Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்கட்சி தலைவர் பதவி சம்பந்தனுக்கு இல்லை! ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு?

Featured Replies

எதிர்கட்சி தலைவர் பதவி சம்பந்தனுக்கு இல்லை! ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு?

தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று வெள்ளிக்கிழமை கைச்சாடப்பட்டதனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்படமாட்டாது எனத் தெரியவருகிறது.தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டமையினால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைமை பதவியை கோர முடியும் என்ற உருவாகியுள்ளது.

இதனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மூன்றாவது அரசியல் கட்சி என்ற நிலை இல்லாமல் போயுள்ளதே இதற்குக் காரணமாகும்.

அரசியலமைப்பின்படி இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தால் மூன்றாவது கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பது நடைமுறை விதியாகும்.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் தனித்து புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டமையினால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தற்போது மூன்றாவது அரசியல் கட்சியாக மாறியுள்ளது என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நான்காவது கட்சியாக விளங்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அரசியலமைப்பின் கீழான நிலையியல் கட்டளைச் சட்டத்தின்படி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோர முடியும் என்றும் ஆனால் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை விருப்பங்களுக்கு ஏற்பவே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படும் சாத்தியம் இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

http://www.tamil.srilankamirror.com/news/item/4060-2015-08-21-19-52-53

Edited by Kashni

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் நாட்டம் கொள்ளாமல் இனப்பிரச்சனைக்கான தீர்வு சம்பந்தமாகச் சம்பந்தர் ஏதாவது யோசிக்கலாம். ஜெனீவாவிற்கு ஒருமுறையாவது வந்து என்ன நடக்கின்றது என்றாவது பார்த்து விட்டுச் செல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் நாட்டம் கொள்ளாமல் இனப்பிரச்சனைக்கான தீர்வு சம்பந்தமாகச் சம்பந்தர் ஏதாவது யோசிக்கலாம். ஜெனீவாவிற்கு ஒருமுறையாவது வந்து என்ன நடக்கின்றது என்றாவது பார்த்து விட்டுச் செல்லலாம்.

தமிழ் உணர்வாளர்களுக்கு மறைந்து நின்று... ஊசி குத்தும் வேலையைத்தவிர...
உப்படிப் பட்ட, உருப்படியான காரியங்களை.... சம்பந்தன் தன் வாழ் நாளில் செய்தில்லை.... 
இனியும்... செய்யப் போவதில்லை.

சம்பந்தன்... வென்றதை, தமிழ் நாட்டுப் பக்கம்  போய் இன்னும், நேரில் தெரிவிக்காமல்... பதுங்கி  இருப்பது ஏன்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதுகள் எதிர்க்கட்சி கதிரையிலை குந்தியிருந்தும் பெரிசாய் என்னத்தை செய்யப்போகுதுகள்? :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

நித்திரைதான் கொள்ளுவினம்...

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் என்ன செய்தாலும் மற்ற ஆக்கள் ஏன் கவலைப்படவேண்டும்? அதை நாங்கள் பாத்துக்கொள்ளுவம். (நககொ nko) அப்படீன்னா டையை ட்டுங்கோ எண்டு அர்த்தம்!:grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்..ஓம் இப்ப உங்கடை துணிவிலை.... சாவகாசமாக படுத்தெழும்பி வருவினம்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்கள் என்ன செய்தாலும் மற்ற ஆக்கள் ஏன் கவலைப்படவேண்டும்? அதை நாங்கள் பாத்துக்கொள்ளுவம். (நககொ nko) அப்படீன்னா டையை ட்டுங்கோ எண்டு அர்த்தம்!:grin:

எமக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பப்பற்றி கதைப்பதற்கும் எக்கருத்தும் கூறுவதற்கும் அருகதையும் உரிமையும் இருக்கின்றது. தமிழரசுவை கூட்டணியை நான் நாம் எங்கள் சந்ததி வளர்த்தெடுத்தது. சரி பிழைகளை தட்டிக்கேட்க சொல்ல உரிமை இருக்கின்றது.

புலிவாந்தியெடுப்பதற்க்காக சம்பந்தனையோ சுமந்திரனையோ ஆதரிப்பவர்களல்ல நாங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லுறதை வடிவா சொல்லவேணும் புலிவாந்தி இல்லை "புலிவால்நறுக்கு" க்குக்காகவே நாங்கள் சம்பந்தனையும் சுமந்திரனையும் ஆதரிக்கின்றோம். :cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதை இன்னும் நல்லவடிவாய் சொல்லலாம்......

"தமிழினம் அழிந்தாலும் பரவாயில்லை புலி அழிய வேண்டும்".

நல்ல கொள்கை...நல்ல சிந்தனை...

  • கருத்துக்கள உறவுகள்

அடக் கடவுளே விடிய விடிய ராமர் கதை விடிஞ்சா பிறகு சீதை இலக்குவனோட ஓடிப்போனாளாம். இப்ப புலிகள் என்ற அமைப்பே இல்லை. தலைவரின் வீரமரணத்துக்குப் பிறகு அந்தப் பேச்சுக்கே இடமில்லை. இப்ப இருக்கிறதுகள் புலிகளின் பேரன் சொல்லி வயிறு வளர்க்கிற புலிவால்கள். புலிகள் இயக்கம் அழிந்ததுக்கு முழுக்காரனமும் புலிவால்கள்தான்!

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப்போல சிலபேர் உங்கயிருந்து  சம் சும் ஆதரவுபோல.....இங்கும்  சில புலிவால்கள் இருப்பது உண்மையே....அதற்காக மொத்த புலம் பெயர் தூய தமிழர்களும் புலிவால்கள் அல்ல ....உண்மையான புலிப்பற்றாளர்களும் ....தமிழ் இனப்பற்றாளர்களும்....உறவுகளின் நலன் விரும்பிகளும்..

அடக் கடவுளே விடிய விடிய ராமர் கதை விடிஞ்சா பிறகு சீதை இலக்குவனோட ஓடிப்போனாளாம். இப்ப புலிகள் என்ற அமைப்பே இல்லை. தலைவரின் வீரமரணத்துக்குப் பிறகு அந்தப் பேச்சுக்கே இடமில்லை. இப்ப இருக்கிறதுகள் புலிகளின் பேரன் சொல்லி வயிறு வளர்க்கிற புலிவால்கள். புலிகள் இயக்கம் அழிந்ததுக்கு முழுக்காரனமும் புலிவால்கள்தான்!

அட வாலி உங்களுக்கு தலைவர் இல்லை என்ற நிருபிக்க படாத கதையை எப்படியாவது பரப்ப வேண்டும் என்ற அவா ? தலைவர் இறக்கவில்லை ...எல்லார் உள்ளங்களிலும் உந்து சக்தியாக இருந்து போராடிக்கொன்று தான் உள்ளார் ....

Edited by பிரபாதாசன்

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கே சிங்களவர்கள் இப்படி வெட்டி ஓடுறாங்கள். சமஸ்டிக்கு எப்படி ஒடுவாங்களோ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.