Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல் உரையிலேயே அரசாங்கத்தை சாடிய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்

Featured Replies

முதல் உரையிலேயே அரசாங்கத்தை சாடிய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்

SEP 03, 2015 | 11:41by கி.தவசீலன்in செய்திகள்

R.sampanthanசிறிலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இன்று நியமிக்கப்பட்ட இரா.சம்பந்தன், தனது முதல் உரையிலேயே,  அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெறம் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான யோசனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சபையில் சமர்ப்பித்திருந்தார்.

இதன்படி. அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களின் எண்ணிக்கையை, 48 ஆகவும், பிரதிஅமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை 45 ஆகவும் அதிகரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியை அவர் கோரியிருந்தார்.

இது தொடர்பான விவாதம் இடம்பெற்ற போது, உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்,

“தேசிய நலன் என்று அரசாங்கம் கொண்டு வரும் தவறான சட்டத் திட்டங்களை எதிர்ப்போம்.

தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவை அதிகரிப்பு என்ற திட்டம் கொள்கை ரீதியாக சிறந்த முன்உதாரணம் அல்ல.

கடந்த காலங்களில், அமைச்சரவை கணக்கின்றி அதிகரித்துச் சென்றது போன்ற அரசியல் கலாசாரத்தை ஊக்குவிக்க கூடாது.

இந்தியாவில் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் நிலையில் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30ற்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், இணை மற்றும் துணை அமைச்சர்கள், என மொத்தம் 70 பேர் தான் இடம்பெற்றுள்ளனர்.

சிறிலங்கா தமது அயல்நாடான இந்தியாவை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்.

நாடாளுமன்றில் புதிய இளம் தலைவர்கள் உள்ளனர். மாகாண சபையில் முதலமைச்சர் பதவி வகித்தவர்களும் உள்ளனர். அவர்களுக்கு ஏன் பிராந்திய அதிகாரத்தை அதிகரிக்கக் கூடாது?

மாகாணங்களுக்கு அதிகாரங்களை அதிகரித்தால், மக்கள் மத்தியில் அபிவிருத்தியையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்த முடியும்.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது எமது கடமை. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/09/03/news/9385

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல   தொடக்கம்.....

(திரியின் தலைப்பு தப்பு)

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல   தொடக்கம்.....

(திரியின் தலைப்பு தப்பு)

அப்படி தலையங்கம் போட்டால்தான்  நாங்கள் விறு விறுப்பா வாசிப்போம்....இனிமேல் சம்பந்தன் ஐயா தான் எங்கன்ட தளபதி....அவருடை பீரங்கி தாக்குதலி எதிர்பார்க்கிறோம்:rolleyes::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் நிலையில் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30ற்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், இணை மற்றும் துணை அமைச்சர்கள், என மொத்தம் 70 பேர் தான் இடம்பெற்றுள்ளனர்.

சிறிலங்கா தமது அயல்நாடான இந்தியாவை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்.

 தமிழர்களை அழிப்பதிலும் இதே முன்னுதாரணத்தை பின்பற்றச் சொல்லி இருப்பார் போல. அதுதான் இந்திய இராணுவம் கூட வந்து நின்று எம் மக்களை வகைதொகையின்றி அழித்தது.

என்று தனியும் இந்த ஹிந்திய மோகம். :rolleyes:tw_angry:

கிந்தியா என்று ஒரு நாடு இருக்கும்வரை தமிழனுக்கு விடிவு என்பது கனவிலயும் நடக்க வாய்ப்பு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இனித்தான் சம்பந்தன் ஐயா ஆப்பிழுத்த குரங்கு மாதிரி தவிக்கப் போறார். வோட்டுப் போட்டது தமிழ் மக்கள். அவர் யாருக்கு சேவை செய்யப்போறார்? பொறுத்திருந்து பாப்போம்.  

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி.... ஒரு செய்தியும் வந்திருக்குது. எதை... நம்புவது. 
கீழே... உள்ள இணைப்பை, "கிளிக்" பண்ணி  வாசித்து... பேரின்பம் அடையுங்கள். :grin:

http://www.yarl.com/forum3/topic/162615-எதிர்க்கட்சித்-தலைவரை-பேச-அழைத்தபோது-எழுந்துநின்று-உரையாற்றிய-நிமல்-சபையில்-பலத்த-சிரிப்பொலி/#comment-1133728

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
முதல் உரையிலேயே அரசாங்கத்தை சாடிய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்

ஐயா அடக்கி வாசியுங்கோ....சனம் உங்கடை பேச்சை நம்பி  திருப்பியும்  ஏடாகூடமாய் ஏதும் நடக்கப்போகுது........:shocked:

உண்மையும் அதுதானே...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
முதல் உரையிலேயே அரசாங்கத்தை சாடிய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்ஐயா அடக்கி வாசியுங்கோ....சனம் உங்கடை பேச்சை நம்பி  திருப்பியும்  ஏடாகூடமாய் ஏதும் நடக்கப்போகுது........உண்மையும் அதுதானே...

இனி... அவருக்கு, ஏடா கூடமாய் நடப்பது என்றால், சிங்களவனால் தான் முடியும்.
அதுக்குத் தான்.... அவர் ஆயத்தப் படுத்தியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.