியது அதிசயம்தான் !

Edited by ragunathan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிரிக்கு எதிரி நண்பன் என்பதை வெளிப்படையாகவே காட்டிவிட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.