Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதிரிகளைத் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்": இரா. சம்பந்தர்

Featured Replies

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் உதிரிக் கட்சிகளை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் தெரிவித்துள்ளார். முன்னாள் விடுதலைப் புலிகளின் கட்சி மற்றும் ஆனந்தி சசிதரனுக்கும் இது பொருந்தலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.


null

வெள்ளிக்கிழமையன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய வரும் இரா. சம்பந்தன்.

இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூடுதலான உறுப்பினர்களை பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமையன்று, திருகோணமலை மாவட்டத்திற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக இந்த தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், உதிரிகளைத் தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றார்.
ஜனநாயக விடுதலைப் போராளிகளாக போட்டியிடும் முன்னாள் விடுதலைப் புலிகள் மற்றும் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள வட மாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரனுக்கும் இது பொருந்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிட வேண்டுமென தங்களை சந்தித்த முன்னாள் விடுதலைப்புலிகள், தமிழ் மக்களின் எதிர்காலம் மற்றும் உடனடித் தேவைகள் பற்றிய உறுதிப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்றும் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்ற உறுதிப்பாடு மட்டுமே அவர்களிடம் இருந்தது என்றும் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/07/150710_sambandan

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக இந்த தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், உதிரிகளைத் தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றார்.
ஜனநாயக விடுதலைப் போராளிகளாக போட்டியிடும் முன்னாள் விடுதலைப் புலிகள் மற்றும் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள வட மாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரனுக்கும் இது பொருந்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிட வேண்டுமென தங்களை சந்தித்த முன்னாள் விடுதலைப்புலிகள், தமிழ் மக்களின் எதிர்காலம் மற்றும் உடனடித் தேவைகள் பற்றிய உறுதிப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்றும் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்ற உறுதிப்பாடு மட்டுமே அவர்களிடம் இருந்தது என்றும் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/07/150710_sambandan

 

அப்பனே இந்த பொய் பிரட்டுக்கு இந்தமுறை திருகோணமலையால  இடம் இல்லை ..மக்கள் நல்லா பயந்து போட்டினம். 

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் உதிரிகளை நிராகரிக்கவேண்டும் ஆனால் பொக்கை வாயால் புளுக்கொடியல் சாப்பிடலாம் என்று சொல்லும் நபர்களை பாராளுமன்றுக்கு ஏற்றிவிடவேண்டும் என்பதுதான் சம்பந்தரின் விருப்பம். வாழ்நாள் பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்கு மேல் ஒன்றையும் சாதிக்கப்போவதில்லை இவர்.

  • கருத்துக்கள உறவுகள்

திரு சம்பந்தன் ஐயா அவர்கட்கு,

தமிழ்த்தேசியம் எனும் தமிழர்களுக்கான இருப்பில் தாங்களும் மறுக்கமுடியாத அங்கம் என்பதனை நான் எப்போதும் உணர்வேன் ஆனால் தமிழ்த்தேசியத்தில் உங்களது இருப்பு என்பது பாராளுமன்றத்தின் கதிரையை இட்டுநிரப்புவதாக அமைவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாதுள்ளது. புலிகளது வருகையையோ அன்றேல் அவர்கள் உங்களைக்கட்டுப்படுத்துவதையோ வெறும் ஆயுதக்கலாச்சாரம் என உதாசீனப்படுத்திய நீங்களும் தற்போதைய உங்களது வழித்தோன்றல்களும் கடந்த காலங்களில் பாராளுமன்றத்தின் ஆசனங்களை சுவீகரித்துக்கொள்ள வன்னியில் வரிசைகட்டி நின்று களைப்பிற்குக்கை நனைத்தபோது தற்போது உதிரிக்கட்சிகள் என நீங்கள் குறிப்பிடும் முன்னைநாள் புலிகளில் ஒருசிலர் உங்களுக்குப்பரிமாறியிருக்கலாம். தற்போது தமிழர் பிரதேசமெங்கும் முன்னைநாள் புலிகளை (இது வடக்கில் மிக மோசமான நடைமுறையாகக்கொள்ளப்படுகின்றது) தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கிவைக்கும்போது நீங்களும் உங்கள் பங்கிற்கு அவர்களை வேண்டாதவர்களாக ஓரங்கட்டுகிறீர்கள்

புலம்பெயர் தேசங்கள் எங்கும் உங்களது நடவடிக்கைகளை ஆகா ஓகோ எனப்புகழ்வோரைத்தவிர ஏனையோரைப் புலிவால்கள் என நீங்கள் கூற உங்களாலும் உங்களது எஜமானனாகிய தமிழர்விரோத தேசமாம் இந்தியாவாலும் அங்காங்கே அள்ளித்தெளித்து வைத்திருக்கும் உங்களது அடிப்பொடிகளும் விமர்சனம் செய்வதுபோல் இப்போது ஜனநாயக ரீதியாக தேர்த்தலில் நிற்கும் ஒரு தரப்பினை உதிரிகள் என ஒதுக்குவது ஏளனம் செய்வது ஒன்றும் நல்ல விடையம் இல்லை.

அனந்தி சசிதரன் அவர்கள் தற்போதும் தமிழர்கூட்டமைப்பில் எண்ணிக்கை அடிப்படையிலாவது ஒன்றித்திருக்கும் ஒரு மாகாணசபை உறுப்பினர் அவருடன் நேரடியாகப் பேசி உங்களது பிரச்சனை என்ன இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வழி என்ன எனக்கண்டறிய பெயரளவுக்காவது ஒரு கலந்துரையாடலுக்கான ஏற்பாட்டை நீங்கள் இதுவரை செய்தீர்களா?

அதற்காக சுயேற்சையாக தேர்தலில் போட்டியிட முற்பட்டுள்ள அனந்தியவர்களது செயல் நியாயமானது என நான் வாதாட வரவில்லை.

இதையங்களால் புரிந்துகொள்ளப்பட்ட உறவு அன்றேல் ஒப்பந்தம் என மைத்திரி தலைமையிலான அரசுடனான உங்கள் உறவை வர்ணித்தீர்களே, தமிழர்களை வதைமுகாமில் ஏற்றவும் வாய்க்கால்களில் புதைத்துமூடவும் காரணமாகவிருந்த மகிந்த ராஜபக்ஸவுக்கு தற்போது தேர்தலில் போட்டியிட மைத்திரி தனது கட்சியில் அனுமதியளித்திருக்கிறாரே அதுபற்ரி உங்களது கருத்தென்ன,

ஆக எவன் எக்கேடும் கெட்டுப்போகட்டும் என்பதாக ரணிலுடன் சேர்ந்து சிங்கக்கொடி காட்டியதுபோல் மைத்திரியுடன் சேர்ந்து சிங்கக்கொடி காட்ட ஆயத்தமாகிறீர்கள் அப்படித்தானே.

தந்தை செல்வாவிற்குப்பின்னர் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணியினது போக்கில் ஏமாற்றமடைந்தே இளையோ அதிகளவில்  ஆயுதப்போராட்டத்தின்பால் ஈர்க்கப்பட்டனர், தற்ப்போதைய உங்களது போக்கு இன்னுமொரு முள்ளிவாய்க்காலுக்கான காலத்தை மிகவிரைவில் ஏற்படுத்தவேண்டுமெனும் தமிழர் விரோததேசம் இந்தியாவினது திட்டத்தை விரைவுபடுத்திவிடுவீர்கள் போலுள்ளது.

புலத்தின் உறவுகளும் புலம்பெயர் உறவுகளும் உரிமைகளை வென்றெடுக்க ஆயுதமேந்திய போராட்டத்தை இனிவரும்காலங்களில் விரும்பவோ ஏற்றுக்கொள்ளவோ மாட்டார்கள் எனிலும் இன்னுமொரு ஆயுதப்போராட்டமும் அதன்பின்னதான தமிழர் இன அழிப்பும் தமிழர்விரோததேசமாம் இந்தியாவுக்குத் தேவை என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.

ஆகவே தாங்கள் அரசியல் செய்வது தங்களதும் தங்களைச்சேர்ந்தவர்களதும் நார்காலிக்கனவுகளை நிறைவேற்றவும், சிங்களத்திடம் நல்லபெயர் கேட்க தமிழர்களை அதிகாரம் செய்வதற்காகவுமெனிலும் கொஞ்சமேனும் வெளிப்படைத்தன்மையுடன் அரசியல் செய்யுங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை யாரை விட்டது. தமிழ் நாட்டில் ஒரு கருணாநிதி. ஈழத்தில் ஒரு சம்பந்தர்.

தலைமைக்கும் தன் நலத்திற்கும் அரசியல் செய்யும் இவர்கள் தமிழர்களின் சாபக்கேடுகள்

  • கருத்துக்கள உறவுகள்

null

வேட்பு மனு தாக்கல் செய்யப் போகும் போதே..... 
பதுங்கிப், பதுங்கி...., நெஞ்சு திக், திக்.... என்று அடித்த படி தான் போகிறார்கள்.
வாங்கய்யா... வாங்க, மண் கவ்வ.... ஆயத்தமாய் வாங்க.

  • கருத்துக்கள உறவுகள்

உதிரிகளுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டியநிலை ஐயாவுக்கு....

சாணக்கியமாக நடந்திருந்தால் தடுத்திருக்கலாம்..

இன்று கூட எனக்கு வயதாகிவிட்டது என்று விலகி ஆலோசகராக நின்று கொண்டு

ஒரு இளைஞரை உள்வாங்கியிருந்தால்......

ஐயா தமிழ் மக்கள் மனதில் உயர்ந்திருப்பார்

சாகும் போதும் பதவியுடன் இறப்பதைவிட

மக்கள் மனங்களில் இருப்பதே சிறந்த தலைவருக்கு இலக்கணம்

கழுவுகின்ற செக்குகளுக்கு எப்படி புரியும் போராளிகளின் அர்ப்பணிப்பு ...நான் நினைக்கிறேன் இந்த முறை தேர்தல் தான் கூட்டமைபு வெல்ல கூடிய கடைசி தேர்தல்ஆக இருக்கும் . போராளிகளின் கட்சி தங்களை மிக தெளிவாக மக்கள் முன் நிரூபிப்பார்கள் ஆனால் அவர்கள் தான் இனி வரும் காலங்களில் தமிழகளின் தெரிவு ஆக இருக்கும் .. இந்த முறை தேர்தலுக்கு புதியவர்கள் ஆக இருப்பதால் மக்கள் மத்தியில் சிறு குழப்பம் இருக்க தான் செய்யும் .

கூட்டமைப்பில் இருந்து பங்கு பற்றி இருந்தால் மக்களின் வாக்குகள் அவர்களுக்கே . அதனால் தான் சம்பந்தன் அவர்களை தங்களுடன் சேர்ப்பதில் விருப்பம் கொள்ளவில்லை ..அது சம்பந்தன் சுமந்திரனின் தோல்விக்கான ஆரம்பமாக இருக்கும் என்பதால் தான் விடவில்லை ..

அனந்தி ஒரு போராளியின் மனைவி மட்டுமே ஆனால் மாகாணசபை தேர்தலில் பெற்ற வாக்குகள் போதும் மக்கள புலிகளுக்கு எவ்வளவு இடத்தை இப்பவும் கொடுத்துள்ளார்கள் என்று .இதனால் தான் சம்பந்தன் கிழடு முனகிக்கொண்டு இருக்கின்றார் .

 

 

  • தொடங்கியவர்

தேர்தல் திகதி அறிவித்தவுடன் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும் மக்களை ஒன்று திரட்டி கடந்த கால தவறுகளைக் களைந்து ஒற்றுமையாக இந்த தேர்தலை எவ்வாறு எதிர் கொள்ளலாம், எமது செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என ஆலோசித்து இருக்க வேண்டும், த.தே. முன்னனியினருடன் பேச்சு நடாத்தியிருக்கலாம் , அவர்கள் மறுத்தால் அதனை மக்களுக்கு நீங்கள் கூறி உங்களை முழுமையாக ஆதரிக்கும் படி மக்களைக் கோரியிருக்கலாம். 

ஒரு அனுபவமிக்க அரசியல் தலைவராக நாங்கள் இதைத்தான் உங்களிடம் எதிர் பார்த்தோம்...............?

ஆனால் நடந்ததென்ன? தேர்தல் அறிவிப்பு வந்த மறுநாளே கூட்டமைப்பின் கூட்டனிக் கட்சிகள் எனக்கு எத்தனை தொகுதி, உனக்கு எத்தனை தொகுதி என பங்கு பிரிக்கத் தொடங்கி விட்டன , தமிழரரின் அரசியல் பாதை தெளிவான கொள்கைக்களை முன் வைத்து ஒற்றுமையாக முன்னேறுவத்றகுப் பதில்,பங்கு பிரிக்கும் கோட்டா அரசியல் ஆகச் சுருங்கி விட்டது.

உங்களுக்குப் பிறகு இந்த சமுதாயத்துக்கு எப்ப்டியான ஒரு அரசியலை விட்டுச் செல்லப் போகிறீர்கள்? 
 மக்களுக்கு எப்படியான தீர்வைப் பெற்றுக் கொடுக்கப் போகிறீர்கள்?

நீங்கள் ஒரு உருப்படியான பாதையைக் காட்டினால்

"நெல்லை யார் குற்றியென்றாலும் அரிசியானால் சரி" என நினைத்து எல்லாரும் உங்களைத் தான் ஆதரிப்பார்கள்................

ஆனால் எனக்கு ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரியும் நீங்கள் கடைசி வரை நெல்லைக் குற்றப் போவதில்லை

 

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் திகதி அறிவித்தவுடன் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும் மக்களை ஒன்று திரட்டி கடந்த கால தவறுகளைக் களைந்து ஒற்றுமையாக இந்த தேர்தலை எவ்வாறு எதிர் கொள்ளலாம், எமது செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என ஆலோசித்து இருக்க வேண்டும், த.தே. முன்னனியினருடன் பேச்சு நடாத்தியிருக்கலாம் , அவர்கள் மறுத்தால் அதனை மக்களுக்கு நீங்கள் கூறி உங்களை முழுமையாக ஆதரிக்கும் படி மக்களைக் கோரியிருக்கலாம். 

ஒரு அனுபவமிக்க அரசியல் தலைவராக நாங்கள் இதைத்தான் உங்களிடம் எதிர் பார்த்தோம்...............?

ஆனால் நடந்ததென்ன? தேர்தல் அறிவிப்பு வந்த மறுநாளே கூட்டமைப்பின் கூட்டனிக் கட்சிகள் எனக்கு எத்தனை தொகுதி, உனக்கு எத்தனை தொகுதி என பங்கு பிரிக்கத் தொடங்கி விட்டன , தமிழரரின் அரசியல் பாதை தெளிவான கொள்கைக்களை முன் வைத்து ஒற்றுமையாக முன்னேறுவத்றகுப் பதில்,பங்கு பிரிக்கும் கோட்டா அரசியல் ஆகச் சுருங்கி விட்டது.

உங்களுக்குப் பிறகு இந்த சமுதாயத்துக்கு எப்ப்டியான ஒரு அரசியலை விட்டுச் செல்லப் போகிறீர்கள்? 
 மக்களுக்கு எப்படியான தீர்வைப் பெற்றுக் கொடுக்கப் போகிறீர்கள்?

நீங்கள் ஒரு உருப்படியான பாதையைக் காட்டினால்

"நெல்லை யார் குற்றியென்றாலும் அரிசியானால் சரி" என நினைத்து எல்லாரும் உங்களைத் தான் ஆதரிப்பார்கள்................

ஆனால் எனக்கு ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரியும் நீங்கள் கடைசி வரை நெல்லைக் குற்றப் போவதில்லை

மக்களின் அவலங்களையும் தம்மைவிட வேறு எவருமில்லை என்ற ரீதியில் 

வெல்வோம்  என்ற  மமதையில்

தனிமனித கட்சி நலம் சார்ந்து மட்டுமே சுயநலமாக சிந்தித்து 

தமது இந்த போக்குகளை கேள்வி கேட்பவர்கள்

உடன்படாதவர்கள் 

மிகக்கவனமாக ஓரங்கடடப்பட்டு

எடுக்கப்பட்ட தீர்மானங்களே தவிர

தமிழரது பிரச்சினை என்பதே இங்கே வெகுதூரம்.........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.