Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற்றாலே நீதி கிடைக்கும் – முதலமைச்சர்

Featured Replies

உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற்றாலே நீதி கிடைக்கும் – முதலமைச்சர்

SEP 15, 2015by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள்

cm-meet-walk-demo (1)சிறிலங்காவில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டால், வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடனேயே அது இடம்பெற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி வடக்கு மாகாணசபை உறுப்பினர்களால் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் வரை மேற்கொள்ளப்பட்ட நடைபயணத்தின் முடிவில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டது.

அதனைப் பெற்றுக்கொண்ட பின்னர், கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண முதலமைச்சர்,

“உங்களின் வேதனைகளை நன்கு அறிவேன். அதனால்தான், காணாமல்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட, இனப்படுகொலை சம்பந்தமான அறிக்கைகளையும், தீர்மானமாக நிறைவேற்றியதுடன், உரியவர்களிடம் அறிக்கைகளை சமர்பித்துள்ளோம்.

நீதிமன்றில் இருக்கும் போது, குற்றவாளிகளை விசாரித்து தண்டனைகளை வழங்குவோம், இது அரசியலுடன் சம்பந்தப்பட்டுள்ளதால், அவ்வாறு வழங்க முடியாது.

அதேபோன்று நாட்டின் நன்மைகளை பார்த்தே நடவடிக்கை எடுக்கின்ற காரணத்தினால் தான், காணாமல்போனோர் மற்றும் அனைத்துலக நீதி விசாரணைகள் இழுத்தடிக்கப்படுகின்றது.

cm-meet-walk-demo (1)

cm-meet-walk-demo (2)

இந்த அரசாங்கம் அரசியல் கைதிகளை எப்போதே விடுவித்திருக்க முடியும். தற்போதைய அரசாங்கத்திற்கு கடந்த அதிபர் தேர்தலில் மிகப்பெரியளவிலான வெற்றியைக் கொடுத்திருந்தார்கள் தமிழ் மக்கள். எனவே, அரசியல் கைதிகளை பெருவாரியாக விடுதலை செய்திருக்கலாம்.

சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக விசாரணை மேற்கொள்ளலாம் தானே என அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலிடம் கேட்டபோது, அனைத்துலக  விசாரணையை எடுத்தால், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கும் எனக் கூறினார்.

அதனால், அனைத்துலக  விசாரணை மேற்கொள்ள முடியாது என்றும், அதனால் தான் சிறிலங்காவின் உள்ளக விசாரணையை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்ளக விசாரணையை மேற்கொண்டிருந்தாலும், அனைத்துலக  விசாரணைக்கான பொறிமுறை ஒன்றை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.

உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் கொண்ட குழுக்கள் உள்ளடக்கப்பட வேண்டும். உள்ளூர் நீதிபதிகளின் கருத்துக்களுக்கு மாறாக வெளிநாட்டு நீதிபதிகள் கருத்துக்கூறக் கூடிய நிலையை அமைக்க வேண்டும்.

அத்துடன் வெளிநாட்டில் இருந்து சுதந்திரமான வழக்கு நடத்துநர் ஒருவரையும் சிறிலங்காவுக்கு அழைத்து வர வேண்டும்.

உள்நாட்டில் சட்டங்கள் இல்லை என்றால் அதற்கு ஏற்ற சட்டங்களை இங்கு உருவாக்க வேண்டும். இவ்வாறு வெளிநாட்டு அனுசரணையுடன், முழுமையான விசாரணை நடந்தால் மட்டுமே, தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்கும் இல்லாவிட்டால் நீதி கிடைக்காது.

உள்நாட்டு பொறிமுறையின் கீழ் எந்த விசாரணை நடைபெற்றாலும், நியாயம் கிட்டாது.

இங்குள்ள நீதிபதிகளைப் பற்றி எமக்கு தெரியும். பெரும்பான்மையின நீதிபதிகள் பற்றியும், சிறுபான்மை நீதிபதிகளைப் பற்றியும் நன்றாக தெரியும். பெரும்பான்மையின நீதிபதிகளை விட சிறுபான்மையின நீதிபதிகள் அதிகமாக பயப்படுவார்கள்.

தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடிய நீதியைப் பெற்றுத் தரக்கூடிய வகையில் அந்தப் பொறிமுறை அமையாவிட்டால், அந்த உள்நாட்டு விசாரணைக்கு செல்வது பயனற்றது.

எனவே, தான் அனைத்துலக பொறிமுறையினை அமைக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறோம். அதனை வலியுறுத்தி நீங்களும் நடை பயணத்தினை மேற்கொண்டு வந்துள்ளீர்கள். இதை உரியவர்களுக்கு அனுப்புவோம்.

ஆனால் எந்த அளவிற்கு நன்மை கிடைக்குமென்று தெரியாது. எமது கடமைகளை சரியாக செய்து வருவதாக வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தி வருகின்றோம். அந்த வகையில் எமது பிரச்சினை என்னவென்று வெளியுலகத்திற்கு நன்றாக தெரிந்திருக்கின்றது.

ஆனால், பல அரசியல் காரணங்களின் நிமித்தம் சில தடங்கல்களும் கட்டுப்பாடுகளும் வந்து கொண்டிருக்கின்றன. உரிய நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தார்.

http://www.puthinappalakai.net/2015/09/15/news/9675

விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க வேண்டும் – சுமந்திரன்

SEP 15, 2015 | 2:31by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

sumanthiranபோர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க சிறிலங்கா அரசாங்கம் முன்மொழிந்துள்ள சுதந்திரமான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜெனிவா சென்றுள்ள அவர், கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“சிறிலங்காவின் பொறுப்புக்கூறல் செயல்முறையில், அனைத்துலக பங்களிப்பு இருந்தால் மட்டுமே, அது உண்மையில் சுதந்திரமானதாகவும், நம்பகமானதாகவும் இருக்கும்.

முன்னைய அரசாங்கங்களின்  அனுபவங்களால், வாக்குறுதிகள் செயல்வடிவம் பெறுமா என்று மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.

உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள்,சிறிலங்காவின் நீதித்துறை மீது நம்பிக்கையில்லை.

எனவே, அனைத்துலக தர நியமங்களுக்கேற்ப நடத்தப்படக் கூடிய உள்ளக விசாரணையில், அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்க வேண்டியதே, மிகச் சிறந்தது.

காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விவகாரங்களும் தீர்க்கப்பட வேண்டியுள்ளது.

போர் முடிந்து ஆறு ஆண்டுகளாகியும், தமிழ் மக்களுக்குச் சொந்தமான சில காணிகள் மட்டும் தான் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழர்களுக்காக மட்டும் நாம் இந்த அனைத்துலக விசாரணையைக் கோரவில்லை. எல்லா இலங்கையர்களினதும் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன.

வல்லுறவுகள், சித்திரவதைகள், படுகொலைகள் என்று எல்லாவற்றையும் சுதந்திரமான தீர்ப்பாயம் ஒன்று விசாரிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த செயல்முறையின் மீது எந்த நம்பிக்கையையும் கொள்ளமாட்டார்கள்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/09/15/news/9685

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியரும், சுமந்திரனும் ஒரு நேர் கோட்டுக்கு வந்திரிக்கினம். :)

அண்ணன் சிவாஜிலிங்கம்தான் சரியா கஷ்டப்படுறார்.....தமிழர் தன்னை நம்பவேணுமெண்டு

சிலவேளை அடுத்தமுறை சுவிஸ் எலக்சனிலை நிப்பார்

 

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச போர்க்குற்றவிசாரணை ஆயத்தின் பொறிமுறைகளை உள்ளடக்கிய, சர்வதேச நீதியாளர்கள் மற்றும் நடுநிலையாளர்களை (யூரிகளை) உள்ளடக்கிய போர்க்குற்றவிசாரணையையே தமிழினம் எதிர்பாக்கின்றது. ஆனால் சம்பந்தன் சுமந்திரன் மற்றும் விக்கி ஐயா அவர்கள் தற்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாய், உள்நாட்டுப்ப்பொறிமுறையுடன் கூடிய சர்வதேச நீதியாளர்களை உள்ளடக்கிய போர்க்குற்றவிசாரணைக்கு நாம் தயார் எனக் குத்துக்கரணம் அடித்துள்ளார்கள்.

இது இத்துடன் நின்றுவிடப்போவதில்லை, போர்க்குற்ற விசாரணையே தேவையில்லை மறப்போம் மன்னிப்போம் சிங்களம் தரும் அரைகுறைத்தீவினை இப்போதைக்குப் பெற்றுக்கொள்வோம் என கூட்டமைப்பும் அவர்களை துக்கிப்பிடிக்கும் கும்பலும் கூவாதுவிட்டால் நான் யாழ் கழத்திலிருந்தே முற்றாக நீங்குகிறேன்.

சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை வருமெனில் "தமிழர்விரோததேசம் இந்தியாவையும்" குற்றக்கூண்டில்  ஏறவேண்டிவரும் என்பதால் கூடமைப்பை இந்தியா வழிநடாத்துகின்றது, அதற்கேற்ப கூட்டமைப்பும் அவர்களது ஏவுதடிகளும் தெய்யத்தக்கா போடுனம்.

முள்ளிவாய்காலில் ஆயிரமாயிரம் உயிர்களை இந்தியாவும் சர்வதேசமும் சிங்களவனும் சேர்ந்து புதைத்த புதைகுழிகளின்மேல் கூட்டமைப்பு பார்த்தனீயம் விசச்செடிகளை படரவிடுகின்றது. 

***

 

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு நீதிபதிகள் என்றவுடன் சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒரே புளுகமாக இருக்கும், காரணம் இந்திய நீதிபதிகளை  நியமிக்கலாம் என்று .....ஏற்கனவே ஒரு இந்திய நீதிபதி  எதோ ஒரு விசாரணையிலிருந்து அரைவாசியில் வெளியேறினவர் ...பெயர் நினைவில் இல்லை

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

சரி வெளிநாட்டு நீதிபதிகளிடம் உண்மையைச் சொல்லிப் போட்டு சனம் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ முடியுமோ?முள்ளி வாய்க்காலில் நின்ற வைத்தியர்கள் சிறிலங்காவில் என்ன சொன்னார்கள் வெளியில் வந்து என்ன சொன்னார்கள் என்பது புரிந்தால் அசரி சுற்றிவர சிங்களஇராணுமும் சிங்களப் பொலிசும் இருக்கும் கபாழது எவன் துணிந்து உண்மையான சாட்சியத்தைச் சுதந்திரமாக வெளியிட முடியம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியரும், சுமந்திரனும் ஒரு நேர் கோட்டுக்கு வந்திரிக்கினம். :)

பெட்டி+அடித்தல் = பெட்டியடித்தல்.

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியரும், சுமந்திரனும் ஒரு நேர் கோட்டுக்கு வந்திரிக்கினம். :)

யார் குத்தியும் அரிசியானால் சரி 

நன்றி சிறி...

பெட்டி+அடித்தல் = பெட்டியடித்தல்.

என்ன கோச்சான் பெட்டியடிக்குறீங்களோ? சொறிலங்காவிட்கு திரும்பப்போறியள் போலகிடக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

வாட் சொறிலங்கா ? நோ நோ ! இட்ஸ் எ டர்டி கன்றி. எமக்கு பிள்ள குட்டி எல்லாம் யூகேலதானே லிவிங்ஸ்டன்!

சும்மா கொலிடே போய் சீன் காட்டுரெண்டா ஓகே.

வாட் சொறிலங்கா ? நோ நோ ! இட்ஸ் எ டர்டி கன்றி. எமக்கு பிள்ள குட்டி எல்லாம் யூகேலதானே லிவிங்ஸ்டன்!

சும்மா கொலிடே போய் சீன் காட்டுரெண்டா ஓகே.

அப்ப ஹொலிடே போகும்போது கஸ்டப்பட்ட ஆக்களுக்கு சாமான் குடுக்கிறதிட்கு பெட்டி அடிக்கிறியலோ?

டர்டி கன்றிக்கு ஹொலிடே போகின்ற முதலாவது ஆழாக அண்ணன் கோச்சான் அவர்கள் திகழ்வார் என்று நினைக்கிறேன்.

கோச்சான் என்யாய் யுவர் ஹொலிடே

Edited by Surveyor

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.