Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். மாவட்டத்தில் மரக்கறி செய்கையை ஊக்குவிக்க திட்டம்

Featured Replies

article_1427454608-vegetebles.jpg

 

சீரற்ற காலநிலைகளிலும் யாழ். மாவட்டத்தில் மரக்கறி உற்பத்திகளை அதிகரிப்பதற்கு விவசாயிகளிடையே புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்த உள்ளதாக வடமாகாண விவசாய பிரதிப் பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் வெள்ளிக்கிழமை (27) தெரிவித்தார்.

 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

 

வரட்சி காலம், மாரி காலம் என பயிர்களுக்கு சாதகமற்ற காலநிலைகள் காணப்படுவதால், மரக்கறிச் செய்கை பாதிப்படைகின்றது. இதனால் குறிப்பிட்ட சில காலங்களில் மரக்கறி விலைகள் அதிகரித்துக் காணப்படும். மரக்கறி விலைகள் அதிகரிப்பதை ஓரளவு சீர்செய்து கொள்வதற்காக விவசாயிகளுக்கிடையே சில முறைகளை அறிமுகப்படுத்தவுள்ளோம்.

 

யாழ். மாவட்டத்திலுள்ள 148 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு, வரட்சிக் காலங்களில் பயிர்களை பாதுகாப்பதற்கான உயிர்கரி பாவித்தல், மூடுபடை இடல், குழிகளில் உக்கிய எருவை இட்டு நான்று நடுதல் போன்ற புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திய விதைகளை 50 வீத மானிய அடிப்படையில் வழங்கவுள்ளோம்.

 

மார்ச், ஏப்ரல் காலங்களில் மண்ணின் வெப்பநிலை அதிகரிப்பால் பயிர்கள் கூடிய போசனையை அதிகரிக்க முடியாமல் இருக்கும் நிலையை ஈடுசெய்வதற்கு இலை ஊடாக பரவும் திரவ உரப்பசளையை விவசாயிகளிடையே அறிமுகப்படுத்தவுள்ளோம். இத்திட்டங்கைள நடைமுறைப்படுத்துவதன் மூலம் சீரற்ற காலநிலைகளில் மரக்கறி பயிர்ச் செய்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு சிறந்த விளைச்சலை பெறலாம் என்றார்.

 

http://www.tamilmirror.lk/142797#sthash.1V8itd3B.dpuf

 

 

எண்ணை ஊறின தண்ணி எண்டு சனம் சாப்பிட பயப்படுது

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணை ஊறின தண்ணி எண்டு சனம் சாப்பிட பயப்படுது

 

சிறிலங்கா உற்பத்தி என்று சொல்லி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டியது ......நமோ நமோ மாதக்கள் வாங்கி சாப்பிடுவார்கள்:D

சிறிலங்கா உற்பத்தி என்று சொல்லி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டியது ......நமோ நமோ மாதக்கள் வாங்கி சாப்பிடுவார்கள் :D

கொட்டையை தங்கள் வீட்டுத்தோட்டத்திலும் போடுவார்கள்

  • தொடங்கியவர்

வெங்காய உற்பத்தியை மேலும் அதிகரிக்க திட்டம்

 

article_1427540423-onion.jpg

 

யாழ். மாவட்டத்தில் பயிரிடப்படும் வெங்காயத்தின் மூலம் ஒரு ஹெக்டேயருக்கு 14 முதல் 15 மெற்றிக் தொன் விளைச்சல் பெறப்படுகின்றது. இதனை மேலும் அதிகரிப்பதற்கான புதிய திட்டத்தை  அறிமுகப்படுத்தவுள்ளதாக வடமாகாண விவசாயத்திணைக்கள பிரதிப்பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் தெரிவித்தார்.

 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

வெங்காய உற்பத்தியாளர்களுக்கு 'திகடிக்க' வெங்காயப்பூவில் இருந்து பெறப்பட்ட விதையை  வழங்கினோம். அத்துடன் வெங்காய உற்பத்தியாளர்களுக்கு உயிர்க்கரி செய்வதற்குரிய உபகரணங்களையும் பயிற்சியையும் வழங்க திட்டமிட்டுள்ளோம். எமது திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி வெற்றியளித்துள்ளமையால் இவ்வருடம் உயிர்க்கரியை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தவுள்ளோம்.

 

மண்ணின் வளத்தை 5,000 வருடங்கள் குன்றாமல் பாதுகாக்கும் திறன் உயிர்க்கரிக்கு உள்ளது. உயர் வெப்பத்தினால் கருக்கப்பட்ட இந்த உயிர்க்கரியை வெங்காயச்செய்கைக்கு மட்டுமல்லாது ஏனைய பயிர்ச் செய்கைக்கும் பயன்படுத்த முடியும். நீரை உறிஞ்சி வைத்திருந்து பயிரை குளிர்மையடையச் செய்யும் ஆற்றல் உயிர்க்கரிக்கு உண்டு என அவர் தெரிவித்தார். -

 

http://www.tamilmirror.lk/142861#sthash.KKJUCoz6.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்..........

எல்லா விதமான முயற்சிகளாலும் உற்பத்தியை அதிகரித்தால் எம்மக்களின் வாழ்க்கை தரம் உயரும் . பிறப்பரிமை மாற்றல் செய்யும் இனங்கள் இயற்கைகைக்கு எதிரானது . மனிதனின் உடலில் தீங்கு விளைவிக்கும் என விமர்சனம் உண்டு .அதோட சேதன பசளை, சேதன பூச்சி , களை கொல்லிகளை பயன்படுத்தி தேக ஆரோகியத்துக்கு ஏற்ற உற்பத்திகளை செய்ய வேண்டிய தேவையும் உள்ளது

உயிர்கரி என்றால் என்ன ?

 

Charcoal ??

  • கருத்துக்கள உறவுகள்

ஈசனுக்கு விங்ஞான மூளை வேலை செய்யத் தொடங்கி விட்டது.உயர் வெப்பத்திளால் கருக்கப்பட்ட உயிர்க் கரி என்று சொல்லியிருக்கிறார். என்னத்தைக் கருக்கினது என்று சொல்ல வில்லை!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயர் பாதுகாப்பு வளையத்தில் ஆமிக்காரர் கமம் செய்கின்றீனமாம். இதைவிட பெரிதாய் வேறு என்ன திட்டம் வேணும்? நீங்கள் கேட்காமலே சொறி லங்கா ஆமிக்காரன் வாழைக்குலை தொடங்கி வெங்காயம் வரை உங்கள் வீட்டு வாசல் வரை கொண்டு வந்து தருகின்றான். மேலதிக இராணூவத்தை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி மேலதிக காணிகளையும் சுவீகரித்தால் யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலிக்கால் முழு உலகுக்குமே சொறி லங்காவில் இருந்து மரக்கறி ஏற்றுமதி செய்யலாம். சொறி லங்கா மரக்கறி உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கு இதைவிட வேறு சிறப்பான, விவேகமான திட்டம் எதற்கு?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க வேற கிழவி,

வாத்தியார கேட்டா - ஓமந்தை முதல் மாவிட்டபுரம் வரை ரெயில் பாதையை கடக்கும் ஒவ்வொரு ஒழுங்கையிலும் ஒரு ஆமி சென்றி வேண்டும் என்கிறார் :)

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க வேற கிழவி,

வாத்தியார கேட்டா - ஓமந்தை முதல் மாவிட்டபுரம் வரை ரெயில் பாதையை கடக்கும் ஒவ்வொரு ஒழுங்கையிலும் ஒரு ஆமி சென்றி வேண்டும் என்கிறார் :)

 

போட்டு விட்டாலும்...... :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.