Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் முதல் இலங்கையர் மரணம்!

Featured Replies

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் முதல் இலங்கையர் மரணம்!

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முதல் இலங்கையர் சிரியாவில் கடந்த வாரம் இடம்பெற்ற வான் வழித் தாக்குதலில் மரணமானார் என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு மரணமானவர் 37 வயதான அபூ சுரையா சைலனி (இப்பெயர் அவரின் சொந்தப் பெயரல்ல ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்த பின்னர் சூடிய பெயராகும்) என்பவராவார். கண்டியின் கலேவெலவில் கராத்தே பயிற்றுவிப்பாளராக இருந்த இவர், ஜீ.சி.ஈ. சாதரண தரப் பரீட்சையின் பின்னர் இஸ்லாமிய கொள்கைகளில் தீவிர ஈடுபாடு காட்டினார் என்றும் இதனால் பாகிஸ்தானின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய சட்டத்தை கற்று எல்.எல்.பி. பட்டம் பெற்றார் என்றும் கூறப்படுகின்றது.

6 பிள்ளைகளின் தந்தையான இவர் கராத்தே பயிற்சிகளை வழங்குவதற்காக மகரகமவிற்கும் அடிக்கடி செல்பவர் என்றும் கூறப்படுகின்றது. அபூவின் மரணம் குறித்து அவரின் மாணவர்கள் தமது முகநூல் பக்கத்தில் தகவல்களை வெளியிட்டதுடன் அவருக்கு அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் 70 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பலர் இணைந்துள்ளனர் எனினும் இவரே முதலாவது இலங்கையர் எனக் கூறப்படுகின்றது. இந்த விடயம் குறித்து சி.ஐ.டியினர் விசாரணைகளை தொடங்கியுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். இதில் வெளிவிவகார அமைச்சும் அக்கறை செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

http://malarum.com/article/tam/2015/07/18/11057/ஐ-எஸ்-ஐ-எஸ்-தீவிரவாத-அமைப்பின்-முதல்-இலங்கையர்-மரணம்-.html#sthash.C1vf7MCc.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் கராத்தேயில விளையாட்டுக் காட்டலாம் எண்டு கிளம்பிப் போயிருப்பாரோ? :innocent:

மத அபிமானம் ஒரு புறம் இருக்க, இலங்கை போன்ற நாடுகளில், ஆறு பிள்ளைகளும், தாயும் என்ன பாடுபடுவார்கள் வாழ்வை ஓட்ட எண்டு யோசித்துப் பார்த்து இருப்பாரோ? :shocked:

 

ஐ.எஸ் தீவிரவாத குழு மீதான தாக்குதலில் பலியான இலங்கையர் குறித்து புதிய தகவல்
[ திங்கட்கிழமை, 20 யூலை 2015, 08:40.24 AM GMT ]
srilankan_is_001.jpg
ஐ.எஸ் தீவிரவாத குழு மீதான தாக்குதலில் பலியான இலங்கையர் கலேவெல பிரதேச சர்வதேச பாடசாலை அதிபராக இரண்டு வருட காலமாக செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர் சிரியாவில் மேற்கத்தைய விமானத் தாக்குதல் ஒன்றில் கடந்த வாரம் கொல்லப்பட்டதாக சமூக இணையத்தள செய்திகள் வெளியாகியது.

ஐ.எஸ் திவிரவாத குழு அபு சுராய் சைலானி என்ற புனைப்பெயரை அவருக்கு சூட்டியிருந்தது. 37 வயதுடைய இவர் கண்டி, வெரெல்லகம பிரதேசத்தில் பிறந்தவராகும்.

அவரது மனைவி கொழும்பை சேர்ந்தவராகும்.

கலேவெல பிரதேச சர்வதேச பாடசாலையில் அதிபராக செயற்பட்ட சந்தர்ப்பத்தில் இவர் முஸ்லி லிலம்தன் என்ற பெரை பயன்படுத்தியுள்ளார்.

2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாடசாலை விடுமுறையின் போது பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னார் மெக்கா யாத்திரைக்கு செல்வதாக கூறி பாடசாலை அதிபர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக பாடசாலை இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmtyHRUSVnt1B.html

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுதலான விடயம்.. இவரையும் சிங்களம் தான் ஐ எஸ் வரை போக வைத்துள்ளது. சிங்களப் பிரதேச முஸ்லீம் ஆக உள்ளார் இவர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆற்றுக்கை தொலைச்சு விட்டு குளத்தில தேடின கதை தான் நினைவுக்கு வந்து துலைக்குது!

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் என்று வரும் போது எங்கிருந்தும் ஐசிஸில் இணைய சந்தர்ப்பம் உண்டு என்பதை மறுக்க முடியாது.லண்டனில் பிறந்து வளர்ந்த முஸ்லிம் இணைய முடியும் எனின் இலங்கையில் உள்ளவர் இணைய நிறையவே சந்தர்ப்பங்கள் உண்டு.இவரின் பெயரை மேற்கத்தைய ஊடகங்கள் வெளியிட்டனவா?

“ISIS” போராட்டத்தில் பலியான இலங்கையர் அதிபர்! மேலும் தகவல்கள் கசிவு!

இஸ்லாமின அரசு ஒன்றை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு உலகத்தையே அச்சுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் (isis) என்ற அமைப்பினால் தற்போது இலங்கையிலும் ஒருவகை அச்சநிலை ஏற்பட்டுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இலங்கையைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் சிரியாவில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் உயிரிழந்தமை அடுத்து இந்நிலை ஏற்பட்டுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து பலியானதாகக் கூறப்படும் இலங்கையர் தொடர்பான தகவல்கள் தற்போது முதன்முறையாக வெளிவந்துள்ளன.

கண்டி, கலேவல பிரதேசத்தைச் சேர்ந்த அபு சுராயா சயிலானி என்ற 37 வயதான நபரே ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் இணைந்து சிரிய அரசுக்கு எதிராக போராடியதாக தெரியவந்துள்ளது.

இவர் அமெரிக்க படைகள் மேற்கொண்ட விமான தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் கொழும்பில் திருமணம் முடித்துள்ளதோடு 6 குழந்தைகள் இருப்பதாகவும் அவரது மனைவி தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்றவரென கூறப்படுகிறது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. பட்டத்தைப் பெற்ற அவர், அராபி, உருது, சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் சரளமாக உரையாடக்கூடியவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கலேவெல நகரில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் சுமார் இரண்டு வருடங்கள் அதிபராக கடமையாற்றியுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் மக்கா நகர் செல்வதாகக் கூறி அதிபர் பதவியில் இருந்து விலகிச் சென்றுள்ளார்.

அவர் அதிபராக பணியாற்றிய குறித்த சர்வதேச பாடசாலையில் இருந்து எந்தவித தடயங்கள் ஆவணங்களையும் பெறமுடியவில்லை. அனைத்தையும் அவர் அகற்றிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

குறிப்பாக அவரது கையெழுத்து உள்ள ஒரு ஆவணம் கூற அப்பாடசாலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.jvpnews.com/srilanka/117431.htmlsri_lankas_first_isis

Edited by BLUE BIRD

“ஐ.எஸ்” தீவிரவாதிகள் மத்தியில் இலங்கையர்கள் கசியும் தகவல்.

 

ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து சிரியாவின் அரசாங்கத்துக்கு எதிராக போராடும் இரண்டாவது இலங்கையர் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தௌஹீர் அஹமட் தாஜூதீன் என்பவரே இவர் என்று ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

இவர், ஏற்கனவே ஜூலை 12ஆம் திகதியன்று சிரியாவில் கொல்லப்பட்ட இலங்கையரான அபு சுராயா சைலானியின் மைத்துனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கண்டி கலேவலையை சேர்ந்தவர். இந்தநிலையில் தற்போது கண்டறியப்பட்டுள்ள இரண்டாவது இலங்கையரும் கண்டி அலதெனிய பிரதேசத்தை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அபு சுராயா சைலானி ஜூலை மாதம் 12ஆம் திகதியன்று சிரியாவில் கொல்லப்பட்டதாக குறித்த அஹமட் தாஜூதீனே தமது முகநூலில் செய்தி வெளியிட்டிருந்தார்.

அவரின் முகநூலின் முகத்தகவல்களை பார்த்தபோது அவர் மலேசியாவில் வசிக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் சிரியாவில் இடம்பெற்ற உண்மையை அறிந்து கொள்வதற்காக வினவியபோது, அவர் தமது முகநூலில் இருந்து விலகியதுடன், நண்பர்களின் கணக்குகளையும் அழித்து விட்டதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

சிரியாவில் மேலும் 6 சிறிலங்காத் தீவிரவாதிகள்

சிரியாவில் சிறிலங்காவைச் சேர்ந்த மேலும் 6 பேர் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து மோதல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்காவின் புலனாய்வுத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே சிறிலங்காவைச் சேர்ந்த ஒருவர் அங்கு மேற்கொள்ளப்பட்ட   வான்தாக்குதலில் உயிரிழந்தார்.

அவரது உறவினர் ஒருவர் உள்ளிட்ட மேலும் ஆறு சிறிலங்காவின் முஸ்லிம்கள் அங்கு தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

http://www.jvpnews.com/srilanka/118071.htmlisis

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இஸ்லாமியர் என்றில்லாமல் இஸ்லாமியப் பயங்கரவாதம் எங்கெல்லாம் தலைதூக்குகின்றதோ அங்கெல்லாம் முறியடிக்கப்படவேண்டும். பயங்கரவாதம் எந்தவடிவில் வந்தாலும் ஈவுஇரக்கமில்லாமல் துடைத்தழிக்கப்படவேண்டும். பயங்கரவாதிகளுக்குப் புரியும் ஒரே மொழி பயங்கரவாதம்தான்!

இந்தாள் கராத்தேயில விளையாட்டுக் காட்டலாம் எண்டு கிளம்பிப் போயிருப்பாரோ? :innocent:

மத அபிமானம் ஒரு புறம் இருக்க, இலங்கை போன்ற நாடுகளில், ஆறு பிள்ளைகளும், தாயும் என்ன பாடுபடுவார்கள் வாழ்வை ஓட்ட எண்டு யோசித்துப் பார்த்து இருப்பாரோ? :shocked:

 

ஆறுபிள்ளைக்கும் ஏதும் பெரிசா தேடப்போய்தான் சிங்கம் சிக்கிச்சோ தெரியாது.... 

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு.... காத்தான் குடியில், மார்பளவு சிலை வைத்து... மாலை போட வேண்டும்.

 

படித்தவன்  படித்தவன் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.