Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

43,200 முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண்: அதிர்ச்சித் தகவல்கள்!

Featured Replies

43,200 முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண்: அதிர்ச்சித் தகவல்கள்!

 

மெக்சிகோ நகரம்: பெண்கள் மற்றும் சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் தள்ளும் கும்பலிடமிருந்து தப்பித்த இளம்பெண், 4 ஆண்டுகளில் 43,200 முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார்.  

மெக்சிகோவை சேர்ந்தவர் கர்லா ஜாசின்டோ. அவர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தான்  மனித கடத்தல் கும்பலிடம் சிக்கியதையும் அதனால் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளையும் விவரித்துள்ளார்.

அதன் மூலம் மெக்ஸிக்கோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறும்  கொடூர மனித கடத்தல்களின்  கொடுமைகளை  வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கர்லா போன்று  உலகில் 10 ஆயிரம் மெக்சிகன் பெண்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சிறுமிகள் மற்றும் இளம்பெண்களைக் கடத்தி இதுபோன்ற பாலியல் தொழில் நிழல் உலகில் ஒரு லாபகரமான தொழிலாகக் கருதப்படுவதால் மத்திய மெக்சிகோவில் இருந்து  அட்லாண்டா மற்றும் நியூயார்க் வரை பரவி இந்தக் கடத்தல் கொடுமை பரவி உள்ளது. டெனான்சினோ நகரில்  மனித கடத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இளம் பெண்கள் பாலியல் தொழில்  தள்ளப்படுவதாக  அமெரிக்கா மற்றும் மெக்சிகன் அதிகாரிகள் கூறியுள்ளதும் இந்தக் கொடுமைகளை உறுதிப்படுத்துகிறது. 

karla%20jinto%20pic.jpg

கர்லா ஜாசின்டோ கூறும் போது,  தனது 5 வயதில் தனது தயாரால் நிராகரிக்கப்பட்டதாகவும், அப்போது தனது உறவினர் ஒருவரால்  பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறி உள்ளார். அதன் பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து கூறியுள்ள அவர், ஒரு நாளைக்கு 30 ஆண்கள் வீதம் 4 ஆண்டுகள் ,  43, 200 முறை பாலியல் வன்கொடுமைக்கு தான் இலக்கானதாகத் தெரிவித்துள்ளார்.

தனது 12 வயது வயதில் மனித கடத்தல் கும்பலால் குறிவைக்கப்பட்டு கடத்தப்பட்ட  கர்லா ஜான்சின்டோ அந்தச் சம்பவம் குறித்து, சில நண்பர்களுக்காக  நான் மெக்சிகோவின் சுரங்க ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். அப்போது இனிப்பு பொருள் விற்பனை செய்யும்  ஒரு சிறுவன்,  சிலர் எனக்கு இனிப்பு ஒன்றை பரிசாக கொடுக்க சொன்னதாகக் கூறி என்னிடம் அதைக் கொடுத்தான். 5 நிமிடங்களுக்குப்  பிறகு ஒரு வயதானவர் காரில் நான் இருந்தேன் என்கிறார் அதிர்ச்சி விலகாமல்.

தற்போது 23 வயதாகும்  கர்லா மனித கடத்தலுக்கு எதிராக ஒரு வெளிப்படையான போராளியாக மாறிவிட்டார். அதனால் தான் தனது சீரழிக்கப்பட்ட வாழ்க்கையினைப்  பகிரங்கமாகத்   தெரிவிக்கிறார். இதே கொடுமையை வாடிகன் நகரில் போப் ஆண்டவரிடம் தெரிவித்தார்.  மேலும் மே மாதம் அமெரிக்க பாராளுமன்றத்திலும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

karla%20josinto.jpg

கர்லா  மனித கடத்தல் மற்றும்   விபசாரத்திற்குள் தள்ளுவது என்பது  உலகில் மிகப்பெரிய பிரச்சினையாக வளர்ந்து வருவதாகச்  சுட்டிக் காட்டி உள்ளார்.

இது போல் ஆயிரக் கணக்கான இந்தியா,நேபாளம் மற்றும்  வங்காளதேசத்தைச் சேர்ந்த  சிறுமிகள் இளம்பெண்கள்,  பாலியல் அடிமைகளாக மத்திய கிழக்கு நாடுகளில் விற்கப்படுகிறார்கள்.மேலும்  சிரியாவில் உள்ள  ஐ.எஸ். தீவிரவாதிகளின்  செக்ஸ் சிறைச்சாலைகளுக்கும் விற்கப்படுகின்றனர்.

http://www.vikatan.com/news/article.php?aid=54959

  • கருத்துக்கள உறவுகள்

4 years- 43,200 Times

1 year -  10,800 Times

1 day -  30 Times

அதாவது அந்தப் பெண் நித்திரை கொள்ளாமல் இருந்தாலும் ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கொரு முறை வல்லுறவுக்கு உட்படுத்தப் படுகிறார். நித்திரையையும் கணக்கெடுத்தால்.. ஒவ்வொரு 20 நிமிடத்துக்கு ஒரு முறை.. வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்!

கொடுமை...!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நவீனன் said:

43,200 முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண்: அதிர்ச்சித் தகவல்கள்!

அவ்வளவு துல்லியமாய் கணக்கு எழுதி கவனமாய் வைச்சிருக்கிற விசயமா இது.....:shocked:

இதுக்கை புங்கையர்ரை பிரித்தல் கணக்கு இன்னும் ஆகா ஓகோ tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

4 years- 43,200 Times

1 year -  10,800 Times

1 day -  30 Times

அதாவது அந்தப் பெண் நித்திரை கொள்ளாமல் இருந்தாலும் ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கொரு முறை வல்லுறவுக்கு உட்படுத்தப் படுகிறார். நித்திரையையும் கணக்கெடுத்தால்.. ஒவ்வொரு 20 நிமிடத்துக்கு ஒரு முறை.. வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்!

கொடுமை...!

ஒவ்வொரு 20 நிமிடமுமா? 
அப்ப.... குளியல், சமையல், சாப்பாட்டு  நேரங்களை, கணக்கில் எடுத்தால்... இன்னும் நிமிடங்கள் குறையுமே..... புங்கை.  Smiley

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புங்கையூரன் said:

4 years- 43,200 Times

1 year -  10,800 Times

1 day -  30 Times

அதாவது அந்தப் பெண் நித்திரை கொள்ளாமல் இருந்தாலும் ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கொரு முறை வல்லுறவுக்கு உட்படுத்தப் படுகிறார். நித்திரையையும் கணக்கெடுத்தால்.. ஒவ்வொரு 20 நிமிடத்துக்கு ஒரு முறை.. வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்!

கொடுமை...!

உது கள்ளக் கணக்கு. நம்பேலாது. உந்தக் கணக்கு லெவலில ஆள் எப்பவோ நொந்து கெட்டு மேல போயிருக்கும். :shocked:

ஒவ்வொரு 20 நிமிசத்துக்கு ஒருத்தர் எண்டால், இன்ரெனெசனல் லெவலில, அந்தமாதிரி பெண்டுகள் கிளம்பி அங்க போடுவினமே. டிமாண்டை சமாளிக்க சப்ளை கட்டாயம் எப்பவோ வந்திருக்கும்.

உல்லாசப் பயணத் துறை அந்தமாதிரி விருத்தியடைந்ததால் கொழும்பில, ரஸ்யா, உக்கிரைன், தாய், கொரியா, சீனா, மலே, நேபால் எண்டு வந்திறங்கியிருக்கினமாம் (கவனிக்க: கினம் இல்ல, கினமாம்) 

அது சரி, படிக்கேக்க, கணக்கு ஓடாது எண்டு வாத்தியாரிட்ட அடிவாங்கிற புங்கையரின்ற கணக்கைப் பார்த்தால், கணக்கு வாத்தியார், 'அடி உதவிற மாதிரி அண்ணன் தம்பி உதவார் எண்டது உண்மையாப் போட்டுதடா ராசா' எண்டுவார். :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.