Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தவறவிட்ட செல்போனால் சம்பவம்: தென்னை மரத்தில் பேய் இருப்பதாக பீதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
201507241808579620_Panic-in-the-palm-to-
தொழில்நுட்ப வளர்ச்சியில் எத்தனையே சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வரும் இன்றைய நவீன காலத்திலும் பேய், மாந்திரீகம் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சிலர் பணம் பறித்து செல்லும் சம்பவங்களும் நமது தேசத்தில் எங்கோ ஒரு மூலையில் அரங்கேறி வருகிறது.

அதேப் போல் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:–

உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகா வன்சி கிராமத்தில் தங்கஜி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தா. இவர் தனது தோட்டத்தில் தென்னைமரங்களை வளர்த்து வருகிறார். இந்த தென்னந்தோப்பு மத்தியில் உள்ள பண்ணை வீட்டில் கோவிந்தா தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் 4 நாட்களுக்கு முன்பு பைந்தூர் அருகே அடிக்கே கோட்லு கிராமத்தை சேர்ந்த சீனபூஜாரி என்பவர் கோவிந்தாவின் தோட்டத்தில் உள்ள தென்னைமரங்களில் இருந்து தேங்காய்களை பறித்து விட்டு சென்றார்.

அன்று இரவு திடீரென்று தென்னை மரத்தில் இருந்து குழந்தையின் சிரிப்பு சத்தம் கேட்டது. அந்த சத்தம் சிறிது நேர இடைவெளியில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. இந்த சத்தத்தை கேட்ட கோவிந்தாவும், அவரது குடும்பத்தினரும் தென்னை மரத்தில் குழந்தையின் பேய் இருப்பதாகவும், அது தான் சிரித்தப்படி இருப்பதாக கருதி பீதி அடைந்தனர். இதனால் அன்று இரவு முழுவதும் அவர்கள் தூங்காமல் தவித்தனர்.

மறுநாள் அதிகாலையில் கோவிந்தா, தென்னை மரத்தில் இருந்து குழந்தையின் சிரிப்பு சத்தம் கேட்டுக்கொண்டிருப்பது பற்றி தனது கிராமத்தில் உள்ள ஒரு சாமியாரை சந்தித்து கூறினார். அந்த சாமியார், சோழி போட்டு பார்த்து, தென்னை மரத்தில் இறந்துபோன குழந்தையின் பேய் இருப்பதாகவும், அந்த பேயை விரட்ட பூஜை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதைதொடர்ந்து கோவிந்தா, அந்த சாமியாரை அழைத்து சென்று குழந்தையின் சிரிப்பு சத்தம் கேட்ட தென்னை மரத்தை சுற்றி சிறப்பு பூஜை செய்தார். மேலும் சிறப்பு பூஜை செய்ததால் இனி பேய் பீதி இல்லை என்று கோவிந்தாவும், அவரது குடும்பத்தினரும் நினைத்திருந்தனர். ஆனால் நடந்ததோ வேறு. சாமியார் பூஜை போட்டு சென்ற அன்று இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சீரான இடைவெளியில் மீண்டும் குழந்தையின் சிரிப்பு ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. இதனால் கோவிந்தா, அவரது குடும்பத்தினரை மீண்டும் பேய் பீதி தொற்றிக்கொண்டது. இதன் காரணமாக அன்று இரவும் அவர்கள் தூக்கத்தை தொலைத்தனர்.

அடுத்த நாள் காலையில் கோவிந்தா மீண்டும் சாமியாரை சந்தித்து, குழந்தையின் சிரிப்பு சத்தம் தொடர்ந்து கேட்டதாக கூறினார். அப்போது சாமியார், தென்னை மரத்தில் இருக்கும் பேய் சாதாரண பேய் இல்லை. அந்த பேயை விரட்ட பெரிய அளவில் பூஜை நடத்த வேண்டியதிருக்கிறது எனக் கூறி ஆயிரக்கணக்கில் ரூபாய் வாங்கிக்கொண்டார்.

தென்னை மரத்தில் குழந்தை பேய் இருப்பதாக அந்த கிராமம் முழுவதும் பெரும் பீதியும், பரபரப்பும் ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் அனைவரும் இரவு 7 மணிக்கு பிறகு வீட்டில் இருந்து வெளியே வராமல், முடங்கி கிடந்தனர்

இதற்கிடையே தேங்காய் பறிக்கும் கூலி தொழிலாளி சீனபூஜாரி, கோவிந்தாவின் வீட்டிற்கு வந்தார். அவரிடம், கோவிந்தா, நீ தேங்காய்களை பறித்து சென்ற நாள் முதல் தென்னை மரத்தில் இருந்து குழந்தை பேய் இருப்பதாகவும், குழந்தையின் சிரிப்பு சத்தம் இரவில் கேட்பதாகவும் கூறினார். அப்போது சீனபூஜாரி, தேங்காய் பறிக்க வந்த போது எனது செல்போனை தவறவிட்டு விட்டேன். அந்த செல்போன் அழைப்பு ஒலி (ரிங் டோன்) கூட குழந்தை சிரிப்பது போன்று தான் இருக்கும் என்றும் கூறியுள்ளார். அந்த செல்போனை காணாததால், நான் வேறொரு செல்போனில் இருந்து எனது செல்போன் எண்ணுக்கு கடந்த 3 நாட்களாக போன் செய்து வந்ததாகவும் கூறினார்.

இதையடுத்து அந்த தென்னை மரத்தில் ஏறி, சீனபூஜாரி தனது செல்போனை எடுத்தார். பின்னர் செல்போனுக்கு, வேறொரு செல்போனில் இருந்து போன் செய்து காண்பித்தார். அப்போது சீனபூஜாரியின் செல்போனில் குழந்தையின் சிரிப்பு ஒலி கேட்டது. அப்போது தான் சீனபூஜாரி தவறி விட்ட செல்போன் தென்னை மரத்தில் கிடப்பதும், அதில் இருந்து குழந்தையின் சிரிப்பு ஒலி வந்ததும் தெரியவந்தது.

இதனால் அந்தப் பகுதியில் 3 நாளாக நீடித்த பேய் பீதி சம்பவம் புஷ்வானமாகி போனது. இதையடுத்து கோவிந்தா, சாமியாரை சந்தித்து நடந்த சம்பவங்கள் பற்றி கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சாமியார், கோவிந்தாவிடம் பூஜை செய்ய வாங்கிய பாதி தொகையை திருப்பி செலுத்தினார்.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா நல்ல ஐடியா எனக்கு கிடைச்சிட்டுது...... பக்கத்துவீட்டு அக்காவுக்கு நானும் பேய் கலைக்கப்போறன்  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

கு சா அண்ணை 
பேயை மட்டும் கலைங்கோ வேறு எதனையும் கலைத்து விட்டிடாதீங்கோ வில்லங்கமா போயிடும் 

  • கருத்துக்கள உறவுகள்

கு சா அண்ணை 
பேயை மட்டும் கலைங்கோ வேறு எதனையும் கலைத்து விட்டிடாதீங்கோ வில்லங்கமா போயிடும் 

அண்ணை பேயாடி முடியத்தான்:grin::grin:

அதை கலைக்கவேண்டிவரும்..:grin:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை பேயாடி முடியத்தான்:grin::grin:

அதை கலைக்கவேண்டிவரும்..:grin:

கலைத்த விபரம் வெளியே தெரிந்தால் கம்பி எண்ணவேண்டியும் வரலாம் கவனம்.,,,! கு சா அண்ணைக்கும் சொல்லுங்கோ. :shocked: :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.