Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா – பிரபாகரன் பிளவிற்கு என்ன காரணம் – உருத்திரகுமாரன் சாட்சி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணா கைது செய்யப்பட்டவுடன், புலிகளுக்கு எதிராக இவர் பயன்படலாம் என்ற காரணத்தாலேயே இவரின் திருப்பி அனுப்புதல் சிறை வாசம் ஆக மாற்றப்பட்டது, அத்துடன் இவரின் மனைவிக்கும் அந்த நேரத்தில் தற்காலிக வீசாவே. 

மாவையின் நியமனத்திற்கு பலர் போர்க் கொடி தூக்கினர், இவர்களில் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் முன்னாள்/ இந்நாள் விரிவுரையாளர்கள் உட்பட. ஹரிக்கு கன விடயங்கள் தெரியும் என நினைக்கிறேன். 

  • Replies 57
  • Views 12.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக இல்லை.

கள்ளப் பாஸ்போர்டில் வந்து ரகசியமாய் வாழும் எல்லோரையும், மருத்துவ காரணங்கள் இல்லாதவிடத்து உள்ளே ஒரு 6 மாசமாவது போடுவது வழமை.

கருணா திருப்பி அனுப்பவே பட்டிருக்க மாட்டார்.

கருணா மாட்டும் போது மனையின் கோரிக்கை பரிசீலனையில் இருந்தது. திரும்பி போகும் போது கிடைத்தே விட்டது.



நிழலி,உங்களோட கருத்துத் தான் என்னோடதும்.ஆனால் ஒன்றும் மட்டும் விளங்கவில்லை.அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்க வேண்டும் என நினைக்கிறீங்களா?...அவர் தன்னோட நிலையை தக்க வைத்துக் கொள்ள நீங்கள் சொன்ன படுகொலைகளை எல்லாம் செய்து இருக்க கூடும்.ஆனால் அவர் புலிகளோடு இருக்கும் போது செய்த படுகொலைகளோடு ஒப்பிடும் போது இது வலு குறைவு என்பது தான் கருத்து.அதற்காக அவர் செய்தது சரி என நான் சொல்லவில்லை.ஆனால் புலிகளுக்காக அவர் படுகொலைகளை செய்த போது கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்த கூட்டம். அவர் புலியை விட்டுப் பிரிந்த பின்னர் செய்த கொலைகளை தவறு என்று சொல்வது தான் வேடிக்கையாக உள்ளது.


 

ரதி, இத் திரியை என் கருத்துக்களால் அதிகம் நீட்டிக்க விரும்பவில்லை. சுருக்கமாக....

இராணுவத்தில் இருக்கும் ஒருவர் செய்யும் தவறை இராணுவத்தின் தவறாகவும், அவர் தண்டிக்கப்படாவிடின் அவ் இராணுவ இயந்திரத்தினை இயக்கும் அரசின் தவறுகளாகவும் தான் பார்க்கப்படும். அவரே இராணுவத்தில் இருந்து விலகியபின் தவறு செய்யாவாராயின் அவரது தவறாகவே கருதப்படும். இது தான் உலக நியதி. புலிகளில் இருக்கும் வரைக்கும் கருணா செய்த அனைத்தும் புலிகளின் செயல்களாகத்தான் பார்க்கபட்டன. சரி பிழைகளுக்கு அப்பால் அவர் செய்த படுகொலைகள் அனைத்துக்கும் இராணுவ அரசியல் காரணங்கள் இருந்தன. தன் தனிப்பட்ட வாழ்விற்காகவோ தன் குறுகிய அரசியல் லாபங்களுக்கானதாகவோ அமைந்திருக்கவில்லை.  ஆனால் அவர் பிரிந்த பின் செய்த அனைத்துப் படுகொலைகளும் அவரது தனிப்பட்ட அரசியல் லாபங்களுக்காகவும் தனிப்பட்ட பழிவாங்கல்களுக்காகவும் புரியப்பட்டவை.

இன்னொரு விடயத்தினையும் சொல்ல விரும்புகின்றேன். கருணா புலிகளில் இருந்த போது அவர் தலைமையில் இடம்பெற்ற 600 பொலிஸ்காரர்களின் படுகொலை, காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலை, முஸ்லிம் அப்பாவி மக்கள் மீதான படுகொலை  போன்றவற்றை எதிர்த்த தமிழ் மக்களையும் தமிழ் ஊடகவியலாளர்களையும், இலக்கிய வாதிகளையும் நான் அறிவேன்.  நீங்களும் அறிந்திருப்பீர்கள். எண்ணிக்கையில் குறைவானவர்களாக இருந்தாலும் 100 வீதமான தமிழ் மக்கள் அப் படுகொலைகளை ஆதரித்தார்கள் என்று கூற முடியாது. ஆனால் அவற்றை கருணாவின் தவறுகளாக விமர்சிக்கப்படாமல் புலிகளின் தவறுகளாகவே பார்க்கப்ட்டு எதிவினைகளும் ஆற்றப்பட்டு கொண்டிருந்தன. அப்படித்தான் அவை விமர்சிக்கப்படவும் வேண்டியவை அவை. 

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

 

 வணக்கம் சகோதரி

கொஞ்சம் ஆறுதலாக வாசித்து எழுதலாமே..

முரளிதரன்  சொல்வது சரி என்று எங்கு எழுதினேன்

உங்களுக்கு ஒன்றைச்சொல்லவேண்டும்

அவரது அண்மையில் 2 பேட்டியையும் நான் கேட்கவே இல்லை...

அந்த திரியில் நான் எழுதியவரிகள்

இது எதற்காக இப்ப வாய் திறக்குது என்பது தான்??

ஒரு மனிதனுடைய செயல்கள் மூலம் அவர் செயலிளந்து செல்லாக்காசான பின்

சொல்லும் வசனங்களை கேட்டு என்ன பலன்....?

 

ரதி

உங்களுக்கெல்லாம் அவரது பேச்சுக்களை மேடைகளில் களங்களில் கேட்டு பார்த்து இருக்கலாம்

இங்கு வந்திருந்தபோது

விமானநிலையத்தில் ஏற்றியதிலிருந்து

மீண்டும் விமானநிலையத்தில் கொண்டு போய் ஏற்றும்வரை ஒன்றாக இருந்தவன்.

அவர் தலைவர் பற்றியும் பொட்டம்மான் உட்பட தளபதிகள் பற்றி எங்களிடம் நேரே அப்பொழுது சொன்னது தான் உண்மை.

ஆம் அவரை ஒரு ராசகுமாரன் போல்த்தான் கவனித்தோம்

அது அவருக்கும் போராளிகளுக்கும் தலைமைக்கும் கொடுத்த மரியாதையும் பணிவிடையும்.

அதன் பின்னர் அவர் வெளியேறிபின் ஏன் எங்களிடம்  இங்கு வரமுடியவில்லை

இதை புரிந்து கொண்டால் மிகுதி புரியும்....

 

மற்றும்படி

வேடிக்கை பார்த்தவர்கள்

முட்டையில் புடுங்கியவர்கள்

இவற்றைக்கேட்கலாம்

மெய் சிலிர்க்கலாம்

அவ்வளவு தான். 

போராட்டத்தோடு நின்றவர்களுக்குத்தெரியும்

ஏன் தோற்றோம்??

எதனால் மீளமுடியவில்லை என.....

 

 

ஒரு மனிதனுடைய செயல்கள் மூலம் அவர் செயலிளந்து செல்லாக்காசான பின்

சொல்லும் வசனங்களை கேட்டு என்ன பலன்....?

செல்லா காசு யாருக்கு என்றுதான் கேள்வி .

செல்லா காசையா இவ்வளவு பேர்கள் பேட்டி காணுகின்றார்கள் அதை பலரும் பார்க்கின்றார்கள் .இங்கும் அதை போட்டு பக்கம் பக்கமாக விமர்சிக்கின்றோம் .

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனிதனுடைய செயல்கள் மூலம் அவர் செயலிளந்து செல்லாக்காசான பின்

சொல்லும் வசனங்களை கேட்டு என்ன பலன்....?

செல்லா காசு யாருக்கு என்றுதான் கேள்வி .

செல்லா காசையா இவ்வளவு பேர்கள் பேட்டி காணுகின்றார்கள் அதை பலரும் பார்க்கின்றார்கள் .இங்கும் அதை போட்டு பக்கம் பக்கமாக விமர்சிக்கின்றோம் .

இன்று தமிழர்களிடம் இவரது பெறுமதி என்ன??

ஆகக்குறைந்தது தனியே நடமாடவாவது முடியுமா??

சிங்களவரிடம்  

இந்தியாவிடம் பெறுமதியென்பது கறிவேப்பிலை.....

அவ்வளவு தான்....

 

  • கருத்துக்கள உறவுகள்

கோசான்,இங்கு அசேலம் அடித்திருந்தால் போர் குற்ற விசாரனை என வந்தால் இரு தரப்பையும் காட்டிக் கொடுத்து விடுவார் என்ட பயத்தில் முக்கியமாக புலிகளும் அவர் இங்கு அசேலம் அடிப்பதை விரும்பி இருக்கவில்லை...ஆனால் விசா குடுத்திருப்பாங்களா இல்லையா என ஒரு தெளிவு இல்லாமல் இருந்தது.உங்கள் கருத்திற்கு நன்றி...அவர் மட்டும் திரும்பி போகாமல் இருந்திருந்தால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
................................................................................................................................
நிழலி, நீங்கள் கூட மற்றவர்கள் மாதிரி கருணா இத்தகைய கொலைகளை அவரது தனிப்பட்ட நலன்களுக்காக செய்தார்.அதற்கு அவர் தான் பொறுப்பு என சொல்கிறீர்களே தவிர, அவர் என்ன செய்து இருக்க வேண்டும் என்பதற்கான பதில் ஒருத்தரிடம் இல்லை...என்னைப் பொறுத்த வரைக்கும் அவர் செய்த கொலைகளை நான் ஆதரிக்கவில்லை.ஆனால் மற்றைய தளபதிகளோடு ஒப்பிடுகையில் இவர் எவ்வளவோ மேல் என்றே கூறுவேன்...புலிகள் கிழக்கில் படையெடுத்து வரும் போது தனது அணியினரை கலைத்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்...அன்று யுத்தம் ஒன்று நடந்திருந்தால் இரு பக்கத்தாலும் எவ்வளவு பேர் இறந்திருப்பார்கள்.அதை எல்லாம் நினைச்சுப் பார்க்கனுமல்ல[எப்படி இருந்தாலும் என்ட அண்ணனை விட்டுக் கொடுப்போமா என்ன]...ஒரு கதைக்கு கருணாக்கு பதிலாய் சூசை பிரிந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?...முடிவில்லாது போகும் இந்த விவாதத்தை இத்துடன் நிறுத்திக் கொள்வதே நல்லது.

.....................................................................................................................
விசுகு அண்ணா முடியல்ல இத்தோட நிப்பாட்டுவம்.ஒன்று காணொளியை பார்த்திட்டு கதைக்கனும் அல்லது நான் என்ன எழுதி இருக்கிறேன் என பார்த்திட்டு கதைக்கணும்...2004ம் ஆண்டு பேச்சு வார்த்தை முடிந்து போகும் மட்டும் புலிகளுக்கும்,கருணாவுக்கும் ஒரு பிரச்சனையும் இருக்கவில்லை அண்ணா...அந்த ஒப்பந்தத்தில் திரு பாலசிங்கம் கையெழுத்திட்டதால் தான் பிரச்சனை...திரும்பவும் முதலில இருந்தா?...முடியல்ல


  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது மிகச்சரி.

எப்படியாவது ஆளை ஊருக்கு அனுப்பி விடவேணும் என புலிவாலுகள் குத்தி முறிந்தார்கள்.

அப்படி பார்க்கையில் கருணா மீண்டும் போய் செய்த கொலைகளிற்கு இந்த புலிவால்களும் காரணமாகிறனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.