Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் கோடீஸ்வரராய் இருந்தும் இறைச்சி, மது திருடிய இந்திய வம்சாவளி நபருக்கு ஓராண்டு சிறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் கோடீஸ்வரராய் இருந்தும் இறைச்சி, மது திருடிய இந்திய வம்சாவளி நபருக்கு ஓராண்டு சிறை பட்டம் எத்தனை உயரம் போனாலும் அதன் நூல் தரையுடனே இருப்பது போல் சமூகத்தில் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தவர்களிடமும் கூட சில சில்லறைத்தனங்கள் இருக்கும் என்பதற்கு லண்டனில் நடந்த சம்பவம் ஒன்று சான்றாகியுள்ளது. இங்கிலாந்தின் பிர்மிங்காம் கவுண்டியில் உள்ள டெஸ்கோ என்ற சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர் போல் உள்ளே நுழைந்து பொருட்களைத் திருடும் நபர்களைக் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் கண்காணிப்பது வழக்கம். கடந்த பிப்ரவரி மாதம் கண்காணிப்பு பணிகளின் போது 200 பவுண்ட் மதிப்புள்ள (ரூபாய் 18 ஆயிரம்) இறைச்சி மற்றும் மதுவை ஒருவர் திருட்டுத்தனமாக எடுத்து தனது பையில் போட்டுக் கொள்வதை சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் கண்டுபிடித்தனர். அந்த மனிதரைக் கண்டுபிடித்து விசாரித்த போது, அவர் வருடம் 16 மில்லியன் பவுண்ட் (151 கோடி ரூபாய்) வருவாய் கிடைக்கும் தனியார் நிருவனத்தின் உரிமையாளரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரோனன் கோஷ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, ரோனன், வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பிர்மிங்கம் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி எந்த வித பொருளாதார நெருக்கடிகளும் இல்லாத போதும் திருட்டுச்செயலில் ஈடுபட்ட ரோனனுக்கு ஒரு வருட சிறை தண்டனையும் 575 பவுன்ட் (54 ஆயிரம் ரூபாய்) அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

 200 பவுண்ட் மதிப்புள்ள (ரூபாய் 18 ஆயிரம்) இறைச்சி மற்றும் மதுவை ஒருவர் திருட்டுத்தனமாக எடுத்து தனது பையில் போட்டுக் கொள்வதை சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.

 

அந்த மனிதரைக் கண்டுபிடித்து விசாரித்த போது, அவர் வருடம் 16 மில்லியன் பவுண்ட் (151 கோடி ரூபாய்) வருவாய் கிடைக்கும் தனியார் நிருவனத்தின் உரிமையாளரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரோனன் கோஷ் என்பது தெரிய வந்தது.

 

இதையடுத்து, ரோனன், வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பிர்மிங்கம் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி எந்த வித பொருளாதார நெருக்கடிகளும் இல்லாத போதும் திருட்டுச்செயலில் ஈடுபட்ட ரோனனுக்கு ஒரு வருட சிறை தண்டனையும் 575 பவுன்ட் (54 ஆயிரம் ரூபாய்) அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

 

இவர் எப்படி, கோடீஸ்வரர்  ஆனார்?

இந்தியாவிலிருந்து கொண்டுவந்த பணத்தை போட்டு கோடிக்கு, அதிபதியாக... மாறினாரா?

அல்லது.... தினமும், இங்கிலாந்து கடைகளில்.... "இறைச்சியும், மதுவும்..." களவெடுத்து கோடீஸ்வரர்" ஆனாரா?

இவருக்கு... கொடுத்த, தண்டனை பத்தாது.

 

பசிக்கு களவெடுப்பவனை மன்னிக்கலாம், ஆனால்... கோடீஸ்வரன் இறைச்சி, விஸ்கி களவெடுத்தால்....

அவ்வளவு சொத்துக்களையும் பறிமுதல் செய்து, சொந்த நாட்டுக்கு வெறுங் கையுடன் அனுப்ப வேண்டும்.

 

இவர்களை... மறியலில், வைத்து பராமரிப்பதற்கு... அரசிற்குத்தான் நட்டம்.

"என்கவுண்டர்" என்று, சுட்டுத் தள்ளினாலும் பரவாயில்லை.

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நான் வேலை செய்த UK கடை உரிமையாளர் பெருமையாக சொல்வார் தான் ஒருநாளும் பெர்பும் காசு கொடுத்து வாங்கினது இல்லை என்று. சூப்பர் மார்க்கெட் போகும் போது மெல்லமாக பாக்கெட்க்குள் போட்டுகொண்டு வாறது என்று. என்ன. அந்த நாள்களில் உப்படி எல்லாம் கேமரா கிடையாது. எல்லா களவும் செய்து போட்டு இப்ப பெரிய முதலாளி.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எப்படி, கோடீஸ்வரர்  ஆனார்?

இந்தியாவிலிருந்து கொண்டுவந்த பணத்தை போட்டு கோடிக்கு, அதிபதியாக... மாறினாரா?

அல்லது.... தினமும், இங்கிலாந்து கடைகளில்.... "இறைச்சியும், மதுவும்..." களவெடுத்து கோடீஸ்வரர்" ஆனாரா?

இவருக்கு... கொடுத்த, தண்டனை பத்தாது.

 

பசிக்கு களவெடுப்பவனை மன்னிக்கலாம், ஆனால்... கோடீஸ்வரன் இறைச்சி, விஸ்கி களவெடுத்தால்....

அவ்வளவு சொத்துக்களையும் பறிமுதல் செய்து, சொந்த நாட்டுக்கு வெறுங் கையுடன் அனுப்ப வேண்டும்.

 

இவர்களை... மறியலில், வைத்து பராமரிப்பதற்கு... அரசிற்குத்தான் நட்டம்.

"என்கவுண்டர்" என்று, சுட்டுத் தள்ளினாலும் பரவாயில்லை.

 

 

காலமை வெள்ளன எழும்பி சிறியர், என்கௌண்டர், சூடு எண்டு, பீதியை கிளப்புறார், மை லோர்ட்.. :o
 
அந்தாளுக்கு இருப்பது ஒரு வித மன வியாதி. இது பலருக்கு இருக்கிறது. BBC டிவி மிகப் பிரபல தொகுப்பாளர் ஒருவர் கூட, வைன் போத்தல் களவெடுத்து மாட்டினார். தனக்கு இருக்கும் இந்த மன வியாதி குறித்து தனது டாக்கடரிடம் முன்னமே சொல்லி இருப்பதாய் கோட்டில் சொல்லி, அதை நீதி மன்று உறுதி செய்த பின் விடுதலை செய்தது.
 
ஆனால், அவர் supermarket சென்றால் உதவி கேட்க வேண்டும் என்ற நிபந்தனையுடன். 
 
சிலருக்கு பப்பைக் கண்டால், பைண்ட் அடிக்கலாமே எண்டு ஒரு உந்துதல் வருவது போல...இவர்களுக்கு களவு உந்துதல்...
 
ஆகவே, மன வியாதிக் காரருக்கு, என்கௌண்டர், சூடு சரிவராது மை லோர்ட்.. :D

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தர் கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு  வந்து மரக்றிக் கடைக்க நுழைஞ்சு.. மரக்கறி திருடிட்டுப் போனதை நேர கண்டு.. போட்டுக் கொடுத்து.. பிடிச்சுக் குடுத்தமில்ல. அதுக்கு அப்புறம் கடைக்காரன்.. எங்களுக்கு மலிவா மரக்கறி தாறவர்.

 

நாங்க போட்டுக்குடுக்கிறதில கெட்டிக்காரங்க. கமராவ சுத்தினாலும்.. எங்களைச் சுத்த ஏலாது. :lol::icon_idea:

 

லண்டனில் சீப்பான திருடர்கள் மிக அதிகம். :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.