Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2006 கொள்கைப்பிரகடணம்

Featured Replies

இவ்வாண்டிற்கான தேசியத் தலைவரின் கொள்கைப்பிரகடண உரை என்னவாக இருக்கும்? யாருக்காவது ஏதாவது யோசனைகள்????

*தமிழீழப்பிரகடணம்

*ஒப்பந்தத்தை கிளித்தெறிந்து முழுமையான போர்

*மீண்டும் பேச்சுகள்

பெறுமையிளந்து காத்திருக்கிறோம்........

சுதந்திரப்போரை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அழைப்பு தலைவரால் விடுக்கப்படுவதற்குரிய வாய்ப்புக்களே அதிகமாக உள்ளன.

தமிழீழ தாயகத்திலிருந்து எதிரிகள் முற்றாக விரட்டப்படும்வரை தமிழீழ தனியரசுப் பிரகடனம் செய்யப்படுமான என்பது கேள்விக் குறியே.

மீண்டும் பேச்சு - நான்கு ஆண்டுகள் பேச்சு என்ற போர்வையில் தமிழனை எப்படி ஒடுக்க முடியுமோ அப்படி ஒடுக்கி விட்டார்கள். எனவே இனிப்பேச்சு பற்றி தலைவர் கவனத்தில் கொள்ள மாட்டார் என எதிர்பார்க்கலாம்.

என்ன இன்றும் ஆறு நாட்கள் மாத்திரமே இருக்கின்றது. அதுவரை பொறுங்கள்.

தலைவரின் உரை தமிழ் மக்களின் விடிவிற்கான பயணத்தை மீண்டும் தொடர வழியேற்படுத்துமென எதிர்பார்ப்போம்

அழைப்பு விடுத்தாலும் முழுமயான போர் உடனடியாகத் தொடங்கும் என்டு நினைக்கிறியளா???

ம்... ம்...

அரசியல்

தலைவரின் உரை முடிந்தவுடன் போர் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்க இயலாது.

ஆனால் 2006 முடிவற்குள் நிச்சயம் அது நடக்கும்.

நான் நினைகிரேன் இந்த தடவையும் நெகிழ்சிப்போக்கானதாகத்தான் தலைவரின் உரை இருக்கும் என்று என்னதான் நடக்கும் எண்டு தெருயல பொறுங்கோ பாப்பாம் இன்னும் கொஞ்ச நாள்தானே

2006இல் போர் ஆரம்பிக்காது. ஈழவன் அண்ணா சொன்னமாதிரி நெகிழ்ச்சிப் போக்கு சார்ந்த, ஆனால் கண்டிப்பானதாக இருக்கும்.

மாவீரர் வாரமும் எதிர்பார்ப்புக்களும்!

நவம்பர் மாதம் இலங்கைத்தீவின் அரசியலில் ஒரு பரபரப்பை, திருப்பத்தைக் கொடுக்கின்ற மாதம். அதற்கான காரணம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதோ! நவம்பர் மாதம் வந்து விட்டது. இலங்கைத் தீவின் அடுத்த ஆண்டு அரசியல், இராணுவப் போக்கை தீர்மானிக்கின்ற மாவீரர் வாரம் அண்மிக்கிறது.

மாவீரர் தினம் 1989ஆம் ஆண்டில் இருந்து தமிழீழ மக்களால் நினைவுகூரப்பட்டு வருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முதலாவதாக வீரச் சாவடைந்த சங்கர் என்கின்ற சத்தியநாதனின் நினைவு நாள் மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டு, அந்த நாளில் தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை ஈந்த அனைத்து போராளிகளும், பொதுமக்களும் நினைவு கூரப்பட்டு வருகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக மாவீரர் தினம் என்பது மாவீரர் வாரம் என்று பரிமணித்து நினைவு கூரப்படுகிறது. இந்த மாவீரர் வாரம் நெருங்க, நெருங்க தமிழீழ மக்களிடம் பரபரப்பும், எதிர்பார்ப்பும் அதிகரிக்கும். சிங்கள அரசும், அதன் இராணுவ இயந்திரமும் திகிலோடு மாவீரர் வாரத்தை எதிர்கொள்ளும்.

மாவீரர் வாரம் மேலும் இரண்டு காரணங்களால் முக்கியத்துவம் பெறுகிறது. அக் காரணங்களில் மிகவும் முக்கியமான தேசியத் தலைவரின் மாவீரர் தின உரை. இந்த உரை தமிழீழத்தின் அடுத்த ஆண்டிற்கான கொள்கை விளக்க உரையாக அமையும். இலங்கைத் தீவின் அடுத்த ஆண்டு அரசியல் நிலவரம் எப்படி இருக்கப் போகிறது என்பதை ஓரளவு எதிர்வு கூறுவது தேசயத் தலைவரின் இந்த மாவீரர் தின உரையை வைத்துத்தான்.

இரண்டாவது காரணம் மாவீரர் வாரத்திலோ, அல்லது அதற்கு அண்மைய நாட்களிலோ விடுதலைப்புலிகள் ஒரு பெரும் தாக்குதலை நடத்துவார்கள். இந்தப் பெருந்தாக்குதல் ஒவ்வொரு முறையும் பெரும் வெற்றி அடைவதோடு, சிறிலங்காவின் இராணுவத்தை சின்னபின்னமாக்கி விட்டுத்தான் ஓயும். விடுதலைப்புலிகள் தாக்குவார்கள் என்று தெரிந்தும் சிறிலங்கா இராணுவத்தால் விடுதலைப்புலிகளின் தாக்குதலை முறியடிக்க முடிந்தது இல்லை.

சிறிலங்கா அரசோடு விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை ஆரம்பித்த பிறகுதான் சிறிலங்கா அரசு மாவீரர் வாரத்தை சற்று நிம்மதியோடு கழிக்கத் தொடங்கியது. ஆனால் இப்பொழுது நிலமைகள் மீண்டும் மோசமாகி பேச்சுவார்த்தைகள் ஒரு புறமும் மோதல்கள் மறு புறமும் நடக்கின்ற ஒரு புதிய நிலை உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில் தேசியத் தலைவர் என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்போடு, ஏதாவது தாக்குதல் நடக்குமா என்ற எதிர்பார்ப்பும் சிலரிடம் ஏற்பட்டிருக்கிறது.

சென்ற ஆண்டும் இதே காலப் பகுதியில் நிலமை மோசமடைந்து காணப்பட்டது. சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகள் மீது தமிழீழம் எங்கும் நிழல் யுத்தத்தை கட்டவிழ்த்து விட்டிருந்தது. அத்துடன் மக்கள் படையினருக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் பல இடங்களில் மோதல்கள் நடந்தன. இனவாத சிந்தனையோடு மகிந்தவின் அரசு பதவியேற்றும் சில வாரங்கள்தான் ஆகி இருந்தன.

அந்த நிலையில் சென்ற ஆண்டு வந்த மாவீரர் வாரமும் பலத்த எதிர்பார்ப்புக்களை உருவாக்கி விட்டிருந்தது. தேசியத் தலைவர் யுத்தத்தை அறிவிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலானவர்களிடம் பரவிக் கிடந்தது. ஆனால் தேசியத் தலைவரின் உரை அவ்வாறு அமையவில்லை. அதனாற்தான் என்னவோ, இந்த முறை சென்ற ஆண்டோடு ஒப்பிடுகின்ற பொழுது எதிர்பார்ப்பு என்பது குறைவாகவே இருக்கிறது.

ஆனால் நாள் நெருங்க, நெருங்க எதிர்பார்ப்பு இயல்பாக அதிகரிக்கவே செய்யும். பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்திற்கு நகர முடியாது அந்தரத்தில் தொக்கி நிற்பதாலும், மோதல்கள் தொடர்வதாலும், தேசியத் தலைவரின் உரை மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறது.

இந்த நேரத்தில் இன்னும் ஒரு எதிர்பார்ப்பு சிலரிடம் ஏற்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டு தேசியத் தலைவர் மகிந்த அரசுக்கு வழங்கிய காலக்கெடு முடிந்து விட்டது என்றும், அதனால் இந்த மாவீரர் தின உரையில் தேசியத் தலைவர் சிறிலங்க அரசுக்கு எதிரான யுத்தத்தை பிரகடனப்படுத்துவார் என்ற கருத்தும் சிலரிடம் காணப்படுகிறது. ஆகக் குறைந்தது அதிரடியாக ஒரு மிகக் குறுகிய காலக் கெடுவையாவது அறிவிப்பர் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் தேசியத் தலைவர் மாவீரர் தின உரையில் ஒரு யுத்தத்தையோ, காலக்கெடுவையோ அறிவிப்பார் என்று நான் நினைக்கவில்லை.

மாவீரர் தின உரை என்பது ஒரு தேசத்தின் தலைவரால் ஒரு புனித நாளில் வெளியிடப்படுகின்ற ஒரு கொள்கை விளக்க உரை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறான ஒரு உரையில் யுத்தப் பிரகடனங்கள், காலக்கெடுக்கள், சவால்கள் போன்றன இடம்பெற மாட்டாது.

இம் முறை மாவீரர் தின உரை பெரும்பாலும் சர்வதேசத்தை நோக்கியதாகவே இருக்கும் என்று நம்பலாம். சிறிலங்கா அரசின் தொடர்ச்சியான போர் அணுகுமுறைகளையும், மேற்குலகின் வாக்குறுதிகளையும், வேண்டுகோள்களையும் மதித்து விடுதலைப்புலிகள் முழு அளவிலான போரை ஆரம்பிக்காதது மாத்திரம் அன்றி பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியதையையும் சுட்டிக்காட்டி சர்வதேசத்தை ஒரு தீர்க்கமான நிலையை எடுக்குமாறு தேசியத் தலைவர் தனது உரையில் வலியுறுத்தக்கூடும். இதுவே மாவீரர் தின உரையின் முக்கிய பகுதியாக அமையும்.

சென்ற ஆண்டின் ஆரம்பத்தில் மேற்குலகின் அழுத்தம் விடுதலைப்புலிகள் மீதே அதிகமாக இருந்தது. விடுதலைப்புலிகளின் ராஜதந்திரம் மிக்க நடவடிக்கைகளாலும், ஆச்சரியப்படத்தக்க பொறுமையாலும் விடுதலைப்புலிகள் மேற்குலகின் அழுத்தங்களை சிறிலங்கா அரசை நோக்கி திருப்பி விட்டிருக்கிறார்கள். தற்பொழுது சர்வதேசத்தின் மீது விடுதலைப்புலிகள் அழுத்தம் போடுகின்ற நிலை வந்திருக்கிறது என்று சொன்னால் கூட அது மிகையாக இருக்கப் போவதில்லை. இன்றைக்கு மேற்குலக நாடுகள் வன்னிக்கு சென்று விடுதலைப்புலிகளிடம் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி விட்டு வருவதை இந்த இடத்தில் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.

இப்பொழுது அழுத்தம் என்பது சிறிலங்கா அரசின் மீதே மேற்குலக நாடுகளால் போடப்படுகிறது. ஆனால் சிறிலங்கா அரசின் விட்டுக்கொடாத் தன்மையால் ஒர தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டிய நிலைக்கு மேற்குலகம் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு தேசியத் தலைவரின் மாவீரர் தின உரை ஒரு உந்துதலாக அமையக் கூடும்.

இங்கே சொல்லப்படுகின்ற அழுத்தங்கள், வாக்குறுதிகள் போன்றவைகள் உள்ளுக்குள் நடக்கின்ற விடயங்களே அன்றி வெளிப்படையாக நடக்கின்ற விடயங்கள் அல்ல என்பதை இதை வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த வருடம் சிறிலங்கா அரசு ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்தியதாலும், பல நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளதாலும், விடுதலைப்புலிகள் நடத்துகின்ற நவம்பர் மாத பெருந்தாக்குதல்கள் போன்று இம் முறையும் நடைபெறுமா என்ற கேள்வியும் சிலரிடம் உண்டு. ஆனால் மாவீரர் வாரத்தை குழப்புகின்ற நோக்கோடும், விடுதலைப்புலிகளை உச்சகட்ட சீற்றத்திற்கு ஆளாக்கி, விடுதலைப்புலிகளாகவே முழு அளவிலான யுத்தத்தை ஆரம்பிக்கச் செய்கின்ற நோக்கோடும் பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு தாக்குதலுக்கு சிறிலங்கா அரசு திட்டமிடுவதாக தாயகத்தில் இருந்து வருகின்ற சில செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அரசை இவ்வாறான ஒரு தாக்குதலை செய்ய விடாது தடுப்பதற்காக விடுதலைப்புலிகள் முன்கூட்டியே ஒரு தற்காப்புத் தாக்குதலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள் இருப்பதை இந்தச் செய்தி சொல்கிறது. ஆனால் விடுதலைப்புலிகள் சர்வதேச சமூகத்திடம் இது குறித்து முறையிட்டு அழுத்தங்கள் மூலம் சிறிலங்கா அரசை இது போன்ற தாக்குதலில் ஈடுபட விடாது தடுக்கின்ற முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள் என்று அறிய முடிகிறது. விடுதலைப்புலிகளின் இம் முயற்சி வெற்றி பெறுவதிலேயே மற்றையவைகள் தங்கி உள்ளன.

அவ்வாறு விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்துவதாக இருந்தால் கூட அவைகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறாத வகையிலேயே இருக்கும்.

முடிக்கின்ற வேளையில் ஒன்றைச் சொல்ல வேண்டும். இங்கே கூறப்பட்டிருக்கின்ற சில கணிப்புக்கள் அப்படியே பலிக்க வேண்டும் என்றும் எந்தக் கட்டாயமும் இல்லை. விடுதலைப்புலிகளையும் அவர்களின் செயற்பாடுகளையும் சரியான முறையில் யாராலும் கணிக்க முடியாது. அப்படி கணிக்கப்பட முடியாதவர்களாக இருப்பதும் அவர்களின் வெற்றியின் காரணங்களில் ஒன்று. விடுதலைப்புலிகள் செய்த பிறகோ அல்லது சொன்ன பிறகோதான் சில விடயங்கள் புரிய வரும். விடுதலைப்புலிகளைப் பற்றி முற்கூட்டியே சொல்லப்பட்ட கணிப்புக்கள் சில வேளைகளில் சரியாக இருக்கும், சில வேளைகளில் தவறாக இருக்கும்.

ஆனால் விடுதலைப்புலிகள் செய்கின்ற கணிப்புக்கள் ஒருபோதும் தவறாக இருந்தது இல்லை.

தமிழ் மக்களின் மனித அவலமும் உடனடி வாழ்வாதரப் பிரச்சினையும் ,இவை சம்பந்தமாக தமிழரின் பாதுகாவலர்கள் அரசியற் தலமைச்சக்திகள் என்ற வகையில் புலிகளின் கடப்பாடுகள் பற்றிக் கூறப்படும்.இதுகாலவரை சமாதான வழமுறைகளால் சர்வதேசத்தால் சிறிலங்கா அரசைக் கட்டுப்படுத்த இலலாமை அல்லது விருப்பமின்னமையால் இந்த நிலமை எழுதுள்ளது என்று கூறப்படும்.ஒரு வருட கால அவகாசத்தில் சிறிலங்கா அரசு எதுவித காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்காது இராணுவ வல்லாதிக்க ரீதியாக தமிழர்களை அடக்கி ஒடுக்கவே துணிந்துள்ளது.இந்த நிலமைகளால் தமிழர்கள் சமாதானச் செயற்பாடுகளில் முற்றிலும் நம்பிக்கை இழந்துள்ளனர்.

பொருளாதாரத் தடைகள் வீதித் தடைகள் குண்டு வீச்சுக்கள் படுகொலைகளை நிறுத்தும் கடப்பாடு தற்போது புலிகளின் மேல் வீழ்ந்துள்ளது.இதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்வதைத் தவிர வேறு மார்க்கங்கள் புலிகளுக்கு இல்லை.தமிழ் மக்களை அழிவிலிருந்து காப்பாற்றும் முகமாக தகுந்த நடவடிக்கைகளை சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக எடுக்க வேண்டிய கடப்பாட்டில் புலிகள் இருக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து அமைதிப்பேச்சுவார்தைகளில் சர்வதேசத்தின் பக்கச்சார்ப்பு பற்றியும் கூறப்படும்.தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்ததற்கான கரணமும் கூறப்படும்.

இவற்றைத் தொடர்ந்து சிறிலங்காவின் இராணுவமும் பொருளாதாரமும் மிகப்பெரிய அழிவைச் சந்திக்கும்.சர்வதேச ரீதியாக அமெரிக்கா இந்தியாவை ஒரு இரானுவ ரீதியான தலயீட்டை மேற் கொள்ள நிர்ப்பந்திக்கலாம்.தமிழ் நாட்டு நிலமைகள் இதனைத் தடுக்கலாம்.அடுத்த ஆண்டு எமது போரட்டத்தில் ஒரு மைற்கல்லாக இருக்கும்.

மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஒரு புதிய சிறிலங்கா அரசியற் கூட்டுடன் மேற் கொள்ளப் படலாம்.அப்போது தமிழ் ஈழத்தின் பெரும்பாலான நிலப்பரப்பு புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

இவை எனது எதிர்வு கூறல்கள் மட்டுமே

கனவு மெய்ப்பட வேணும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.