Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“SLMC” சுயரூபம் அம்பலம்.

Featured Replies

“SLMC” சுயரூபம் அம்பலம்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களை நிபந்தனையற்ற வகையில் இணைப்பதை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களை நிபந்தனையற்ற வகையில் இணைப்பதை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

சாய்ந்தமருது ‘ஸீ பிறீஸ்’ ஹோட்டலில், நடத்தி ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே, ஹரீஸ் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், இனப்பிரச்சினைத் தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, 13ஆவது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதிலும், 13க்கு அப்பால் சென்று அதிகாரங்களை வழங்குமாறு, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து, முஸ்லிம் காங்கிரஸ் பாடுபடும்.

குறிப்பாக, பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குமாறு, எதிர்வரும் அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தும். இருப்பினும், நிபந்தனையற்ற வகையில், வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதை ஒருபோதும் முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்குப் பிறகு, ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும். அதன்போது நிச்சயமாக, கல்முனை கரையோர மாவட்டத்தினை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுத்தரும்.

அதேவேளை, சாய்ந்தமருதுப் பிரதேசத்துக்கென உள்ளூராட்சி சபையொன்றினைப் பெற்றுக் கொடுப்பதில், முஸ்லிம் காங்கிரஸ் தெளிவானதொரு முடிவோடு உள்ளதாகவும், ஊடகவியலாளர்களிடம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கூறினார்.உள்ளுராட்சி அமைச்சர் கரு ஜெயசூரியவை முஸ்லிம் காங்கிரஸ் உயர் மட்டக் குழுவினர் சந்தித்து, சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையினை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், துரதிஷ்டவசமாக இடைநடுவில் நாடாளுமன்றம் கலைந்து விட்டது எனவும் குறிப்பிட்டார்.

http://www.jvpnews.com/srilanka/117602.html

slmc

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே வெளிப்படுவது ததேமமு  கிழக்கு மக்களுக்கு இழைக்கும் துரோகத்தின் சுயரூபமே.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தத் துரோகம் என்னவென்று நீங்கள் சொன்னால் கேட்க ஆவல். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத பலமற்ற நிலையில் தமிழ்த் தரப்பு தன்னிச்சையாக வடக்குடன் கிழக்கை இணைக்க முடியாது.

முஸ்லீம்கள் தெளிவாய் சொல்லிவிட்டார்கள் வடக்கு கிழக்கு இணைவதென்ற பேச்சுக்கே இடமில்லை.

அப்போ ததேமமு வின் ரெண்டாம் தேசம் என்பது வடக்கு மட்டுமே.

இது தமக்கு வாக்கு வங்கியில்லாத கிழக்கை தந்திரோபாயமாக கழட்டி விடும்நரித்தனம்.

பாட்டன் இந்திய வம்சாவளியை கழுத்தறுத்தார். பேரன் கிழக்குத் தமிழரை கழுத்தறுக்கிறார்.

ராசதுரை, ராஜன் செல்வநாயகம், கருணா, பிள்ளையானால் செய்ய முடியாததை 3ம் பொன்னம்பலம் சாதிக்கப் பார்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த விட்டுக்கொடுப்பை தமிழ்த் தேசியக்கொடி கூட்டமைப்பு ஏன் தமிழ்த்தேசிய முன்னணிக்கு விட்டுப் கொடுக்கக் கூடாது.பழக்கு மாகாணசபையை முஸ்லிம்களுக்கு விட்டுக் கொடுக்கலாம் என்றால் ஒரு தமிழ்க் கட்சிக்கு விட்டுக்கொடுப்பதில் என்ன தவறு?அவர்களும் த்தேகூட்டமைப்பின் ஆரம்ப பால உறுப்பினர்களே.அவர்களுக்குத்தான் கிழக்கு மாகாணத்தில் செல்வாக்குஇல்லையே பிறகு எப்படி அவர்கள் வாக்குகளைப் பிரிப்பார்கள் என்று பயப்படுகிறீர்கள்?சரி தமிழ்த்தேசிய முன்னணிக்கு வடக்கு மாகாணத்தை கூட்டமைப்பு விட்டுப் கொடுக்குமா?எல்லாவற்றையும் கூட்டமைப்பு தமிழரசுக்கட்சி கட்சிதான் ஆள வேண்டுமா?டக்ளஸ் இதைத்தானே செய்தார் யாராவது கேட்டார்களா?இந்த நிலமைக்கு சம்பந்தரின் தவறான தலமைத்துவமே காரணம்.

 

 

 

ஆகா.............தொப்பியை மாத்திட்டாங்கையா மாத்திட்டாங்க

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத பலமற்ற நிலையில் தமிழ்த் தரப்பு தன்னிச்சையாக வடக்குடன் கிழக்கை இணைக்க முடியாது.

முஸ்லீம்கள் தெளிவாய் சொல்லிவிட்டார்கள் வடக்கு கிழக்கு இணைவதென்ற பேச்சுக்கே இடமில்லை.

அப்போ ததேமமு வின் ரெண்டாம் தேசம் என்பது வடக்கு மட்டுமே.

இது தமக்கு வாக்கு வங்கியில்லாத கிழக்கை தந்திரோபாயமாக கழட்டி விடும்நரித்தனம்.

பாட்டன் இந்திய வம்சாவளியை கழுத்தறுத்தார். பேரன் கிழக்குத் தமிழரை கழுத்தறுக்கிறார்.

ராசதுரை, ராஜன் செல்வநாயகம், கருணா, பிள்ளையானால் செய்ய முடியாததை 3ம் பொன்னம்பலம் சாதிக்கப் பார்கிறார்.

ஒரு வாதத்துக்கு உங்களது ததேமமு யின் மீதான கருத்தை உடன்பட்டால்...

2016க்குள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வைத்தருவோம் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சொல்லுதே..

அது  வடக்கா? கிழக்கா?

இரண்டும் இணைந்ததா?

இசுலாமியததமிழர் உள்வாங்கப்படுவார்களா?

தள்ளீ வைக்கப்படுவார்களா?

சிங்களம் சேருமா?

விலத்துமா?

அல்லது விடை கொடுக்குமா??

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு இணைந்த ஒரு சமஸ்டி அலகை தமிழ் சிங்கள முஸ்லீம்கள் எல்லோருக்கும் உரிமை உறுதி செய்யப்பட்ட நிலையில் பெறவேண்டும். 

இதில் தமிழர்கள் தம்மை நெருக்குவார்கள் என்ற பயத்தைப் போக்க முஸ்லீம்கள் எப்போதும் சிங்கள மத்திய அரசை அதன் நீதிமன்றை நாடலாம்.

இதற்கு முஸ்லீம்களை இணங்கச் செய்யவே பலவிட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டி இருக்கும்.

இரண்டு தேசம் என்பது அதற்கும் மேலே உள்ள நிலை, இதற்கு முஸ்லீம்கள் இணங்குவதாயின் அவர்கள் தமிழரின் ஆளுகைக்கு உட்பட்டே எதிர் காலத்தில் வாழ நேரிடும். தமிழ் பேசும் ரெண்டாம் தேசத்தில் முஸ்லீம்களுக்கு என்ன நடந்தாலும் அதை சிங்களம் பேசும் 1ம் தேசம் கேட்க முடியாது போகும். கூடவே இது வடகிழக்குக்கு வெளியே வாழும் முஸ்லீம்களையும் அவர்களின் பவரையும் கூடப் பாதிக்கும்.

இன்னும் 15 வருடங்களில் ரெண்டாம் பெரும்பான்மையாக வரப்போகும், 30 நாடுகளின் ஆதரவு இருக்கும் முஸ்லீம்கல், தமக்கு எல்லா வகையிலும் தீதான இரு நாடுகள் கோட்பாட்டை ஒரு போது ஏற்கப் போவதில்லை.

அவர்கள் இதை ஏற்றுக்கொள்ள சிறிலங்காவும் விடப் போவதில்லை.

யோசித்துப் பார்த்தால் தமிழ் ஈழம் எனும் கற்பனை போல் இன்னொரு நடைமுறை சாத்தியமில்லாத, வெற்றுக் கனவே இந்த ஒரு நாடு, இரு தேசக் கொள்கை.

இதை ததேமமு கையில் எடுப்பது சுத்தவாக்குப் பொறுக்கி அரசியல்.

கிழக்கு தமிழருக்கு செய்யப்படும் வரலாற்றுத்துரோகம்.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு இணைந்த ஒரு சமஸ்டி அலகை தமிழ் சிங்கள முஸ்லீம்கள் எல்லோருக்கும் உரிமை உறுதி செய்யப்பட்ட நிலையில் பெறவேண்டும். 

இதில் தமிழர்கள் தம்மை நெருக்குவார்கள் என்ற பயத்தைப் போக்க முஸ்லீம்கள் எப்போதும் சிங்கள மத்திய அரசை அதன் நீதிமன்றை நாடலாம்.

இதற்கு முஸ்லீம்களை இணங்கச் செய்யவே பலவிட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டி இருக்கும்.

இரண்டு தேசம் என்பது அதற்கும் மேலே உள்ள நிலை, இதற்கு முஸ்லீம்கள் இணங்குவதாயின் அவர்கள் தமிழரின் ஆளுகைக்கு உட்பட்டே எதிர் காலத்தில் வாழ நேரிடும். தமிழ் பேசும் ரெண்டாம் தேசத்தில் முஸ்லீம்களுக்கு என்ன நடந்தாலும் அதை சிங்களம் பேசும் 1ம் தேசம் கேட்க முடியாது போகும். கூடவே இது வடகிழக்குக்கு வெளியே வாழும் முஸ்லீம்களையும் அவர்களின் பவரையும் கூடப் பாதிக்கும்.

இன்னும் 15 வருடங்களில் ரெண்டாம் பெரும்பான்மையாக வரப்போகும், 30 நாடுகளின் ஆதரவு இருக்கும் முஸ்லீம்கல், தமக்கு எல்லா வகையிலும் தீதான இரு நாடுகள் கோட்பாட்டை ஒரு போது ஏற்கப் போவதில்லை.

அவர்கள் இதை ஏற்றுக்கொள்ள சிறிலங்காவும் விடப் போவதில்லை.

யோசித்துப் பார்த்தால் தமிழ் ஈழம் எனும் கற்பனை போல் இன்னொரு நடைமுறை சாத்தியமில்லாத, வெற்றுக் கனவே இந்த ஒரு நாடு, இரு தேசக் கொள்கை.

இதை ததேமமு கையில் எடுப்பது சுத்தவாக்குப் பொறுக்கி அரசியல்.

கிழக்கு தமிழருக்கு செய்யப்படும் வரலாற்றுத்துரோகம்.

 

அப்போ  இவரும் துரோகியா???

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்க வேண்டிய மூன்று விடயங்கள் குறித்து சம்பந்தனுக்கு சீ.வீ.கே.கடிதம்! - 

 

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாரிக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மூன்று முக்கியமான விடயங்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என கோரி அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தின் முழு விவரம் வருமாறு

 

01) எமது 65 வருடகால இலக்கும் கோட்பாடுமான வடக்கு-கிழக்கு இணைந்து தாயகத்தில் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமை சாசனத்தினால் தமிழ்த் தேசிய இன மக்களுக்கு வழங்கப்படுமு; சுயநிர்ணய உரிமையுடன் கூடியதும் அதி உச்ச அதிகாரப் பரவலாக்கலுடன் கூடியதுமான தன்னாட்சியுடன் இணைப்பாட்சிக் கட்டமைப்பை அடைவதற்கான அரசியல் தீர்வை அடைவது.

 

02) அச்சுறுத்தல் காரணமாக குற்றங்களை நிர்ப்பந்த்தின் பேரில் ஒப்புக்கொண்டு குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் வாடும் அரசியல் கைதிகளையும், நீண்டகாலமாக நீதிமன்ற வழக்குகளைக் காட்டி சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளையும் - எதுவித விசாரணைகளும் இன்றி இயற்கை நீதி மற்றும் மனித உரிமைகளை மீறும் வகையில் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளையும் - விடுதலை செய்யவேண்டும் என தேர்தலின் பின்பு உருவாகும் அரசாங்கத்தை வற்புறுத்தவும் இதற்கான சர்வதேச ஆதரவைக் கோரவும் நடவடிக்கை எடுத்தல்.

 

3) வடக்குக் கிழக்கில் உள்ள சகல மாவட்டங்களிலும் பொருளாதார வலயங்களை உருவாக்கி வேலைவாய்புக்களை எற்படுத்தல். மேற்குறிப்பிட்ட விடயங்களை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். - என்றுள்ளது. இதன் பிரதி மாவை சேனாதிராசா, சுமந்திரன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. - See more at: http://www.malarum.com/article/tam/2015/07/23/11131/கூட்டமைப்பின்-தேர்தல்-விஞ்ஞாபனத்தில்-சேர்க்க-வேண்டிய-மூன்று-விடயங்கள்-குறித்து-சம்பந்தனுக்கு-சீ-வீ-கே-கடிதம்-.html#sthash.RinPGsfx.T2ufaFiM.dpuf
 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சி வி கே என்ன மகாத்மாவா?

ஒரு நாடு இரு தேசம் என்பதை தூக்கிப் பிடிக்கும் எந்த யாழ்பாணத்தாரும் - கிழக்குத் தமிழருக்கு முதுகிலே குத்துபவர்கள்தான்.

விக்கினேஸ்வரன் அண்மையில் லண்டன் உரையில் இதை திருத்திக் கொண்டது அவரின் நேர்மையைக் காட்டுகிறது.

ஒரு வாதத்துக்கு உங்களது ததேமமு யின் மீதான கருத்தை உடன்பட்டால்...

2016க்குள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வைத்தருவோம் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சொல்லுதே..

அது  வடக்கா? கிழக்கா?

இரண்டும் இணைந்ததா?

இசுலாமியததமிழர் உள்வாங்கப்படுவார்களா?

தள்ளீ வைக்கப்படுவார்களா?

சிங்களம் சேருமா?

விலத்துமா?

அல்லது விடை கொடுக்குமா??

தமிழர்பிரச்சனைக்கு தீர்வு என்று கூ ட்டமைப்பு சொன்னதற்கு இவர் கேட்கும்  கேள்விகளை பார்க்க தலையை சுத்துது .

ஐயோ அம்மாமாஆஆஆஅ 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.