Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் மீது பிழைகண்டுபிடிக்கும் வரதராஜப்பெருமாள்!!

Featured Replies

இன்னும் மாகாணசபையைத் திருப்தியற்ற ஒரு நிலையில்தான் தமிழ்த்தரப்பும் பார்க்கிறதென தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய சார்வு வடக்கு முதல்வர் வரதராஜப்பெருமாள்.

சிங்களத்தரப்பிலும் அப்படியான உணர்நிலை உண்டு. குறிப்பாக 13 ஆவது திருத்தத்தை வேண்டாம் என்று சொல்லும் ஆட்கள் இரண்டு தரப்பிலும் உள்ளனர். இந்த நிலையில் மாகாணசபையில் பங்கேற்போரும் இருக்கிறார்கள்.

vara1.JPG

மாகாணசபையை இயக்குவதற்கு முடியும். அதற்கான பொறிமுறைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். உரையாடல்களை நடத்த வேண்டும்.

தொடர்பாடல்களை மேற்கொள்ள வேண்டும். சட்ட ரீதியாக அணுக வேண்டிய விடயங்களுக்கு அதற்கான வழிமுறைகளில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இப்படிப் பல காரியங்களைச் செய்யலாம். அப்படிச் செய்தே இந்த அமைப்பை வலுவுள்ளதாக்க முடியு இப்படி நிறைய விடயங்களைத் தன்னுடைய அனுபவத்தின் வழியாகவும் புதிய சிந்தனை மூலமாகவும் முன்வைத்தார் வரதராஜப்பெருமாள்.

மாகாணசபை அனுபவங்கள் என்பது பற்றி வடகிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜப்பெருமாள் இன்று யாழ்ப்பாணத்தில் “ஆறுதல்“ நிறுவனத்தில் உரையாற்றினார்.

பொதுவாழ்வில் ஈடுபடும்போதும் நெருக்கடியான களத்தில் அரசியற் பணியாற்றும்போதும் புகழும் பாராட்டும் பட்டுக்கம்பளங்களும் சிம்மாசனங்களும் மட்டும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது.

vara2.JPG

சவால்களும் நெருக்கடிகளும் வசையும் அவமானங்களும் எதிர்ப்புகளும்தான் எதிர்கொள்ள வேண்டியவையாக இருக்கும். அப்படியான ஒரு காலத்தில், களத்தில்தான் வடகிழக்கு மாகாணசபையை ஆரம்பித்து நடத்தினோம் என்று கூறினார் பெருமாள். ஒரு கட்டத்தில் இந்திய அரசு, தமிழ்நாட்டு அரசு (கருணாநிதி ஆட்சி), இலங்கை அரசு, தமிழ்ச்சமூகம் என அனைத்துத் தரப்பும் அந்த மாகாணசபையை இயங்க முடியாத நிலைக்குக் கொண்டு சென்றது.

ஆனால், இப்பொழுது அதே தரப்புகள் பிரிக்கப்பட்ட மாகாணசபையை ஏற்றுப் பங்கேற்கின்றன. எனினும் தமிழ்ச் சமூகத்தில் மாற்றுக்கருத்து, பன்முகச் சிந்தனைகளுக்கான இடம் இன்னும் இல்லாதிருப்பது கவலைக்குரியது. யாழ்ப்பாணத்திலிருந்து வரும் நான்கு பத்திரிகைகளின் பெயர்கள்தான் வேறு படுகிறதே தவிர, அவற்றின் உள்ளடக்கமும் செய்திகளும் போக்கும் குணாம்சமும் ஒன்றுதான். இது ஏன்? இதை எப்படி இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்கிறது? என்று பெருமாள் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈபிடிபி சார்பு அமைப்பான ஆறுதலின் அழைப்பினில் வரதர் நிகழ்வினில் கலந்து கொண்டுள்ளார்.

இந்திய இராணுவ பாதுகாப்பின் கீழ் துணை ஆயுதக்குழுக்களை நிர்வகித்து வந்த வரதர் அமைதிப்படை வெளியேற்றத்தையடுத்து தப்பி ஒடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 http://www.pathivu.com/news/39374/57//d,article_full.aspx

வட-கிழக்கு தமிழர் தாயகத்தில் தன்னெழுச்சியாக முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டங்களை முடக்க ரணில் அரசு சதி முயற்சிகளை அரங்கேற்றத் தொடங்கியுள்ளது.

அத்துடன் அம்முயற்சியில் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியினையும் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தெரியவருகையில்

இலங்கைப் புலனாய்வுக் கட்டமைப்பின் அதிகாரி மட்டத்தில் முகமட் எனும் பேரில் நபர் ஒருவர் தற்போது களமிறக்கப்பட்டுள்ளார்.

அந்நபர் முன்னணி செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து மூளைச்சலவை செய்துவருவதாக தெரியவருகின்றது. எனினும் அவர் உண்மைப் பெயர் மற்றும் பதவி நிலை பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெற்றிருக்கவில்லை.

குறிப்பிடத்தக்க சில மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளென இலக்கு வைத்துள்ள அந்நபர் அதில் வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அண்மையில் வடமாகாணசபை உறுப்பினர்கள் சிலர் தனிப்பட்ட ரீதியில் இரகசியமாக புதிய ஆளுநர் பாளிகக்காரவை சந்தித்துள்ளதாகவும் அதற்கும் குறித்த முகமட் எனும் நபரே ஏற்பாடுகளை செய்து வழங்கியுள்ளதும் அம்பலமாகியுள்ளது.

அத்துடன் நாடாளுமன்றத்தில் வைத்து சில அமைச்சர்களை சந்திக்கவும் ஏற்பாடுகளை செய்து வழங்கியமையும் அம்பலமாகியுள்ளது.

மக்களிற்கான உதவி திட்டங்களை பெற்றுத்தருவதாக கூறியே இவ்வாறு அரச உயர்மட்டங்களுடன் உறவை பேண வழிவகுக்கப்பட்டதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

இத்தகைய நெருக்கமான தொடர்பாடல்களையடுத்து காணாமல் போனோர் விவகாரம் உள்ளிட்ட மக்களது பிரச்சினைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்துவதை இந்நபர் தடுத்துவருவதாகவும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தரப்புக்களையும் இத்தகைய தரப்புக்களினை கொண்டு தடுத்துவருவதாகவும் தெரியவருகின்றது.

குறிப்பாக அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தலில் வட-கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கணிசமான வாக்குகளை திரட்டுமென புலனாய்வு அறிக்கைகள் அரசிற்கு அறிக்கையிட்டுள்ளன.

கூட்டமைப்பின் மீதான கடுமையான விமர்சனங்களை முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் அது வாக்குவங்கியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

இந்நிலையில் கடும் போக்கு அரசியல் நிலைப்பாட்டை கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு அபரிதமான வளர்ச்சி இலங்கை அரசிற்கு அப்பால் இந்தியாவையும் கவனத்தை செலுத்த வைத்துள்ளது.

இந்நிலையில் கூட்டமைப்பிலுள்ள கடும் போக்கு செயற்பாட்டாளர்களை கைக்குள் போட்டு அதன் தலைமையினை தக்க வைக்கவே இம்முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளென தனது இரகசிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் நபர் யாழில் கொக்குவிலிலுள்ள படைத்தளமொன்றில் தங்கியுள்ளதுடன் தனது சொகுசு வாகனத்தில் திரிந்தே செயற்பட்டுவருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்நபரது நடவடிக்கைகள் தமிழ் தேசிய நிலைப்பாடுடைய ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியினை தோற்றுவித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தமிழ் மக்கள் மீது செய்த படுகொலை அரசியலுக்கு தண்டிக்கப்பட வேண்டிய ஒரு படுகொலையாளன் என்பதை மறந்து பேசுறார். இவருக்கு வாலுகள் வேற. ஹிந்திய தூதரகம் இருக்கென்ற துணிவில் வந்து போகிறார் போலும். :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர தமிழீழத்தை பிரகடனப்படுத்திவிட்டு வெளியேறியவர் இப்போது ஒன்றிணைந்த சிறிலங்காவுக்கு திரும்பியுள்ளார்.. :o:D

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர தமிழீழத்தை பிரகடனப்படுத்திவிட்டு வெளியேறியவர் இப்போது ஒன்றிணைந்த சிறிலங்காவுக்கு திரும்பியுள்ளார்.. :o:D

 

அது அப்ப இது இப்ப :D....இந்திய பூஷ்வா

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர தமிழீழத்தை பிரகடனப்படுத்திவிட்டு வெளியேறியவர் இப்போது ஒன்றிணைந்த சிறிலங்காவுக்கு திரும்பியுள்ளார்.. :o:D

 

 

அவர் பள்ளிக்கூடம் போனவர் :o

அதுவும் பொருளியல்....... :o

நாடு திரும்பி  வந்து மக்களுக்கு முன் பேசுகின்றார் அரசியல் தலைவர்களை சந்திக்கின்றார் .

கற்றவனுக்கு செல்லும் இடம் எல்லாம் சிறப்பு .

 

பலர் அப்ப ஓடினவர்கள் இன்னும் வெளிநாட்டில் கொடி பிடித்தபடி . :icon_mrgreen:  


பதிவிற்கு அவர் பேசியது விளங்கவில்லை ,அது அவர்களின் இணையம் எப்படி விளங்கும் .

சுதந்திர தமிழீழத்தை பிரகடனப்படுத்திவிட்டு வெளியேறியவர் இப்போது ஒன்றிணைந்த சிறிலங்காவுக்கு திரும்பியுள்ளார்.. :o:D

 

பிரேமதாசா விரித்த வலையினால் புலிகளின் கையால் அழியாது இவர் உயிர் தப்பினார்.பிரேமதாசா அழிந்தார் இதுதான் யதார்த்தம்

யார் வந்து பேசினாலும் நாலு சனம் வந்து சேருது. எப்பிடி இருந்த ஊர் இப்பிடியா போச்சே.  ^_^  <_<

  • கருத்துக்கள உறவுகள்

இவைக்கு ஆட்களைச் சேர்க்க சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. வீடு புகுந்து இழுத்த.. கொள்ளையடிச்ச ஆக்கள் தானே..! :lol::D

எதோ  அவருதான்  மக்களில்  பிழை பிடிப்பது  போல  இங்க  வழமையாவே  அதுதானே  நடக்கு  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நாடு திரும்பி  வந்து மக்களுக்கு முன் பேசுகின்றார் அரசியல் தலைவர்களை சந்திக்கின்றார் .

கற்றவனுக்கு செல்லும் இடம் எல்லாம் சிறப்பு .

 

பலர் அப்ப ஓடினவர்கள் இன்னும் வெளிநாட்டில் கொடி பிடித்தபடி . :icon_mrgreen:  

பதிவிற்கு அவர் பேசியது விளங்கவில்லை ,அது அவர்களின் இணையம் எப்படி விளங்கும் .

 

அவராக நாடு திரும்பவில்லை.களம் இறக்கப்பட்டுள்ளார்.

 

சதி வலையின் உச்சக் கட்டம்.

 

மக்களுக்கு முன் பேசுகிறாரே தவிர மக்களுடன் நிற்க மாட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.