Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பால்ராஜ் அமரனுக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன் EDITTED

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

தளபதி பால்ராஜ் ஈழப்போர் வரலாற்றின் மாதண்டநாயக்கன் ஜெனரல் என கொண்டாடப்பட வேண்டிய மாவீரனாவார். அவரது மரணச் செய்தி கேட்டவுடன் எழுதிய அஞ்சலியை இப்போ மீழ செம்மைப் படுத்தி எடிற் பணி பதிவு செய்கிறேன்

 

 

பால்ராஜ் அமரனுக்கு

 

...ஜெயபாலன்

அமரா                                                                                                     எங்கள் விடுதலைபோரின் மாதண்ட நாயக்கா

நீ மீட்ட ஆனையிறவுக் கடற் கழியில்

தரை இறங்கும் செங்கால் நாரைகளாய்

வன்னியெங்கும் 

தாயின் மணிக்கொடிகள் பதிகின்றனவே.                                                                                                                                        *என கவிதையிலே நீ வாழ

ஈழம் கதறியழும் நியாய மென்ன.

 

 

இந்த மணலாற்று அகதிகளின் புதையலை

ஆழப் புதைக்காதீர்

ஆலயங்கள் கட்டாதீர்.

நாளை அவர்கள் மணலாற்றை மீட்டு                                                                            *வாழ திரும்புகையில்

மசிரை விட்டுதுகள் தம்

மனம் நிறைந்த நாயகனை.

 

நீயோ முடங்கிய காலில் 

மூண்டெரிந்த விடுதலைத் தீ.

தீவெட்டியாக

சுமந்து சென்ற தோழருக்கு 

'இத்தாவில்' போர் இருளில்  

வெற்றியின் பாதை விளங்க வைத்த மாவீரா.

உன்னை எழுதாமல் இந்தத் தமிழ் எதற்கு.

 

 

களம் களமாய் உன்னைத் தோழர் சுமந்ததுபோல்

காலங்கள்  ஊடே 

என் கவிதை இனிச் சுமக்கட்டும்            

 

 

WRITTEN 2008 MAY

 

EDITTED  2015 MAY

 

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரனின் காணொளியையும் (திண்ணையில்)  உங்கள் கவிதையையும் கண்டு நெகிழ்ந்தேன். நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி செந்தமிழாளன். இது மீழ் பதிவு மட்டுமல்ல. 20.மே.2008ல் கவிதை எழுதி எடிற்பண்ணும் மனநிலை இல்லாமல் பிரசுரித்தேன். பின்னர் 07,ஜுன்.2008ல் மேலோட்டமாக எடிற் பணீயிருக்கிறேன். இப்ப முழுமையாக எடிற்பணி திருத்தி பிரசுரிதிருக்கிறேன். கவிதை எடிற்பண்ணும் உத்திகள் பற்றி தெரிந்துகொள்ள இது உதவும்

மூல வடிவம் காண

http://www.yarl.com/forum3/index.php?/topic/39036-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-corrected-%E0%AE%B5%E0%AE%90%E0%AE%9A%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE/

 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

தேவையான  நேரத்தில் தங்கள் மீள் பதிவிற்கு நன்றி தோழர்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நநன்றி விசுக்கு, இது மீழ்பிரசுரமல்ல. கவிதையை செப்பனிட்டு மீழ எடிற் பண்ணி பதிவேற்றி உள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் போயற்!

 

எனக்கென்னவோ ஒரு கவிதையை வாசிக்கும் போது.. மூலக்கவிதை மனதில் இடம் பிடித்து விடுகின்றது!

 

பின்பு அதற்கு மெருகூட்டப்படும் போதும்.. அந்த மூலக்கவிதை மட்டும் நினைவிலிருந்து அகல்வதில்லை!

 

பொதுவாக நான் கவிதையின் 'கருப்பொருளை' மனதில் உள்வாங்கிக் கொள்வதனால்.. மெருகூட்டல்கள் அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை!

 

இந்த மணலாற்று அகதிகளின் புதையலை
ஆழப் புதைக்காதீர்
ஆலயங்கள் கட்டாதீர்.
நாளை அவர்கள் மணலாற்றை மீட்டு                                                                            *வாழ திரும்புகையில்
மசிரை விட்டுதுகள் தம்
மனம் நிறைந்த நாயகனை

 

மேலுள்ள பந்தியில்.. மசிரை விட்டுதுகள்..தம்..மனம் நிறைந்த நாயகனை.. என்னும் வரிகள் 'மக்களின் உணர்வை' அப்பட்டமாக வெளிக்காட்டுகின்றன!

 

இப்படியான 'வரிகள்' மெருகூட்டல் என்னும் பெயரில்.. விடுபட்டுப் போகக்கூடாது என்பது எனது பணிவான கருத்து!

 

இப்படியான வரிகள் நீக்கப்பட்டால்.. கவிதை செத்துப்போகும் என நினைக்கிறேன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் புங்கையூரான்,

மெருகூட்டுவதும் எடிற்பண்னணுவதும் இலகுவான பணியல்ல. ஆனால் உணவுக்குப்போடும் உப்புக்கு மட்டுமல்ல சர்க்கரைக்கும் சுவை சேர்க்கும் அளவு இருக்கல்லா? கவிதை அம்சங்களும் அப்படித்தான். ஆனால் மூலத்தின் வீரியம் மிக்க வரிகல் விடுபடாமல் பார்க்க வேண்டும். கவிதைக்கு வெளியே நின்றால், அற்புதமான அடி என்றாலும் அவை வேறொரு கவிதைக்கான அடிகள்  என்பதை ஏற்ருக்கொள்ள வேணும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.