Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேசிய கீதத்தை தமிழில் பாட அனுமதித்த நிறைவேற்று சபைக்கு எதிராக வழக்கு - சிங்­கள ராவய

Featured Replies

இலங்­கையில் தேசிய கீதம் சிங்­கள மொழி­யிலே பாடப்­பட வேண்டும் எனவும் தமிழ் மொழி­யிலும் தேசிய கீதத்தைப் பாடு­வ­தற்கு அனு­ம­தி­ய­ளித்­துள்­ளமை அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்­துக்கு விரோ­த­மா­னது எனவும் தெரி­வித்த சிங்­கள ராவய அமைப்பின் தேசிய அமைப்­பாளர் வெய­வர சீல­ரத்ன தேரர் இவ் அனு­ம­தியை வழங்­கிய தேசிய நிறை­வேற்­றுச்­சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக புத்­தாண்டின் பின்பு வழக்குத் தொட­ர­வுள்­ள­தாக கூறினார்.
 
நேற்­றுக்­காலை தெஹி­வளை பெளத்த மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டிலே அவர் மேற்­கண்ட கருத்­தினை வெளி­யிட்டார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் உலகில் எல்லா நாடு­க­ளிலும் அந்­நாட்டின் தேசிய மொழி­யி­லேயே தேசிய கீதம் இசைக்­கப்­ப­டு­கி­றது. இந்­தி­யாவில் பல மொழிகள் பேசும் மக்கள் இருந்­தாலும் அங்கு ஒரு மொழி­யிலே தேசிய கீதம் பாடப்­ப­டு­கி­றது. தமிழ் நாட்டில் 6 கோடி மக்கள் இருந்தும் அங்கு தமிழ் மொழியில் தேசி­ய­கீதம் பாடு­வ­தற்கு உரிமை கோரப்­ப­ட­வில்லை.
 
இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தின் படி தேசிய கீதம் சிங்­கள மொழி­யிலே பாடப்­பட வேண்டும் அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்­தத்தை கொண்டு வர வேண்­டு­மென்றால் அதற்கு 2/3 பெரும்­பான்மை தேவை . தேசிய கீதம் சிங்­கள மொழி­யிலே பாடப்­பட வேண்டும் என்­பதை சபா­நா­ய­கரைச் சந்­தித்து விளக்­க­ம­ளித்­துள்ளோம்.
 
அமைச்சர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­வையும் சிங்­கள ராவய அமைப்பு சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்­ளது. தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்­ப­டு­வதை அனு­ம­திப்­பதா என்­பது தொடர்பில் ஆராய்ந்து தீர்­மானம் மேற்­கொள்­வ­தாக அவர் உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.
 
தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடு­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்டால் பெரும்­பான்­மை­யின மக்கள் மத்­தியில் தமிழ் மக்கள் மீது குரோதம் ஏற்­பட கார­ண­மாக அமையும். இதன் மூலம் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான உறவு பாதிக்­கப்­படும் எனவே சிங்­கள மொழியில் மாத்­தி­ரமே தேசிய கீதம் பாடப்­பட வேண்­டு­மென நாம் வலியுறுத்துகிறோம்.
 
தமிழ் மொழியில் தேசிய கீதத்தைப்பாடுவதற்கு அனுமதி வழங்கியுள்ள தேசிய நிறைவேற்றுச் சபைக்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம் என்றார்.
 
  • தொடங்கியவர்

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள ராவய அமைப்பினர், நாடாளுமன்ற வீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நேற்று வியாழக்கிழமை (09) ஈடுபட்டனர் 

 

article_1428649648-IMG3239.jpg

 

article_1428649897-IMG538.jpg

 

article_1428649914-IMG526.jpg

 

article_1428649951-IMG3257.jpg

 

article_1428649959-IMG3259.jpg

 

article_1428649992-IMG485.jpg

 

http://www.tamilmirror.lk/143831

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல விடயம். இலங்கையில் இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாணவேண்டிய காலம் வந்துதான் தீரும். "மகிந்தாவுக்கு ஒரு காலம்வந்தால், மைத்திரிக்கும் ஒரு காலம் வந்ததுபோல்..." காலம் வரும்போது இப்படியான போராட்டங்கள் தீர்வுக்கு வலுச்சேர்க்கும். 

 

%25E0%25AE%258E%25E0%25AE%25A9%25E0%25AF

  • தொடங்கியவர்

தேசிய கீதம் விவகாரம்: வழக்கை வரவேற்பதாக மனோ தெரிவிப்பு 

 

article_1428747492-454.jpg

 

தேசிய கீதத்தை தமிழில் பாட அனுமதியளித்த தேசிய நிறைவேற்று சபை உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடர போவதாக சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது. இதை தான் முழுமனதுடன் வரவேற்பதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

 

இது தொடர்பில் மனோ கணேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  
நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் சிங்கள ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் சீலரத்ன தேரர், தேசிய கீதத்தை தமிழில் பாட அனுமதியளித்தமைக்காக தேசிய நிறைவேற்று சபை உறுப்பினர்களை கண்டித்து அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர போவதாக அறிவித்துள்ளார். 
இந்த அறிவிப்பை கண்டு நான் பயந்துவிடவோ அல்லது கவலைப்படவோ போவது இல்லை. உண்மையில் சிங்கள ராவய தேரர்களின் இந்த அறிவிப்பை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன். இதன்மூலம் நம் நாட்டில் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டு பேசி வாழ்வோரது  அந்தஸ்த்து என்ன என்பதை பற்றி உலகம் அறிந்துக்கொள்ள முடியும்.
 
உண்மையை வெளியே கொண்டுவர முயலும் சிங்கள ராவய அமைப்புக்கு இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்ளவே விரும்புகிறேன்.  
உண்மையில் இந்த நாட்டில் தேசிய மொழிகள் எவை என்பது பற்றி இவர்களுக்கு தெளிவில்லை. உலகத்தில் பல நாடுகளில் தேசிய கீதம் பாடப்படும் முறைகள் பற்றியும் இவர்களுக்கு தெரியவில்லை. இதையிட்டுதான் நான் வருத்தமடைகிறேன்.  
 
சிங்கள ராவய மற்றும் பொதுபல சேனை ஆகிய பிக்குகளின்  தலைமையிலான அமைப்புகளுக்கு இடையில் யார் சிங்கள பௌத்தர்களின் தலைவர்கள் என்று பலத்த போட்டி நிலவுவது எனக்கு தெரியும்.
இதனால்தான் இவர்கள் இத்தகைய அரசியல் கருத்துகளை வெளியிடுகிறார்கள். இவர்களுக்கு போட்டியாக நாளை, பொதுபல சேனை அமைப்பு என்னையும், தேசிய நிறைவேற்று சபையில் எனது நிலைப்பாட்டுக்கு இவ்விவகாரத்தில் ஆதரவாக இருக்கின்ற ஏனைய உறுப்பினர்களையும் நாடு கடத்த வேண்டும் என்றும் சொல்லலாம் என்றும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
  • கருத்துக்கள உறவுகள்
உலகில் எல்லா நாடு­க­ளிலும் அந்­நாட்டின் தேசிய மொழி­யி­லேயே தேசிய கீதம் இசைக்­கப்­ப­டு­கி­றது. இந்­தி­யாவில் பல மொழிகள் பேசும் மக்கள் இருந்­தாலும் அங்கு ஒரு மொழி­யிலே தேசிய கீதம் பாடப்­ப­டு­கி­றது. தமிழ் நாட்டில் 6 கோடி மக்கள் இருந்தும் அங்கு தமிழ் மொழியில் தேசி­ய­கீதம் பாடு­வ­தற்கு உரிமை கோரப்­ப­ட­வில்லை.

 

 

கனடாவில் ஆங்கிலமும் பிரான்சு மொழிகளும் தேசிய மொழிகள். இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம்  பாடப்படுகிறது. சிறிலங்காவிலும் தமிழும் சிங்களமும் தேசிய மொழிகள். ஆகவே இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுபற்றி சொறி லங்காவில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள், பெற இருக்கின்றவர்கள் என்ன நினைக்கின்றார்கள்? நோ கோமன்ட்ஸ்?  :icon_mrgreen:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

article_1428649897-IMG538.jpg

 

இந்தச் சிறுவர்கள்.. சமூக வாழ்வில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு இப்படி காவி உடை உடுத்தப்பட்டு.. இனவாதிகளாக்கப்படுவது குறித்து.. சிறுவர் போராளிகள் என்று நீலிக்கண்ணீர் வடித்த யுனிசெப்புக்கு ஏன் தெரியுதில்லை.

 

நம்மட சங்கரி இதுக்கு ஏன் எப்பவும் கடிதம் எழுதுவதில்லை..?!! :o:rolleyes:


இவர்கள் தாம்.. தமிழில் சொறிலங்கா தேசிய கீதம் பாடப்படுவதை தீவிரமாக எதிர்க்கின்றனரோ..?! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை வாசிக்கும் போது மனதில் மூஞ்சூறு தான் போக வழியை காணேல்லை விளக்குமாத்தையும் கொண்டு போக வெளிக்கிட்ட கதைதான் நினைவுக்கு வருது இந்த அற்பதனமான நமோ நமோ சொரிலங்கன் தேசிய ஒப்பாரிக்கு தமிழில் பாட அனுமதியாம் அதுக்கு எதிர்ப்பாம் இப்படியான ஒன்றே போதும் சிங்களவன் ஒன்றும் கிள்ளி போடபோவதில்லை என இதுக்குள்ளை ஆகாசத்தில் பிளைட் ஓட்டுதுகள் கொஞ்சம்  இங்கு  .

தமிழிலேயே பாடுங்கள் என்று தமிழர்களுக்கு அறிவுரை கூறிய சிறிலங்கா அமைச்சர் APR 17, 2015 | 6:03by மட்டக்களப்புச் செய்தியாளர்in செய்திகள்

rajitha-senaratne-300x200.jpgவடக்கு, கிழக்கில் சிறிலங்காவின் தேசிய கீதத்தை தமிழிலேயே பாடுங்கள் என்று சிறிலங்காவின் சிங்கள அமைச்சர் ஒருவரே தமிழர்களுக்கு அறிவுரை கூற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் நேற்று நடந்த நிகழ்வில் உரையாற்றிய, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவே இந்த அறிவுரையைக் கூறியிருக்கிறார்.

கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு, வெளிநோயாளர் பிரிவுத் தொகுதியை சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் சிறிலங்காவின் தேசிய கீதம், சிங்கள மொழியிலேயே பாடப்பட்டது. இதுகுறித்து தனது உரையில் சுட்டிக்காட்டிய அமைச்சர் ராஜித சேனாரத்ன,

“நீங்கள் தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடியிருந்தீர்கள். ஆனால் உங்களில் எத்தனை பேருக்கு அது விளங்கியிருக்கின்றது என்று எனக்கு தெரியாது.

அதன் காரணமாக அடுத்த முறை இந்த மருத்துவமனைக்கு வரும் போது தேசியகீதத்தை தமிழில் பாடவேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.” என்று அவர் குறிப்பிட்டார்.

உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை வளலாயில் ஒப்படைக்கும் நிகழ்வு அண்மையில் சிறிலங்கா அதிபர் தலைமையில் நடந்த போது, தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் சிறிலங்காவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தமிழ்ப் பகுதிகளில் தமிழில் தேசிய கீதம் இசைக்க எந்த தடையும் இல்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2015/04/17/news/5269

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமோ நமோ என்பதை தமிழில் சொல்வது எப்படி?

 

நமோ நமோ நமோ தாயே! என்று பாடினால் அது முழுத் தமிழ் இல்லையே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.