Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வியர்வை.... ஏன் துர்நாற்றம், வீசுகிறது என்பதற்கான காரணங்கள்!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

812d1412946931-schwei%25DFflecken.kalmotSchwitzen-Achseln-Hyperhidrose

வியர்வை.... ஏன் துர்நாற்றம், வீசுகிறது என்பதற்கான காரணங்கள்!!!
வாயுப் பிரச்சனைக்கு பிறகு ஓர் மனிதன் பொது இடங்களில் தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாவது இந்த வியர்வை துர்நாற்ற பிரச்சனையின் காரணத்தினால் தான். பொதுவாக வெயிலில் அலைந்து, திரிந்து வேலை செய்பவர்களுக்கு அதிகம் வியர்க்க வாய்ப்புகள் இருக்கின்றன.

வியர்வை எப்படி ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது? ஆனால், சிலருக்கு சாதாரண வேலைகள் செய்யும் போது கூட அளவிற்கு அதிகமாக வியர்வை வெளிப்படும். வியர்வை வெளிவருவது நல்லது தான், ஆனால் வியர்வையோடு சேர்ந்து அதிகமாக துர்நாற்றம் வெளிப்படுவது தான் இவர்களுக்கு ஏற்படும் சிக்கலே.

அதிகமாக வியர்வை வெளிபடுதல் இந்த நோய்களுக்கான அறிகுறிகள் என்று உங்களுக்கு தெரியுமா? அனைவருக்கும் தான் வியக்கிறது, ஆனால் ஏன் ஒரு சிலருக்கு மட்டும் அதிகம் துர்நாற்றம் வீசுகிறது??? ஏனெனில், உண்மையில் வியர்வை நாற்றம் அற்றது. வியர்வை நமது உடலின் தேகத்தில் இருக்கும் பாக்டீரியாவோடு கலக்கும் போது தான் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கிறது....

அதிகமான பதட்டம் பதட்டம் அல்லது மன அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் பயத்தினால் எந்த வேலைப்பாடும் இன்றி பெருமளவு வியர்வை வெளிப்பட வாய்ப்புகள் இருக்கிறது. திடீரென உங்கள் தேகத்தில் இருக்கும் பாக்டீரியாக்களுடன் கலக்கும் வியர்வையானது அதிக துர்நாற்றம் வீசுகிறது.

செயற்கை நூலிழை காட்டன், கம்பளி போன்ற இயற்கை நூலிழை இன்றி, ரேயான், பாலியஸ்டர் போன்ற செயற்கை நூலிழையால் தயாரிக்கப்பட்ட உடைகள் அணியும் போது அதிக வியர்வை சருமத்தில் இருக்கும் பாக்டீரியாவோடு கலந்து துர்நாற்றம் வீசலாம். இயற்கை நூலிழைகள் வியர்வை உறுஞ்சி ஆவியாக செய்துவிடுகிறது. ஆனால், செயற்கை நூலிழைகள் வியர்வையை உறிஞ்சுவது இல்லை. இதனால் தான் துர்நாற்றம் அதிகம் ஏற்படுகிறது.

வாசனை திரவியங்கள் துர்நாற்றத்தை போக்க நீங்கள் பயன்படுத்தும் வாசனை திரவியங்கள் தான் பெரும்பாலும் வியர்வை துர்நாற்றம் ஏற்பட காரணமாக இருக்கிறது. இந்த வாசனை திரவியங்கள் உங்கள் தேகத்தில் பாக்டீரியாக்கள் அதிகம் உருவாக காரணியாக இருக்கிறது. இதனால் வியர்வை அதிக பாக்டீரியாவோடு கலந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. நிபுணர்கள் கூட, வெறும் நீரை பயன்படுத்தி கழுவுவதே போதுமானது என்று தான் பரிந்துரைக்கின்றனர்.

மாத்திரை, மருந்துகள் உடல்நலக் குறைவின் காரணமாக நாம் உட்கொள்ளும் சில மருந்து, மாத்திரைகளின் காரணமாக கூட நமது உடலில் வியர்வை அதிகம் சுரக்கலாம் என்று கூறப்படுகிறது. உடல் எடை குறைப்பு மற்றும் அலர்ஜியை போக்க நாம் உட்கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகளின் காரணமாகவும் அதிகமாக வியர்வை வெளிப்படலாம்.

ஊட்டச்சத்து குறைபாடு ஊட்டச்சத்து குறைபாடும் நமது உடலில் அதிக வியர்வை வெளிப்பட ஓர் காரணியாக இருக்கிறது. முக்கிமாக மெக்னீசியம் சத்து குறைபாட்டினால் அதிக வியர்வை சுரக்கலாம். பச்சை காய்கறிகள், நட்ஸ் போன்ற உணவுகளில் மெக்னீசியம் ஊட்டச்சத்து அதிகமாக இருக்கிறது.

கார்போஹைட்ரேட் குறைந்த உணவு கார்போஹைட்ரேட் குறைந்த உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு உடலில் அதிக வியர்வை சுரக்கும் என்று கூறப்படுகிறது. புரதச்சத்து உணவுகள் அதிகமாக உட்கொண்டால் அதிகப்படியாக வெளிப்படும் வியர்வையை கட்டுப்படுத்த முடியும்.

அதிகமான இனிப்பு உணவுகள் சாக்லேட் மற்றும் இனிப்பு உணவுகளை அதிகம் உட்கொள்வதால் நமது உடலில் பாக்டீரியாக்கள் அதிகம் உருவாகின்றன. உண்மையில், இனிப்பு பாக்டீரியாக்களின் சொர்க்கம் என்று கூறலாம். எனவே, இதன் காரணமாக கூட வியர்வை துர்நாற்றம் அதிகமாக வீச வாய்ப்புகள் இருக்கின்றன.

சிறுநீர், மலம் அடக்குதல் அதிகமாக சிறுநீர் அல்லது மலம் அடக்குவதால், செரிமான இயக்கம் கழிவுகளை துளைகளின் வழியாக வெளியேற்ற துவங்கும் என ஓர் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இவ்வாறு சரும துளை வழியாக வியர்வையாக வெளிவரும் கழிவுகள் அதிக நாற்றம் வீசும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நேற்றைய இரவு உணவு நேற்று நீங்கள் உண்ட இரவு உணவும் அதிகமாக வீசும் வியர்வை துர்நாற்றத்திற்கு ஓர் காரணமாக திகழ்கிறது. இரவு உணவில் அதிக மசாலா உணவு அல்லது பூண்டு, வெங்காயம் சேர்த்து உண்பதால் காலை செரிமான பிரச்சனை ஏற்படும், இதனால் உடல் துர்நாற்றமும் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள்.

நன்றி தற்ஸ் தமிழ்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பள்ளிக்கூட காலங்களிலை பெடியள் பெட்டையள் நேரை நேரை சந்திக்கேக்கையும் வேர்த்து கொட்டுமாம்..

நன்றி சிறித்தம்பி.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் நினைவுகள் மீண்டும் வந்து போவதை மறக்க முடியாது!

எங்கட மூக்கின்ர மட்டமும், பஸ்ஸில தூங்குகிற பொம்பிளையளின்ர கமக்கட்டின்ர உயரமும்.. ஒரே மட்டம்..!

மிச்சத்தை நான் சொல்லியா தெரிய வேணும்!

 

அது ஒரு கனாக்காலம் இல்லை..!tw_cookie:

சிலரின் வாசனை கிறங்கடிக்கும்.உண்மையான காரணம் மலச்சிக்கல் மற்றும் சுத்தமின்மை தான்.நான் மாதம் ஒரு முறை தவறாது கீழேயுள்ள குளிகையில் ஒரே தடவையில் 5 - 6 குளிகைகள் பாவிப்பேன்.இரவு எடுத்தால் அடுத்த நாள் மத்தியானத்துக்கு முன் எல்லாம் முடிந்துவிடும். fபிளீட் குடித்து ஒரு மணித்தியாலத்தில் எல்லாமே முடிந்து விடும்.இதை அறுவைச் சிகிச்சைக்கு முன்பு பாவிப்பார்கள்

image.-1675486074.image.png300.jpg

ஊர் நினைவுகள் மீண்டும் வந்து போவதை மறக்க முடியாது!

எங்கட மூக்கின்ர மட்டமும், பஸ்ஸில தூங்குகிற பொம்பிளையளின்ர கமக்கட்டின்ர உயரமும்.. ஒரே மட்டம்..!

மிச்சத்தை நான் சொல்லியா தெரிய வேணும்!

 

அது ஒரு கனாக்காலம் இல்லை..!tw_cookie:

புங்கை 776 இலக்க பேருந்தில் எல்லாவற்றையும் அனுபவித்துதான் புலம் பெயர்ந்திருக்கின்றார்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊர் நினைவுகள் மீண்டும் வந்து போவதை மறக்க முடியாது!

எங்கட மூக்கின்ர மட்டமும், பஸ்ஸில தூங்குகிற பொம்பிளையளின்ர கமக்கட்டின்ர உயரமும்.. ஒரே மட்டம்..!

மிச்சத்தை நான் சொல்லியா தெரிய வேணும்!

அது ஒரு கனாக்காலம் இல்லை..!tw_cookie:

பெண்களின் வியர்வையை..... நாற்றம் என்று சொல்லக் கூடாது.
அதனை... ரசித்து, முகர்ந்து பார்க்கும் போது... கிளர்ச்சியூட்டும் வாசனை வரும் ஐயா...... :grin:

பெண்களின் வியர்வையை..... நாற்றம் என்று சொல்லக் கூடாது.
அதனை... ரசித்து, முகர்ந்து பார்க்கும் போது... கிளர்ச்சியூட்டும் வாசனை வரும் ஐயா...... :grin:

அண்ணை அதுவும் மனதுக்குப் பிடித்த பெண்ணுடன் நெருக்கமாக நிண்டு கதைக்கும் பொது வருமே ஒரு வாசனை ...... சொல்லி வேலை இல்லை. அனுபவித்தால் தெரியும் 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கேள்வி , வியர்வை ... ஏன் துர்நாற்றம் வீசுகிறது . காரணம் என்ன...!

வந்த பதிவுகளைப் பார்த்தால் வியர்வை துர்நாற்றத்துடன் கொட்ட வேண்டும் என்பதுபோல் இருக்கு...!

அதுவும் நல்லாத்தான் இருக்கு...! :)

  • கருத்துக்கள உறவுகள்

மசாலா உணவு ஒரு காரணமாக இருக்கலாம் .....
இந்தியர்களின் வியர்வை முகம் கொடுக்கவே முடியாது !
(இதில் எந்த காழ்புணர்வும் இல்லை சொந்த அனுபவம் )

அதுபோல் பெண்களின் வியர்வையும் ஆண்களின் வியர்வையை விட துர்நாற்றம் 
கூடியதாக இருக்கிறது 
(இதும் சொந்த அனுபவம்தான்)

உறைப்பு சாப்பிடும்போது எனக்கு அதிகம் வியர்கிறது 
சிலவேளைகளில் உறைப்பு சாப்பாட்டை ஓர்டர் கொடுத்துவிட்டு 
இருக்கும்போதே வியர்க்க தொடங்கிவிடும்.

வேலை இடத்தில் மீடிங்கில் முன்னுக்கு போய் பேசினால் ...
எதோ ஐந்து மைல் ஓடியது போல் வியர்கிறது.
யுனிவெர்சிட்டி வாழ்வில் மறக்கமுடியாத நாட்கள் என்றால் 
பைனல் ப்ரோஜெக்ட்ட்களை கொண்டுசென்று அவற்றை பற்றி பேசி ஒப்படைத்த நாட்கள்தான்.

இதே பிரச்சனை உங்கள் யாருக்காவது இருக்கிறதா ?? 

உடலில் உள்ள பக்டிரீயா 
என்று மேலே எதை குறிப்பிடுகிறார்கள் ?

தோலின் வெளிபகுதியிலா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.