Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விபச்சாரிகள் அழிப்பு

Featured Replies

நான் அறிந்த வரையில் பாலியல்தொழிலை அங்கீகரித்து தேவலோகத்திலேயே பாலியல்தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி உள்ள ஒரே மதம் இந்து மதம்தான்.

மதத்தின் பெயராலேயே தேவதாசிகள் உருவாக்கப்பட்டார்கள். அவர்கள் கடவுளுக்கு நேர்ந்து விடப்பட்டு கோவில்களிலேயே தங்கி, தொழில் செய்து வந்தார்கள்.

மன்னிரிடம் இருந்தவர்கள் அந்தப்புரத்தில்தான் இருந்தார்கள். ஆசைநாயகிகள் என்ற பெயரில். மன்னருக்கு தேவதாசிகள் தேவைப்பட்டிருக்கவில்லை.

தேவதாசி முறைக்கு முற்றிலும் காரணனமானவர்கள் இந்து மத பார்ப்பனர்களே.

சரி! அதை விடுவோம்.

தேவலோகத்தில் இருப்பதாக அனைத்து இந்து மத புராணங்கள், வேதங்கள் சொல்கிற ரம்பை, மேனகை, ஊர்வசி போன்றவர்கள் யார்? அவர்களின் தொழில் என்ன? அது பாலியல்தொழில் இல்லையா?

அவர்களின் தரகர்களாகிய (மாமாக்கள்) இந்திரன், சிவன், விஸ்ணு போன்றவர்களை வணங்கிக் கொண்டு "விபச்சாரம்" என்று பேசுவது நகைப்புக்கிடமானது.

  • Replies 97
  • Views 14.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி...சரி நாங்கள் எப்போதும் எந்த விடயத்திற்க்கென்றாலும் எங்கள் சாமிகளை ஒரு கை பார்க்காமல் விடமாட்டோம்.அவ்வப்போது ஊறுகாயை தொட்டு நக்குறமாதிரி.எப்படி இருந்தாலும் விபச்சாரம் செய்ததற்க்காக பெண்களை கொல்வது எந்த விதத்திலும் நியாயமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண்கள் அப்பாவிகளா விபச்சாரிகள் தானா என்றும் தெரியவில்லை. ஆனால் அப்படித் தண்டிப்பதாக இருந்தால் அவளிடம் போனவர்களையும் நோட்டம் விட்டுத் தண்டிக்க வேண்டும்.

இந்து மதத்தில் ரம்பை, மோகனை நடனம் ஆடுபவர்களே! பாலியல் துஸ்பிரயோகங்களையும், விபச்சாரத்தையும் நியாயப்படுத்த துப்புக் கெட்ட சிலர், இதனூடாகப் கதைக்க முனைவது அவர்களின் இயலாமையைத் தான் உணர்த்துகின்றது.

சகுந்தலை பிறந்தது எப்படி என்று தெரியுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இரண்டு விபச்சாரிகளும் அழிப்பு.

மொத்தம் 5 விபச்சாரிகள் அழிக்கப்பட்டுள்ளனர்.

http://news.bbc.co.uk/1/hi/england/suffolk/6173633.stm

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

. ஆனால் அப்படித் தண்டிப்பதாக இருந்தால் அவளிடம் போனவர்களையும் நோட்டம் விட்டுத் தண்டிக்க வேண்டும்.

பிறகு கொலை செய்யிறவன் கொலையை 100 வீத தொழிலாத்தான் செய்யோணும்.. எண்டாலும் அவையிடம் போற ஒரு ரண்டு பேரைப் போட்டாலும் சிலர் ஆசைப்படுற மாதிரி இத் தொழில் குறையும்..

நெடுக்ஸ்... இந்த அழிக்கப்பட்ட தொழிலாளர்ககளிடம் சென்று வந்தவார்கள் வாழ அனுமதிக்கப்படுகிறார்களா..? அல்லது அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வில்லையா

  • கருத்துக்கள உறவுகள்

சகுந்தலை பிறந்தது எப்படி என்று தெரியுமா?

எல்லோரும் பிறக்கின்ற மாதிரித் தான் கருவறையில் இருந்து பிறந்தார். போய்யா! நீரும் உம் கேள்வியும். இதற்கும் சமுந்தலைக்கும் தொடர்பு கண்டீர் என்றால் என்னத்துக்கு அதைப் போய் எதிர்க்கின்றீர்! :lol: :angry: :angry:

இந்து மதத்தின் அதிகாரபூர்வ பாலியல் தொழிலாளர்களில் ஒருவரான மேனகை விசுவாமித்திரரின் தவத்தைக் கலைப்பதற்காக இந்திரன் என்ற தரகரால் அனுப்பப்பட்டாள்.

மேனகை விசுவாமித்திரரை தன் கவர்ச்சியைக் காட்டி மயக்கி, புணர்ந்து சகுந்தலையை பெற்றெடுத்தாள்.

ரம்பை, மேனகை, ஊர்வசி இந்த மூவரும் நடனப் பெண்கள் மட்டும் அல்ல. தவம் செய்பவர்களை மயக்கி, அவர்களுடன் புணர்ந்து, சிறிது காலம் வாழ்ந்து, தவத்தில் இருந்து அவர்களை திசை திருப்புவதுதான்.

ஆகவே இந்து மதத்தை ஏற்றுக் கொண்ட நீங்கள் பாலியல்தொழிலை திட்டாதீர்கள். கடவுள் உங்களை கோபிப்பார். :lol::D:D

ஆண்களெல்லாம் சேர்ந்து பணத்திற்காக உடலை விற்கும் பெண்களை எதிர்த்து ஆவேசமாகப் பேசிக்கொண்டிருக்கிறீர்களே...

பெண்ணின் சதை வெறி பிடித்து அவைபவர் யாராம் ?

  • கருத்துக்கள உறவுகள்

உண்ண உணவிலை என்றிடும் போதினில் பெண்மையிங்கேதுக்கடி - கொடு

உன்மத்தர் உள்ள வரையில் உனக்கு உயர்விலை தேறுமடி

மண்ணினுட் சென்று மட்காகும் உடலை மடையர் எடுக்கட்டுமே - அந்த

மன்மதக் குஞ்சுகளின் பணம் உந்தன் மடியை நிறைக்கட்டுமே

மானம் ஒழுக்கம் எனும் இவை யாவையும் மாயப்பதங்களடி - அவை

ஊனம் வளர்க்க ஒரு பிடியற்றவர்க் குண்மையில் ஏதுக்கடி

ஈனத் தொழில் விபச்சாரமென்போர் பசித் தீயை அடக்குவரோ - அவர்

ஞானத்தைத் தூக்கித் தெருவினில் வீசி நடத்தையை மாற்றிடடி

சில சந்தர்ப்பங்களில இப்படியும் யோசிக்கத் தோன்றும்.

மானம் குலம் கல்வி...தானம் தவம் முயற்சி தாளாண்மை.... எல்லாம் பசி வந்திடப் பறந்துபோம்.

ஆனால் இந்த நாட்டில அப்படி ஒரு தேவையில்லை. இடத்துக்கும் சூழ்நிலைக்கும் தகுந்த படிதான் பண்பாடு. அதை விதித்தவன் மனிதன்தான் கடவுளில்லை. ஏதோ யோசிச்சு முடிவெடுங்கோ. ஆனாக் கொல்லுறது பாவம் விட்டிருங்கோ. இன்றைய பல ஆண்களுடைய வக்கிர உணர்வுகளுக்கு வடிகாலாக அவையதான் இருக்கினம். அதனால பல குற்றங்கள் குறையுது.

நம்மட தமிழ் சமுதாயத்தில பண்டைக்காலந்தொட்டே பரத்தமை ஒரு தொழிலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்குது. கணிகையர் தெருக்கள் இன்றைய றெட் லைட் ஏரியாக்கள்போல அந்தக்காலத்தில இருந்திருக்குது. இன்னும் சொல்லப் போனா ஆரியர் வருகைக்கு முன்பிருந்தே இந்தியாவின் ஆதிக் குடிகளிடம் அடிமை முறையும், பலதார மணமும் பரத்தமையும் இருந்தது என்றுதான் கூறுகிறார்கள். ஒழுங்கற்று இருந்த திருமணவாழ்வை ஒழுங்கு படுத்த இறைவனின் சன்னிதானத்தில் மணவினை நிகழ்த்;தும் முறைமை மறைதேயத்துப் பார்ப்பனர்களாலேயே அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை 'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணமென்ப| என்ற தொல்காப்பியச் சூத்திரத்தின் மூலம் அறியக் கூடியதாயுள்ளது. தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து பரத்தையிடம் போகும் வழக்கம் தமிழர்களிடம் மிகப் பொதுவானதாகும். சங்க இலக்கியங்கள் இதனைக் கூறுகின்றன. இதனால் பல குடும்பங்களில் பிரிவினைகள் தோன்றின. அவை பின்னர் ஊடலாகவும் கூடலாகவும் சங்கப் புலவர்களால் அழகுபடுத்தப்பட்டன என்பதே யதார்த்தம். ஆக மொத்தத்தில் தமிழர் மத்தியில் விபச்சாரம் அங்கீகரிக்கப்பட்டிருந்தது என்பதை நமது பெருமைகள் சிறுமைகளாய்விடும் என்ற ஒரே காரணத்தைக் கொண்டு மறுக்கமுடியாது.

பாலியல்தொழில் என்பது சிலருக்கு அருவருக்கத்தக்க தொழிலாக இருக்கலாம.

சாக்கடைகளை துப்பரவு செய்யும் தொழிலும் சிலருக்கு அருவருப்பானதாக இருக்கும்.

ஆனால் தொழில்களில் எதுவும் தவறான தொழில் இல்லை. அது பாலியல் தொழிலாக இருப்பினும்.

விபச்சாரிகள் என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக பாலியல் சேவகர்கள் என்ற பதத்தை பயன்படுத்துங்கள்.

பாலியல் வல்லுறவு என்ற வார்த்தையை பாலியன் வன்புணர்வு என்று சொல்கிறோம் இல்லையா? அதுமாதிரியே விபச்சாரம், விபச்சாரிகள் என்ற வார்த்தைகளை இனி தவிர்ப்போம்.

பாலியற்பணியாளர்கள் என்று அழகாய் தமிழில் சொல்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

பாலியற்பணியாளர்கள் என்று அழகாய் தமிழில் சொல்வோம்.

ஆமாம். அப்படியே, பாலியல் சேவகர்கள், தியாகிகள், மக்கள் தொண்டர்கள், எண்டு சொல்லி, கடைசியில் தமிழ் உணர்வாளர்கள் என்ற பட்டத்தையும் போட்டு அவர்களின் சேவையைப் பாராட்டலாம்.

பாலியற்பணியாளர்கள் ஒரு வகையில் தொண்டுதான் செய்கிறார்கள். அவர்களை தொண்டர்கள் என்றும் சொல்லலாம்.

தியாகிகள்தான். சகிக்க முடியாத மனிதர்களையும் தாங்கிக் கொள்ள வேண்டி உள்ளதல்லவா?

ஆனால் தமிழ் உணர்வாளர்கள் என்று சொல்ல முடியாது. அதற்கு தமிழ் உணர்வு இருக்க வேண்டும்.

அப்படி பாலியற்பணியாளர்களுக்கு தமிழ் உணர்வு இருந்தால், அவர்களும் தமிழுணர்வாளர்களே!

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

பிறகென்ன, சிலை வைக்க வேண்டியது தானே!

அதுதான், சிலைகள் வைத்து பூசை செய்து வழிபாடெல்லாம் செய்கிறோமே! பிறகென்ன?

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் எதற்குப் பகுத்தறிவு, பான்னடையறிவு என்று பந்தா காட்டிக் கொண்டு திரிகின்றீர்கள். பூசையில் கலக்க வேண்டியது தானே!

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் தொழிலில் ஈடுபட்ட பணத்தையும், கவர்ச்சி காட்டிப் பெற்ற பணத்தையும் பட்டினியால் வாடும் ஏழைகளுக்குக் கொடுத்த புண்ணியவதிகள் பலர் உள்ளனர். மேற்கு நாடுகளில் இது சர்வ சாதாரணம். பாலியல் தொழில் செய்வோர் பண்பாடு தவிர்ந்த ஏனைய விடயங்களில் பிழைவிடுவது அபூர்வம். இயற்கையில் அவர்கள் பலரையும் அனுசரித்துப் போகக்கூடிய நல்லுள்ளம் கொண்டோராக இருப்பர். முற்காலத்தில் இத்தகைய குணநலனும் அறிவுத்திறனும் கொண்டோரே தாசிகளாக இருக்கத் தகுதிபெற்றிருந்தனர். உலகில் பெண்ணுக்குக் கிடைத்த முதல் உத்தியோகமே தாசித்தொழில்தான். பாலியல் தொழில் புரியும் பெண்களை ஈன இரக்கமின்றிக் கொலைபுரிவது மிகவும் கொடியதாகும். அத்தகைய செயலிற்கு நியாயம் கற்பிப்பது அதைவிடச் சண்டாளத்தனம். மனதாலும் ஒரு பெண்ணை தவறாக எண்ணாதவன் தன் முதற்கல்லை எறிக என்று கூறிய யேசுநாதர் தான் எடுத்த கல்லைக் கூட மகதலேனா மரியாளை நோக்கி எறியாது கீழே போட்டுவிட்டுத்தான் போனார். அந்தப் புனிதரே அவ்வாறு செய்தபோது நாம் எம்மாத்திரம். ஆகவே வக்கிர புத்தி கொண்டு கொலைகாரனை ஆதரித்து எழுதாமல் அவனைக் கண்டிப்பதே சரியான செயலாகும்.

அப்புறம் எதற்குப் பகுத்தறிவு, பான்னடையறிவு என்று பந்தா காட்டிக் கொண்டு திரிகின்றீர்கள். பூசையில் கலக்க வேண்டியது தானே!

பகுத்தறிவு = நமது சமய புராணங்கள் உண்மையா பொய்யா என்று அறிய முற்படுதல்.

பன்னாடையறிவு = பொய்யென்று ஆதாரங்களுடன் கூறும்போது, அதை நம்ப மறுத்து கண்களை மூடிக்கொள்ளல்.

'Complex issue'

"There are other key issues around poverty, violent pimps or partners and a lot of women have mental health issues," he said. "This is a very complex issue.

"If we are talking about someone with a life-long history of abuse they will need all different types of support."

In Ipswich the team has put extra staff on the streets every evening and increased the opening hours of the community drugs treatment centre in the hope that some of the women will come to get the support they need.

We have to learn lessons from this

Jeremy Pembroke, leader of Suffolk County Council

Jeremy Pembroke, leader of Suffolk County Council, believes the recent spate of killings requires a change in the way prostitution is regarded.

"Clearly once this comes to an end, once we have found the person who has committed these ghastly crimes, we need to sit down and re-think how we do things," he told BBC Five Live.

He added: "I'm so shaken by what's happening it's quite difficult to think of the long term implications but certainly as leader of the county council I will have to sit down with the chief constable and we will consider what we do in the future.

"We have to learn lessons from this."

Society

The Archbishop of Canterbury, Rowan Williams, told BBC Breakfast that perhaps it was wider society that needed to take note.

"I think what we are reminded of quite simply, in the last couple of days, is that every one of these young women is someone's daughter and someone's child," he said.

"And they are human beings who have been very vulnerable and who are made very vulnerable by aspects of our society that need to change."

http://news.bbc.co.uk/1/hi/england/suffolk/6175411.stm

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் தொழிலில் ஈடுபட்ட பணத்தையும், கவர்ச்சி காட்டிப் பெற்ற பணத்தையும் பட்டினியால் வாடும் ஏழைகளுக்குக் கொடுத்த புண்ணியவதிகள் பலர் உள்ளனர். மேற்கு நாடுகளில் இது சர்வ சாதாரணம். பாலியல் தொழில் செய்வோர் பண்பாடு தவிர்ந்த ஏனைய விடயங்களில் பிழைவிடுவது அபூர்வம். இயற்கையில் அவர்கள் பலரையும் அனுசரித்துப் போகக்கூடிய நல்லுள்ளம் கொண்டோராக இருப்பர். முற்காலத்தில் இத்தகைய குணநலனும் அறிவுத்திறனும் கொண்டோரே தாசிகளாக இருக்கத் தகுதிபெற்றிருந்தனர். உலகில் பெண்ணுக்குக் கிடைத்த முதல் உத்தியோகமே தாசித்தொழில்தான். பாலியல் தொழில் புரியும் பெண்களை ஈன இரக்கமின்றிக் கொலைபுரிவது மிகவும் கொடியதாகும். அத்தகைய செயலிற்கு நியாயம் கற்பிப்பது அதைவிடச் சண்டாளத்தனம். மனதாலும் ஒரு பெண்ணை தவறாக எண்ணாதவன் தன் முதற்கல்லை எறிக என்று கூறிய யேசுநாதர் தான் எடுத்த கல்லைக் கூட மகதலேனா மரியாளை நோக்கி எறியாது கீழே போட்டுவிட்டுத்தான் போனார். அந்தப் புனிதரே அவ்வாறு செய்தபோது நாம் எம்மாத்திரம். ஆகவே வக்கிர புத்தி கொண்டு கொலைகாரனை ஆதரித்து எழுதாமல் அவனைக் கண்டிப்பதே சரியான செயலாகும்.

தாய் வழி தலைமைச் சமூக அமைப்பில் இருந்த ஆதி மனிதன்...ஆண்வழி தலைமைச் சமூக நிலைக்கு மாறிய பின் பெண்ணைப் போகப் பொருளாக்கிக் கொண்டது சுத்த ஆண்களின் பாலியல் ஆதிக்கத்தின் வெளிப்பாடு. மனிதனைத் தவிர விபச்சாரம் செய்யும் நிலையில் விலங்குகள் கூட இல்லை. மாறாக பல பறவை இனங்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டோடு வாழுகின்றன. மனிதனுக்கு அடுத்தபடியாக அறிவு நிலையில் உள்ள டொல்பிங்கள் கூட அழியாக காதல் கொள்கின்றன. இப்படி விலங்குகளே சிந்திக்கின்ற போது பகுத்தறிவுள்ள மனிதர்கள் மட்டும் தன்னினத்தில் இன்னொரு பாலாரை போகப் பொருளாக்கி காசு வழங்குகிறார்களாம். ஏன் விபச்சாரிகளுக்கு கொடுக்கும் காசை..ஒரு வங்கியில் முதலிட்டு பெண்களுக்கான கொடுப்பனவாக அவர்களின் அடிப்படை உணர்வுகளை உரிமைகளை மதித்தும் மனித நாகரிகத்தை வளர்க்கும் வகையிலும் வழங்கலாமே...! எத்தனை ஆண்கள் செய்யத் தயாராக உள்ளனர். பரத்தை தாசி எல்லாம் மன்னர்களின் போகப் பொருளாக பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டதுக்கான அறிகுறிகள்..! அதையே குடிமக்களில் சிலரும் செய்தனர். அந்த நிலை இன்றில்லை. இன்று பெண்களுக்கு ஆண்களைப் போலவே கல்வி அறிவு, வேலை வாய்ப்பு என்று பண வருவாய்க்கு வழி சமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள நிலையிலும் செயற்கையான போதையை ஊட்டத்தக்க போதைப் பொருளுக்காக உடலை விற்கும் பெண்களும்..அதைப் போகிக்கச் செல்லும் ஆண்களும் என்று மனிதன் விலங்கை விட கீழ்த்தரமான சிந்தனை ஒழுங்கில்...இதையும் நாகரிகம் என்பது வேடிக்கையானது.

எத்தனை ஆண்கள் இந்தப் பணத்தை விசேடமாக நிறுவும் வங்கிகளில் வைப்பிலிட்டு பெண்களுக்கு வேலை வாய்ப்புக்கு அல்லது சுயதொழிலுக்கான முதலீடாகப் பயன்படுத்த உதவி வழங்குவர். ஆக ஆண்களின் போகப் பொருளாகிப் போதையில் திழைக்கும் பெண்கள் மனிதர்களா? நிச்சயம் சிந்தனையற்றவர்களே. அந்த வகையில் அவர்களை எச்சரிப்பதும்..வழிநடத்துவதும

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது அவரவரின் சிந்தனையின் போக்கில் இருக்கிறது. அதைக் கட்டுப்படுத்த முடியாது. அது தனிமனித உரிமைப் பறிப்பு. தவறுகள் சுட்டிக்காட்டப்பலாமே தவிர தவறுகளை அச்சுறுத்தி திருத்த முடியாது. அவர்களா உணர்ந்து திருந்த வேண்டும். அதற்கான அனுமதிதான் அவசியம். ஒழிப்பு அழிப்பு பதங்கள் பாரதூரமான அடுத்தவர் உரிமை மீறலுக்கு வகை செய்கின்றன. அவையே பிரச்சனைகளின் மூலங்கள். அவையே நாசியத்தின் வழி முறைகள்..

இப்பிடி நான் சொல்ல வில்லைங்கோ.. இதை சொன்னவர் யாரு தெரியுமாங்கோ.. விபசாரிகள் அழிப்பு எண்டு கொக்கரிக்கிறாரே அவரே யாழில் பிறிதொரு இடத்தில் சொன்னது. அங்கையொண்டும் இங்கையொண்டுமா மனம் போன போக்கில ஒரு பரபரப்ப நிலையில சும்மா எழுதி தள்ளுளுவது முன்னவருக்குத்தான் கைவந்த கலை என்றால் பின்னவருக்குமா..

ஒழிப்பு அழிப்பு பதங்கள் பாரதூரமான அடுத்தவர் உரிமை மீறலுக்கு வகை செய்கின்றன..

அடடே அதை சொன்னது யாரு..? இங்கே விபசாரிகள் அழிப்பு என தலையங்கம் வைத்துள்ளாரே அவர் தான்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விபச்சாரிகள் என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக பாலியல் சேவகர்கள் என்ற பதத்தை பயன்படுத்துங்கள்.

பாலியல் வல்லுறவு என்ற வார்த்தையை பாலியன் வன்புணர்வு என்று சொல்கிறோம் இல்லையா? அதுமாதிரியே விபச்சாரம், விபச்சாரிகள் என்ற வார்த்தைகளை இனி தவிர்ப்போம்.

லக்கி, உங்களின் ஒப்பீடு பொருந்தாது. பரத்தையர்கள் அவர்களாக பரத்தைத் தொழில் ஈடுபடுகிறார்கள். அத்தொழில் சமூகச்சீரழிவு ஏற்படுத்துவதாயுள்ளது (போதைப் பொருள், கள்ளச் சாராயம், முதலிய). இன்னும் விட்டால் கள்ளரை பொருள் இடம்மாற்றும் பணியாளரென்றும் கொலைகாரனை மேலுலக பயணஒழுங்கீட்டாளரென்று அழைக்கவேணும் என்று சொல்வியள் போல இருக்கு?! :rolleyes:

கற்பு என்பது நட்பு போல ஒரு கருவாக்கம் (concept). எப்படி ஒரு மூன்றாம் நபர் இருநண்பர்களிடையே உள்ள நட்பை ஒருநண்பனின் கையை வலியப் பிடித்து அடுத்த நண்பர் மூக்கை, முதலாம் நபரின் எதிர்ப்பையும் மீறி உடைப்பதால் அழிக்க முடியாதோ, அதே போல் கற்பை ஒருவரின் எதிர்பை மீறி அழிக்க முடியாது. ஆகையால் வன்புணர்வை கற்பழிப்பென்றழைப்பது ஏரணப்படி உதைக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது அவரவரின் சிந்தனையின் போக்கில் இருக்கிறது. அதைக் கட்டுப்படுத்த முடியாது. அது தனிமனித உரிமைப் பறிப்பு. தவறுகள் சுட்டிக்காட்டப்பலாமே தவிர தவறுகளை அச்சுறுத்தி திருத்த முடியாது. அவர்களா உணர்ந்து திருந்த வேண்டும். அதற்கான அனுமதிதான் அவசியம். ஒழிப்பு அழிப்பு பதங்கள் பாரதூரமான அடுத்தவர் உரிமை மீறலுக்கு வகை செய்கின்றன. அவையே பிரச்சனைகளின் மூலங்கள். அவையே நாசியத்தின் வழி முறைகள்..

இப்பிடி நான் சொல்ல வில்லைங்கோ.. இதை சொன்னவர் யாரு தெரியுமாங்கோ.. விபசாரிகள் அழிப்பு எண்டு கொக்கரிக்கிறாரே அவரே யாழில் பிறிதொரு இடத்தில் சொன்னது. அங்கையொண்டும் இங்கையொண்டுமா மனம் போன போக்கில ஒரு பரபரப்ப நிலையில சும்மா எழுதி தள்ளுளுவது முன்னவருக்குத்தான் கைவந்த கலை என்றால் பின்னவருக்குமா..

ஒழிப்பு அழிப்பு பதங்கள் பாரதூரமான அடுத்தவர் உரிமை மீறலுக்கு வகை செய்கின்றன..

அடடே அதை சொன்னது யாரு..? இங்கே விபசாரிகள் அழிப்பு என தலையங்கம் வைத்துள்ளாரே அவர் தான்..

தலைவா... அசத்திப்புட்டியள்...

அதெல்லாம் சரி...

உந்த பாலியல் வேலையை நிப்பாட்டுறதுக்காக வங்கீல காசுபோடலாம் எண்டு யாரோ சொன்னமாதிரி இருக்கு காசுசேர்த்து உதவிசெய்ய நான் றெடி.... காசுபோட நீங்கள் எல்லாரும் றெடியா?

ஏனப்பு தெரிமயமல்தான் கேட்கிறன்...

வெளிநாடுகளில அரசாங்கம் மக்களுக்கு உதவிசெய்யுது... இருந்தும் பிச்சைக்காரன் இல்லையா? பாலியல்தொழில் செய்பவர்கள் கூட ஏழைநாடுகளில் இருந்து வந்தோரே அதிகம் என எனது புலம்பெயர் நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது...

செல்வந்த நாடான அமெரிக்காலில் கூட குப்பைபொறுக்கி வாழ்க்கைபோக்கும் நபர்களும் இருக்கிறார்கள். அரசாங்கம், உதவி... இதெல்லாம்வெறும் கண்துடைப்பு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.