Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை

Featured Replies

jaya1_2402327f.jpg

 

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.
 
மேலும், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதேபோல், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவையும் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி ரத்து செய்து உத்தரவிட்டார்.
 
இரண்டே நிமிடத்தில் தீர்ப்பை வாசித்த நீதிபதி:
 
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வெறும் 2 நிமிடங்களில் தீர்ப்பை வழங்கினார்.
 
சரியாக காலை 11 மணிக்கு நீதிமன்றத்தின் அறை எண் 14-க்குள் நுழைந்த நீதிபதி குமாரசாமி எடுத்துவுடன், "சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்" என்றார்.
 
தொடர்ந்து தீர்ப்பை வாசித்த அவர், "சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ததற்கான குற்றச்சாட்டை அரசு தரப்பு வழக்கறிஞர் நிரூபிக்கவில்லை.
 
குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழங்கப்பட்ட சாட்சியங்கள் ஏற்புடையதாக உள்ளது. எனவே, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்" என்றார்.
 
11.02 மணிக்கு தீர்ப்பை வழங்கி முடித்தார். 11.03 மணிக்கு நீதிமன்ற அறையில் இருந்து வெளியேறினார்.
 
தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே அதிமுகவினர் "புரட்சித்தலைவி வாழ்க" என கோஷமிட்டனர். இதற்கு கர்நாடக போலீஸார் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
 
அதிமுக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்:
 
இதனையடுத்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டின் முன் அதிமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை, கோவை, நெல்லை என தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 

lwayers_2402408a.jpg

சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு வெளியானதையடுத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இருந்து மகிழ்ச்சியுடன் வெளியேறும் அதிமுக வழக்கறிஞர்கள் 

 

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/article7193024.ece?homepage=true

 


ஜெயலலிதாவின் விடுதலை: சாமி, ஆச்சார்யாவுக்கு அதிர்ச்சி அலை

 

சென்னை: ஜெ., மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என ஜெ., சசிகலா உள்ளிட்ட 4 பேரை கர்நாடக ஐகோர்ட் இன்று விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை அடுத்து தி.மு.க,வினர் மற்றும் சுப்பிரமணியசாமி உள்ளிட்டவர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளளனர். 

 
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் இந்த தீர்ப்பை மதிக்கிறோம் என்றும், இதனை தீர்ப்பாகவே பார்க்க வேண்டும். அரசியலாக்க கூடாது என கூறியுள்ளார். 
 
சுப்பிரமணிய சாமி கருத்து தெரிவிக்கையில், வழக்கில் இப்படி தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கவில்லை. தண்டனை கிடைத்திருந்தால் எனக்கு சந்தோசமாக இருந்திருக்கும். சுப்ரீம் கோர்ட்டுக்கு நான் நேரிடையாக செல்ல முடியாது. கர்நாடக அரசோ அல்லது அரசு வக்கீலோ அப்பீல் செய்ய முடியும். அவ்வாறு செய்தால் நான் அதற்கு ஒத்துழைப்பு அளிப்பேன் என்றார். 
 
 
ஜெ., தரப்பு வக்கீல் குமார் கூறுகையில், இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. தி.மு.க.,வினர் போட்ட பொய் வழக்கில் ஆதாரம் இல்லை, குற்றச்சாட்டு நிரூபணம் ஆகவில்லை. இதனால் வழக்கில் இருந்து ஜெ., உள்ளிட்டவர்கள் விடுதலை ஆகியுள்ளனர். என்றார்.
 
தமிழிசை சவுந்திரராஜன் : தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில்; தமிழகத்தில் எந்த செயலாற்றலும் இல்லாமல் இருந்த நேரத்தில் அரசியல் கட்சியினர் நிலைப்பாடும் தள்ளாடுகிறது. சிந்தித்துச் செயல்பட வேண்டும். பலர் வேறுமாதிரி எதிர்பார்த்த நிலையில் தீர்ப்பு வேறு மாதிரி வந்துள்ளது. இது கூட்டணி அணியில் மாற்றத்தை ஏற்படுத்தும். 
 
ஆச்சார்யா கடும் அதிர்ச்சி : அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட் ஆணைப்படி ஆஜரான ஆச்சார்யா கடும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். தீர்ப்பிற்கு பின்னர் அவர் கூறுகையில்,
 
தீர்ப்பின் முழு விவரமும் தெரிந்த பின்னரே தீர்ப்பு குறித்து பதில் அளிக்க முடியும. 'இந்த வழக்கில் கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் சரியான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவை நிரூபிக்கப்பட்டும் உள்ளன. பவானிசிங் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பின்னர், கர்நாடக அரசு தரப்பில் எழுத்துப் பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய ஒருநாள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. 
 
இதனால், என்னால் முடிந்த அளவிற்கு அதற்கான ஆவணங்களை தயார் செய்து, ஒரே நாளில் அவசரமாக கோர்ட்டில் தாக்கல் செய்தேன். எது எப்படி இருப்பினும், தண்டனை ஒட்டு மொத்தமாக ரத்து ஆகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை,' என்றார்.
 
இந்த தீர்ப்பு இறுதியானது அல்ல. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய முடியும், செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியியை சேர்ந்த ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். 
 
  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகம்.....இந்திய ஜனநாயகம் வாழ்க.......:D

நேற்று மும்பை: நடிகர் சல்மான் கானுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து பலரும் முகநூலில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இன்று சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜெயலலிதா விடுவிக்கப்பட்டமை உடனடியாக அரசியலில் மீண்டும் அதே பதவியில் தொடர்ந்து பயணிப்பதற்கு இத் தீர்ப்பு வழிவகித்துள்ளது.

குற்றத்தில் நேரடி தொடர்பில்லாத 24 வருடமாக சிறையில்இருக்கும்( பேரறிவாளன் முருகன் சாந்தன்) மரணதண்டனை கைதிகள் மற்றும் ஈழதமிழ் கைதிகளுக்கு எப்போ விடுதலை நண்பர்களே ?

Edited by sivayarl

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா அவர்கள் பதவிக்கு வருமுன்னர் இருந்த நிலைக்கும், அதன் பின்னதான நிலைக்கும் இடையில் இருந்த வித்தியாசத்தை உணராதவர்கள் இருக்க முடியாது. இதை ஒரு அரசினால் நிரூபிக்க முடியாமல் போய்விட்டதாம்.. இந்திய நீதி கேலிக்குரியது என்பதற்கு இதைவிட வேறு அத்தாட்சி தேவையில்லை. இந்த லட்சணத்தில், இவர்களது நீதித்துறையை யாராவது விமர்சனம் செய்துவிட்டால் குய்யோ முறையோ என்று துள்ளிக் குதிப்பார்கள்.

சத்தியமும் நீதியும் வென்று விட்டது.

 

ஒரு ரூபா சம்பளத்துடன் தமிழ் மண்ணிற்காகச் சேவை செய்த எங்கள் புரட்சித் தலைவியை சதி மூலம் சிறையில் தள்ள எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

 

கடவுளுக்கு நிகராக கட்சித் தொண்டர்களாலும் அரசியல் வாதிகளாலும் போற்றப்பட்டு காலில் விழுந்து ஆசி பெற்றுவந்த பெண் 'சத்தியசாயி பாபா' ஜெ நாமம் வாழ்க.

 

வாழ்நாள் முதல்வர் வாழ்க.... வாழ்க.

 

இந்திய ஜனநாயகம் வாழ்க... இந்தியாவின் சட்டம் வாழ்க.

 

 

மக்களின் முதல்வர் வாழ்க வாழ்க

Edited by Manivasahan

  • கருத்துக்கள உறவுகள்

ஜெ.. க்கு காலம் கடத்தி ஒரு தண்டனை வழங்குவதிலும்.. அவரை பதவியில் அமர்த்தி.. அவர் சிறை சென்றதை வாழ்த்திய சிங்களவர்களுக்கும் சேர்த்து பழிவாங்கச் செய்வது தமிழர்களுக்கு நல்லது. :lol::D


ஜெ வரணும் ஈழத்தில்.. சர்வதேச விசாரணையை கோரணும்.. மகிந்தவை தண்டிக்க கோரணும்.. மத்தியில் அழுத்தம் கொடுக்கக் கூடிய நடவடிக்கைகளை எடுப்பதோடு.. கச்சதீவை மீட்கணும். தமிழின அழிவுக்கு காரணமான தி மு கவை ஒரு வழி பண்ணனும். அதுதான் இப்ப விருப்பம். :lol:

இது நீதியா? அல்லது அநீதியா? 

 

ஒரே குழப்பமாக இருக்கு!

 

அல்லக்கை ஓ. பி. ஸ் சின் முதல்வர் வாழ்க்கை மீண்டும் முடிவுக்கு வருமா? 

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சு.சாமிட சவுண்டைக் காணம். மகிந்த தோற்றதோட அவருட சவுண்டும் அடங்கிட்டுது. இல்ல அடிக்கடி கொழும்புக்கு போய் வரும் மனுசன். இப்ப அதுவும் இல்ல. :lol::D

  • தொடங்கியவர்

தர்மத்துக்கும் நேர்மைக்கும் இறுதி வெற்றி: ஜெயலலிதா

 

jaya2_2402445f.jpg

 

சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பால் தன் மீது சுமத்தப்பட்ட அவதூறு நீக்கப்பட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று (11.5.2015) கர்நாடகா உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு எனக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது.
 
என் மீது சுமத்தப்பட்ட அவதூறை நீக்கிய தீர்ப்பு இது. என் மீது எனது அரசியல் எதிரிகளால் சுமத்தப்பட்ட பழியினைத் துடைத்திட்ட தீர்ப்பு இது. நான் எந்த தவறும் செய்யாதவர் என்பதை உறுதி செய்த தீர்ப்பு இது.
 
புடம் போட்ட தங்கமாக நான் மீள இந்தத் தீர்ப்பு வழிவகை செய்துள்ளது. கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகுப் பிறகு என் மீது மாறாப் பற்றும், அன்பும் கொண்ட தமிழக மக்கள் இறைவனிடம் வேண்டியதற்கு, இறைவன் அளித்த வரம் இது.
 
இந்த தீர்ப்பு எனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த வெற்றி என்று நான் கருதவில்லை. நீதி நிலை நாட்டப்பட்டு, தர்மம் வென்றது என்பது தான் இந்த தீர்ப்பு. சூழ்ச்சிகள் என்றைக்குமே தற்காலிகமாக வெற்றி பெறலாம். ஆனால், இறுதி வெற்றி என்பது தர்மத்திற்கும், நேர்மைக்கும் தான் கிடைக்கும்.
 
திமுகவினாரால் சூழ்ச்சி வலைப் பின்னப்பட்டு, அதன் காரணமாக என் மீது போடப்பட்ட வழக்கில், சதியும் விதியும் சதிராடியதால் இடையிலே நீதி உறங்கி விட்டது. இன்றைய தீர்ப்பு நீதியே என்றும் வெல்லும் என்பதை பறைசாற்றுகிறது.
 
என்னையும், அஇஅதிமுகவையும் நேரடியாக வெல்ல முடியாது என்ற காரணத்தால் அரசியல் எதிரிகள் இறுதி வரை தங்கள் சூழ்ச்சிகளால் என்னையும், எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட மாபெரும் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தையும் அழித்து விடலாம் என்ற காழ்ப்புணர்வை இன்றுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
 
நான் குற்றமற்றவர் என்பதில் எள் முனையளவும் நம்பிக்கை குலையாமல் எனக்காக பிரார்த்தனைகள் மேற்கொண்ட என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், அனைத்து தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக மன வேதனை அடைந்த 233 கழக உடன்பிறப்புகள் எனக்காக தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள் என்பது என்றென்றும் எனக்கு வேதனை அளிக்கக்கூடியதாகும்.
 
நேற்று (10.5.2015) கூட நான்கு கழக உடன்பிறப்புகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள். இன்னும் சற்று நிதானத்தைக் கடைபிடித்திருந்தால் அவர்களும் தமிழக மக்களின் இந்த மகிழ்ச்சியை இன்று கொண்டாடி இருக்கலாம்.
 
தமிழக மக்கள் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதே எப்போதும் எனது அவா ஆகும். தமிழக மக்களின் நலனே என் நலன் என்று நான் என்றென்றும் தமிழக மக்களுக்காகவே உழைத்திடுவேன்" இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.