Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாலிபான்களால் ஆப்கன் சிறை தகர்ப்பு: 400 கைதிகள் ஓட்டம்

Featured Replies

தாலிபான்களால் ஆப்கன் சிறை தகர்ப்பு: 400 கைதிகள் ஓட்டம்

 
 
தாலிபான்கள் காஸினி சிறையை தகர்த்து 400 கைதிகளை தப்பிக்கச் செய்தனர். | படம்: ராய்ட்டர்ஸ்.
தாலிபான்கள் காஸினி சிறையை தகர்த்து 400 கைதிகளை தப்பிக்கச் செய்தனர். | படம்: ராய்ட்டர்ஸ்.

ஆப்கானிஸ்தானின் முக்கிய சிறைச்சாலையை தாலிபான் தீவிரவாதிகள் தகர்த்தனர். இதில் சுமார் 400 கைதிகள் தப்பி ஓடினர்.

ஆப்கானிஸ்தானின் காஸினி மாகாணத்தில் அந்நாட்டின் முக்கிய சிறைச்சாலை உள்ளது. இன்று அதிகாலை 2.30 மணிக்கு ராணுவ உடையில் இருந்த தாலிபான்கள் முதலில் கார் குண்டு ஒன்றை வெடிக்கச் செய்தனர். தொடர்ந்து சிறைத் துறையினர் மீது தாக்குதல் நடத்திய அவர்கள் சிறை கதவுகளை தகர்த்ததாக மாகாண ஆளுநர் முகமது அலி அகமதி தெரிவித்தார்.

உள்ளே இருந்த 400 கைதிகள் தப்பித்ததாக ஆப்கான் உள்துறை அமைச்சகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. பல போலீஸார் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் பலியானதாகவும் தெரிகிறது.

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள தாலிபான் தீவிரவாதிகள், தற்போது சிறை தங்கள் கட்டுப்பட்டில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையில் 400 அப்பாவி சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும், முஜாகீதின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தாலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2011-ம் ஆண்டு இதேபோல, கந்தஹார் சிறைச்சாலையை தாலிபான்கள் உடைத்து 500க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை விடுவித்தனர். அந்தச் சம்பவத்தை நாட்டின் மிகப்பெரிய பாதுகாப்பு பேரழிவாக ஆப்கான் அரசு குறிப்பிட்டது என்பது கவனிக்கத்தக்கது.

http://tamil.thehindu.com/world/தாலிபான்களால்-ஆப்கன்-சிறை-தகர்ப்பு-400-கைதிகள்-ஓட்டம்/article7651442.ece

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறைக்கைதிகள்  இன்னும்  நாலஞ்சு  நாளையாலை  ஜேர்மனியிலை  நிண்டாலும் நிப்பினம் :grin:

  • கருத்துக்கள உறவுகள்

//கடந்த 2011-ம் ஆண்டு இதேபோல, கந்தஹார் சிறைச்சாலையை தாலிபான்கள் உடைத்து 500க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை விடுவித்தனர்." 

தலிபான்கள் யமனை பச்சடி போட்டவர்கள் போலுள்ளது. சென்ற முறை 500.
இந்த முறை 400. சிறை உடைத்தால்... நூற்றுக்  கணக்கில் தான்... ஆக்களை, வெளியெ கொண்டு வருவார்கள்.
மற்ற இடங்களில்  ஒருவன் தப்புறதுக்கே....  வருசக் கணக்கில் சுரங்கம் தோண்ட வேண்டி இருக்கு.

//கடந்த 2011-ம் ஆண்டு இதேபோல, கந்தஹார் சிறைச்சாலையை தாலிபான்கள் உடைத்து 500க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை விடுவித்தனர்." 

தலிபான்கள் யமனை பச்சடி போட்டவர்கள் போலுள்ளது. சென்ற முறை 500.
இந்த முறை 400. சிறை உடைத்தால்... நூற்றுக்  கணக்கில் தான்... ஆக்களை, வெளியெ கொண்டு வருவார்கள்.
மற்ற இடங்களில்  ஒருவன் தப்புறதுக்கே....  வருசக் கணக்கில் சுரங்கம் தோண்ட வேண்டி இருக்கு.

அவர்களிடம் காட்டிக்கொடுப்பாளர்களோ துரோகிகளோ இல்லைபோல்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்களிடம் காட்டிக்கொடுப்பாளர்களோ துரோகிகளோ இல்லைபோல்...

தலிபான்களிடம் இரக்கம்/இறக்கம் எதுவுமேயில்லை.
எம்மவரிடம் இரக்கமும் இறக்கமுமிருந்ததால் அனைத்தையும் தொலைத்து விட்டோம். :(

 

  • கருத்துக்கள உறவுகள்

சிறைக்கைதிகள்  இன்னும்  நாலஞ்சு  நாளையாலை  ஜேர்மனியிலை  நிண்டாலும் நிப்பினம் :grin:

போடர் பூட்டியாச்சே ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போடர் பூட்டியாச்சே ?

 போடர் திறந்து விட்டே சிறிலங்காவிலையிருந்து  எங்கடை இவ்வளவு சனமும் வெளிநாட்டுக்கு வந்தது?? :cool:

  • கருத்துக்கள உறவுகள்

துவக்கோட நிக்கிற IS காரர், Thank You ரீ சேட்டை போட்டுக் கொண்டு உள்ளார வாறத படம் போட்டு காட்டினோன்ன பயம் வந்திட்டுது.

பத்தாததற்கு, பாதுகாப்பு பின்னாய்வு செய்யாது யாரையும் அகதியா எடுக்க மாட்டம் என்று கனடா, யூகே சொல்லி விட்டது. ?

  • கருத்துக்கள உறவுகள்

தலிபான்களிடம் இரக்கம்/இறக்கம் எதுவுமேயில்லை.
எம்மவரிடம் இரக்கமும் இறக்கமுமிருந்ததால் அனைத்தையும் தொலைத்து விட்டோம். :(

 

தன்னிடமிருந்த படைபலத்தைக் கொண்டு அப்பாவிப் பொதுமக்கள் என்று பாராது பிரபாகரன் சிங்களப் பகுதிகளைத் தாக்காது இருந்தமையும், இலட்சக்கணக்கான தமிழர் அழிவிற்கு ஒரு காரணமாகக் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தன்னிடமிருந்த படைபலத்தைக் கொண்டு அப்பாவிப் பொதுமக்கள் என்று பாராது பிரபாகரன் சிங்களப் பகுதிகளைத் தாக்காது இருந்தமையும், இலட்சக்கணக்கான தமிழர் அழிவிற்கு ஒரு காரணமாகக் கொள்ளலாம்.

கைதிகளாக பிடிபட்ட, சிங்கள ராணுவத்தைக் கூட... மிக மரியாதையாக நடத்தி... இறுதி நேரத்தில் கூட, அவர்களை உயிருடன் அவர்களின் குடுப்பத்தினருடன்  சேர்த்து வைத்தவர்கள். அதற்கு... பிரதியுபகாரமாக, சிங்களம் எமது கைதிகளை விடுவிக்காது... இன்னும் சிறையில் வைத்து அடித்து, துன்புறுத்துக்கின்றது. போர் என்று.... வந்தால், மனிதாபிமானம் பார்ப்பது வீண்.

துவக்கோட நிக்கிற IS காரர், Thank You ரீ சேட்டை போட்டுக் கொண்டு உள்ளார வாறத படம் போட்டு காட்டினோன்ன பயம் வந்திட்டுது.

பத்தாததற்கு, பாதுகாப்பு பின்னாய்வு செய்யாது யாரையும் அகதியா எடுக்க மாட்டம் என்று கனடா, யூகே சொல்லி விட்டது. ?

கனடாவும் ukயும் சுத்திவரகடல் இருப்பதால் சீன் போடும், ஆனால் ஏனைய ஐரோப்பியநாடுகளால் முடியாதே

சிறைக்கைதிகள்  இன்னும்  நாலஞ்சு  நாளையாலை  ஜேர்மனியிலை  நிண்டாலும் நிப்பினம் :grin:

அண்ணை எதுக்கும் எல்லாக்கதவையும் பூட்டிப்போட்டுஇருங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.